https://www.youtube.com/watch?v=KsqfDbJv33U
Printable View
Content Removed.
திருச்சியில் நடைபெற்ற சிவாஜி பிறந்தநாள் விழாவில் மாணவிக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் போது எடுத்த படம். சிறப்பு விருந்தினர்களுடன் தில்லைநகர் R.பாஸ்கர் இவ்விழாவிற்கு பெரிதும் உதவியவர்.
https://mail.google.com/mail/u/0/?ui...&sz=w1336-h540
Kavignar Kannadasan : Tributes to the alter-ego song creator for NT!
கவியரசு கண்ணதாசனின் பாடல்கள் அமரத்துவம் வாய்ந்தவையாக திகழ நடிகர்திலகத்தின் நடிப்புருவகம் முக்கியமான காரணம். அவருக்கு எங்கள் நினைவலைகளின் சங்கமம்!
https://www.youtube.com/watch?v=YzK2WA8lbGY
அன்பு நண்பர்களே
தங்கள் அனைவருடைய அன்பும் ஆதரவும் துணையாய்க் கொண்டு ஆறாயிரம் பதிவுகள் இன்று காண்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.. தமிழர்களின் பெருமையாம் தமிழ்க் கலாச்சாரத்தின் அடையாளமாம், உலகெங்கும் வாழும் கோடான கோடி தமிழர்களின் காலர்களை என்றும் நிமிர்த்தி வைத்திருக்கும் அந்த உலக மகா கலைஞனின் புகழ் பாடுவதில் எனக்கு வாய்ப்பளித்த இம் மய்யத்திற்கு நன்றி கூறி இப்பதிவை நம் இதய தெய்வம் நடிகர் திலகத்திற்கு சமர்ப்பிக்கிறேன்.
http://tamiledhal.com/wp-content/upl.../07/sivaji.jpg
தன்னுடைய ஐம்பதாவது வயதில் நடிகர் திலகத்தின் இளமை துள்ளும் இப்பாடல் காட்சியைப் பகிர்ந்து கொள்வதில் மனம் உவகை கொள்கிறது..
இசைஞானி இளையராஜாவின் இசையில், பாடகர் திலகம் சௌந்தர்ராஜன் மற்றும் ஈஸ்வரி ஆகியோரின் குரல்களில் கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள் என்னே ஒரு தீர்க்க தரிசனமாய் நடிகர் திலகத்தின் சிறப்பை எக்காலமும் உணரும் வகையில் அமைந்துள்ளன...
http://www.youtube.com/watch?v=qLl3RRMVGR4
“ஆயிரம் சபைகளில் வருவேன்
எழுந்ததுண்டு விழுந்ததில்லை..”
ஆம்... இந்த சிங்கம் தன்னுடைய பயணத்தில் என்றுமே விழுந்ததில்லை..
“அலைகளாடுமடி தாளத்துக்கு...”
ஆம் அவருடைய சுண்டு விரலசைவிற்குக் கூட ஆடும் தமிழ் சமுதாயம்.. அலையெனத் திரண்டு 1952ல் ஆடத்தொடங்கியது... இன்றும் ஆடிக்கொண்டிருக்கிறது.. என்றும் அது தொடரும்...
“Success Often Comes to Me…”
ஆம்.. அடிக்கடி என்றல்ல... எப்போதுமே வெற்றி உங்களைத் தேடி வரும்...
“அசைந்தால் உலகம் அசையும்...”
ஆம்... நீங்கள் அசைந்தீர்கள் உலகம் அசைந்தது..
ஆனால் நீங்கள் 2001ல் உறங்கினீர்கள்...
கலை உலகமே நின்று போனது...
எழுந்து நீங்கள் வரவேண்டும்...
அதுவரையில்
உங்கள் பெயரே எம் ஸ்வாசம்...
உங்கள் திரையே எம் வாசம்...
...
நண்பர்களே,
தங்கள் ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னுடைய வேண்டுகோளை ஏற்று பாடல்களை அதற்கான திரியில் பதிவிடத் தொடங்கியதற்காகவும் ஆறாயிரம் பதிவுகளுக்கான பாராட்டுகளுக்காகவும் சித்தூர் வாசுதேவன் சாருக்கு என் மனமார்ந்த நன்றி.
இந்நேரத்தில் நம்முடைய நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய பணிவான வேண்டுகோள் வைக்க விரும்புகிறேன்.
நம்முடைய திரியில் பக்கங்களை நிரப்புவதற்கான தேவையில்லை. ஒவ்வொரு பதிவிலும் ஏராளமான விஷயங்களையும் ஆழமான அலசலையும் தரக்கூடிய வல்லமை படைத்த நண்பர்கள் நீங்கள் ஒவ்வொருவருமே. எனவே பக்கங்களின் வேகங்களைப் பற்றிக் கவலைப்படாமல் தங்களுடைய பதிவின் சிறப்பில் கவனம் செலுத்துங்கள். மற்றவர்களின் பதிவில் உள்ள சிறப்பம்சங்களைப் பாராட்டுங்கள். குறை இருப்பின் தனி அஞ்சல் மூலமாகவோ அன்றி நயமாகவோ எடுத்துச் சொல்லுங்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக
நண்பர்கள் அனைவருமே அன்றாடம் ஒரு பதிவையேனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.