\NO WORDS IN DICTIONARY TO APPRECIATE YOUR FANTASTIC INVOLVEMENT IN PROPAGATING ABOUT NADIGAR THILAGAM.s sadhanaigal.
Printable View
கோபால்,
பிரிஸ்டிஜ் பத்மநாபனின் வாழ்க்கையை அவரின் சுருதி லயமான குணாதிசயங்களை உங்களுக்கே உரித்தான நடையில் படிப்பதில் சந்தோஷம். இது மீள் பதிவு என்ற போதிலும் ஏற்கனவே படித்ததுதான் என்ற போதிலும் இன்று படிக்கும் போதும் சுவையாகவே இருக்கிறது. நடிகர் திலகத்தின் படங்கள் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மறு வெளியீடு செய்வது பற்றி நமது திரிக்கு அவ்வப்போது தகவல் அளிக்கும் திரு ராமஜெயம் அவர்கள் உங்களின் இந்தப் பதிவை மிக மிக சிலாகித்தார். அவருக்கு மிகவும் பிடித்தமான நடிகர் திலகத்தின் படங்களில் ஒன்றான இந்த வியட்நாம் வீட்டை வியட்நாம் கோபால் ஆகிய நீங்கள் அலசியிருப்பது அவருக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது. உங்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் தெரிவித்து கொள்வதாகவும் என்னிடம் சொல்ல சொன்னார்.
அன்புடன்
உலக அதிசயத்திற்கு வராத பின்னூட்டம் ராஜ ராஜனின் கவன ஈர்ப்பு தீர்மானம் வந்தவுடன்தான் வருகிறது என்று சொன்னவர், 12 பக்கம் எடுத்த ரஹீமின் டேப் பாடலுக்கு வரவில்லை, மாறாக அமுதா ராஜனை பற்றி 2 வரி எழுதியதும் அலைபேசியில் சர்வதேச அழைப்பானலும் பரவாயில்லை என்று விடாமல் துரத்துகிறார். இதுதான் irony.
சுமதி என் சுந்தரி உடை அலங்காரம் மிக சிறப்பானதுதான், ஆனால் சிபிஐ ஆபிஸர் ராஜனை வெகுநாட்களுக்கு பின் பெரிய திரையில் பார்த்தவுடன் அவர்தான் டாப் என்று தோன்றி விட்டது. மிக மிக இளைமையாக சிக் என்ற தோற்றத்துடன் நடிகர் திலகம் வரும் அழகே அழகு. Full sleeve ஆக இருந்தாலும் சரி, half sleeve ஆக இருந்தாலும் சரி அப்படியே அள்ளிக் கொண்டு போகிறது. ஏராளமான half sleeve ஷர்ட்கள் அதற்கு பொருத்தமான கலர் pants. சின்ன பெல்ட். அழகான கழுத்து டைகள். விமானத்திலிருந்து இறங்கும் முதல் அறிமுக காட்சியிலிருந்து இறுதிக் காட்சியில் மெடல் குத்திக் கொள்ள நடந்து போகும் இறுதிக் காட்சி வரை அப்படி பல டிரஸ்கள். நடிகர் திலகத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் அவ்வளவு handsome. சும்மாவா ஒளிப்பதிவாளர்கள் எல்லோரும் சொன்னார்கள் காமிராவின் எந்த கோணத்திலிருந்து பார்த்தாலும் அழகாய் தெரிகின்ற ஒரே முகம் நடிகர் திலகத்துடையது என்று? என்ன ஒரு ஸ்க்ரீன் presence? அசத்தலோ அசத்தல். இந்தப் படத்தை பற்றி மேலும் எழுத முயற்சிக்கிறேன்.
அன்புடன்
அட பாவி,பிறவியிலேயே பயங்கர குறை பாடோடு பிறந்து தனக்கும் பிறர்க்கும் தொல்லை கொடுத்த ராஜராஜனும், மிக மிக அழகாக பிறந்து நடுவில் சிறிதே அம்மா அப்பா பாசத்தால் வழுவிய ராஜனும் ஒன்றா?
அய்யய்யோ எங்கள் அமுதாவை ,மிஸ்ஸஸ் ராஜராஜனையும் ஒப்பிட்ட உனக்கு ,வியட்நாம் வீட்டிலிருந்து ,பாவ மன்னிப்பே கிடையாது.
Next-
Complete Dress code review of CBI Rajan ,Scene by Scene.
பார்த்ததில் பிடித்தது -23
அருணோதயம்
1971 ல் மீண்டும் திரு முக்தா ஸ்ரீநிவாசன் , நடிகர் திலகம் கூட்டணியில் அவர்களின் கூட்டணியில் வந்த படம் , லக்ஷ்மி , சரோஜா தேவி , அஞ்சலி தேவி ,
சோ, வெண்ணிறாடை மூர்த்தி , மனோரமா , VS ராகவன் என்று மாபெரும் நட்சத்திர பட்டாளம் பங்கு பெற்ற குடும்ப சித்திரம் .
கதை :
பிரபு (சிவாஜி ) ஒரு கம்பனில் பெரிய வேளையில் இருக்கிறார் , அந்த கம்பெனி முதலாளியின் மகன் அருண் (முத்துராமன்) ஒரு கார் racer . இருவரும் அன்புடன் பழகி வருகிறார்கள் .இந்த இருவருக்கும் பொதுவான நண்பர் சோ ஒரு டாக்டர் . ரேடியோ நாடகத்தில் நடிக்க போகும் பொது சாந்தியை சந்திக்கிறார் (சரோஜா தேவி ) இருவரும் காதலிக்கிறார்கள் .பிரபுவின் தங்கை நிர்மலா (லக்ஷ்மி ) அருணை காதலிக்கிறார் . பிரபுவுக்கு இந்த விஷயம் தெரிய வர அவர் அருணை தேடி செல்லுகிறார் , அப்போ தான் தெரிய வருகிறது அருண் ஒரு குடிகாரன் என்று , என்ன செய்வது என்று அறியாமல் வீட்டுக்கு வரும் பிரபு, நிர்மலா தான் அருணை கல்யாணம் செய்து கொள்ள முடியாத நிலைமை வந்தால் தான் செத்து விடுவது என்ற முடிவில் இருப்பது தெரிய வருகிறது
பிரபு சோவிடம் உதவி கேட்க , அவர் அருண் ஒரு கோழை என்றும் , எதிலும் ஜெய்க்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர் என்றும் , கார் பந்தயத்தில் ஜெய்க்க தைரியம் வரவைக்க குடிக்க தொடங்க அதுவே பழகி விட்டது என்று சொல்லுகிறார் சோ
மேலும் குடித்தால் ஏற்படும் தீமைகள் பற்றி மனோதத்துவ முறை படி குண படுத்த திட்டம் தீட்டுகிறார் சோ , அதன்படி பிரபு பெரிய குடிகாரனாக நடிக்கிறார் , அருண் மெல்ல மெல்ல குடி பழக்கத்தில் இருந்து விடுபடுகிறார் . சோ தான் patient தேங்காய் ஸ்ரீனிவாசன்யை குண படுத்த பிரபுவின் உதவி நாடுகிறார் , அதன்படி பிரபு , நிலுவை (சோ வின் நாடக குழுவின் நண்பர் ) கொலை பண்ணுவது போல நடிக்கிறார் , அதை பார்த்து தேங்காய் ஸ்ரீனிவாசனின் பிரம்மையில் இருந்து விடுபடுகிறார் . தேங்காய் ஸ்ரீநிவாசன் அருனின் சித்தப்பா
மெட்ராஸ் ஆபீஸ் பொறுப்பை பிரபுவுக்கு தர முதலாளி VS ராகவன் முடிவுசெய்கிறார் (அதன் partner தான் ---------- )
நிர்மலா அருனின் கல்யாணம் இனிதே நடக்கிறது . அடுத்து சாந்தியின் கல்யாணத்தை பற்றி பேச்சு எழுகிறது ,( தான் சாந்தியை காதலிப்பது சாந்தியின் வீட்டுக்கு தெரியகூடாது என்று பிரபு
சாந்திக்கு சொல்லிவிடுகிறார் ) சாந்தி தான் ஒரு நபரை விரும்புவதாக சொல்லுகிறார் , தன் வேஷம் தன் கல்யாணத்துக்கு தடையாக இருக்கும் என்று நினைத்து உண்மையை சொல்லி விட பிரபு நினைக்க , சோ அருண் இன்னும் முழுவதும் குணமாக வில்லை என்றும் குடியை அவர் முழுவதும் மறுக்கவில்லை என்று சொல்லிவிட பிரபு வேறு வழி இல்லாமல் தவிக்கிறார் , சாந்தி தான் காதலிக்கிஉம் நபர் பிரபு தான் என்ற உண்மையை சொல்ல பிரபுவிடம் அனுமதி கேட்கிறார் , சாந்தி போன் பண்ணும் பொது plane சத்தத்தில் பிரபு சொல்லுவதை தவறாக புரிந்து கொண்டு , சாந்தி தான் பிரபுவை
விரும்புவதை சொல்ல , சாந்தியின் அண்ணன் அருண் மற்றும் தேங்காய் ஸ்ரீனிவசன் இருவருக்கும் அதிர்ச்சி , இருவரும் பிரபுவை பற்றி தங்களுக்கு தெரிந்த விஷியத்தை சொல்ல , கல்யாண பேச்சு நிற்கிறது
ஆபீஸ் ல் பிரபு demote செய்ய படுகிறார், cashier பொறுப்பு சாந்திக்கு செளுகிறது , பிரபு உடைந்து போகுகிறார் , இதற்க்கு இடையில் நிர்மலா , அருண் இருவருக்கும் வாக்குவாதம் முற்றி ,நிர்மலா தான் பிறந்த வீட்டுக்கு வருகிறார் ( இந்த வருடம் தான் பிரபு உயிருடன் இருக்க போகும் கடைசி வருடம் என்று அருண் சொல்ல , சண்டை ஆரம்பம் ஆகிறது ) இதை சரி செய்ய பிரபு தான் ஒரு குடிகாரன் என்று தன் தங்கையை நம்ப வைக்க நாடகம் ஆடுகிறார், நிர்மலாவும் பிரபுவை வெறுக்கிறார்.
பிரபு cashier ஆக வேலை செய்த பொது பணம் திருட்டு போனது
பற்றி தெரிய வர பிரபுவின் வேலை பறிபோகிறது . பிரபு தன் நண்பரின் ஹோட்டல் ல் சென்னையில் தங்குகிறார் , அங்கே
V கோபாலக்ரிஷ்ணனின் அறிமுகம் கிடைகிறது . பிரபுவின் நல்ல குணத்தை அறிந்து வாரிசு இல்லாத கோபாலக்ருஷ்ணன் பிரபுவிடம் தான் partner ஆக இருக்கும் கம்பனின் அதிகாரத்தை வழங்குகிறார்
தான் வேலை செய்த ஆபீஸ்க்கு மீண்டும் முதலாளி ஆக வருகிறார் , இது அருணுக்கு அதிர்ச்சி அளிக்கிறது . முதலில் தன் மேல் விழிந்த திருட்டு பழியை தொடைகிறார் , அடுத்து அருண் கம்பெனி பணத்தை தன் சித்தப்பாவுக்கு கொடுத்தது தெரிய வர கோபாலக்ரிஷ்ணனின் கண்டிப்புக்கு இணங்க அருணை வேலையை விட்டு அனுப்புகிறார் பிரபு. குடும்பத்தில் பிரச்சனை வலுக்கிறது . மீண்டும் கார் பந்தயம் நடக்கிறது , அதில்
அருனின் உயிரை பறிக்க திட்டம் தீட்ட படுவது பிரபுவுக்கு தெரிய வர , அருணை தடுக்கிறார் , அருண் கேட்காமல் போகவே அருனின் கார் விபத்தை சந்திக்கிறது .
அருண் இறந்து விடுகிறார் , இதை பொறுக்க முடியாமல் ஒரு emotional outburst ல் பிரபு தான் குடிகாரனாக நடித்ததாக சொல்லுகிறார் . அதை சாந்தி ஆமோதிக்கிறார் (சோ மனோரமாவை கல்யாணம்
செய்ய நாடகம் போடுகிறார் , அதில் நிலுவை தன் அப்பா என்று சொல்ல , வேஷம் கலைந்து போகிறது , தேங்காய் இதை சாந்தியிடம் சொல்லி விடுகிறார் )
முடிவில் சாந்தி தன் காதலரை காப்பாற்ற தன் அண்ணன் இறந்தவிட்டாக நாடகம் ஆடியது தெரிய வர ,
அப்புறம் என்ன சுபம் தான்