யுகேஷ் பாபு ,
உங்களுக்கு நன்றி. விரைவில் நீங்கள் காண போகும் 3000 க்கு எனது அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Printable View
Thank you Sirs ESVEE,Rahul,Subramaniam Ramajayam,Ragavendhar,Ravi Kiran Surya,Ragavan,Gopu,S.Vasudevan,RajeshK.V,K.C.Sekar ,Anand,Sarathy.
நண்பர் ரவிகிரன் சூர்யா அவர்கள் வெளியிட்ட உயர்நீதிமன்ற நீதிபதியின் இக்கால திரைப்படம் எப்படி இருக்கவேண்டும் என்ற தீர்ப்பின் பதிவை படித்த உடன் ஏற்பட்ட ஒரு தாக்கம் இந்த கட்டுரை .சமீபத்திய சினிமா எக்ஸ்பிரஸ் இதழில் இந்த கட்டுரை வெளியிடப்பட்டு உள்ளது . நிறைய பேர் இதை படித்து இருக்கலாம் . இருந்தாலும் படிக்காதவர்கள் இருந்தால் படித்து இக்கால திரை உலகத்தின் போக்கு பற்றி கட்டுரையாளரின் வருத்தம் உணரப்பட வேண்டும் என்ற அவாவின் வெளிபாடே இந்த பதிவு .
இந்த பதிவு இங்கு ஏற்புடையது அல்ல என்ற எண்ணம் யாருக்கேனும் ஏற்பட்டால் தயங்காமல் தெரிவிக்கவும் .நீக்கி விடவும் தயாராக இருக்கிறேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன் .இங்கு சொல்லப்பட்டு இருக்கும் திரைப்படங்கள் ஒரு உதாரணங்களே
"பச்சைவிளக்கு' படத்தில் சிவாஜி கணேசன் ரயில் ஓட்டுநராக நடித்திருப்பார்."படகோட்டி'யில் எம்.ஜி.ஆர். மீனவராக நடித்திருப்பார். "பாசமலர்', "பாகப்பிரிவினை', "தங்கப்பதக்கம்', "ரிஷிமூலம்', "ரிக்ஷாக்காரன்', "நல்லநேரம்', "அவர்கள்', "அபூர்வ ராகங்கள்', "நினைத்தாலே இனிக்கும்' என எந்தப் படத்தைப் பார்த்தாலும் கதாநாயகன் யார் என்று ஒரு பிடிமானம் இருக்கும். ஏதோ ஒரு தொழிலில் ஈடுபட்டிருப்பார்கள். அவர் கல்லூரி மாணவராகவோ, வேலை தேடுபவராகவோ இருப்பதும்கூட கதாபாத்திரத்தின் வேர் எங்கே ஊன்றப்பட்டிருக்கிறது என்பதைச் சொல்லும்.
சமீபகாலமாக வெளிவந்து கொண்டிருக்கும் தமிழ்ச் சினிமாக்களில் ஹீரோக்கள் வெட்டி ஆபீஸராக வந்து கொண்டிருப்பதுதான் வேதனை.
காதல் செய்வதோ, காதலர்களைச் சேர்த்துவைப்பதோ மட்டுமே முழு நேரப்பணியாகக் காட்டப்படுவதுடன் இந்த வேலைவெட்டி இல்லாதவர்களுக்குக் கல்லூரி மாணவிகள், கல்லூரி பேராசிரியைகள் காதலிகளாக அமைந்திருப்பது அடுத்தக் கட்ட வேதனை.
அமீர் இயக்கிய "பருத்திவீரன்' படத்தில் கார்த்தி ரெüடித்தனம் பண்ணிவிட்டு ஜெயிலுக்குப்போவதைப் பெருமையாக நினைப்பவர். கைது செய்து காவல்துறையினர் போட்டோ எடுக்கும்போது கம்பீரமாகப் போஸ் கொடுப்பவர். அவருக்கு பள்ளிமாணவி பிரியாமணி காதலி!
"சுப்பிரமணியபுரம்' படத்தில் கூலிப்படை ஆசாமி ஜெய்க்கும் பள்ளிமாணவிக்கும் காதல்.
"நாடோடிகள்' படத்தில் சசிகுமாரின் நண்பர்கள் பட்டாளம் அனைவருமே எந்த வேலைவெட்டியும் இல்லாமல் சும்மா பொழுதைப் போக்குபவர்கள்தான். காதலர்களைச் சேர்த்துவைப்பதுதான் இவர்களது முழுநேர வேலை. எங்கும் எப்படி! முழுநேர வேலை.
"களவாணி' படத்தில் வீட்டுக்கு அடங்காமல் அலம்பல் பண்ணிக் கொண்டிருக்கும் விமல் காதலிப்பது பள்ளிக்குச் செல்லும் மாணவியை.
"ஆடுகளம்' படத்தில் சேவல் சண்டை தனுஷ் காதலிப்பது கல்லூரி மாணவியை. "நந்தா' படத்தில் லைலா காதலிப்பது தாதா சூர்யாவை.
"பிதாமகன்' படத்தில் லைலா காதலிப்பது லேகிய வியாபாரம், சில்லரைத் திருட்டு எனத் திரியும் சூர்யாவை.
"அவன் இவன்' படத்தில் இன்னும் ஒருபடி மேல் திருடன் பெண்போலீஸ் விரட்டி விரட்டிக் காதலிக்கிறான்.
"படிக்காதவன்' படத்தில் படிக்காத தனுஷை காதலிப்பார் கல்லூரி மாணவி தமன்னா.
"பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தில் பிளஸ் டூ பாஸ் பண்ண முடியாமல் பிட் அடித்துக் கொண்டிருக்கும் ஆர்யாவை டுடோரியல் கல்லூரி ஆசிரியை காதலிப்பார்.
படிக்காத, வேலைபார்க்காத அல்லது சமூக விரோத செயல் செய்பவர்களை தமது திரையுலகக் கதாநாயகர்கள் காதலித்துக் கொண்டிருப்பது வேதனையான முன்னுதாரணத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. தெருவோர ரோமியோக்களுக்கு இத்தகைய படங்கள் கல்லூரி மாணவிகளை காதலிக்கும் அசட்டு தைரியத்தை ஏற்படுத்திக் கொண்டிருப்பது எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாத அநீதியாக இருக்கிறது. இது போன்ற சினிமாக்களை பார்த்துவிட்டு, தெருவில் வேலைவெட்டியில்லாமல் சுற்றும் நபர்களைப் பள்ளி மாணவிகளும், படித்த பெண்களும் திருமணம் செய்து கொண்டு தங்களது வாழ்க்கையைக் காதலுக்காகத் தியாகம் செய்து கொள்ளத் தொடர்கிறார். அதன் விளைவுகள் எப்படி இருக்கும்?
சினிமா என்கிற சக்தி வாய்ந்த மீடியம் இதற்குத்தானா பயன்பட வேண்டும்? அசட்டுத்தனமான இத்தகைய காதல்கள் அந்த நேரத்தில் படம் பார்ப்பவர்களுக்கு ஒருவகை நகைச்சுவை உணர்வைத் தருவதோடு சரி. இத்தகைய முரண்பட்ட இருவர் காதலராகிச் சேர்ந்து வாழ்வது பொருத்தமில்லாத பல்வேறு சமூகச் சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதை இயக்குநர்கள் உணரவேண்டும். திரைப்படக் கதாசிரியர்களுக்கும், இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் சமுதாயக் கடமை கிடையாதா? சினிமா பொழுதுபோக்குதான், உண்மை. ஆனால் பொழுதுபோக்கு என்ற பெயரில் சமுதாயத்தைச் சீரழிக்க முற்படுவதுகூட ஒரு சமூகவிரோதச் செயலல்லவா!
சினிமா எக்ஸ்பிரஸ் இதழில் வெளியான கட்டுரை
Congratulations for your 3000 posts Mr. Gopal sir.
திரு கிருஷ்ணா,
தாங்கள் என்னை ஆச்சர்ய படுத்தவே செய்கிறீர்கள்.தங்கள் இரட்டை வேடம் எனக்கு புரிவதே இல்லை. தாங்கள் ஒரு மிக சிறந்த சிவாஜி ரசிகராக இனம் காட்டியுள்ளீர்கள்.ஆனால் இங்கு வந்து ஒரு சிறப்பான பதிவையும் இட்டதில்லை. ஒரு பாடலையும் ,புண்ணாக்கையும் ஆராய்ந்ததில்லை.மதுர கானங்கள் திரியில் உங்கள் அசல் பதிவுகளை பல முறை நான் வேண்டிய போது ஒரு முயற்சியும் புரியாமல் வீண் சண்டையிட்டீர்கள்.
கம்பர் ஜெயராமன் பதிவில், ஒரு ஊழலுக்கு அப்பாற்பட்ட புனிதர் என்று சொல்ல படும் ஒருவரை கருப்பு பணம் சேர்த்தவர் என்பதை கூட நீக்காமல் போட்டு , அதே போல மிக முரண் படும் பதிவுகளை cut paste நீக்காமல் போட்டவர்.முரண் பட்ட என்னிடம் அனாவசிய மோதல்கள்.
இப்போது எங்கோ சென்று தேக்கு மரம்,புளிய மரம் (wooden facial Expressions? )என்று வீண் கொஞ்சல். அவ்வளவு ஆராய்ச்சிக்கு நேரமிருந்தால்,உங்களுக்கு பிடித்த விஷயங்களை,பிடித்த இடத்தில் பதிக்கலாமே?
ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். சொல்லில் தேனிருந்தால்,போதுமென்று நினைத்து பாதை மாறியவர்கள்,காரை விற்று,பல்லவன் பஸ்ஸில் டிக்கெட் வாங்கி பயணித்து மரித்தார்கள்.எந்த வள்ளன்மையும் ,நம்பியவர்களுக்கு துணை நிற்கவில்லை.
மாற்றான் வலி அறிய எங்கள் எழுத்துக்களை படிக்க வேண்டாம். அவை வெறும் புற தோற்றங்களே.
நடிகர்திலகம் என்ற உண்மை தமிழன், உன்னத நடிகர்களின் நடிகன் நமக்கு சொத்துக்களாக விட்டு சென்றிருக்கும் உன்னத படங்களை பாருங்கள் மாண்பிற்குரிய எதிர் அணியினரே!!!அப்போதுதான் எங்கள் வலிமை எதில் உள்ளது என்று புரியும்.
நடிகர்திலகம் என்பது பிம்பமல்ல. அசல் உண்மை. ஆளுமை. இது வீண் பிரசாரங்களாலோ, பொய்மைகளாலோ ,உண்மையற்ற செய்திகளாலோ , வீண் அர்ச்சனைகளாலோ கட்டமைக்க பட்டதல்ல. எக்காலமும் கண்டு,கேட்டு,உண்டு,உயிர்த்து, ஐம்புலனும் கண்டு அடைய வேண்டிய சத்திய உண்மை.
இருக்கும் இடத்தை விட்டு ,இல்லாத இடம் தேடி,எங்கெங்கோ அலைகின்றார் ஞான தங்கமே. அவர் ஏதும் அறியாரடி ஞான தங்கமே!!!!
குற்றவாளிகள் என்ற இனம் தானே தோன்றிய வேற்று கிரக வாசிகளல்ல. குண பிறழ்வு,பிறவி கோளாறுகள் என்ற 10% தவிர்த்தால், நாகரிக நல்ல மனிதர்கள் என்ற நாம் உருவாக்கி வைத்திருக்கும் மதம்,இனம்,சாதி,போலி நீதிகள்,சுரண்டல் அமைப்புகள் ,பெண்ணடிமை சங்கிலிகள்,சமுதாய சுரண்டல்கள்,வறுமை இவைகளினால் உருவாக்க பட்ட அனுதாபத்திற்குரிய இனம்.(நான் முற்றிலும் தூக்கு தண்டனை ஒழிப்புக்கு எதிரானவன் என்ற போதும்,குறைக்க பட வேண்டும் என்று கருதுபவன்)
காவல் தெய்வம் என்ற ஜெயகாந்தனின் படத்தில் ,அவர்களை ரத்தமும் ,சதையும் கொண்ட மனிதர்களாக சித்தரித்தார்கள்.பின்னனணியை சொன்னார்கள். மனிதத்திற்கு அர்த்தம் கற்பித்தார்கள்.
இதற்கு மாறாக பின்னால் வந்த ஒரு தழுவல் படத்தில், வழக்கம் போல ஹீரோ வொர்ஷிப் செய்ய ,ஏதோ குற்றவாளிகள் என்பவர்கள் ஈனர்கள் போல,கோமாளிகள் போல,வேற்று கிரக வாசிகள் போல சித்தரித்து ,சிரிப்பு படமாக்கினார்கள்.நகத்தால் (வெட்ட படாத)பிராண்டி கொள்ளலாம் போல தோன்றும்.இந்த மாதிரி கட்டமைப்பு படங்களில் உருவாக்க படுவது,தனி மனித உறவுகளை,புரிதலை,நேயத்தை சிதைக்கவே செய்யும் .(பிம்பங்கள் போதுமே ஆராதிக்க)
வாழ்த்துக்கள் கோபால்
3000 பதிவுகள் 30000 ஆக உயரட்டும்
ரவிகிரன் சூர்யா,
நாம் தமிழருவி கருத்தை வேறு விதமாக பார்க்க வேண்டும்.
நடிகர்திலகம் எல்லா பாணியிலும்,எல்லா விதமான நடிப்பு பள்ளிகளிலும் கரை கண்டவர். மனோரஞ்சித பூ போன்ற முக அமைப்பு.எல்லா பாத்திரங்களுக்கும் பொருந்தி வந்தது.
ஆனால் அவர் நடிப்பு பாணி எல்லா காலகட்டங்களிலும் ஒரே மாதிரி இருக்காது. பல சோதனை,மாற்றங்கள். சில விஷயங்களை மட்டுமே அவரிடம் எதிர்பார்த்து செல்லும் திறந்த மனதில்லாத சில தமிழர்களுக்கு ஏமாற்றம் வர வாய்ப்புள்ளது. அவர்கள் ரசனை,ஒரே மாதிரி எதிர்பார்ப்பினால் சுருங்கியே இருக்கும். அவர்களால் திறந்த மனதுடன் சோதனை முயற்சிகளை அணுக முடியாது. இவர்களுக்கு formula படங்கள்,ஒரே மாதிரி (ஐந்தே முறையில் கைகால் அசைவுகள்,ஒரே மாதிரி சிரிப்பு அது வில்லனா,கதாநாயகியா எப்படியாக இருப்பினும்)நடிப்பு முறை.இவர்கள் எதிர்பார்ப்பு கூடி விட்டால் போதும்.சுருங்கிய மூளை,மனம்,கொண்ட அடிப்படை மனிதர்கள்.
எனக்கே சில படங்களில் அவரது பாணி ஒவ்வாது. ஆனால் சிலர் அதை ரொம்ப சிலாகிப்பார்கள்.(உ.ம்.ராமன் எத்தனை ராமனடி,எங்க ஊர் ராஜா)ஆனால் அது நம் ரசனை குறை பாடு ,புரிதல் குறைபாடு.நடிகனின் குறைபாடல்ல. என்றேனும் நமக்கு தெளியலாம்.
தமிழருவி சொன்னதில் இரு கருத்துக்களில் எனக்கு உடன்பாடுண்டு.
1)சிவாஜி உலகத்திலேயே சிறந்த நடிகர்.
2)எங்க வீட்டு பிள்ளை படத்தில் எம்.ஜி.ஆர் கொடுத்த energy level ,கூடுதல் உற்சாகம் ,யாராலும் நினைத்து கூட பார்க்க முடியாதது. எனக்கே இப்படியென்றால்,அவருடைய ரசிகர்களுக்கு எப்படி இருந்திருக்கும்? நான் அதை தெலுங்கில்,ஹிந்தியில் பார்த்துள்ளேன். என்.டி.ஆர்,திலிப் இருவருமே ,10% கூட எம்.ஜி.ஆர் அருகே நெருங்க முடியாது.
எங்க வீட்டு பிள்ளை படத்தில் எம்.ஜி.ஆர் கொடுத்த energy level ,கூடுதல் உற்சாகம் ,யாராலும் நினைத்து கூட பார்க்க முடியாதது. எனக்கே இப்படியென்றால்,அவருடைய ரசிகர்களுக்கு எப்படி இருந்திருக்கும்? நான் அதை தெலுங்கில்,ஹிந்தியில் பார்த்துள்ளேன். என்.டி.ஆர்,திலிப் இருவருமே ,10% கூட எம்.ஜி.ஆர் அருகே நெருங்க முடியாது.
THANKS GOPAL SIR .