'வசந்த மாளிகை' ஈஸ்வரின் கைவண்ணத்தில் உருவான நடிகர் திலகத்தின் வண்ணப் போஸ்டர் டிசைன்
http://www.idlebrain.com/news/functi...aposter252.jpg
'வசந்த மாளிகை' ஈஸ்வரின் கைவண்ணத்தில் உருவான நடிகர் திலகத்தின் வண்ணப் போஸ்டர் டிசைன்
http://www.idlebrain.com/news/functi...aposter252.jpg
hi Pammalar.vasudevan Raghavendra, my genius KCK Murali Sir
i just opened this today all the best to u all
regards
kumareshanprabhu
அன்புள்ள வாசுதேவன் சார், மற்றும் ராகவேந்தர் சார்,
விளம்பர டிஸைன் ஓவியர் ஈஸ்வர் அவர்கள் பற்றிய பதிவுகளைத்தந்து அந்தக்காலத்துக்கு கொண்டு சென்று விட்டீர்கள். ராகவேந்தர் சார் சொன்னது 10க்கு 100 உணமையே அன்றி வேறில்லை. அன்றைய தினத்தந்தி, தினகரன் போன்ற பத்திரிகைகளில் வந்த கருப்புவெள்ளை விளம்பரங்களில் இருந்த ஜீவன் இப்போது வரும் வண்ண விளம்பரங்களில் கண்டிப்பாக இல்லை.
வெள்ளை பின்னணியில் கதாபாத்திரங்களின் புகைப்படங்கள் அல்லது கையால் வரையப்பெற்ற ஓவியங்களுடன் (பாத்திரத்தின் தன்மைக்கேற்ப பெரியதில் ஆரம்பித்து சிறியது வரை), மேலே அல்லது பக்கவாட்டில் தியேட்டர்கள் பெயர்களைத்தாங்கி, கீழே படத்தின் பெயருடன், சற்று சிறிய எழுத்துக்களில் பிரதான டெக்னிஷியன்களின் பெயர்களுடன் வந்த அன்றைய விளம்பரங்களோடு ஒப்பிடுகையில், அள்ளித்தெளித்த கோலமாக வண்ணங்களை அள்ளிப்பூசிக்கொண்டு வரும் இன்றைய வண்ண விளம்பரங்களில் கண்டிப்பாக ஒரு ஜீவனோ, ஈர்க்கும் சக்தியோ, அவற்றைப் பாதுகாக்க வேண்டுமென்ற ஆர்வமோ கண்டிப்பாக இல்லை.
சென்ற ஆண்டு சாந்தியில் மறு வெளியீடு செய்யப்பட்ட 'புதிய பறவை' விளம்பர போஸ்ட்டரையும் சேர்த்தே சொல்கிறேன். தவிரவும் பழைய படங்களை மறுவெளியீடு செய்யும்போது போஸ்ட்டர்களிலும், பத்திரிகை விளம்பரங்களிலும் அவற்றின் ஒரிஜினல் டைட்டில் டிசைனையும் இப்போது மாற்றி விடுகின்றனர். (உதாரணம் நடிகர்திலகத்தின் 'புதிய பறவை' மற்றும் மக்கள் திலகத்தின் 'ஆயிரத்தில் ஒருவன்'). அவை பழைய ஒரிஜினல் வடிவத்திலேயே (படத்தின் டைட்டிலில் வருவதுபோலவே) நம் மனதில் பதிந்துள்ளதால், இவ்வாறு மாற்றம் செய்யும்போது நம் மனதில் ஒட்டவில்லை.
1960 முதல் 1980 வரையான காலகட்டம், செய்தித்தாள் விளம்பரங்களின் பொற்காலம் என்று சொல்லலாம். அதிலும், இவற்றில் மற்ற ஓவியர்களின் டிசன்களைவிட ஈஸ்வரின் டிசைன் மிக அருமை. அதற்குக்காரணம், அவர் பெரும்பாலும் நட்சத்திரங்களின், குறிப்பாக நடிகர்திலகத்தின் முகபாவங்களையும் உணர்ச்சிப்பெருக்கையும் வரைகோட்டு ஓவியங்களாகவே வரைந்து விடுவார்.
நீங்கள் ஈஸ்வரைப்பற்றிய பதிவை இடுமுன்பே நண்பர் வினோத் அவர்கள் 821-வது பதிவாகத்தந்துள்ள 'சத்யம்' படத்தின் விளம்பரத்தில் நடிகர்திலகத்தின் முகபாவத்தை அப்படியே வரைகோட்டு ஓவியமாக ஈஸ்வர் தீட்டியுள்ள அழகைப்பாருங்கள்.
கே.ஆர்.வி.பக்தா, பரணி போன்றவரகளின் விளம்பர டிசைன்களும் அருமையானவை என்ற போதிலும் அவை பெரும்பாலும், படத்தில் வரும் புகைப்படங்களை வெட்டி ஒட்டி, மேற்கொண்டு நகாசு வேலைகள் செய்த விளம்பரங்களாயிருக்குமே தவிர, ஈஸ்வரின் விளம்பரம் போல வரைகோட்டுச்சித்திரங்களை அவர்களின் விளம்பரங்களில் காண்பது அபூர்வமே.
ஈஸ்வரின் கைவண்ணத்துக்கு இன்னுமொரு சான்று வேண்டுமென்றால், சென்ற ஆண்டு நவம்பர் மாதம் நடிகர்திலகம் திரியில் நமது 'பாசமுள்ள பம்மலார்' அவர்கள் தந்திருக்கும், 1972-ல் வெளிவந்த 'Hero 72' விளம்பரத்தையும், 1975-ல் வெளிவந்த வைரநெஞ்சம் விளம்பரத்தையும் பார்த்தோமானால், புகைப்படத்தை விட தத்ரூபமாக நடிகர்திலகம் மற்றும் முத்துராமன் ஆகியோரின் முகங்கள் வரைகோட்டுச் சித்திரங்களால் ஈஸ்வர் அவர்கள் தீட்டியிருப்பதைக்காணலாம்.
ஒரு அருமையான கலைஞரான நம் உள்ளம் கவர்ந்த ஓவியர் ஈஸ்வர் அவர்களை நினைவு கூர்ந்ததற்கு தங்கள் இருவருக்கும் என் நன்றிகள்.
திரைக்காவிய முதல் வெளியீட்டு விளம்பரங்கள் :18
நடிகர் திலகத்தின் 235வது காவியம்
சந்திப்பு [வெளியான தேதி : 16.6.1983]
வெள்ளிவிழாக் கொண்டாடிய மெகாஹிட் காவியம்
பொக்கிஷாதி பொக்கிஷம்
வெள்ளிவிழா விளம்பரம் : தினத்தந்தி : 1.12.1983
http://i1110.photobucket.com/albums/...andhippu-1.jpg
பக்தியுடன்,
பம்மலார்.
திரைக்காவிய மறு வெளியீட்டு விளம்பரங்கள் : 8
நடிகர் திலகத்தின் 74வது காவியம்
கப்பலோட்டிய தமிழன் [முதல் வெளியீட்டுத் தேதி : 7.11.1961]
பொக்கிஷாதி பொக்கிஷம்
மறு வெளியீட்டு விளம்பரம் : தினத்தந்தி(சென்னை) : 7.1.1977
http://i1110.photobucket.com/albums/...GEDC6490-1.jpg
சென்னையில், முதல் வெளியீட்டில் இக்காவியம்,
'பாரகன்' திரையரங்கில் 52 நாட்களும்,
'கிரௌன்' திரையரங்கில் 52 நாட்களும்
'சயானி' திரையரங்கில் 52 நாட்களும் ஓடி வெற்றி பெற்றது.
தொடரும்...
பக்தியுடன்,
பம்மலார்.
டியர் mr_karthik,
சுதந்திரத் திருநாள் சிறப்புப் பதிவுகளைப் பாராட்டி தாங்கள் அளித்த அருமையான பதிவுக்கு எனது இதயங்கனிந்த நன்றிகள்..!
சுதந்திரப் போராட்டத்தில் நமது தேசிய திலகத்தின் தந்தையார் ஒரு Unknown Soldier. அவரைப் போன்றவர்கள் நாடெங்கும் பலர் இருந்தார்கள், இன்றும் சிலர் இருக்கிறார்கள். எனது பாட்டனார் [அமரர் D.R. நாகராஜன், அம்மாவின் அப்பா]வும், இதுபோன்று ஒரு Unknown Soldier. 1940களில் குடந்தை-தஞ்சாவூர்-திருவாரூர் பகுதிகளில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு பலமுறை சிறை சென்றிருக்கிறார். சுதந்திரத்துக்குப்பின் இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கத்தின் ஒரு அதிதீவிரதொண்டராக செயலாற்றினார். 'சுதேசமித்ரன்' நாளிதழில் நிருபராகவும் பணிபுரிந்தார். குடவாசலுக்கு மிக அருகே இருக்கும் எங்கள் ஒகை அக்ரஹாரத்தில் உள்ள எங்கள் வீட்டிற்கு ஒரு முறை மூதறிஞர் ராஜாஜியும், ஒரு முறை பெருந்தலைவர் காமராஜரும் வருகை புரிந்து சில மணித்துளிகள் தங்கி உணவருந்திச் சென்றிருக்கிறார்கள். இதை எனது பாட்டியும், எனது தாயாரும் அடிக்கடி பெருமை பொங்கக் கூறுவார்கள். அந்த ஓகை அக்ரஹார வீட்டிற்கு, 1978-ம் ஆண்டு, [எனக்கு ஐந்து நிரம்பி ஆறு வயது நடைபெறும்போது], சென்னையிலிருந்து கோடை விடுமுறைக்காகக் சென்றிருந்தபோதுதான், ஒருநாள் குடவாசல் 'ஃபிலிப்ஸ்' டூரிங்கில் "திருவிளையாடல்" திரைக்காவியத்திற்கு வீட்டில் அழைத்துச் சென்றார்கள். எனக்கு அன்று "திருவிளையாடல்" பார்த்ததை நினைவுகூர்ந்தால் இன்றும் மெய்சிலிர்க்கும். நான் பார்த்த முதல் திரைப்படமும், முதல் நடிகர் திலகத்தின் திரைப்படமும் என் வாழ்க்கையில் அதுதான். அன்று படம் பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்த பின்னர், படத்தில் நடித்த நாகேஷ்(தருமி), பாலையா(பாகவதர்), மகாலிங்கம்(பாணபத்திரர்) ஆகியோரைப் பற்றியெல்லாம் என்னிடம் சொல்லி எனக்கு அவர்களை பிடித்திருக்கிறதா என்று கேட்டிருக்கிறார்கள். நானோ அவர்களுக்கு சற்றும் பிடிகொடாமல், அவர்களிடம் 'எனக்கு இப்படத்தில் நடித்த வேறு யாரையும் பிடிக்கவில்லை. சிவபெருமானாக வந்து நிற்கிறாரே-நடக்கிறாரே-பாடுகிறாரே-டான்ஸ் ஆடுகிறாரே, அவரை மட்டும்தான் ரொம்ப ரொம்ப பிடித்திருக்கிறது' என்று கூறியிருக்கிறேன். என் அம்மாவழி உறவுகள் இன்றும் என்னிடம் இதனை நினைவுகூர்வதுண்டு. அன்று தொடங்கிய நமது இதயதெய்வத்துடனான பயணம்..இன்று வரை..என்றென்றும்..! சரி, விடுதலைப் போராட்டத்தின் Unknown Soldiersக்கு வருகிறேன். நமது தேசிய திலகம் "கப்பலோட்டிய தமிழன்" காவியத்தில் முழங்குவது போல், 'அவர்களை இந்த சரித்திர ஆசிரியர்கள் வேண்டுமானால் மறந்துவிடலாம்..ஆனால் சத்தியம் மறக்காது..'. அன்றிருந்த தியாகத்தலைவர்கள்-தியாகிகள் தங்கள் வீட்டிலிருந்தவற்றை தாய்நாட்டிற்காகத் தந்தார்கள். 'தியாகம், தொண்டு என்றால் என்ன' எனக் கேட்கும் இன்றிருக்கும் அரசியல்வியாதிகளோ ஸாரி அரசியல்வாதிகளோ நாட்டிலிருப்பவற்றை தங்கள் வீட்டிற்கும்-குடும்பத்துக்கும் எடுத்துக் கொள்கிறார்கள்.
தேசிய திலகத்தின் பாதயாத்திரை பற்றி மேலும் சில ஆவணங்கள் உள்ளன. அதனையும் சமயம்வரும்போது அவசியம் பதிவிடுகிறேன்..!
["பாசமுள்ள பம்மலார்" எனத் தாங்கள் எழுதியிருந்தது என்னை மெய்சிலிர்க்கச் செய்தது].
பாசத்துடன்,
பம்மலார்.
நடிகர் திலகத்துக்கு கௌரவம் : 3
ஃபிரான்ஸ் அளித்த அங்கீகாரம்
'செவாலியே' விருது விழா
22.4.1995 [சனிக்கிழமை]
எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம் : சேப்பாக்கம் : சென்னை
தமிழக முதல்வர் கலைச்செல்வி டாக்டர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் தலைமை வகிக்க, ஃபிரான்ஸ் நாட்டுத் தூதர் திரு. ஃபிலிப் பெடிட் அவர்கள், தங்கள் நாட்டின் மிகமிக உயர்ந்த விருதான 'செவாலியே' விருதை, உலக நடிகர் திலகத்துக்கு வழங்கினார். சிங்காரச் சென்னையில் மிகப் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, இந்தியத் திரையுலகமே திரண்டு வந்து, நமது சிங்கத்தமிழனை வாழ்த்தி, பெருமை தேடிக் கொண்டது. அந்தக் கோலாகலமான விழாவின் வரலாற்று ஆவணங்கள் தொடர்கின்றன:
பொக்கிஷாதி பொக்கிஷம்
வரலாற்று ஆவணம் : தினத்தந்தி : 23.4.1995
http://i1110.photobucket.com/albums/...GEDC6448-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC6450-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC6451-1.jpg
தொடரும்...
பக்தியுடன்,
பம்மலார்.
டியர் குமரேசன் சார்,
தங்களுக்கு மனமார்ந்த என் நல்வரவு. நீண்ட நாட்களாய் தங்கள் பதிவுகளைக் காண வில்லை. இப்போது பார்க்கையில் மிக சந்தோஷம். 'கும்கி' பிசியோ?.
டியர் கல்நாயக் சார்,
சுதந்திரத் திருநாள் பதிவுகளைப் பாராட்டி மகிழ்ந்த தங்களுக்கு எனது கனிவான நன்றிகள்..!
அன்புடன்,
பம்மலார்.
டியர் esvee சார்,
இணையதளத்தில் இருக்கும் நடிகர் திலகத்தின் அருமையான நிழற்படங்களையும், அரிய விளம்பரங்களையும் இங்கே தொடர்ந்து இடுகை செய்து வருவதற்கு இனிய நன்றிகள்..!
அன்புடன்,
பம்மலார்.
சிவாஜி சினிமா : பத்திரிகை விமர்சனம் : 4
பொக்கிஷாதி பொக்கிஷம்
வாழ்க்கை
ஆனந்த விகடன் : 1984
http://i1110.photobucket.com/albums/...GEDC6493-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC6494-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC6495-1.jpg
பக்தியுடன்,
பம்மலார்.
நேற்று மதுரையில் வெளியான "கோடீஸ்வரனுக்கு" பிரமாத வரவேற்பு என்று கேள்வி. சென்ட்ரலில் கோடிஸ்வர ராஜ்ஜியம் என்றால் ராம் திரையரங்கில் கர்ண சாம்ராஜ்ஜியம். ஆம் நேற்று முதல் மதுரை ராம் திரையரங்கில் கர்ணன் வெளியாகி வெற்றிவாகை சூடி வருகிறது.
இதை தவிர கோவை மாநகர் டிலைட் திரையரங்கில் புதிய பறவை வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த தகவல்களை வழங்கிய திரு ராமஜெயம் அவர்களுக்கு நன்றி.
அன்புடன்
மணியனின் இதயம் பேசுகிறது இதழில் வெளியான பேட்டியை வெளியிட்ட வாசு அவர்களுக்கு நன்றி.
<dig>
அதன் தொடர்ச்சியாக கார்த்திக் அவர்கள் ஒரு சில விஷயங்களை குறிப்பிட்டிருந்தார். நான் எழுதிய ஒரு பதிவையும் சுட்டிக் காட்டியிருந்தார். நான் ஏற்கனவே எழுதியிருந்தது போல மணியனும், அவர் மூலமாக விகடனும் 1968 இறுதியிலிருந்து மெல்ல மெல்ல நடிகர் திலகத்திடமிடமிருந்து விலகி மாற்று முகாம் நோக்கி பயணப்பட்டனர். அந்த கால கட்டத்தை பற்றியும் அதன் பிறகு மணியன் விகடனிலிருந்து விலகி இதயம் பேசுகிறது இதழ் ஆரம்பித்து அ.தி.மு.க,வின் அதிகாரப்பூர்வ இதழ் போன்றே நடத்தி வந்த காலங்களைப் பற்றி அந்த பதிவுகளில் நான் பதிவு செய்திருந்தேன்.
இந்த நிலைமை 1984 அக்டோபர் மாதம் வரை தொடர்ந்தது. அதன் பிறகு எம்.ஜி.ஆரின் inner circle எனப்படும் உள்வட்டதிலிருந்து மணியன் வெளியேற்றப்பட்டார். அதாவது எம்.ஜி.ஆர் நோய்வாய்ப்பட்டு அமெரிக்கா கொண்டு செல்லப்படும் போது அன்று வரை வெளிநாட்டு பயணம் என்றால் மணியன்தான் ஒருங்கிணைப்பாளர் அதிலும் அமெரிக்கா என்றால் மணியன் பிளஸ் எம்.எஸ்.உதயமூர்த்தி என்ற நிலை மாறி பழனி.ஜி.பெரியசாமி போன்றவர்கள் அந்த இடத்தை நிரப்ப கொண்டு வரப்பட்டனர். இது மணியனுக்கு ஒரு பெரிய ஷாக் ஆக அமைந்தது. எம்.ஜி.ஆர். நலமடைந்து இந்தியா திரும்பியவுடன் மணியன் அவரை சந்தித்து மீண்டும் அவரது உள்வட்டத்தில் இணைய எடுத்த முயற்சிகள் தோல்வியிலே முடிந்தது. எம்.ஜி.ஆரின் இறுதிக் காலம் வரை பழனி.ஜி. பெரிய சாமியை அகற்ற மணியனால் முடியவில்லை.
அது மட்டுமல்ல 1982 வரை இதயம் பேசுகிறது இதழுக்கு கொடுத்து வந்த ஆதரவிலும் ஒரு மாற்றம் நிகழ ஆரம்பித்தது. வார இதழ் உலகில் விகடனிலிருந்து வெளியேறி இதயம் பேசுகிறது ஆரம்பித்த மணியனுக்கும் தினமணி கதிரிலிருந்து வெளியேறி சாவி இதழ் ஆரம்பித்த சாவி அவர்களுக்கும் ஒரு பெரிய தொழில் முறை போட்டியே இருந்தது.[சாவி முதலில் குங்குமம பத்திரிக்கை ஆசிரியராக இருந்து பின்னர் சாவி இதழை தொடங்கினார்] முதலில் கலைஞர் ஆதரவாக வெளிவந்த சாவி பின் அவருடன் ஏற்பட்ட ஒரு மனஸ்தாபத்தினால் எம்.ஜி.ஆர். பக்கம் சாய ஆரம்பித்தது. அதுவரை எம்.ஜி.ஆரின் படத்தை போட மாட்டேன் என்று சொன்ன சாவி 1980 ஜூலையில் ஒரு முறையும் 1981 ஜனவரியில் ஒரு முறையும் அட்டைபடத்தில் எம்.ஜி.ஆரை வெளியிட்டார். அதிலும் இரண்டாவது முறை தோட்டம் முதல் கோட்டை வரை என்று ஒரு நாள் முழுக்க எம்,ஜி.ஆரோடு தன் ஆசிரியர் குழுவினரை இருக்க வைத்து ஒரு கட்டுரையாக வெளியிட்டார் [அந்த கட்டுரையை எழுதியவர் அன்று தமிழன் என்ற புனைப் பெயரில் எழுதிக் கொண்டிருந்த மாலன்]. அது மணியனுக்கு கிடைத்த முதல் அடி.
அந்த வருடத்திலேயே எம்.ஜி.ஆரின் சொந்தப் பத்திரிக்கையான தாய் வார இதழ் ஆரம்பிக்கப்பட்டது. முதலில் எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகன் அப்பு ஆசிரியராக இருந்து நடத்திய அந்த இதழுக்கு பின்னர் வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் அவர்கள் ஆசிரியராக பொறுப்பேற்றார். அதன் பிறகு தாய் இதழின் வளர்ச்சி அசுர வளர்ச்சியாக இருந்தது. அன்றைய நம்பர் 1 இதழான குமுததிற்க்கே சவால் விடும் வகையில் அமைந்தது தாய். அந்த நேரத்தில் அ.தி.மு.கவில் இணைந்த செல்வி ஜெயலலிதாவும் எனக்கு பிடித்த என்ற தலைப்பில் கட்டுரைகளை வாராவாரம் எழுதினார். தவிரவும் குமுதத்தில் அவர் எழுதிக் கொண்டிருந்த தொடர் கதையை நிறுத்தி விட்டு அதை இங்கே தொடர்ந்தார். இவை எல்லாம் தாய் இதழுக்கு பெரிய வரவேற்பை கொடுத்தது.
இந்த பாராமுகம் பின்னர் 1984 அக்டோபர் முதல் விலக்கி வைக்கப்பட்டது, மீண்டும் இணைய முயற்சி எடுத்தும் முடியாமற் போனது இவை அனைத்தும் சேர்ந்துதான் 1986-ல் மீண்டும் நடிகர் திலகம் பேட்டியை எடுக்க காரணமாக அமைந்தது ஆக எப்போதும் தன்னலம் கருதி செயல்ப்பட்ட மணியன் இந்தப் பேட்டியின் போதும் அதைதான் கடைப்பிடித்தார்.
<end dig>
அன்புடன்
டியர் ராகவேந்திரன் சார்,
சுதந்திரத் திருநாள் பதிவுகளைப் படித்துக் களித்து தாங்கள் வழங்கிய உச்சமான பாராட்டுதல்களுக்கு எனது உயர்வான நன்றிகள்..!
மதுரை 'சென்ட்ரல் சினிமா'வில் "எங்க மாமா" : நிழற்படங்களுக்கு முரளி சாருக்கும், தங்களுக்கும் நன்றி..!
கலையுலக கோடீஸ்வரர் மதுரையில் வெற்றிநடைபோடுகிறார் என 'சுட்டி'க்காட்டிய நமது 'திரைக்களஞ்சியக் கோடீஸ்வரர்' நெய்வேலியாருக்கும் நன்றி..!
அன்புடன்,
பம்மலார்.
Manian personaly nice person but for business purpose very selfish person. thamks for murali srinivas for the article about manian. way back in 86 he has released some casttes about sri raghavenra swamigal and he himself supervised the sales in front of the temple at tripilicane that time I happened to interact with him and he was very upset over the present happenings ie 84 delink from political scenes etc. very pity.
MAKKAL THILAGAM . NADIGARTHILAGAM, PREM NAZIR, KANNADA ACTOR RAJKUMAR
THE VETRAN ACTOR M.K.RADHA .
http://i49.tinypic.com/2z9bbyx.jpg
''சந்திப்பு' வெள்ளி விழா சிறப்பு நிழற்படம்.
http://i1087.photobucket.com/albums/...1355/xascv.jpg
'சந்திப்பு' வெள்ளி விழாக் காவியத்தில் நடிகர் திலகத்தின் அற்புதமான நடனத்துடன்
இளைய திலகம், ஸ்ரீதேவி, ராதா, சரத்பாபு ஆகியோரின் அற்புத பங்களிப்புடன்
பிரம்மாண்ட செட்டிங்குடன்
மெல்லிசை மன்னரின் ஆர்ப்பாட்டமான இசையுடன்
'ஷோலாப்பூர் ராஜா...
ஷோலாப்பூர் ராணி
ஜோடி சேரும் நேரமோ'...
http://www.youtube.com/watch?v=BJTfW...yer_detailpage
"ஆனந்தம் விளையாடும் வீடு...
நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு"
http://www.youtube.com/watch?v=bzRQIs5OIuA&feature=player_detailpage
ஸ்ரீதேவியின் அசத்தல் மூவ்மென்ட்களில், மெல்லிசை மன்னரின் அற்புதமான இசையில் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் வாணி ஜெயராமின் வசீகரக் குரலில்.
"ராத்திரி நிலாவில்
ரகசியக் கனாவில்
காதல் சங்கீதம் தான் நான் பாடவோ!"
இந்தப் பாடல் என்னை மிகவும் கவர்ந்த பாடல். இந்தப் பாடலை நான் கேட்காத நாளே கிடையாது. அவ்வளவு இனிமையான பாடல். பலர் இந்தப் பாடலை அதிகம் கேட்டிருக்க வாய்ப்பில்லை. இப்போது கேட்டுப் பாருங்கள்... என்ன ஒரு இனிமையான இசை!... நடுவில் வரும் நடிகர் திலகத்தின் அந்த 'டேப்' டான்ஸ் இந்தப் பாடலுக்கு மிகவும் அழகையும், மெருகையும் சேர்க்கிறது.
http://www.youtube.com/watch?v=rK8TXOEPcFE&feature=player_detailpage
ஸ்ரீதேவியுடன் நடிகர் திலகத்தின் டூயட்.
"வார்த்தை நானடி கண்ணம்மா..
வர்ண மெட்டு நீதான் என் செல்லம்மா "
நடிகர் திலகத்தின் புகழ் பாடும் வைர வரிகள்.
"விழியில் வீரம் விளங்கும் போது கட்டபொம்மன் போலே
அன்பை வாரி வாரி வழங்கும் போது வள்ளல் கர்ணன் போலே"
"உன்னை மிஞ்சும் நடிகன் இந்த உலகில் தோன்றவில்லை"
http://www.youtube.com/watch?v=du7OfHBgeZ8&feature=player_detailpage
'இளையதிலகம்' பிரபு ராதாவுடன் அசத்தும் ஜனரஞ்சக டூயட் பாடல்.
"அடி நான் வாங்கி வந்தேண்டி நாலு முழப் பூவு"
அதப் பின்னாடி வைப்பேன்டி வாசனையைப் பாரு"...
SPB மற்றும் ஜானகியின் கலாட்டா குரல்களில்
http://www.youtube.com/watch?v=E36NsN8l8Ro&feature=player_detailpage
Attn. VASUDEVAN
வந்துட்டாரய்யா வந்துட்டாரு....
டியர் ராகவேந்திரன் சார்,
ஆவல் தாங்க முடியல...
நன்மையில் முடிக்க வேண்டியவர்...
டியர் வாசுதேவன் சார்,
தங்களின் இதயம் நிறைந்த பாராட்டுக்களுக்கு எனது இனிய நன்றிகள்..!
பிரபல பல் மருத்துவர் ஜானகிராமன் அவர்கள் நடிகர் திலகத்துக்கு பல் மருத்துவம் செய்த தகவல் அருமை. காணாமல் போன பல்லை அவர் பின்னர் கண்டுபிடித்து மகிழ்ந்தது படுசுவாரஸ்யம். 2003-ம் ஆண்டு 'தி ஹிந்து' நாளிதழில் வந்த இத்தகவல், இன்னும் சற்று விரிவாக, அதே ஆண்டு 'குமுதம்' வார இதழிலும் வந்திருந்தது.
நடிகர் திலகத்தின் கலையுலகப் பொன்விழாயொட்டி, மணியனின் 'இதயம் பேசுகிறது' இதழில் வெளியான அவரது பேட்டி மிக அருமை. நேர்காணல்களின்போது பத்திரிகையாளர்களிடம் எப்பொழுதுமே நடிகர் திலகம் மனதில்பட்டதை-உள்ளத்தில் உள்ளதை வெளிப்படையாகப் பேசிவிடுவார். அதிலும் குறிப்பாக மணியன் போன்றவர்களிடம் பேசும்போது படுகேஷுவுலாகவும், ஜாலியாகவும் பதிலளிப்பார். 1990களில், இதே இதழுக்காக அளித்த பேட்டியில், நடிகர் திலகம் மணியன் அவர்களிடம் ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில், 'நீங்கள் தானே நான் மிகையாக நடிக்கிறேன் அதாவது ஓவர் ஆக்ட் செய்கிறேன் என்று பத்திரிகையில் முதன்முதலில் எழுதினீர்கள்' என்று மணியனிடமே சொல்லி அவரை திக்குமுக்காட வைத்தார். 1986-ல் வெளிவந்த இந்த மணியான பேட்டியை இங்கே இடுகை செய்த தங்களுக்கும், இந்த கிடைத்தற்கரிய ஆவணங்களை தங்களுக்கு அள்ளி வழங்கிய அன்பு அடிகளாருக்கும் எனது மனமுவந்த பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள்..! [நடிகர் திலகத்தின் கலையுலகப் பொன்விழா, 1984-ம் ஆண்டிலிருந்து 1986-ம் ஆண்டு வரை நமது பத்திரிகைகளால் கொண்டாடப்பட்டது. 1986-ல் அவரது கலையுலகப் பொன்விழா மிகப் பிரம்மாண்டமான முறையில் ஒரு விழாவாகவும் நடைபெற்றது. இவ்விழா குறித்த ஆவணப் பொக்கிஷங்களை அடியேன் ஏற்கனவே எட்டாம் பாக நடிகர் திலகம் திரியில் அளித்திருக்கிறேன்].
திரைப்பட விளம்பர டிசைன் திலகம் திரு. ஈஸ்வர் அவர்களைப் பற்றிய தகவல்களும், அவரது டிசைன்களின் இமேஜுகளும் தாங்கள் வழங்கிய பதிவுகளிலேயே மிகமிக வித்தியாசமான பதிவுகள். அதற்காக தங்களுக்கு எனது ஸ்பெஷல் பாராட்டுக்கள். ராகவேந்திரன் சார், mr_karthik மற்றும் தங்களுடைய கைவண்ணங்கள் வாயிலாக, ஈஸ்வர் அவர்களின் கைவண்ணம் குறித்து நன்றாக அறிந்து கொள்ள முடிந்தது.
"வாணி ராணி" விளம்பரமும், பத்திரிகையில் வெளிவந்த நடிகர் திலகத்தின் வண்ணப்படமும், காரைக்குடி நாராயணன் அவர்கள் நமது திலகத்துடனும், மேஜருடனும் இருக்கும் புகைப்படமும் கனஜோர்..!
அன்புடன்,
பம்மலார்.
அன்பு பம்மலார் சார்,
பாராட்டுக் குவியல்களுக்கு பாசமான நன்றிகள்.
'சந்திப்பு' 'தினத்தந்தி' வெள்ளிவிழா விளம்பரத்தை இணையத்தில் முதன்முறையாக பதிப்பித்து (இணையத்தில் முதன்முறையாக என்பது தங்கள் பதிவுகளுக்குத்தான் சாலப் பொருந்தும். எங்கு தேடினாலும் கிடைக்காத பொக்கிஷப் பதிவுகளை தங்களைத் தவிர வேறு யார் இவ்வளவு சிறப்பாகத் தர முடியும்?) சந்திப்பின் தன்மானத்தை எவ்வித சன்மானமும் எதிர்பாராமல் காத்து, எங்களை தலை நிமிர்ந்து நடக்கச் செய்தமைக்கு நன்றி!
'கப்பலோட்டிய தமிழன்' மறு வெளியீட்டு விளம்பரம் கலக்கல்.
தங்களது பாட்டனார் 'தேசியச் செம்மல்' அமரர் திரு.D.R. நாகராஜன் அவர்களின் சுதந்திரப் போராட்ட உணர்வுகளை தாங்கள் விளக்கியிருந்தது நிஜமாகவே பெருமிதம் அடையச் செய்து விட்டது. ஒரு தேசியக் குடும்பத்துப் பிள்ளையாகிய தாங்கள் எங்களுக்கெல்லாம் அன்புச் சகோதரராய் கிடைத்தது எண்ணி பெருமகிழ்வு அடைகின்றேன்.
ஐந்தாவது வயதிலேயே நம் சிவபெருமானின் திருவிளையாடல் கண்டு தாங்கள் நடத்திய திருவிளையாடல் ரகளை. தங்களைப் போலத்தான் நானும். நான் என் வாழ்வில் கண்ட முதல் காவியம் 'பார்த்தல் பசி தீரும்'. ஆனால் இன்று வரை அவர் மேல் கொண்ட பசி தீரவே இல்லை. தீரவும் தீராது.
தியாகப் பெருந்தகையின் பேரச் செல்வமே! தங்கள் தாயை பெற்றெடுத்த தங்கள் தியாகத் தாத்தாவிற்கும், தங்களை எங்களுக்களித்த எங்கள் அருமைத் தாய்க்கும் என்னுடைய ஆயிரம் கோடி வந்தனங்களும், நமஸ்காரங்களும்.
தாங்கள் கண்டு களித்த முதல் காவியம்
http://lulzimg.com/i23/acf068.png
தங்களுக்காக தலைவரின் 'ருத்ர தாண்டவம்' (வீடியோவாக)
http://www.youtube.com/watch?v=RJhyuTQb0hY&feature=player_detailpage
நான் கண்டு களித்த முதல் காவியம்
http://i1098.photobucket.com/albums/...heerum0005.jpg
நம் எல்லோருக்காகவும் "பிள்ளைக்குத் தந்தை ஒருவன்" (நடிப்புக்குத் தந்தை நம் இறைவன்)
http://www.youtube.com/watch?v=zsJJ4zVdC7g&feature=player_detailpage
தங்களது பாட்டனார் 'தேசியச் செம்மல்' அமரர் திரு.D.R. நாகராஜன் அவர்களுக்கு சமர்ப்பணம்.
http://www.youtube.com/watch?v=uZlh5o55QN0&feature=player_detailpage
நன்றி முரளி சார்.
'இதயம் பேசுகிறது' கட்டுரைப் பதிவைத் தொடர்ந்து தாங்கள் வெளி உலகிற்கு அதிகம் தெரியாத பல தகவல்களை அற்புதமாக வழங்கியுள்ளீர்கள். வெரி இன்ட்ரெஸ்ட்டிங். "இந்த நிலைமை 1984 அக்டோபர் மாதம் வரை தொடர்ந்தது... அதன் பிறகு எம்.ஜி.ஆரின் inner circle எனப்படும் உள்வட்டதிலிருந்து மணியன் வெளியேற்றப்பட்டார்" என்று தாங்கள் கூறியுள்ளது சற்று திடுக்கிட வைத்தது. மணியன் அவர்களுக்கு இந்த நிலைமைக்கு காரணம் ஏதும் உண்டா?... ஏனெனில் எம்ஜியார் அவர்களின் பேரன்பிற்கு பாத்திரமான மணியன் தள்ளிவைக்கப்பட்டதன் பின்னணி என்ன என்பது தெரியவில்லை.
EID MUBARAK
Ramaḍān, is the ninth month of the Islamic calendar. Muslims worldwide observe this as a month of fasting. This annual observance is regarded as one of the Five Pillars of Islam. The month lasts 29–30 days based on the visual sightings of the crescent moon, according to numerous biographical accounts compiled in hadiths.
The word Ramadan comes from the Arabic root ramida or ar-ramad.
A crescent moon can be seen over palm trees at sunset in Manama, marking the beginning of the Islamic month of Ramadan in Bahrain as shown in the Snap.
While wishing all my Islam Friends for Ramadan,
I was also thinking, what Ramzan it would be without fuel to the fire...i mean adding our Thalaivar, The Pride of Tamizhnadu - RAHIM BHAI's song.
http://www.youtube.com/watch?v=ruMVBLeUsEw
Insha Allah !!
:smokesmile:
Attachment 1693
தியாகியின் வழி வந்த தன்னலமற்ற தொண்டரே, தங்களை நண்பராகப் பெற நாங்கள் பெற்ற பேறுதான் என்னே. வாசுதேவன் பதிவுகளில் உள்ள வார்த்தைகள் அனைவரின் எண்ணங்களையும் பிரதிபலிப்பதால் அவருடைய கூற்றுக்களுக்கெல்லாம் அப்படியே
http://ponnivala.com/Education/Resou...llery8.jpg?589
டியர் பாரிஸ்டர்
தங்களின் ஈத் முபாரக் வாழ்த்து சிவாஜி ரசிகர்கள் அனைவரும் ஒரே எண்ண ஓட்டத்தில் இருப்பவர்கள் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. பாராட்டுக்கள்.
நமது திரியின் பிரமிக்கத் தக்க வேகத்தைப் பற்றி மற்றொரு புள்ளிவிவரம்
நமது ந.தி.பாகம் 10 தொடங்கியது - 14.6.2012. இன்று 19.8.12 தேதி மாலை 3.50 மணி வரை பதிவுகளின் எண்ணிக்கை 862 - நாட்கள் - 67
பம்மலார் தொடங்கிய சாதனைத் திரியின் நிலவரம் . 19.8.12 தேதி மாலை 3.50 மணி வரை பதிவுகளின் எண்ணிக்கை 867 - நாட்கள் - 29
பம்மலார் தொடங்கிய சாதனைத் திரியின் போது பாகம் 10ன் நிலவரம் - 21 ஜூலை மாலை 4.29 மணி க்கு சந்திர சேகர் அவர்களுடைய பதிவைச் சேர்த்து 661
22.07.2012 தொடங்கி இன்று 19.08.2012 பகல் 3.50 மணி வரை பாகம் 10ல் வந்துள்ள பதிவுகளின் எண்ணிக்கை - 201.
இதே காலத்தில் பம்மலார் தொடங்கிய திரியின் பதிவுகளின் எண்ணிக்கை . 867.
இந்தப் புள்ளி விவரம் இனிமேலாவது சம்பந்தப் பட்டவர்களுக்கு நிலைமையப் புரிய வைக்கும் என்று நம்புகிறேன். இதைச் சொல்வதற்குக் காரணம், பி.ஆர். அவர்களைப் பாராட்டும் சாக்கில் ஒரு நண்பர் எழுதியிருப்பது தான். மற்றவர்கள் தூண்டியும் உசுப்பேற்றியும் விட்டதாகவும் அவர் பொறுமையுடனும் பக்குவத்துடனும் அளந்தும் பதில் அளித்திருப்பதாகக் கூறியிருக்கிறார். யார் உசுப்பேற்றி விட்டார்கள். யார் மனதைப் புண்படும் படி எழுதினார்கள். யார் தூண்டி விட்டார்கள் என்பதைப் பற்றி அவருக்குத் தெரியாதா அல்லது மீண்டும் கலகமூட்டி விடும் வேலையைத் துவக்க எண்ணுகிறாரா என்பதை நண்பர்கள் தீர்மானித்துக் கொள்ளட்டும்.
அன்புடன்
நடிகர் திலகம் நடித்த 'ஞான ஒளி' படத்தில் இடம்பெற்ற...
தேவனே என்னைப் பாருங்கள் -என்
பாவங்கள் தம்மை வாங்கிக் கொள்ளுங்கள்
என்ற பாடலை மறக்க முடியுமா?
எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் இசையமைத்த இந்த பாடலின் நடுவே..
" ஓ...மைலார்ட்...பார்டன் மீ....
உங்கள் மந்தையில் இருந்து இரண்டு ஆடுகள்
வேறு வேறு பாதையில் போய்விட்டன...
இரண்டும் சந்தித்த போது பேச முடியவில்லையே..."
என்று உணர்வுபூர்வமாக வசனங்கள் இடம் பெற்றிருந்ததன.
டி.எம்.எஸ் பாடிய அந்தப் பாடலில் வரும் மேற்படி வசனங்களை மட்டும்... நடிகர் திலகத்தையே பேசும்படி எம்.எஸ்.வி வேண்டுகேள் விடுத்தார்.
இந்த வசனங்கள்... பாடலில் எந்த இடத்தில் வருகின்றன என்பதை பாடிக்காட்டுங்கள்" என்று எம்.எஸ்.விஸ்வநாதனிடம் சிவாஜி கேட்க உடனே எம்.எஸ்.வி...
" ஆயிரம் நன்மை தீமைகள்
நாங்கள் செய்கின்றோம்..
நீங்கள் அறிவீர் ...மன்னித்தருள்வீர்"
என்று பாடிக் காட்டி ....
இந்த இடத்தில் தான் தாங்கள்....'O My Lord Pardone Me' என்று ஆரம்பமாகும் வசனத்தை பேசவேண்டும் என்றார்.
இவ்வளவு உச்ச ஸ்தாயியில் கொண்டு போய் பாடலை நிறுத்தி இருக்கிறீர்களே.... அதற்கு ஈடுகொடுத்து என்னால் பேச முடியாது என்றே நினைக்கிறேண். வேறு பொருத்தமானவரை அழைத்து அந்த வசனங்களைப் பேச வையுங்கள் என்றார் நடிகர் திலகம் தமக்கே இயல்பான வெளிப்படைப் பண்புடன்'
வயலின் வாத்தியக் கலைஞரும் , தமது உதவியாளருமான ஜோசப் கிருஷ்ணாவை அழைத்து அந்த வசனங்களைப் பேச வைத்தார் எம்.எஸ்.விஸ்வநாதன்.
ஆனால் அவரது குரல் அந்தப் பாடலின் வீச்சுக்குப் பொருத்தி வரவில்லை.
'பல்குரல் வித்தகர்' சதன் என்பவரைக் கூப்பிட்டு ('அவள் ஒரு தொடர்கதை' படத்தில் எஸ்.பி.பி. பாடிய கடவுள் அமைத்து வைத்த மேடை' பாடலில் பல குரல்களில் அமர்க்களப்படுத்தியவர் இந்த 'சதன்') இதே வசனத்தைப் பேச வைத்தார் எம்.எஸ்.வி.
ஆனால் , அதுவும் பாடலின் போக்கோடு ஒன்றிப்போகாமல் தனித்து நின்றது.
நடப்பதை எல்லாம் தூரத்தில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இயக்குனர் கிருஷ்ணன் - பஞ்சு, எம்.எஸ்.வியை அழைத்து...
பாடலைப் பாடிய டி.எம்.எஸ்ஸையே அந்த வசனங்களையும் பேச வைத்துப் பார்க்கலாமே என்றார்.
எம்.எஸ்.வி.... டி.எம்.எஸ்ஸிடம் அந்த வசனங்களைக் கொடுத்துப் பேசுமாறு வேண்டினார்.
டி.எம்.எஸ் உடனே நடிகர் திலகத்தின் அருகில் சென்றார்.
அந்த வசனங்களை நடிகர் திலகத்திடம் கொடுத்தார்.
"உங்கள் சிம்மக்குரலில்...அந்த வசனங்களை ஒரு தடவை எனக்குப் பேசிக்காட்டுங்கள் அய்யா" என்றார்.
நடிகர் திலகம் , அந்த வசனங்களை தமது பாணியில் டி.எம்.எஸ்ஸிடம் பேசிக்காட்டினார்.
அந்த வசனங்களைப் பேசிய போது, நடிகர் திலகத்தின் குரலில் இருந்த பாவங்களையும் ஏற்ற இறக்கங்களையும்,உணர்வுக் குமிழிகளையும் , உன்னதங்களையும் அப்படியே தமது மனதில் உள் வாங்கிக் கொண்டார் டி.எம்.எஸ்.
"நான் தயார்... ஒலிப்பதிவை ஆரம்பிக்கலாமா?" என்று டி.எம்.எஸ் சொன்னதும் ...எம்.எஸ்.வி கையசைத்தார்.
ஏக்கமும் விரக்தியும் தேவ விசுவாசமும் கொண்ட ஒரு பக்தனின் 'ஞானத் தேடல்' விளங்கும் விதமாக... உணர்ச்சிப் பிழம்பாக மாறி அந்த வசனத்தைப் பேசினார் டி.எம்.எஸ்
'அருமை டி.எம்.எஸ் அற்புதம் ' ENDAR NADIGAR THILAGAM
டியர் வினோத் சார்,
தூள். என் மனம் கொள்ளை கொண்ட 'ஞான ஒளி' காவியத்தின் பாடலைப் பற்றிய அம்சமான குறிப்புகளைத் தந்து அசத்தி விட்டீர்கள். தன்னால் எதுவும் செய்து காட்ட முடியும் என்று தெரிந்திருந்தாலும் கூட "தேவனே... என்னைப் பாருங்கள்" பாடலுக்கு .''O My Lord Pardone Me" என்ற உணர்வு பொங்கும் வார்த்தையை டி.எம்.எஸ் அவர்களே குரல் கொடுத்துப் பாடினால்தான் மிக அம்சமாக இருக்கும் என்ற உயரிய உள்ளமும், தன்னால் பாடகருக்கு எந்த பாதிப்பும் வந்துவிடக் கூடாது என்ற உயரிய நன்னோக்கமும், அவரவர்கள் செய்ய வேண்டிய வேலைகளை அவரவர்கள்தான் செய்ய வேண்டும் என்ற உறுதியான செயல்பாடும் கொண்டவர்தான் நடிகர் திலகம் என்பது இதன் மூலம் உறுதியாகிறதல்லவா! அதனால்தான் எல்லோர் மனங்களிலும் நடிகர் திலகம் மனிதப் புனிதராக உயர்ந்து நிற்கிறார். அருமையாக பதிவளித்தமைக்கு நன்றிகள்.
ஆருயிர்ச் சகோதரர் நெய்வேலி வாசுதேவன் அவர்களே,
தங்களின் பதில் பதிவு என்னை மெய்சிலிர்க்கச் செய்துவிட்டது. உணர்ச்சிப்பெருக்கின் உச்சத்தில் கண்கள் குளமாயின. பேசவோ, எழுதவோ வார்த்தைகள் வரவில்லை. தங்களுக்கு எனது ஆத்மார்த்தமான நன்றிகளை காணிக்கையாக்குகின்றேன்..!
பாசப்பெருக்கில்,
உங்கள் அன்புச் சகோதரன்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
அனைவருக்கும் இனிய ரம்ஜான் நல்வாழ்த்துக்கள்
http://i1087.photobucket.com/albums/...n31355/ram.jpg
http://i1087.photobucket.com/albums/...g?t=1345386162
அன்புடன்,
வாசுதேவன்.
http://dribbble.s3.amazonaws.com/use...-animation.gif
நடிகர் திலகத்தின் தொழுகை வழிபாடு
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=f1iKN6xOJ6o
அன்புடன்,
வாசுதேவன்.
டியர் ராகவேந்திரன் சார்,
தங்களின் எல்லையில்லா அன்பிற்கும், பெருந்தன்மை பொங்கும் உள்ளத்துக்கும் எனது தூய்மையான நன்றிகள்..!
'புள்ளிவிவரப்புலி' என்பதனை மீண்டும் நிரூபித்துவிட்டீர்கள்..!
அன்புடன்,
பம்மலார்.
அனைவருக்கும் ரம்ஜான் பெருநாள் நல்வாழ்த்துக்கள் !
http://i1110.photobucket.com/albums/...r/Rahim1-1.jpg
பக்தியுடன்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
ரம்ஜான் பெருநாள் சிறப்புப் பாடல்
"எல்லோரும் கொண்டாடுவோம்
அல்லாவின் பெயரைச் சொல்லி
நல்லோர்கள் வாழ்வை எண்ணி
எல்லோரும் கொண்டாடுவோம் !!!"
பாவமன்னிப்பு(1961) திரைக்காவியத்திலிருந்து...
http://www.youtube.com/watch?v=ruMVBLeUsEw
'எல்லோரும் கொண்டாடுவோம்' பாடல்
இசைமுரசு நாகூர் ஈ.எம். ஹனீஃபா அவர்களின் வெண்கலக்குரலில்:
http://www.youtube.com/watch?v=FIhoh7eifLE
http://www.youtube.com/watch?v=voEJGKqd70I
பக்தியுடன்,
பம்மலார்.
"அல்லா..அல்லா... நீ இல்லாத இடமே இல்லை".
'முகமது பின் துக்ளக்' திரைப்படத்தில் எம்.எஸ்.வியின் அற்புதமான குரலில்.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=I0M6mgDA3nI
மதுரை லேட்டஸ்ட்
19.8.2012 : ஞாயிறு
டிஜிட்டல் "கர்ணன்", 'ராம்' திரையரங்கில், இன்று மாலைக் காட்சி ஹவுஸ்ஃபுல் !
"எங்க மாமா", 'சென்டரல் சினிமா'வில், இன்று மாலைக் காட்சி நியர் ஹவுஸ்ஃபுல் !
சாக்லேட் நியூஸை சுடச்சுட வழங்கிய அன்புள்ளம் திரு.எஸ். ராமஜெயம் அவர்களுக்கு ஸ்வீட் தேங்க்ஸ்..!
அன்புடன்,
பம்மலார்.
Anbu Pammalar Avargalukku,
Aedho oru thiraipadathil Thiru.Goundamani Kooriyadhai poala....." ADRA SAKKA ! ADRA SAKKA !! ADRA SAKKA !!! "ENGA MAMA KARNAN AACHAE SUMMAVA !!! GETHTHU !!!!
INDHA SANDHOSHATHA INDHA PAATA PAATHU SANDHOSHA PADALAAMA ?
AETHUDA...SAMBANDHAMAE ILLAMA INDHA PAATU VARUDHU APPUDINNU YOSIKKAREENGALA?????
SAMBANDHAM VARAPOAGUDHEY !! ADHUKKUDHAAN !!!
http://www.youtube.com/watch?v=Gu4t6mhZDK4
:smokesmile:
மதுரை நிலவரத்தை இங்கே பதிவிடலாம் என்று வந்தால் எனக்கு முன்னேரே சுவாமி அதை செய்திருக்கிறார். நன்றி சுவாமி. ராம் திரையரங்கைப் பொறுத்தவரை சில பல வருடங்களுக்கு பிறகு இன்றுதான் ஹவுஸ் புல் போர்ட் மாட்டினார்களாம். பெரும்பான்மையான ரசிகர்கள் சென்ட்ரலில் குழுமியிருக்க பொதுமக்களால் மட்டுமே இந்த ஹவுஸ் புல் என சொல்லும்போது கர்ணனின் வெற்றி வீச்சை புரிந்துக் கொள்ளலாம். சென்ட்ரலில் இன்று மாலை ரசிகர்கள் ஒரு கலக்கு கலக்கியிருக்கிறார்கள். கூடுதல் விவரங்கள் விரைவில் வரும்.
பதிவைப் பாராட்டிய அனைவருக்கும் நன்றி, வாசு சார், எந்த ஒரு இடத்திலும் ஒருவர் செல்வாக்கோடு விளங்கினால் அவருக்கு எதிராக ஒரு சிலர் அணி திரள்வர். அதுதான் அங்கே நடந்தது. மேலும் 84 அக்டோபர்-க்கு பிறகு ஆளும் கட்சியில் கோஷ்டிப் பூசல் வெளிப்படையாக வெடித்தது. அப்போது செல்வாக்கோடு இருந்த ஆர்.எம்.வீ . தனக்கு வேண்டிய ஆட்களை முக்கியமான இடங்களில் அமர்த்திக் கொண்டார். அப்போது நிகழ்ந்ததுதான் மணியனின் வெளியேற்றம். இதில் இன்னும் ஆழமாக இறங்கினால் அது வேறு சில விஷயங்களுக்குள் நம்மை இழுத்து சென்று விடும் என்பதனால் இத்துடன் நிறுத்திக் கொள்வோம். நேரில் உரையாடும்போது நிறையப் பேசலாம்.
அனைத்து இஸ்லாமிய பெருமக்களுக்கும் ஈஃத் முபாரக்
அன்புடன்