நேற்று சென்னையில் மாநகரப் பேருந்தில் பிரயாணம்.
https://www.youtube.com/watch?v=aR9ul7u7HmU
என்னைத் தேடியவர்களிடம் மாட்டிக் கொண்டுவிட்டேன். நடந்த உரையாடல் இதோ:
"நாங்கள் தேடுவதையெல்லாம் திரியில் ஏன் எழுதுகிறாய்?" அவர்கள் கேட்க.
நான் "ஒரு நகைச்சுவைக்காக." என்று சொல்ல.
அவர்கள் "இதில் ஏது நகைச்சுவை? ஆமாம் நீ ஏன் மொக்கை ஜோக்கையெல்லாம் பதிகிறாய்?"
நானும் விடாமல் "எனக்குத் தெரிந்த மொக்கைச்சாமி, ஜோக்கெல்லாம் சொல்லமாட்டாரே!!!" என்று சொல்ல.
அவர்கள் "டேய்!!!" எனக் கதற.
"இல்லைங்க ஜோக் சொல்லத்தெரிந்த மொக்கைச்சாமியையோ இல்லை மொக்கைராசுவையோ எனக்குத் தெரியாது. நான் எப்படி அவர்கள் ஜோக்கை சொல்லமுடியும்?" எனத் திருப்பிக் கேட்டேன்.
இது மதுரகானம் திரி. அதனால் இதோ அடுத்த பாட்டுபோட்டுக்கறேன்:
https://www.youtube.com/watch?v=ZK5iYt-YqoA
அவர்கள் "நீ அடி வாங்க ஓயமாட்டே" என்றார்கள்.
"நாம என்ன கவுண்டமணி, செந்திலா - அடி வாங்கற ஜோக் சொல்ல?" என்றேன் பதிலுக்கு.
"ஏன் சொல்லிப்பாரேன்" என்றார்கள்
"இல்லைங்க. திரியில் சந்திரபாபு, நாகேஷ் ஆக்ஷ்ன் காமெடி செய்ய முடியாது."
"அதனால?"
"வெண்ணிற ஆடை மூர்த்தி ..." என்றேன்.
"டேய் நிறுத்து. திரிக்கு பெண்கள் வர்ராங்க. நீ இரட்டை அர்த்த காமெடி பண்ணுவியா?" என்று எகிறினார்கள்.
"இல்லைங்க. அவர் போல கொஞ்சம் கூட என்னால் இரட்டை அர்த்தத்துல பேசவராதுன்னு சொல்ல வந்தேன்"
"நீ பண்ண குசும்பெல்லாம் எங்களுக்கும் தெரியும்டி. யாரு கிட்ட கதை விடற. சரி நீ வேற யார் போல காமெடி பண்ணப்போற?"
"எனக்கு யாரைப்போலவும் மட்டுமில்லை, நானாவும் காமெடி பண்ணத் தெரியாது. அதனால் எங்க நண்பர் மற்றும் அண்ணன் ராஜண்ணனின் காமிக் காட்சிகளை பகிர்ந்துக்கறேன்"
அதுக்கு மின்னாடி ஒரு பாட்டு
https://www.youtube.com/watch?v=NW1TE_qz_Jw

