சொந்த புத்தியற்ற சராசரிகளுக்கு வேண்டுமானால் ஈகோ இல்லாமல் இருக்கலாம். வெற்றி பெற்ற , சமூகத்திற்கு கூடுதல் உழைப்பு தரும் சுய புத்தி கொண்டவர்களுக்கு constructive ego இருக்கவே இருக்கும். parasite என்ற ஒட்டுண்ணிகளுக்கு ஈகோ எப்படி இருக்கும்?
Printable View
தேவை இல்லாமல் சபதம் பிரச்சனையில் மூக்கை நுழைக்க வேண்டாம்
சபதம் சம்பந்தமாக இரண்டு பதிவுகள் பதிவிட்டு உள்ளேன்
முழுவதும் படிக்கவும்
படித்து விட்டு கருத்து சொல்லவும்
நாங்கள் அடிப்பது கூத்து என்றால் நீங்கள் அடிப்பது என்ன
ஒரே வசவு பதிவு வேற என்ன தெரியும் உங்களுக்கு
பேசாமல் மண்டூகம் போல் மஞ்சத்தில் தூங்கும் வேலையை பாரும்
நண்பர் வாசு போட்ட சபதம் பதிவு எண் 169
சபதம் பற்றி நான் போட்ட பதிவு எண் 171,172
நீர் என்ன கிழிசீர்
இணைய இணைப்பு சீராக இல்லாததால் பதிவுகளை தொடர்ச்சியாக பகிர்ந்து கொள்ள இயலவில்லை.
வாசு சார்
சபதம் படம் என்றாலே எல்லோரும் பாலாவின் பாட்டை மட்டும் தான் கூறுவார்கள். ஆனால் ரேடியோவில் ஹிட்டான பாட்டு தாங்கள் குறிப்பிட்ட ஆட்டத்தை ஆடு பாட்டுத் தான். பட்டி தொட்டி எங்கும் பிரபலமான பாட்டு. அர்த்தமுள்ள வரிகள். டி.கே. பகவதியின் வாழ்க்கையில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய படம். சென்னை பாரகன் தியேட்டரில் நன்றாக வெற்றி நடை போட்டது. சபதம் படத்திற்கு மக்களை திரையரங்கிற்கு வரவைத்தது தாங்கள் இன்றைய ஸ்பெஷலில் குறிப்பிட்டுள்ள பாட்டுத் தான். உள்ளே சென்ற பிறகு தான் தொடுவதென்ன பாட்டின் சிறப்பை மக்கள் அறிந்து பின்னாளில் அப்பாடல் ஹிட்டானது.
ஒவ்வொரு நாளும் தாங்கள் அடுத்து என்ன ஸ்பெஷல் தரப்போகிறீர்கள் என எதிர்பார்ப்பை ஏகத்துக்கும் எகிற வைக்கிறீர்கள்..
Well Done, Keep it up.
ராக தேவன் சார்
தங்களுடைய வருகை இத்திரியின் இன்னொரு பரிமாணத்தை உணர்வதற்கான ஒரு வாய்ப்பு. தங்களுடைய பாணியிலும் கோணத்திலும் பாடல்களைப் பகிர்ந்து கொண்டு அலச வேண்டுகிறேன்.
வாசு சபதம் பதிவு போட்டது மதியம் 2 மணி அளவில் நான் சபதம் பற்றி இரண்டு பதிவுகள் இட்டது அதில் இருந்து 10 நிமடங்கள் இடைவெளியில்
நீங்கள் 6 மணி நேரம் என்ன செய்தீர்கள். அடுத்தவர் உழைப்பை எப்படி மதிக்க வேண்டும் என்று எங்களுக்கு தெரியும். நீர் என்ன சட்டாம்பிள்ளையா ?
இங்கே யாரும் யாருக்கும் பாடம் எடுக்க வேண்டாம்
மதுண்ணா..பொன்னா இல்லை பூவா..வாயாடி பாட்டு கேட்க நன்றாக இருக்கும்..அ.காலத்தில் பார்த்தது…கே.ஆர்.விஜயா கொஞ்சம் அகலமாய் ஆன பிறகு நடித்த படங்களில் ஒன்று ( திருடி, கியாஸ் லைட் மங்கம்மா, நத்தையில் முத்து என சீரீஸ் போலப் படங்கள் வந்த காலகட்டம் இல்லியோ).. சபதத்திலும் கொஞ்சம் தாட்டியாகத் தான் இருப்பார்..
வாசு சார்.. நன்றி.. இரவுப் பூக்கள் மல்லி மல்லிப் பாட்டிற்கும் இந்தப் பாட்டு முன்பு கேட்டிருக்கிறேன்..
சபதம் டி.கே பகவதி பார்த்ததும் எனக்கு நினைவுக்கு வந்தது அவர் ராவணனாய் நடித்த ரேடியோ டிராமா சம்பூர்ண ராமாயணம்.. வெகு ஜோராக இருக்கும்..ஒருமணி நேரம் தினம் என ஒரு மூன்றுதினங்கள் கேட்ட நினைவு..குமுறிக் குமுறி லஷ்மணன் ராமனிடம் பரதன் படையெடுத்து வருகிறான் என்று சொல்லும் போது ராமன் “ நம்ப மாட்டேன் உன் சொல் அடா தம்பி “ எனப் பாடும் பாட்டும், “அடேய் குரங்கே யார் நீ” என ராவண பகவதி கேட்க அனுமன் வெகுண்டு “ ராமசாமி தூதன் நானடா அடே ராவணா நானடா என்பேர் அனுமானடா அடடா அடடடா” எனப் பாடும் பாட்டும் நினைவுக்கு வருகின்றன. ஒளவை டி.கே சண்முகம் (டி.கே.பகவதியின் அண்ணன்) எழுதிய “எனது நாடக வாழ்க்கை” படித்திருக்கிறீர்களா.. நான் படித்திருக்கிறேன் பல வருடங்களுக்கு முன்பு.. வெகு நன்றாக இருக்கும்..ஐ. திங்க் பணமா பாசமாவிலும் டி.கே . பகவதி சர்ரோவின் அப்பா தானே..
ஜீவிதாவின் தர்மபத்தினி நினைவில் இருக்கிறது வாசு சார்.. கார்த்திக் ஜோடி என நினைக்கிறேன்..அதேபோல் சிவகுமாருடன் கண்ணத் தொறக்கணும் சாமி என்று ஒருபடம்.. சோவின் காமெடி.. அதிலும் ஒரு நல்ல பாட்டு உண்டு..
ஊட்டிப்ப்பட்டணம் – கிலுக்கம் பாட்டிற்கு தாங்க்ஸ் ஆர்டி. கிலுக்கம் தமிழில் வந்த நினைவு..என்ன பெயர் நினைவுக்கு வரவில்லை..
ராகவேந்திரா சார்.. மல்லி மல்லி தெலுங்குப் பாட்டு நைஸ்.. சிரஞ்சீவி சுஹாசினி.. நன்றி.. அதைப்பார்த்த போது முன்பு பார்த்த ஆக்ரோஷம் என்ற தெலுகு டப் படம் தான் நினைவுக்கு வருகிறது..அதிலும் சிரஞ்சீவி சுஹாசினி தான்..சிரஞ்சீவி ரொம்ப கஷ்டப் பட்டு காடு, மலை, கடல் எல்லாம் தாண்டி வில்லன் இருக்குமிடத்திற்கு க்ளைமாக்ஸ் வருவதற்கு சற்று முன் தான் போய்ச் சேருவார்..அவர் போய்ச் சேர்ந்ததும் அவரைத் தேடி வரும் சுஹாசினி அவர் எங்கே என சிரஞ்சீவியின் நண்பரான டாக்ஸி ட்ரைவரைக் கேட்க அவர், “வாத்யாரையா கேக்கறீங்க.. குந்தும்மா நான் கூட்டிப் போறேன் “ என்று அடுத்த காட்சியிலேயே டாக்ஸியிலேயே அவரை வில்லன் இடத்திற்குக் கூட்டிச் சென்று விடுவார்!
அந்த கால கட்டத்தில் தமிழில் ஏகப்பட்ட கண்டிஷன்ஸ் உடன் நடிப்பவர்க்ள் தொடக்கூடாது, தள்ளித் தான் நடிப்பேன் என போட்டிருந்த சுஹாசினியை ஆக்ரோஷத்தில்பார்த்தால்- கொஞ்சம் ஆச்சர்யமாக இருக்கும்..சர்வ சாதாரணமான நெருக்கம்..ம்ம் அதுவும் “என் பொம்முக் குட்டி அம்மாவுக்கு” படத்தில் சத்யராஜூக்கு அக்கா போல விலகி விலகி நடித்திருந்தது கொஞ்சம் கஷ்டமாய்த் தான் இருந்தது..படத்தில் சத்யராஜ், ரகுவரன், ரேகா என எல்லாரும் நன்றாக நடித்திருப்பார்கள்..இவருக்கும் சத்யராஜூக்கும் தம்பதி என்பதற்கான இயல்புத் தன்மை தொலைந்திருக்கும்..அதனாலேயே படம் சுமாராகத் தான் போனது என நினைக்கிறேன்..
ராஜ் ராஜ் சார்.. சின்னச் சின்ன இழை பின்னிப் பின்னி வரும் சித்திரக் கைத்தறிச் சேலையடி பாடல் வெகு அழகான ஒன்று. பாடுவீங்களா..வாவ்... தாங்க்ஸ்..
நான் வாசுவின் பதிவுக்கு சம்மந்தமில்லாமல் பதிவுகளோ,cut paste அபத்தங்களோ பண்ண மாட்டேன். உங்களுடன் சமமாக பேசுவதே எனக்கு இழிவு. சொன்னதை கேட்டால் மரியாதை பிழைக்கும்.அவர் பதிவை படிக்க இடைவெளி இல்லாமல் ,டி.கே.பகவதி பற்றி ஒரு காபி பதிவு ,ஜி.கே.வெங்கடேஷ் பற்றி ஒரு காப்பி பதிவு என்று தொந்தரவு.பலர் சொன்னது.(8 பேர் திரி சம்மந்த பட்டவர்கள்) கிருஷ்ணாவும்,எஸ்.வாசுவும் திரியில் நல்ல எழுத்துக்களை பார்க்கவே அனுமதிப்பதில்லை.
என்னுடைய பதிவுகள் வெளியாகா விட்டால் எனக்கு ஒன்றும் நஷ்டமில்லை. நான் ஈசி சேரில் சாய உங்களை மாதிரி மூன்றாந்தர குமாஸ்தா அல்ல. அசடுகளுக்கு அகங்காரம் வேறு.
அறிவற்ற .........,
வெளியாக இருக்கும் படத்தை பற்றி ஒரு முன்னோட்டம் போடுவதும் , ஹைதர் காலத்து தெரிந்த விஷயங்களை cut paste பண்ணி கழுத்தறுப்பதும் ஒன்றா? இங்கிருப்பவர்களுக்கு தெரியும் ,யார் எவ்வளவு ,பங்களித்தார்கள் என்பது?உங்களை கொஞ்சம் மரியாதை கொடுத்ததால் எங்களுக்கு சமம் என்று நினைக்க வைத்து விட்டது.