அருமை சகோதரர் திரு. கலைவேந்தன் அவர்கள் அளித்த அசத்தலான விவரங்களும், வாதங்களும் அருமை !
தமிழ் திரையுலகின் முடிசூடா மன்னனாம் நம் எழில்வேந்தன் எம். ஜி. ஆர். அவர்கள் சாதனையை முறியடிக்க இனி எந்த நடிகராலும் முடியாது என்பது "உள்ளங்கை நெல்லிக்கனி"
Printable View
அருமை சகோதரர் திரு. கலைவேந்தன் அவர்கள் அளித்த அசத்தலான விவரங்களும், வாதங்களும் அருமை !
தமிழ் திரையுலகின் முடிசூடா மன்னனாம் நம் எழில்வேந்தன் எம். ஜி. ஆர். அவர்கள் சாதனையை முறியடிக்க இனி எந்த நடிகராலும் முடியாது என்பது "உள்ளங்கை நெல்லிக்கனி"
Congrats Vinod sir for completing 12,000 posts your hard work is commendable.
திரு கலை சார் - நீங்கள் கேட்டுக்கொண்டதை மீறினால் நான் ஒரு நல்ல நண்பனாக இருக்க தகுதி அற்றவன் . உங்களுக்கு முடிந்தபோது அங்கும் வாருங்கள் - பொதுவாக பேச , யார் மனமும் புண் படாமல் பேச மதுர காணத் திரியைப்போல அருமையான திரி ஒன்று எங்குமே இருக்க முடியாது - இந்த மகத்தான சேவையை செய்த திரு வாசுவை புகழ வார்த்தைகள் இனி தமிழில் கிடைத்தால் தான் உண்டு .
நாம் எல்லோரும் இணைந்து இருவரில் ஒருவரை மட்டும் புகழ்ந்து , உண்மைகளை மட்டுமே பதிவிட்டு சந்தோஷமாக இருக்கலாம் என்ற எண்ணத்தில் ஆரோக்கியம் குறைந்துகொண்டே வருகிறதே என்றுதான் நான் மிகவும் வருந்துகிறேன் . "என்று தணியும் இந்த சுதந்திர தாகம் ? " என்று கேட்டோம் ஒரு நாள் - பல வருடங்களுக்கு பிறகு அந்த கேள்விக்கு நல்ல பதில் கிடைத்தது . ஆனால் அப்படி கேள்விகேட்டவ்ர்கள் நம்மிடையே இன்று இல்லை . இன்று வேறு விதமான கேள்வி , அதே தாக்கத்துடன் , அதே வேதனையுடன் !! என்று தணியும் இந்த மனகசப்புகள் நம் இருவரிடையே ?? நல்ல பதில் நாம் மறைந்த பிறகு கிடைத்தால் , நாம் படும் வேதனைகள் மட்டும் உயிர் வாழ்ந்து என்ன பிரயோசனம் ? தூக்கி எரிய வேண்டிய இந்த மனகசப்புக்களை ஏன் நாம் இருவரும் உரம் போட்டு வளர்த்துக்கொண்டிருக்கிறோம் ?? இருவருமே ஒத்துக்கொள்ள முடியாத சில உண்மைகள் - அவைகள் அப்படியே இருந்து விட்டு போகட்டும் - அவைகளை தர்பாரில் இழுத்து கொண்டுவந்து ஏன் தலை குனிய வைக்க வேண்டும் ?
போதும் கலை சார் - நாட்டில் உள்ள எல்லா பிரச்சனைகளும் ( காஷ்மீர் உட்பட ) தீர்ந்து விடும் ஆனால் இந்த பிரச்சனைக்கு முடிவே இல்லை போல தெரிகின்றது . எவ்வளவு நாட்கள் இன்னும் நாம் மனத்தால் ஒன்று படாமல் இருக்கப்போகிறோம் ?
உங்களுக்கு அறிவுரை சொல்வதாக எடுத்துக்கொள்ளாதீர்கள் - அதற்கு எனக்கு திறமையோ , தகுதியோ இல்லை - எல்லாம் தெரிந்த நீங்கள் ஒரு பாலமாக இந்த இரண்டு திரிகளுக்கும் இருக்க வேண்டும் என்பதுதான் என் நீண்ட நாள் ஆசை . நட்பு என்பது கட்டப்பட வேண்டிய ஒன்று , கலைக்க பட வேண்டிய ஒன்று அல்ல .
அன்புடன்
ரவி
அருள் மிகு இறைவன் எம். ஜி. ஆர். ஆலயத்தின் 5 ம் ஆண்டு விழா நிழற்படங்களை, நம் மன்னவனின் பெருமைகளை பறை சாற்றும் விதத்தில், உடனுக்குடன் பதிவிட்டு, பலரையும் மகிழ்ச்சி கலந்த வியப்பு கடலில் மூழ்கடித்த சகோதரர் திரு. திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு மிகுந்த நன்றி !
http://i58.tinypic.com/30200oi.jpg
மக்கள் திலகத்துடன் நடிகர் அருண் விஜய் (குழந்தை பருவத்தில்)
Courtesy : Face Book