கோபால்., எழுத்தாள சகோதரி என்று குறிப்பிட்டிருந்தீர்கள்.. அவர் யார் என அறிந்து கொள்ளலாமா..
Printable View
கோபால்., எழுத்தாள சகோதரி என்று குறிப்பிட்டிருந்தீர்கள்.. அவர் யார் என அறிந்து கொள்ளலாமா..
தொடரும் கொண்டாட்ட தோல்விகள்.
சுதந்திர இந்தியாவை பற்றி மிக அழகாக கனவு கண்டவர் சுபாஷ் சந்திர போஸ் .நல்லெண்ண சர்வாதிகாரமே ,முதல் 20 ஆண்டுகளுக்கு சிறப்பான ஆட்சியை தரும். இந்தியா போன்ற முதிராத தேசங்களுக்கு மேற்கத்திய ஜனநாயக முறை ஒத்து வராது என்பது அவர் எண்ணம் .முன்னேறிய அமெரிக்கா போன்ற நாடுகளிலேயே ,அனைவருக்கும் வாக்குரிமை வழங்காத போது ,சில முதிர்ச்சியற்ற தலைவர்கள்,இந்தியாவிற்கு அந்த முறையை கொண்டு வந்தனர். என்ன ஒரு மடமை!!! அதிகாரத்தை மத்தியில் குவித்து ,வாக்குரிமையை பரவலாக்கும் போலி ஜனநாயகம் புகுந்து விளையாட ஆரம்பித்து ,இன்று வரை கேலி கூத்து தொடர்கிறது. ஒருவர் கொள்ளைக்கு(சர்வாதிகாரம்) பதிலாக பலர் கொள்ளை (ஜனநாயகம்),கோமாளி சந்தர்ப்பவாத தலைவர்கள்,பரவலான குட்டி சர்வாதிகாரிகள், கடவுளுக்கு பதிலாக மனித சிலைகள் ,சிலரை கேள்வியே கேட்காத பகுத்தறிவு,கேள்வி கேட்போரை மிரட்டுதல் என்ற அதி அற்புத ஜனநாயகம்.இதில் கொடுமை என்னவென்றால் கண்கட்டு வித்தை காட்டும் மந்திரவாதி போல, சினிமா என்ற புதிய ஆயுதம் கொண்டு,மக்களுடன் மாய தொடர்பிலிருந்தோர், எந்த ஒரு அறிஞர்,சமூக சேவகர்,அரசியல் வித்தகர் என்று எல்லோரையும் மீறி வளர்ந்து ,அரசியல் வெற்றி என்பதன் புனித மாண்பையே சிதைத்தனர்.
இந்த வெற்றி, தகுதி,திறமை என்பதை சிதைத்து,அரசு நிறுவனத்தை கேலி பொருளாக்கி ,இன்றோ இந்த முறையே தேவையா என்று கேட்க வைக்கிறது.
நாம் தொடர்வோம் கொண்டாட பட வேண்டிய தோல்விகளை.
கோவர்த்தனம்.
அண்ணனின்( சுதர்சனம்)அதிர்ஷ்டம் தம்பிக்குமா தொடர வேண்டும்? ஒரே வழி என்ற வாசு மேனன் படத்தில் 1959 இல் அறிமுகமான கோவர்தன் (அதுவரை அண்ணனுக்கும்,இன்னும் சிலருக்கும் உதவியாக இருந்தார்) ,1960 இல் கைராசியில்(கண்ணும் கண்ணும் பேசியது) உச்சம் தொட்டார். பெற்ற மனம்,பாவை விளக்கு,மன்னாதி மன்னன் எல்லா படங்களையும் போட்டியில் முந்திய கைராசிக்கு இசையமைப்பாளர். எங்கோ சென்றிருக்க வேண்டியவர், விஸ்வநாதன்- ராமமூர்த்தி பிறகு விஸ்வநாதன் ஆகியோருக்கு உதவியாக (ஜி.கே.வெங்கடேஷ்,சங்கர்,கணேஷ்,ஹென்றி டேனியல்,ஜோசெப் கிருஷ்ணா,பிலிப் ஷ்யாம் போல)70 வரையும் ,பிறகு தனக்கு உதவியாக இருந்த இளையராஜாவிற்கு உதவியாகவும் இருந்து, இளைய ராஜாவின் வழக்க படியே அவரால் மிகவும் அவமான படுத்த பட்டு விலாசமிழந்தார்.
1966இலிருந்து மீண்டு பல வெற்றி படங்களுக்கு ,வெற்றி பாடல்களை கொடுத்தவர் ஏன் விலாசமிழக்க வேண்டும்? பட்டினத்தில் பூதம் படத்தின் சிவகாமி மகனிடம், கண்ணில் கண்டதெல்லாம்,எதிர்பாராமல் விருந்தாளி , பூவும் போட்டும் படத்தின் நாதஸ்வர ஓசையிலே ,உன்னழகை கண்டு கொண்டால்,எண்ணம் போல கண்ணன் வந்தான்,பொன் வண்டு தீண்டாத மல்லிகை, பொற்சிலையின் அழகை பாட வந்தேன்,அக்கரையில் அவனிருக்க,பட்டு கன்னம்,ஓம் மகா கணபதி, அஞ்சல் பெட்டி 520 இன் திருமகள் என் வீட்டை,பத்து பதினாறு , வரப்ரசாதம் படத்தின் கங்கை நதியோரம் என்று அற்புத பேச பட்ட பாடல்கள்.பெரிய வெற்றி முதல் சுமார் வெற்றி என்று படங்களும் சோடை போகவில்லை. அவர் தோல்வியடைய கூட சந்தர்ப்பம் கொடுக்க படாமல் துடைத்தெரிய பட்டது என்ன வகையில் சாரும்?
வெற்றிகரமான தோல்விகள் தொடரும்.
gopal ji arumai
yes sudharsanamavadhu AVM'kku aasthanamaga irundhaal
Govardanam paavam finally he worked as asst to IR.
Now he is in coimbatore or salem and bed ridden, PS is sending pension monthly .
vasu: You like colorful qawwali. I like it in black and white. Here is the one I like most from "Barsaat ki Raaat":
Na To Karwan ki Talash Hai......
http://www.youtube.com/watch?v=qXmVoEwJAyU
It is about 'ishq' (love) ! :)
( I don't like to post Hindi songs here except in Jugalbandi. I made an exception for you. Have fun ! :) )
இல்லறமே நல்லறம் திரையிலிருந்து 2 அழகான பாடல்கள்
இசையரசியின் மயக்கும் குரலில்
https://www.youtube.com/watch?v=s6a2DXH50r8
https://www.youtube.com/watch?v=F4IAq_jGMqA
ராஜ்ராஜ் சார்!
மிக்க நன்றி! அருமையான கவாலி பாடல். இதோ என் அபிமானப் பாடகி பேகம் மற்றும் உஷா மங்கேஷ்கர் பாடிய கவாலி பாடல். 'ஆஜ் அவுர் கல்' படத்திலிருந்து. இதிலும் உங்களுக்குப் பிடித்தமான ishq தான்.:) பிளாக் அண்ட் ஒயிட்தான்.
'Kehte Hai Jisko Ishq'
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=euKEPjDS1xI
பாடல் இரண்டு
பாணி ஒன்று
தொடர் 7
காளை மாட்டு வண்டிகள் பாடல்கள்.
காளை மாட்டு வண்டிகள் 'ஜல் ஜல்' என்று வயல்வெளிகளின் இடையே வரிசையாக பயணிக்க, இளம் சிட்டுக்கள் வண்டிகளில் பயணிக்க, காதலர்கள் ஒருவரையொருவர் கண்களால் ஆழம் பார்த்து மௌனப் புன்னகை புரிந்து காதல் புரிய, மாடு மேய்க்கும் ஒருவன் 'ஏண்டி முத்தம்மா' என்று பாட அழகான வண்டிப் பயணத்தில் எதிர்பாராத விதமாக நமக்குக் கிடைத்த அதிரசப் பாட்டு. கவிதை மயமான நாட்டுப்புறப்பாட்டு. 'ஆறு புஷ்பங்களி'ல் அர்த்தங்கள் பொதிந்து கிடைக்கும் வரிகள்.
'சுவையுள்ள வாழைக்கனி காயலாமா
சுடச் சுடக் காளை ப் பசு மேயலாமா'
அப்படியே சுடச் சுட பாடலையும் மேய்ந்து விடுங்கள். விஜயகுமார், ரஜினி, ஸ்ரீவித்யா, ஒய்.விஜயா, லட்சுமிஸ்ரீ, சஹஸ்ரநாமம், பண்டரிபாய், அனுபமா, எஸ்.ஆர்.விஜயா என்ற நட்சத்திரக் கூட்டத்துடன் நீங்களும் மாட்டு வண்டியில் பயணிக்கும் சுகத்தை உணரலாம்.
https://www.youtube.com/watch?v=NGL3IMNnBOw&feature=player_detailpage
அண்ணனுக்கு கல்யாணம் முடித்து, அண்ணியை கிராமத்து சிட்டுக்களுடன் காளை மாட்டு வண்டிகளில் கூட்டிக் கொண்டு, ஜாலியாகப் பாட்டுப் பாடியபடி ஜமாய்க்கும் தம்பி. பவானி, ஒய்.விஜயா(இதிலும்), சங்கீதா, ராமகிருஷ்ணா என்று நட்சத்திரக் கூட்டம்.
'ஜில் ஜில் ஜில் என்றது காளைக் கன்னு
ஜிலு ஜிலு என்றது நாலு கண்ணு'
என்று புதிய கல்யாண ஜோடியை இளம் பெண்கள் கலாட்டா செய்து பாட, இவர்களுக்கெல்லாம் தலைமை ஏற்று நடிகர் திலகம் 'டுர்ர்ர்ர்ர்'... என்று மாட்டு வண்டி ஓட்டியபடி 'சிங்காரத் தோப்புக்கு மச்சானை வரச் சொல்லு'ம் தேனினும் இனிய பாடல். ஒய்.விஜயாவிற்கு நடிகர் திலகத்துடன் இணையாக பாடி நடிக்க செம சான்ஸ். பாடல் முழுதும் கரை புரண்ட உற்சாகம். தலையில் மஞ்சள் பரிவட்டம் கட்டி அதிக ஒப்பனை இல்லாமல் சற்று கருமை நிற ஒப்பனையோடு, மிக எளிமையான ஆடைகள் அணிந்து, நடிகர் திலகம் மிக மிக அனுபவித்து இப்பாடலில் வழக்கத்தை விடவும் அதிகமாக அசத்தியிருப்பார். பாடகர் திலகமும், ராட்சஸி யும் இணைந்து அசத்தோ அசத்து என்று அசத்தியிருப்பார்கள்.
முழுப் பாடலும் வெளிப்புறப் படப்பிடிப்பில்தான். ஸ்டுடியோ வாசனையே இருக்காது. நடிகர் திலகத்தின் தாரக மந்திரமான 'ங்கொப்பன் தன்னானே' கண்டிப்பாக உண்டு. பாடல் முழுக்க வேகம் என்றாலும் பாடல் முடிவடையும் போது ஜெட் வேகம். (சும்மா வண்டிகள் காற்றாய் பறக்க (அம்மாடி! எத்தனை மாட்டு வண்டிகள்!) நடிகர் திலகம் ஏறி வந்த வண்டி குடை சாய்ந்து விட, விழுந்த நடிகர் திலகம் காளை மாட்டு வண்டிகளுக்குப் போட்டியாக ஜம்மெற்று ஓடுவதைப் பாருங்கள். செம ஜாலியாக இருக்கும்.
(இதில் இன்னொரு வருத்தம் உண்டு. 'புண்ணிய பூமி' படம் எதிர் பார்த்த அளவிற்கு வெற்றி பெற இயலாமல் போனதால் இப்படத்தின் சில அருமையான பாடல்கள் அப்படியே அமுங்கிப் போயின. அட்டகாசமான பாடல்கள். படத்தின் தோல்வியால் பேசப் படாமலேயே போய் விட்டன. ஒவ்வொரு பாடலிலும் வித்தியாசமான நடிகர் திலகத்தைக் கண்டு களிக்கலாம். முதல் பாதியில்தான் கோட்டை விட்டார்கள். இரண்டாவது பாதி அருமையோ அருமை. நடிகர் திலகத்தின் உழைப்பு விழலுக்கு இழைத்த நீரானது. நம் மக்களும் படத்தின் மீது அதிருப்தி அடைந்து விட்டதால் எல்லோரும் ஒரு தரம் மட்டுமே பார்த்து ஒரு மாதிரியாக முடிவு கட்டி விட்டோம். இப்போது நேரம் கிடைக்கும் போது பாருங்கள். இரண்டாவது பாதியில் நடிகர் திலகத்தின் கொடி எப்போதும் போல வானுயரப் பறப்பதைப் போல வழக்கம் போல லேட்டாகவே உணர்வீர்கள். என்னைப் பொறுத்த வரையில் மிக மிக வித்தியாசமான நடிகர் திலகத்தைத்தான் நான் இந்த 'புண்ணிய பூமி'யில் பாதிக்கு மேல் கண்டேன். நல்ல நடிப்பு பேசப்பட வில்லையே என்று இன்று மூட் அவுட்.)
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=jllzEChlbcE
ஹாய் ஆல்
வாசு சார் குட் ஆஃப்டர் நூன்:)
தேவியில் ஒரு பொங்கலுக்கு ரிலீஸ் என நினைக்கிறேன்..ஏமாற்றத்தை விளைத்த படம் இந்த சிக்ஸ் ஃப்ளவர்ஸ்..
//சுவையுள்ள வாழைக்கனி காயலாமா
சுடச் சுடக் காளை ப் பசு மேயலாமா'// முதல் வரி புரிகிறது..இரண்டாவதற்கு நிறைய தடவை தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறேன்..காளைப்பசுன்னா என்னங்க அர்த்தம்..:)
புண்ணிய பூமி நான் பார்த்ததில்லை வாசுசார்.. கமல் ஒரு விழாவில் பிற்காலத்தில் வெற்றி பெற்ற இந்தியனில் இருந்த கதையம்சம் ஒரு ந.தி படத்தில் இருந்தது என்பது போல் பேசக் கேட்டிருக்கிறேன்..அவரது பட்டிமன்ற ஜெயா.டிவியில் டைப்போ ஜெயாடிவி பட்டிமன்றத்தில்..அது இது தானா..
அன்பளிப்புல்லயும் ஒரு ஒத்தை மாட்டுவண்டி ந.தியோடது வருவதா நினைவு..அப்புறம் வீ.பா. கட்ட பொம்மன்.. சரிதானா..
அந்தக்கால (?!) ஏ. ஆர்.ஆரின் இசையில் வண்டிமாடு ரெண்ட்டுமெட்டு முன்னே செல்லுதம்மா வாக்கபட்ட பொண்ணு மனம் பின்னே செல்லுதம்மா என ஒரு பாட்டு நன்றாக இருக்கும் கிழக்குச் சீமையிலே
அப்புறம் வந்துடுவார் அண்ணனுக்கு ஜேன்னு பாடிக்கிட்டு கல் நாயக் சார்.. அவருக்கும் சிலபாட் விட்டு வைக்கலாம்.. :)
சொல்ல மறந்துட்டேனே ஜல்லிக் கட்டு ப் பாடல் க்கு நன்றி..(அதை த் தான் மொதல்ல போடலாம்னு இருந்தேன் அஞ்சாத சிங்கம் எம் வாசு)