தினத்தந்தியில் 30/03/2014 விளம்பரம்.
http://i58.tinypic.com/308gto6.jpg
Printable View
தினத்தந்தியில் 30/03/2014 விளம்பரம்.
http://i58.tinypic.com/308gto6.jpg
'இலங்கை போர் குற்றம்' குறித்த அமெரிக்க தீர்மானத்திற்கு ஆதரவாக, ஐ.நா., மனித உரிமை கவுன்சில் வாக்கெடுப்பில், இந்தியா பங்கெடுக்கவில்லை என்பதை அறிந்த; அடுத்த நாளே, அந்நாட்டு சிறைகளில் வாடும், அனைத்து தமிழக மீனவர்களையும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சே விடுவித்ததோடு, முடிச்சு போட்டு பேசுவது, அரசியல் ரீதியாக சிலருக்கு பயன்படலாம். ஆனால், லோக்சபா தேர்தலுக்கு, இதனால், யாருக்கும், எந்த பயனும் ஏற்படப் போவதில்லை என்றே சொல்லலாம்.
ஜெனிவா வாக்களிப்பை, இந்தியா புறக்கணித்ததற்கு காரணகர்த்தா என்று சுட்டிக் காட்டப்படும், மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி, தமிழக தேர்தலில் பெரிதாக எதையும் சாதித்துவிடப் போவதில்லை. தமிழகத்தில் தேர்தலில் போட்டியிடும் மற்ற எந்த கட்சியோடும், காங்கிரஸ், கூட்டணி அமைத்திருக்கவில்லை. அந்த வகையில், 'செத்த பாம்பை அடிக்கும்' இந்த, 'வீர' விளையாட்டு, யார் யாராருக்காகவெல்லாம் அரங்கேற்றப்படுகிறது என்று தெரியவில்லை. ஜெனிவா வாக்கெடுப்பிற்கு பின், புது டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு துறை செயலர் சுஜாதா சிங், மீனவர் விடுதலையை சுட்டிக் காட்டினார். இலங்கையின் இந்த முடிவை தொடர்ந்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா, முன்பு கூறியிருந்தது போல், 'இரு நாட்டு மீனவர்கள் பேச்சு, மீண்டும் துவங்கப்பட வேண்டும்' என்று அவர் கூறியதாகவே, இதைக் கருத வேண்டும்.
மாறாக, அமெரிக்காவின் தீர்மானத்தையும், மீனவர்கள் விடுதலையையும் முடிச்சுப் போட்டு பேசுவது, வாதத்திற்கு வேண்டுமானால், சரியாக இருக்கலாம்; அந்த வாதம் உண்மையாக இருந்திருந்தால், தமிழக மீனவர்கள் மீது, மத்திய அரசு அந்த அளவிற்கு அக்கறை கொண்டுள்ளது என்று பொருளாகி விடும்.
வட இலங்கை அரசியல்:
மேலும், 'இலங்கை இன பிரச்னை' குறித்த உள்நாட்டு அரசியலில், நம் மாநிலத்தில் உள்ள, 'உரிமை பேசும்' கட்சிகள், தமிழக மீனவர்களின் உயிரை, பகடைக் காயாக்கி விளையாடுகின்றனரோ என்ற, எதிர்மறை எண்ணத்தையும், இது போன்ற கருத்துக்கள் ஏற்படுத்தி விடும்.ஆனால், நிச்சயமாக இது, அவர்களது எண்ணமல்ல.இலங்கையில், தமிழர்கள் மட்டுமே உள்ள, வடக்கு மாகாணத்தில் தான், தமிழகத்தின், இராமேஸ்வரம் மற்றும் அண்டை பகுதிகளில் உள்ள மீனவர்கள், 'டிராலர்'கள் மற்றும் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கின்றனர். இது போன்று மீன் பிடிப்பது, இராமேஸ்வரம் கடல் பகுதியை போலவே, யாழ்ப்பாணம், மன்னார் போன்ற, இலங்கையில் தமிழ் மக்கள் அதிகம் வாழும் பகுதிகளிலும், மீனே இல்லாத நிலையை ஏற்படுத்தி விடும்.
இதன் காரணமாக, வட இலங்கை மீனவர்கள், கடலில் பரப்பும் மீன் வலைகளும், அவர்களது வாழ்வாதாரங்களும் அழிந்து விடும் ஆபத்தும் ஏற்பட்டு விடும். இது போன்ற வலைகளையும், மீன்பிடி முறைகளையும் எதிர்த்து, தென் தமிழக பகுதிகளிலும், பாரம்பரிய முறைகளில் மீன்பிடி தொழிலை மேற்கொண்டுள்ள பல்லாயிரக் கணக்கானோர், பல ஆண்டுகளாக போராடி வருவதும் குறிப்பிடத்தக்கது.ஆனால், இன பிரச்னையை முன்னிறுத்தி போராட்டம் நடத்தி வரும், இலங்கையின் வட மாகாணத்தில் ஆட்சி செய்யும், தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசோ, கடல் பகுதிகளை சாராத அந்த கட்சியின் தலைவர்களோ, அந்நாட்டு தமிழ் பகுதி மீனவர்களை, கண்டு கொள்வதே இல்லை என்பதே உண்மை. அவர்களை பொறுத்த வரை, இன பிரச்னை மற்றும், 'போர் குற்றங்கள்' குறித்த, தங்களது தற்போதைய நிலைபாட்டிற்கும், எதிர்கால போராட்டங்களுக்கும், தமிழக அரசியல் தலைமைகளின் ஆதரவு தேவை; அவ்வளவு தான்!
இலங்கை தமிழர்களிடையேயோ, நம் மாநிலத்திலேயோ, மீனவர்கள் சமூகத்திற்கென, ஒருங்கிணைந்த, உருப்படியான அரசியல் தலைமை இல்லை. தற்போது, தமிழகத்தில் மொத்தமுள்ள, 39 லோக்சபா தொகுதிகளுள், பதினான்கில், மீனவர் சமுதாயத்தினர் வசிக்கின்றனர்.
துரதிர்ஷ்டமே
கடந்த காலங்களில், எம்.ஜி.ஆர்., தன் திரைப்படங்கள் வாயிலாகவும், அரசியல் வானிலும், 'மீனவ நண்பன்' என்று தன்னை, அடையாளப்படுத்திக் கொண்டார். அவரது காலத்திற்கு பின், அந்த இடத்தை, யாராலும் நிரப்ப முடியவில்லை.எந்த அரசியல் கட்சியோ, தலைவர்களோ, அதற்கான முயற்சி எடுத்ததும் இல்லை.கடந்த, 2004ல், ஆசியாவின் கடற்கரைப் பகுதிகளைச் சூறையாடிய, 'சுனாமி'யில், மீனவர்களும், அவர்களது உடமைகளும் அடித்துச் செல்லப்பட்ட போது கூட, நம் மீனவ சகோதர, சகோதரிகளைக் காட்டி, வெளிநாட்டு உதவி பெற்று, தங்கள் வரையில் வயிறு பிழைக்க, அனேகம் பேர் தோன்றினரே தவிர, மீனவர்களை, அரசியல் ரீதியாக இணைக்கும் எண்ணமோ, அதற்கான உழைப்போ, யாரிடமும் இருக்கவில்லை. அந்த நிலையே, இன்னும் தொடர்வது, நம் மீனவ சகோதரர்களின் துரதிர்ஷ்டமே! இலங்கையுடனான மீனவர் பிரச்சனைக்கு, சரியான, நிலையாக செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள், இந்திய கடல் எல்கைக்குள் இருக்கிறதே தவிர, இலங்கை உட்பட்ட, வேறு எந்த நாட்டின் கடல் பகுதிகளிலும் இல்லை என்பதே உண்மை.இந்த உண்மையை, அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும், நம் மீனவ சகோதரர்களை வைத்து, அந்த சமூகத்தினருக்கும் அப்பால் சென்று, 'போட்டா போட்டி அரசியல்' செய்வது தான், நம் தலைவர்களுக்கும், அவர்கள் சார்ந்துள்ள அல்லது தலைமையேற்றுள்ள கட்சிகளுக்கும், மிகவும் பிடித்த, 'வீர விளையாட்டு!'
என். சத்தியமூர்த்தி- Courtesy Dinamalar Today Edition
http://i125.photobucket.com/albums/p...ps000f5bb4.jpg
Message given by MGR Devotee from Malaysia Sree Sitharan.
Ayirathil Oruvan restored version is released yesterday in Malaysia. Below is the paper cut of list of theatres.
http://i125.photobucket.com/albums/p...ps4143e42d.jpg
Newspaper image given by Malaysian MGR Devotee Sree Sitharan.
Thanks Roop Sir For uploading Aayirathilr oruvan news paper Ad . Last two days i am trying the newspaper cutting for aayirathil oruvan in singapore daily's but i couldn't findout.
Thanks for Mr.Sreetharan for sharing this Aayirathil oruvan News paper Ad.
This is the Pokkisham for our thread.
:thumbsup::thumbsup::thumbsup::thumbsup::thumbsup: :thumbsup:
one more request roop sir , please mention which date and which newspapers this ad display this is useful for us. because our enemy's group's not accept after some time
http://www.youtube.com/watch?v=41t6DNDIo50
Thalaivar Vicotry details shown this evergreen song.