சின்னக் கண்ணன் சார்,
தங்களின் (என்னுள் கலந்த கானங்கள் - 2) கவிதைகளில் தமிழ் கொஞ்சுகிறது.
ராகம் தன்னை மூடி வைத்த
வீணை அவள் சின்னம்
அச்சோ! மீன்,வில்,புலி போன்று வீணை அவள் சின்னமாம். கொன்னுபுட்டார் போங்கள்.
Printable View
சின்னக் கண்ணன் சார்,
தங்களின் (என்னுள் கலந்த கானங்கள் - 2) கவிதைகளில் தமிழ் கொஞ்சுகிறது.
ராகம் தன்னை மூடி வைத்த
வீணை அவள் சின்னம்
அச்சோ! மீன்,வில்,புலி போன்று வீணை அவள் சின்னமாம். கொன்னுபுட்டார் போங்கள்.
பாலா சார், சின்னக்கண்ணன் சார், மற்றும் கிருஷ்ணாஜி
பாடல் ஆய்வுகள் அனைத்தும் அருமை
அசத்துங்கள்
1972-ல் ஜாம்பவான்களின் வெற்றிப்படங்களுக்கு நடுவே சாமான்யர்களின் வெற்றிப்படங்களும் கம்பீரமாக உலா வந்தன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை புகுந்த வீடு, காசேதான் கடவுளடா, குறத்திமகன் (இது ஜாம்பவான்கள் லிஸ்டில் சேருமோ) ஆகியன.
இவற்றில் முழுநீள நகைச்சுவைப்படமாக அருமையான பாடல்களுடன் அமைந்த படம் காசேதான் கடவுளடா. அதுவரை ஸ்ரீதரின் உதவியாளாராக இருந்த சித்ராலயா கோபு இப்படத்தின் மூலம் இயக்குனரானார். முத்துராமன், லட்சுமி, மனோரமா, தேங்காய் சீனிவாசன், ஸ்ரீகாந்த், சசிகுமார், மூர்த்தி, வாசு என பெரிய நட்சத்திரப் பட்டாளம். தேங்காய் சீனிவாசனின் படங்களில் சிறப்பான இடத்தைப்பிடித்த படம். மெல்லிசை மன்னரின் இசையில் பாடல்கள் அனைத்தும் தித்திக்கும் தேவாமிர்தமாக காதுகளில் பாய்ந்தன.
'அவள் என்ன நினைத்தாள் அடிக்கடி சிரித்தாள்'
'மெல்லப்பேசுங்கள் பிறர் கேட்கக்கூடாது' (இது பற்றி தனிப்பதிவு வருகிறது)
இப்படத்தின் பெயர் சொன்னதுமே நினைவுக்கு வரும் பாடல் 'ஜம்புலிங்கமே ஜடாதரா'. இப்படி அனைத்துப்பாடல்களுமே அருமை.
அன்றிருந்த கவர்ச்சி நடன நடிகைகளில் எனக்கு மிகவும் பிடித்தவர் ஜெய்குமாரி. கள்ளங்கபடமில்லாத அழகிய முகம், கவர்ச்சியான உடலமைப்பு, நளினமான நடன அசைவுகள் என மனத்தைக் கொள்ளை கொண்டவர். அவரோடு தேசிய நடிகர் சசிகுமார் இணைந்து நடித்த பாடல். சசிக்கு பாடல் கிடையாது. ஜெய்குமாரி பாடுவதை ரசிப்பதோடு சரி.
பாடல் செட்டில் எடுக்கப்பட்டதல்ல, வெளிப்புறத்திலும் எடுக்கப்பட்டதல்ல. ஒரு பூங்காவில் எடுக்கப்பட்டிருக்கும். கிட்டத்தட்ட நீச்சல் உடை என்று சொல்லக்கூடிய ஷார்ட்ஸ் அணிந்திருப்பார் ஜெய்குமாரி. சசியின் உடையும் அதுபோலவே.
கவர்ச்சி நடிகைக்கான இப்பாடலை அதிசயமாக பி.சுசீலா பாடியிருந்தார். (இதற்கு மாறாக கதாநாயகிக்கான டூயட் பாடலை ஈஸ்வரி பாடியிருந்தார்).
இன்று வந்த இந்த மயக்கம்
என்னை எங்கெங்கோ கொண்டுபோகுதம்மா
பட்டுமேனி பந்துபோல துள்ள - நீ
பக்கம் வந்து அள்ளவேண்டும் மெல்ல
பட்டுமேனி பந்துபோல து...ள்.....ள - நீ
பக்கம் வந்து அள்ளவேண்டும் மெ...ல்...ல...
இன்று வந்த இந்த மயக்கம்
என்னை எங்கெங்கோ கொண்டுபோகுதம்மா
(மெல்லிசை மன்னரின் அருமையான இடையிசை... கிடார், ட்ரம்பெட், ப்ளூட் என்று அசத்தியிருப்பார்).
எங்கெங்கு தொட்டால் என்னென்ன இன்பம்
அங்கங்கு தொட வேண்டும் கை பதமாக
அங்கங்கள் முழுதும் தங்கங்கள் எழுதும்
ஆனந்தம் பெற வேண்டும் உன் பரிசாக
(படத்தில் முதலிரண்டு வரிகள் மாற்றப்பட்டிருக்கும், சென்சார் பிரச்சினையால்)
கையோடு பூவாட்டம் எடுத்து - உன்
மெய்யோடு மெய்யாக அனைத்து
அஞ்சாறு சின்னங்கள் கொடுத்து - அந்த
ஆரம்ப பாடத்தை நடத்து
ஆரம்ப பாடத்தை நடத்து
(சென்சாரில் 'ஆனந்த கீதத்தை எழுது' என்று மாற்றப்பட்டிருக்கும்)
இன்று வந்த இந்த மயக்கம்
என்னை எங்கெங்கோ கொண்டுபோகுதம்மா
(மீண்டும் ட்ரம்ஸ் மற்றும் வயலினில் வேகமான இடையிசை துவங்கி பின்னர், ப்ளூட்டில் வேகம் குறைந்து ஒலிக்கும்).
தட்டாமல் திறக்கும் கேளாமல் கிடைக்கும்
எந்நாளும் உனதல்லவோ என் இளநெஞ்சம்
சொல்லாமல் துடிக்கும் துணைதேடி தவிக்கும்
பெண்பாவை மனமல்லவோ உன் மலர் மஞ்சம்
சொல்லாமல் கொள்ளாமல் பெறலாம் - இந்த
சொர்க்கத்தை நீ தேடி வரலாம்
முன்னூறு முத்தாரம் இடலாம் - அதில்
என் பங்கு சரிபாதி எனலாம்
என் பங்கு சரிபாதி எனலாம்
இன்று வந்த இந்த மயக்கம்
என்னை எங்கெங்கோ கொண்டுபோகுதம்மா
பட்டுமேனி பந்துபோல துள்ள - நீ
பக்கம் வந்து அள்ளவேண்டும் மெல்ல
பட்டுமேனி பந்துபோல து...ள்.....ள - நீ
பக்கம் வந்து அள்ளவேண்டும் மெ...ல்...ல...
இன்று வந்த இந்த மயக்கம்
என்னை எங்கெங்கோ கொண்டுபோகுதம்மா
மெல்லிசை மன்னரின் முத்திரை இசையுடன் பாடல் முடிவு பெறும்.
இசைக்குயில் சுசீலா மிகப்பிரமாதமாகப் பாடி அசத்திய பாடல் இது. அன்றைய ஹோட்டல் ஜுக்-பாக்ஸ்களில் ஏராளமான காசை இளைஞர்களிடமிருந்து பறித்துக் கொடுத்த பாடல். படத்திலோ ஜெய்குமாரி கவர்ச்சி வழிய வழிய ஆடி அசத்திய பாடல். என்னுடைய 'சுசீலா விருப்பம்' பட்டியலில் முதல் இருபதுக்குள் வரும் பாடல்.
நண்பர்களே.... வீடியோ ப்ளீஸ்......
நடிகர் திலகத்திடம் என்னவொரு பவ்யம்!
தானே உலகாகி (சுலீலாம்மா இந்த வார்த்தையை எடுக்கும் அழகு) தனக்குள்ளே தான் அடங்கி
மானக் குலமாதர் மஞ்சள் முகம் காத்து
http://www.youtube.com/watch?feature...&v=HfN12EqikDg
Karthik Sir
namkkaga
http://youtu.be/1CAT8gIV9W8
http://youtu.be/bMBYmo6tw2o
'
என்னுள் கலந்த கானங்கள்..3
மரபுப் பாடல்களில் கவிஞர் கண்ணதாசன் எப்போதுமே அசத்தல் தான்..
எளிமைச் சொல்லாட்சி ஏற்றமிகு பொருளாட்சி
..எண்ணம் விளைத்திட்ட கற்பனையின் கண்காட்சி
வலிமைத் தமிழாட்சி வண்ணமிகு வார்த்தைகளை
..வாகாய்த் தொடுத்திட்ட தோரணத்தின் எழிலாட்சி
களிக்கும் மன்மதுவும் கண்டுவந்து போற்றுவதும்
..கவிஞர் தாம்நமக்கு வழங்கியசொல் தேனாட்சி
பிழிந்தே சாறெடுத்து நம்மொழியில் சுவைகொடுத்து
...பேணிப் போற்றிவைத்த கண்ணதாசன் அரசாட்சி..
(சரியா வந்திருககா தெரிலை..ஜஸ்ட் எழுதிப் பார்த்தேன் :) )
ஸோ கவிஞரின் சொல்லாட்சி மிக்க இந்தப் பாடலில் படத்தில் தோற்றம் தரும் பத்மினியின் நடிப்பாட்சி..
**
நானாட்சி செய்து வரும் நான்மாடக் கூடலிலே
மீனாட்சிஎன்ற பெயர் எனக்கு- கங்கை
நீராட்சி செய்து வரும் வடகாசி தன்னில்
விசாலாட்சி என்ற பெயர் வழக்கு
கோனாட்சி பல்லவர்தம் குளிர்சோலைக் காஞ்சிதன்னில்
காமாட்சி என்ற பெயர் எனக்கு- கொடும்
கோலாட்சி தனை எதிர்க்கும் மாரியம்மன் என்ற பெயர்
கொண்டபடி காட்சி தந்தேன் உனக்கு
ஆறென்றும் நதியென்றும் ஓடை என்றாலும்
அது நீரோடும் பாதை தன்னைக் குறிக்கும் - நிற்கும்
ஊர் மாறிப்பேர் மாறி கரு மாறி உரு மாறி
ஒன்றே ஓம் சக்தி என உரைக்கும்..
**
ஆதிபராசக்தியில் பல அழகிய பாடல்கள்..நிறையச் சொல்லலாம்..
பின்ன வாரேன் :)
//கையோடு பூவாட்டம் எடுத்து - உன்
மெய்யோடு மெய்யாக அணைத்து // சமீபத்தில் (போனவாரம்) இந்தப் படத்தைப் பார்த்தேன்..அப்போதே உஙக்ள் நினைவு வந்தது கார்த்திக் சார்..:)
தி.பெ. வீடியோவுக்கு ஒரு ஸ்பெஷல் தாங்க்ஸ் வாசு சார்..ம்ம் எனக்கு விப்ர நாராயணரைத் தான் பிடிக்க்கும் :)
கார்த்திக் சார்
கண்ணிய பாடகி சுசீலாவின் குரல் இனிமை
உங்கள் போஸ்ட்
என்னை எங்கெங்கோ கொண்டுபோகுதம்மா
கார்த்திக் சார்,
'இன்று வந்த இந்த மயக்க'த்தை எழுதி இன்ப அதிர்ச்சி அளித்து விட்டீர்கள். என்னா ஒரு அலசல் அதுவும் இளமை கொப்பளிக்க கொப்பளிக்க! புகுந்து விளையாடி விட்டீர்கள். ஜெயகுமாரி என்னுடைய மனம் கவர்ந்த டான்சர். வழக்கம் போல உங்களுக்கு பிடித்த மாதிரியே. அப்புறம்தான் எல்லாம். (இனிமேல் ஆச்சரியமே படக்கூடாது போல!)
(ஜெயகுமாரி பற்றி அப்புறம் விவரமாக வருகிறேன்)
இனி தணிக்கைக் குழு இப்பாடலில் ஆட்சேபித்த வரிகளையும், பின் அவை மாற்றப்பட்டபின் வந்த வரிகளையும் இப்போது முழுதாகப் பார்க்கலாம்.
'எங்கெங்கு தொட்டால் என்னென்ன இன்பம்'
என்ற வரிகள்
'எங்கெங்கு வந்தால் என்னென்ன இன்பம்'
என்றும்
'அங்கங்கு தொட வேண்டும் கை பதமாக'
வரிகள்
'அங்கங்கு வர வேண்டும் என் நிழலாக'
என்றும்
'அங்கங்கள் முழுதும் தங்கங்கள் எழுதும்'
வரிகள்
'அங்கங்கள் முழுதும் சந்தங்கள் எழுதும்'
என்றும்
'கையோடு பூவாட்டம் எடுத்து - என்னை
நெஞ்சோடு நெஞ்சாக அணைத்து'
வரிகள்
'கையோடு பூவாட்டம் எடுத்து - என்னை
மெய்யோடு மெய்யாக அணைத்து' (அதாவது உடம்போடு உடம்பாகவாம்)
என்றும்
'அஞ்சாறு கிண்ணங்கள் கொடுத்து
அந்த ஆரம்பப் பாடத்தை நடத்து'
வரிகள்
'அஞ்சாறு கிண்ணங்கள் கொடுத்து
நெஞ்சில் ஆனந்த கீதத்தை எழுது'
என்றும் மாற்றப்பட்டது.
அடுத்த பகுதி
தட்டாமல் திறக்கும்
கேளாமல் கொடுக்கும்
எந்நாளும் உனதல்லவோ
என் இளநெஞ்சம்
துயிலாமல் இருக்கும்
துணை தேடித் தவிக்கும்
பெண்பாவை மனமல்லவோ
உன் மலர் மஞ்சம்
சொல்லாமல் கொள்ளாமல் பெறலாம் - இந்த
சொர்க்கத்தை நீ தேடி வரலாம்
முன்னூறு முத்தாரம் இடலாம் - அதில்
என் பங்கு சரிபாதி எனலாம் - அதில்
என் பங்கு சரிபாதி எனலாம்
என்று வரும்.
எனக்குத் தெரிந்தவற்றை இங்கு எழுதியுள்ளேன்.
இன்னும் மாற்றங்கள் நிகழ்ந்ததா என்று தெரியவில்லை. (இருந்தால் கிருஷ்ணாஜி விடவா போகிறார்)
வாசு சார்..மாற்றாத வரிகளைத் தான் நான் கேட்டதாக நினைவு..ஆனால் விஸ்தாரமாக எழுதியிருப்பதைப் படிக்கும்போது..இங்கு வந்த இ ம என்னை எங்கெங்கோ கொண்டு செல்லுதய்யா :)
சின்னக் கண்ணன் சார்
http://i812.photobucket.com/albums/z...ps887f87ea.jpg
எங்களுக்கெல்லாம் கள்வனைத்தான் பிடிக்கும். எங்களை களவாடிய "திருடன்" அல்லவா! (ஆப்பிளைத் தூக்கிப் போட்டு அதில் சிம்மமாய் சிரித்தபடியே கத்தி சொருகும் ஸ்டைல் அற்புதத்துக்காகவே தவம் கிடப்போம் சார்! தவம் கிடப்போம்)
ஆதிபராசக்தியில் பல அழகிய பாடல்கள்..நிறையச் சொல்லலாம்..
பின்ன வாரேன் :)[/QUOTE]
ck சார்
ஆதி பராசக்தி பாடல் அருமை
இந்த படத்தில் உள்ள எல்லா பாடல்களையும் அலச வேண்டும் சார்
especially
"அழகாக கண்ணுக்கு அழகாக கற்பக சோலை கன்னி வந்தாள்
கண்ணுக்கு அழகாக "
கருப்பழகி வாணிஸ்ரீ யின் இடை
கவிஞரின் நடை
oak தேவர் எ.கருணாநிதியின் எடை
மாமாவின் தடையில்லா இசை
[quote=gkrishna;1142360]ஆதிபராசக்தியில் பல அழகிய பாடல்கள்..நிறையச் சொல்லலாம்..
எல்லாம் கார்த்திக் சார் பண்ணின வேலை :)Quote:
கருப்பழகி வாணிஸ்ரீ யின் இடை
'ஆதிபராசக்தி' எடுத்தால் பத்து பக்கமாவது ஆயிடும் சார். அற்புதங்கள் குவிந்து கிடக்கும் பாடல்கள். அவ்வளவு சுளுவா என்ன!
வாசுசார்..கள்வனைப் பத்தித் தான் ஏற்கெனவே எழுதியிருக்கேனே.. உள்ளம் கவர் கள்வராச்சே.. விப்ர நாராயணர் படத்தில் காட்டிய ரொமான்ஸீக்காகச் சொன்னேன் :)
கண்டிப்பா கிருஷ்ணா சார்..பட்..லீவுல போறேன் நாளன்றைக்கு..எனில்..இன்றே செய்துடலாம்.. அழகாக..ரொம்பப் பிடித்த மெலடி+வாணி..
வாசு சார்
கார்த்திக்கின் இளமை கொப்பளிக்க
உங்களின் வளமை (சொல்) கொட்டமடிக்க
எங்கெங்கோ கொண்டு போகுதம்மே
//'ஆதிபராசக்தி' எடுத்தால் பத்து பக்கமாவது ஆயிடும் சார். அற்புதங்கள் குவிந்து கிடக்கும் பாடல்கள். அவ்வளவு சுளுவா என்ன!// உண்மை..தாய்ப்பால் கொடுத்தாள் பராசக்தின்னு ஆரம்பிச்சா...எங்கோ போய்டும்..ஆத்தாடி மாரியம்மா.. எளிமை பொங்கும் பக்திபாட்டென்றால் அபிராமி அந்தாதியைப் புகுத்திய சொல்லடி அபிராமி என்ன. ஆயிமகமாயி...ம்ம்
உண்மை வாசு சார்
ஆதிபராசக்தி யை பற்றி எழுத அந்த சக்திதான் வரம் அருள வேண்டும்
இயக்குனர் திலகத்தின் உன்னத தெய்வீக சித்ரம்
சின்னக் கண்ணன் சார்!
சுசீலா அரசாட்சி செய்யும் 'நானாட்சி செய்து வரும்' ஒன்று போதும் சார் ஜென்மம் சாபல்யம் அடைய.
என்னுள் கலந்த கானங்கள் - 4
**
சில நாட்கள் முன்பு சுசீலாம்மா பாடல் புதிருக்காக எழுதிப் பார்த்த புதிர்
இது..
*
கண்ணதாசன் எழுதிய ஸ்வீட் பாட்டு இது.. சுசீலாம்மா இன்னொருத்தரோட பாடிய டூயட் தான்..புராண காலப்படந்தேன்..ஆனா ஹீரோயின் ஓ.கே ஹீரோக்குத் தான் அப்பப்ப தொண்டை அடைச்சுக்கும்..கறுப்பு வெள்ளை படத்தோட வீடியோவ விட ஆடியோ எப்பொழுதும் காதுக்கு இனிமை..அந்த ஸ்வீட்டான பொருள் பாட்டு முழுக்கவும் வரும் என்பது இன்னொரு க்ளூ!
*
விடை சுலபம் தான்..
ஏனென்று கேள்வி எழாமல் சொல்லிடுவர்
தேன்குழைத்த பாட்டிது தான்..
*
ஹீரோ ப்ளாக் அண்ட் ஒய்ட்.கால ஏவி.எம் ராஜன்.. ஹீரோயினி..ம்ம்(பாலா சார் மறுபடி கலங்கப் போறார்) அகெய்ன் காஞ்சனா
தீஞ்சுவை கொண்டிருக்கும் தேனைப்போல் தித்திக்கும்
காஞ்சனையைக் கண்டுவந்தார் கண்..
எத்தனை அழகு என்றால்
..என்னதான் நானும் சொல்ல
வித்தைகள் புரியும் கண்கள்
..விளக்கிடும் கள்ளப் பார்வை
நித்தமும் மலர்ந்த பூவாய்
..நெகிழ்ந்துதான் சிரிக்கும் தோற்றம்
சித்தமும் என்றும் உன்னைத்
..தேடியே திகைக்கும் பெண்ணே
அப்படின்னு அந்தக்காலத்திலேயே என் தாத்தா பாடியிருக்காராக்கும்..
(ம்ம் அழகிகளை எல்லாம் ப்ளாக் அண்ட் வொய்ட்ல தான் காட்டணும்னு ஏன் தான் நெனச்சாங்களோ) படம் வீர அபிமன்யு..
*
பி.பி,எஸ்ஸின் மென்மைக் குரல், சுசீலாம்மாவின் தேன் குரலில் ஒரு ஜீகல் பந்தியே படைத்திடும் பாடல் என்றால் மிகையல்ல..ஆனால் அதற்கான அழகிய வரிகள் தந்த கவிஞரை என்னென்று சொல்வது
*
பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
அன்று உனைத் தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்
பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன்
அன்று உனைத் தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இவரென மலைத்தேன்
கொடித் தேன் இனி எங்கள் குடித் தேன் என
ஒரு படித் தேன் பார்வையில் குடித்தேன்
துளித் தேன் சிந்தாமல் களித்தேன் ஒரு
துளித் தேன் சிந்தாமல் களித்தேன் கைகளில்
அணைத்தேன் அழகினை ரசித்தேன்
மலர்த் தேன் போல் நானும் மலர்ந்தேன் உனக்கென
வளர்ந்தேன் பருவத்தில் மணந்தேன்
எடுத்தேன் கொடுத்தேன் சுவைத்தேன்
எடுத்தேன் கொடுத்தேன் சுவைத்தேன் இனி தேன்
இல்லாதபடி கதை முடித்தேன்
நிலவுக்கு நிலவு சுகம் பெற நினைத்தேன்
உலகத்தை நான் இன்று மறந்தேன்
உலகத்தை மறந்தேன் உறக்கத்தை மறந்தேன்
உன்னுடன் நான் ஒன்று கலந்தேன்
பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
உனைத் தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்
**
அந்த இதுவெனன்னு ஏவி.எம் ராஜன் சொல்றப்ப எனக்கு எப்பப் பார்த்தாலும் கோபம் பொங்கும்..ம்ம் கொடுத்து வச்ச ராஜா :)
பின்ன வாரேன் :)
வாசு சார்
சும்பன் oak
நிசும்பன் கருணாநிதி
நான் வம்பன்
'கொம்பன்' இன்னும் வரலையே! ஒரு வாரம் லீவா?
நல்லா இருங்க!:)
நல்லா இருங்க!:)
வாசு சார்
splendid reply
சின்னக் கண்ணன் சார்,
like ஆ கிளிக் பண்ணிகிட்டே இருக்கீங்க போல! notification 4 தாண்டிடுச்சே!:)
சின்னக் கண்ணன் சார்,
உங்கள் 'பார்த்தேன் சிரித்தேன்'
பதிவைப் பார்க்க
பார்வையை விரித்தேன்.
பின் அதிலேயே நிலைத்தேன்
என்னையே தொலைத்தேன்
http://www.youtube.com/watch?v=Jbs1FpaXfM0&feature=player_detailpage
அத்தனையும் தங்களது கலைத்'தேன்'.
//பின் அதிலேயே நிலைத்தேன்
என்னையே தொலைத்தேன்// வாசு சார்.. மிக்க நன்றி..ம்ம் பாடல் வீட்டிற்கு ப்போய்த்தான் பார்க்கணும்...
சுப்ரபாதம் னு ஒரு படம் சார் 1979 னு நினவு
இறை அருட் செல்வர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த படம்
மெல்லிசை மன்னரின் இசையில் கவிஞர் கண்ணதாசனின் பாடல்
ஜெய்கணேஷ் , முத்துராமன் , ஸ்ரீப்ரிய , K R விஜயா, லதா,நம்பியார் னு ஒரு பெருங்கூட்டம் நடித்திருக்கும் சார்
நம்பியார் பெருமாள் பக்தர் கோயில் கட்ட நினைப்பார்
ஆனால் வேண்டிய பணம் கிடைக்காது
மனம் வெறுத்து பாடுவார் இந்த பாடலை
சீர்காழி வாணி காம்போவில் (வெரி rare combination )
சீர்காழி பொதுவா பிள்ளையார் முருகர் பாடல்கள் நிறைய பாடி இருக்கார் . பெருமாள் பாட்டு கொஞ்சம் தான்
(கீதை சொன்ன கண்ணன் வண்ண தேரில் வருகிறான் !!
கேட்டவர்க்கு கேட்டபடி வாழ்வு தருகிறான் -மிலிடரி சாங் மாதிரி ஆக இருக்கும் )
இப்ப நம்ம சுப்ரபாதம் பாடல்
திருக்கோயில் கட்ட எண்ணி
பொறுப்போடு வந்த என்னை
வெறுப்போடு பார்த்தாயே பெருமாளே! - பலர்
சிரித்தாலும் விடமாட்டேன் திருமாலே!
திருப்பணி செய்வதற்கு உடந்தை - நீ திருக்கோயில் கொண்டிருக்கும் குடந்தை!
தினம்தோறும் சேவை செய்ய வரவா? - அந்த ஸ்ரீ வில்லி புத்தூரின் தலைவா!
தொண்டு செய்யும் அடியார் தமக்கு உன் சோதனை போதுமடா!
சோதனை தீர்த்து உன் பாத மலர்களில் எங்களைச் சேர்த்திடடா!
கொண்டது கொள்கை என்றது ஈன்றவர் கூறுதல் கேளுமடா!
கோயில் திறந்திட வில்லை எனில் வைகுண்டத்தில் சேர்த்திடடா! வைகுண்டத்தில் சேர்த்திடடா! வைகுண்டத்தில் சேர்த்திடடா!
அந்த சுப்ரபாதம் படத்தில் இன்னொரு பாடல் சார்
கண்ணனை பற்றி எழுத சொன்னால் நம்ம கவிஞர் தான்
பின்னிருவாரெ
வாணி ஜேசுதாஸ் combination
படத்தில் ஜெய்கணேஷ் லதா ஜோடி
(ஒன்னு கவனிச்சங்கனா MT க்கு பிறகு லதா நடிச்ச நிறைய படங்களில்
ஜெய் கணேஷ் ஜோடி )
கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும்
காலங்கள் தோறும் நினைத்தது நடக்கும்
கண்ணா கோபாலா ராதா-கிருஷ்ணா ஸ்ரீதேவா
கண்ணா கோபாலா ராதா-கிருஷ்ணா ஸ்ரீதேவா
பொன்மணி வண்ணன் சொன்னது கீதை
பூமகன் மார்பினில் தவழ்ந்தவள் ராதை
நல்லவர் செல்வது அவனது பாதை
நாடிய மனிதன் உலகத்தில் மேதை
கண்ணா கோபாலா ராதா-கிருஷ்ணா ஸ்ரீதேவா
கண்ணா கோபாலா ராதா-கிருஷ்ணா ஸ்ரீதேவா
(கண்ணனை நினைத்தால்)
ஆற்றினில் பெண்கள் சேலையை எடுத்தான்
அதையே திரெளபதி கேட்டதும் கொடுத்தான்
காற்றிலும் இசையிலும் கண்ணனின் குரலே
பாட்டினில் வருவது புல்லாங் குழலே
கண்ணா கோபாலா ராதா-கிருஷ்ணா ஸ்ரீதேவா
கண்ணா கோபாலா ராதா-கிருஷ்ணா ஸ்ரீதேவா
கோபியர் நடுவே கண்ணனின் நாதம்
குருவாயூரில் குழந்தையின் கீதம்
குருவாயூரில் குழந்தையின் கீதம்
தேவர்கள் சபையில் ஸ்ரீகிருஷ்ண வேதம்
திருமலை தனிலே தவ சுப்ரபாதம்
தவ சுப்ரபாதம் தவ சுப்ரபாதம்
எல்லாம் சிலோன் ரேடியோ உபயம் சார்
//திருக்கோயில் கட்ட எண்ணி
பொறுப்போடு வந்த என்னை
வெறுப்போடு பார்த்தாயே பெருமாளே! - பலர்
சிரித்தாலும் விடமாட்டேன் திருமாலே!// ஹையோ.க்ருஷ்ண க்ருஷ்ணா சார்.. எனக்குப் பிடித்த பாடல் இது..கேட்டு ரொம்ப நாளாச்சுது..ஆனாக்க....
கொழுக் மொழுக் லத்துவும் ஜெய்கணேஷூம் பாடும்
கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும்
காலங்கள் தோறும் நினைத்தது நடக்கும் என்னும் இனிமையான பாட்டு எனக்கு ரொம்ப உசுர்
அப்புறம்
டேய் பார்த்த சாரதின்னு நம்பியார் கூப்பிட தொங்குமீசையுடன் கன கம்பீரமாய் பார்த்தசாரதிப் பெருமாளாய் வரும் முத்து ராமன்.. நன்றாக இருக்கும்..
(இதை டைப்படிக்கும் போது வேலை வந்து அப்படியே நிறுத்தி இப்போ இடுகிறேன்..நிறைய ரிப்ளை வந்திருக்கும்)
சொன்னாப்பல நீங்க முந்திக்கிட்டீங்க கிருஷ்ணாசார்..
கிருஷ்ணா சார்,
http://i1.ytimg.com/vi/s6mVYY9WOwY/m...jpg?v=4e8b0377
மனதுக்கு இதமான பாடலை ஞாபகப்படுத்தி (கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும்) மனசாந்தி கொள்ள வைத்ததற்கு நன்றி! என்ன ஒரு அருமையான பாடல்!
தங்கள் மூலம் இத்திரியில் வந்த அபூர்வ பாடல்கள்தான் எத்தனை! உண்மையாய் பெருமையாய் இருக்கிறது சார்.
ஆனால் போட்டீர்களே ஒரு போடு மிலிடரி சாங். ரெண்டு வேளைக்கா மாத்திரை அனுப்பி வைங்க சார். இன்னைக்கு நைட் தூங்கினாப் போலதான். எழுந்திரிச்சி எழுந்திரிச்சி சிரிக்கப் போறேனோன்னு பயமா இருக்கு.
வாசு ck சார்
நானும் சிரித்து கொண்டு தான் இருக்கிறேன்
கொழுக் மொழுக் லத்து
என்ன வார்த்தை சார் அது
லதா னு சொல்லும்போது சுகம் இல்லை சார்
லத்து னு கூப்பிடும்போது தான் என்ன சுகம்
உரிமைக்குரல் படத்தில் நாகேஷ் சச்சுவிடம் சொல்வது போல்
(சரளா னு கூப்பிடும் போது அழுத்தம் இல்லை
சச்சு ன்னு கூப்பிடும் போது தான் அழுத்தம் )
"இதே அழுத்தம் அழுத்தம் வாழ்வின் எல்லை வரை வேண்டும் "
வாசு சார்
திரியை ஆரம்பித்த உங்களுக்கு நான் எப்படி நன்றி சொல்லனு தெரியலை