-
http://i65.tinypic.com/zugkcl.jpg
http://i64.tinypic.com/16ibl20.jpg
http://www.dailythanthi.com/News/Sta...stribution.vpf
ஒரு கோடியே 68 லட்சம் பேருக்கு பொங்கலை முன்னிட்டு விலையில்லா வேட்டி-சேலை; ஜெயலலிதா தொடங்கி வைத்தார்
டிசம்பர் 30,2015, 6:15 AM IST பதிவு செய்த நாள்: புதன், டிசம்பர் 30,2015, 6:15 AM IST
சென்னை,
பொங்கலையொட்டி விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தின் கீழ் வேட்டி சேலைகளை முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.
எம்.ஜி.ஆர். தொடங்கிய திட்டம்
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது;-
விவசாயத்தை அடுத்து, கிராம மக்களின் வாழ்வாதாரத் தொழிலாக நெசவுத் தொழில் விளங்கி வருகிறது. கைத்தறி நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பு அளிக்கவும், அதன்மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், 1983-ம் ஆண்டு அப்போதைய முதல்- அமைச்சர் எம்.ஜி.ஆரால் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
இதன்படி ஒவ்வொரு ஆண்டும் தமிழர் திருநாளான பொங்கல் திருநாளையொட்டி விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் மூலம் ஏழை, எளிய மக்கள் பயன்பெறுவதோடு மட்டுமல்லாமல், கைத்தறி, விசைத்தறி தொழில்களில் ஈடுபட்டுள்ளோருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.
ரூ.486 கோடி ஒதுக்கீடு
விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தின் மூலம் தரமான வேட்டி, சேலைகளை வழங்கிடும் நோக்கில், 2014-ம் ஆண்டு பொங்கல் பண்டிகை முதல் பாலிகாட் சேலைகளை வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டார்.
2016-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 68 லட்சத்து 4 ஆயிரத்து 986 சேலைகளும், ஒரு கோடியே 67 லட்சத்து 89 ஆயிரத்து 404 வேட்டிகளும் பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளன. இத்திட்டத்திற்காக முதல்-அமைச்சர் ஜெயலலிதா 486 கோடியே 36 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார்.
5 குடும்பங்களுக்கு...
பொங்கல் திருநாளையொட்டி இந்த ஆண்டிற்கான விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் 5 குடும்பங்களுக்கு வேட்டி சேலைகளை வழங்கி 28-ந்தேதி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எஸ்.கோகுல இந்திரா, ஆர்.பி. உதயகுமார், தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், வருவாய் நிர்வாக ஆணையர் அதுல்ய மிஸ்ரா, கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், வருவாய்த் துறைச் செயலாளர் ரா.வெங்கடேசன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
சிரித்து வாழ வேண்டும் தொடர்கிறது...
http://i68.tinypic.com/219pidt.jpg
-
-
-
-
-
-
-
-