-
*
என்னமோ போங்க – 5
*
காற்றிலோடும் தேரில் ஏறி ப் போகலாம்
அங்கு கண்சிமிட்டும் மீன்களோடு ஆடலாம்..
பளிங்கு வண்ண மண்டபங்கள் காணலாம்
அங்கு பாரிஜாதப் பூப்படுக்கை போடலாம்..( ம்ம் அங்கே போய்த் தூங்கறதுக்கு இங்கேயே தூங்கலாமே எதுக்குப் போவோம் புதுவுலகம்ங்கறாங்க.. ) ம்ம் என்னமோ போங்க
https://youtu.be/DUBxPv-Z8N4
நடிப்புச் சுடர் காஞ்ச் இன் வீர அபிமன்யு..
**
-
**
என்னமோ போங்க – 6
*
தீராத மோகம் நான் கொண்ட நேரம்
தேனாறு நீ வந்து சீராட்டத் தான்
காணாத வாழ்வு நான் கண்ட நேரம்
பூ மாலை நீ சூடிப் பாராட்டத் தான்
என்ன தான் சுகமோ நெஞ்சிலே
இது தான் வளரும் அன்பிலே
ராகங்கள் நீ பாடி வா இந்நாளில்
மோகங்கள் நீ காணவா எந்நாளும்
காதல் உறவே
*
ஏதாவது சொல்லலாம்னு பார்த்தா சொர்ண புஷ்பத்தைப் பார்த்ததும் எல்லாம் மறந்து போச்சு.. என்னமோ போங்க..
https://youtu.be/SDd2VeV5slo?list=PL...k71WPBJG3IDj-b
மாப்பிள்ளையாம்.. ரஜினியாம்.. சொர்ண புஷ்பமாம்.. ம்ம்..
*
-
*
என்னமோ போங்க -7
ஸீ காதல்ங்கறது எப்ப வருது.. ஆண் பெண் மனசு ரெண்டும் ஒண்ணாகி ஒரே வேவ்லெங்த்ல இருக்கறச்சயா.. அட அத நான் கேக்கலீங்க..
ஆணுக்கு இருபது இருபத்திரண்டு பெண்ணுக்கு பதினெட்டு வயசாச்சும் இருக்குமோன்னோ..அப்படின்னா அவங்க வளர்ந்தவங்கன்னு தானே அர்த்தம்..
இந்தக் காதலர்களைப் பாருங்களேன்.. வெட்டவெளில ஆடறாங்க… மேகம் சூழ்ந்து மழை வர்ற மாதிரி இருக்காம்.. மழைவருது மழை வருது குடை கொண்டுவா மானே உன் மாராப்பிலேயாம்.. சுத்தம்.. அவஙக் போட்டிருக்கறது சுடிதாரும் மிக்ஸியும் கலந்த ஒரு டிரஸ் ஸாரி மேக்ஸியும்.. என்னமோ போங்க..
https://youtu.be/ysSLP132LbY?list=PLE8183761959E53D5
பிரபு கெளதமி.. ராஜா கையை வச்சா படமாம்..
-
கோபால்
படிக்க வேண்டிய லிஸ்டில் நான் ஒன்றிரண்டு சேர்க்க எண்ணுகிறேன்.
முன்பே குறிப்பிட்டது போல், தேவி வார இதழில் தாமரை செந்தூர் பாண்டி தொடராக எழுதிய, தூங்கும் எரிமலைகள்.. உள்ளத்தில் பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்க முடியாது. ஒரு கிராமத்தை அதன் உள்ளிருக்கும் சோகத்தை அப்படியே கொண்டு வந்த நெஞ்சைத் தொடும் கதை.
இன்னொன்று ஆனந்த விகடன் இதழில் ஒரு குறநாவலாக பிரசுரமான பாலகுமாரனின் யாதுமாகி நின்றாய் ... ஆரம்பித்தால் முடிக்காமல் கீழே வைக்க முடியாத எழுத்து..
இதைத் தாங்கள் படித்திருப்பீர்கள் என எண்ணுகிறேன்.
-
சென்னை லாயிட்ஸ் சாலை - தற்போது அவ்வை சண்முகம் சாலை - யில் உள்ள அரசுப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றியவர் புலவர் புலமைப்பித்தன். அவரைத் திரையுலகிற்கு அழைத்து வந்தவர் எம்.ஜி.ஆர். நான் யார் பாடல் தான் அவருடைய முதல் பாடல். அதன் பின் அவருக்கு மிகவும் பெயர் பெற்றுத் தந்தது அடிமைப்பெண் படப்பாடலான ஆயிரம் நிலவே வா.
இது ஒன்றும் புதிய தகவல் இல்லை என்றாலும் ஒரு நினைவூட்டலே.
-
ராகவேந்தர் சார்.. ஊர்மண் மேலாண்மை பொன்னுச்சாமி என் நினைவுக்கு வருகிறத்.
தூங்கும் எரிமலைகள் - ரசு நல்ல பெருமாளும் ஒரு நாவல் எழுதிய நினைவு..
யாதுமாகி நின்றாய் பாலகுமாரன் குறு நாவலா. ஆனந்த விகடனிலா.. நான் படித்ததில்லையே.. யாதுமாகி நின்றாய் காளி என ஒரு சிறுகதை எழுதியிருந்தார்.. காதலி வந்துவிட்டுப் போனதும் அவளது நினைவுகளைக் காதலன் சொல்வது போல.. பாலகுமாரனைப் படிக்க வைத்தது ஆனந்த விகடன் குறு நாவல் பச்சை வயல் மனது
கரையோர முதலைகள், பயணிகள் கவனிக்கவும், தாயுமானவன் என்றெல்லாம் க்ளாஸ் நாவல்கள் எழுதியிருக்கிறார். மரக்கால், சுக ஜீவனம், இனியெலாம் சுகமே என..அந்தக்காலத்தில்..
காற்றுக்கென்ன வேலி ஒரு நாவல் மிக நன்றாயிருக்கும்.. உடையார் ஆறு பாகம், கங்கை கொண்ட சோழன் நாலு பாகம் அவசியம் படிக்க வேண்டிய படைப்பு அவருடையது..
-
சி.க. சார்
தாங்கள் கூறியது சரி. ர.சு. நல்லபெருமாள் எழுதியது தான் தூங்கும் எரிமலைகள். ஆனால் தாமரை செந்தூர் பாண்டி எழுதிய தொடரின் பெயரும் அது போல் தான் இருக்கும். நினைவுபடுத்திக் கொண்டு பிறகு சொல்கிறேன்.
ஆம். யாதுமாகி நின்றாய் கிட்டத்தட்ட விகடன் இதழில் 120 பக்கங்களுக்கு மேல் நீண்டது. ஒரு சிறப்பிதழாக வெளிவந்த விகடனில் இது இடம் பெற்றது. அந்த சிறப்பிதழின் கிட்டத்தட்ட அனைத்துப் பக்கங்களும் இந்நாவல் தான்.
-
INDRU PADAGAR THILAGAM NINAIVU NAL.
https://youtu.be/wLcddb8O4M4
-
வணக்கம்
அம்மா பிள்ளை என்ற ஒரு படம்.
சங்கர் கணேஷ் இசையில் அழகான பாடல்
இனிய தென்றலே இரு கைகள் வீசி வா
https://www.youtube.com/watch?v=qz4Q5g1wb0I
-