super description about our mannadhi mannan with majestic still.
thanks kpv sir
http://youtu.be/ogtom7PGgoI
Printable View
super description about our mannadhi mannan with majestic still.
thanks kpv sir
http://youtu.be/ogtom7PGgoI
கலைகள் தோன்றிய விதம் & மன்னாதி மன்னன் மக்கள் திலகம் ஸ்டில் - இரண்டுக்கும் நன்றி கலியபெருமாள் ஸார் .
சைலேஷ் ஸார்,
இன்னும் பல்லாயிரம் பதிவுகள் மக்கள் திலகம் திரியில் தர வாழ்த்துகள்.
திரைப்படங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய
மக்கள் திலகம்
தமிழ் திரையுலகில் அன்று அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய மக்கள் திலகம் எம். ஜி. ஆரின் புகழ் இன்றும் மங்காமல் மறையாமல், இருப்பதற்கு முதல் காரணமாகத் திகழ்வது அவரின் சமூக அக்கறையாகும். அதாவது ஏதோ பிறந்தோம். வளர்ந்தோம். வாழ்ந்தோமென்பதைவிட இருந்தோம், நல்லது செய்தோம், சாதித்தோமென்ற மனோ நிலையில் கடைசிவரை இருந்தமையினால்தான் இன்றும் அவர் கோடான கோடி மக்களின் மனங்களில் இதய தெய்வமாக வாழ்கிறார்.
http://i43.tinypic.com/34yxt9e.jpg
எம். ஜி. ஆர். திரையுலகில் பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் 1936ல் தனது 19வது வயதில் சதிலீலாவதி, படத்தில் ஒரு சிறிய வேடத்தில் தோன்றி நடித்தவர். 30வது வயதுவரை சிறு சிறு பார்த்திரங்களில் நடித்தார். 1947ல் தான் கதாநாயனகாக ‘ராஜகுமாரி’ படத்தில் நடித்தார். ஆனால் இவர் தன்னுடைய படங்களில் சமூக சிந்தனையுடன் கூடிய கருத்துக்களை வெளிப்படுத்தினார். ஆரம்ப காலத்தில் சரித்திர கதையம்சம் கொண்ட படங்களில் நடித்தாலும் கூட அவற்றின் மூலமாக சீர்த்திருத்த கருத்துக்களை சமூக சிந்தனையுள்ள கருத்துக்களையும் தெரிவிக்கத் தவறவில்லை. அப்படியான படங்களில் ‘மர்மயோகி’, ‘சர்வாதிகாரி’ மலைக் கள்ளன் ‘குலே பகாவலி’ ‘மதுரைவீரன்’ ‘புதுமைப் பித்தன்’ ‘நாடோடி மன்னன்’ மற்றும் மன்னாதி மன்னன் ஆகியவற்றை உதாரணங்களாக எடுத்துக்கொள்ளலாம்.
இவர் தாயின் மீது அதிக அன்பும் பாசமும் கொண்டவராகையினால் தாய் பாசத்தின் மகிமையையும் தன்னுடைய படங்களில் கூற தவறில்லை.
‘தாய் சொல்லைத் தட்டாதே’ ‘தாயைக்காத்த தனயம்’ ‘நீதிக்குப் பின் பாசம்’ ‘தெய்வத்தாய்’ ‘தாயின்மடியில்’ ‘அடிமைப் பெண்’ போன்ற திரைப்படங்களில் தாயின் பெருமை பற்றி அவர் மிக சிறப்பாக நடிப்பின் மூலம் காட்டியிருக்கிறார்.
சமூகத்தில் மலிந்துக் கிடக்கும் வஞ்சம், ஏழைப் பணக்காரன் என்ற வேறுபாடு, சாதிக்கொடுமை, பெண் கொடுமை, அடிமைத்தனம், வஞ்சகம், சூது, கொலை, கொள்ளை உட்பட பல சமூகப் பிரச்சினைகளை கையிலெடுத்து அதற்கான சரியான தீர்வினையும் தன்னுடைய படங்களில் ஆணித்தரமாக அழகாக சொல்லிய விதம் மக்களுக்கு பிடித்திருந்தது. குடி, சிகரெட், பெண் சகவாசம் போன்றவற்றை வெறுத்து ஒதுக்கிய எம். ஜி. ஆர். அதை தன் திரைப்படங்களின் வாயிலாகவும் வெளிக்கொண்டுவந்தார்.
மீனவர்களின் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு வெளியான ‘படகோட்டி’ எம். ஜி. ஆருக்கு அந்த சமூகத்தின் ஆதரவை அள்ளித் தந்ததைப் போலவே, உரிமைக்குரல், உழைக்கும் கரங்கள், விவசாயி போன்ற படங்களின் மூலமாக விவசாயிகளின் பேராதரவைப் பெற்றுக் கொண்டார்.
ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கு முக்கியமானவைகளில் முதன்மையானது சட்டம், ஒழுங்கு, நீதியை நிலை நாட்டக்கூடிய காவலர்கள் எப்படியிருக்க வேண்டும் என்ன செய்ய வேண்டும் என்பதையெல்லாம் தன்னுடைய பல படங்கின் வாயிலாக எடுத்துக் காட்டினார்.
http://i44.tinypic.com/2qtx4b6.jpg
‘திரைப்படங்கள்’ பொழுது போக்கும் ஓர் அம்சமாக மக்கள் சில மணி நேரம் கவலையெல்லாம் மறந்து சந்தோஷமாக மகிழ்ச்சியாக இருந்து விட்டு போவதற்கான சாதனமாகவே மட்டும் இருந்த நிலையில் அதை மாற்றி நல்ல கருத்துக்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்லக்கூடிய ஊடகமாக மாற்றிய பெருமை எம். ஜி. ஆரையே சேரும்.
courtesy
பாலா சங்குப்பிள்ளை
http://www.youtube.com/watch?v=RJrD2...ature=youtu.be
NAALAI NAMATHE - 3
தீவிர ரசிகர் என்பதை ஏற்பதற்கு சற்று நெருடல். காரணம்...சமையல்காரன் என்ற ஒரு திரைப்படம்...அதில் ஒரு காட்சி. திரு.vkr அவர்கள் திரு முத்துவிடம் ஓஹோ...உலகம் சுத்தும் வாலிபனா என்று கேட்பார் அதற்க்கு முத்து அவர்கள்....ஊஹூ ...உண்மையான வாலிபன் என்று நகைப்புடன் பதில் கூறுவார். ஒரு தீவிர ரசிகர், இந்த வசனத்தை எப்படி அனுமதித்தார் என்று எனக்கு விளங்கவில்லை !
ஒரு வேளை தந்தையாரின் நிர்பந்தம் ?
Thanks for your comments masanam sir .
மக்கள் திலகம் அவர்கள் தன்னுடைய 60 வயதில் ,கடைசி படத்தில் என்னமாய் பம்பரமாக சுழன்று கத்தி சண்டை வீரப்பாவுடன் மோதும் பிரமாண்டமான மைசூர் அரண்மனையில் அருமையான ஒளிப்பதிவுடன் காட்சி
திரைப்பட சரித்திரத்தில் சகாப்தம் படைத்த வரலாற்று
புகழ் உலக பேரழகன் நம் மக்கள் திலகம் எம்ஜிஆர் என்பதில்
பெருமை அல்லவா ?
http://youtu.be/NJjCea4ohYk