http://i1170.photobucket.com/albums/...ps7f92bff6.jpg
SPECIAL POST ON 15.3.2015 ON THE EVE OF ENGA VEETTU PILLAI - GOLDEN YEAR CELEBRATION
Printable View
http://i1170.photobucket.com/albums/...ps7f92bff6.jpg
SPECIAL POST ON 15.3.2015 ON THE EVE OF ENGA VEETTU PILLAI - GOLDEN YEAR CELEBRATION
"நான் எந்த இடத்துக்கு எப்படி வருவேன், எப்படி போவேன் என்பது சொல்லவே முடியாது" என்ற பன்ச் வரிகள் நமது வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன் -அற்புத நாயகன்-மக்கள் திலகம் - தெய்வம் எம்.ஜி.ஆர். 1961ம் வருடமே தந்த பன்ச் வரிகள்.
https://www.youtube.com/watch?v=kVNz...ature=youtu.be
1967 ஜனவரி 12-ந்தேதி பிற்பகல் சென்னை நகரம் பதட்டத்தில் அதிர்ந்தது. எம்.ஜி.ஆர் -எம்.ஆர்.ராதா குண்டடி பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்தவாறு
அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர். பல இடங்களில் பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டன... ஆட்டோக்களும் ஆங்காங்கே
நிறுத்தம். ராயப்பேட்டை மருத்துவ மனையிலிருந்து எம்.ஜி.ஆரை பொது மருத்துவ மனைக்கு மாற்றினார்கள்.
டாக்டர்களே உள்ளே நுழைய திணறினார்கள். நாடெங்கிலுமிருந்து தொண்டர்கள், வி.ஐ.பிக்கள் படைபடையாக ஆஸ்பத்திரியில் முற்றுகை. யாரும் தலைவரைப் பார்க்க அனுமதி இல்லை. விசிட்டர் புத்தகம் கையெழுத்துக்களால் நிரம்பி வழிந்தது.
ஐந்தாவது முறையாக ஆஸ்பத்திரிக்கு படையெடுத்து எம்.ஜி. ஆர் அவர்களை நெருங்கினேன்.
உயிர் போகும் சோதனையை தாண்டிய மனிதர்- இரண்டு நாள் 'காவல்காரன்'-
படப்பிடிப்பில் மட்டுமே என்னைப் பார்த்தவர்- என் முகத்தையே தாமதமாக அடையாளம் கண்டவர் - ஊருக்குப் போனேன் என்று சொன்னதும், விழிகளை விரித்து -'அம்மா சௌக்கியமா'- என்று பாசத்துடன் கேட்டபோது என்னால் கண்ணீரை அடக்க முடியவில்லை .
55 வயதில் விபத்தில் கை ஒடிந்த நிலையில் கூட - 'மகன் படிப்பு கெட்டுப்போகும், யாரும்
அவனுக்கு தந்தி அடிக்கக் கூடாது'- என்று நண்பர்களுக்கு 6 மாதம் கடுமையான
உத்தரவு போட்டவர் - 30 வயதிலேயே 3 பிள்ளைகளுடன் கணவரையும் பறி கொடுத்தவர் - அம்மா, என்று படப்பிடிப்பின் போது நான் சொன்னது- எம். ஜி.ஆர் மனதில் ஆழமாகப்
பதிந்து விட்டது. அதனால் தான் இத்தனை களேபரங்கள் நடுவிலும் என தாயை நினைவில் வைத்து விசாரித்தார்.
- நடிகர் சிவகுமார் பக்கத்திலிருந்து .
Thanks to Sri. Chandran Veerasamy, FB.
Adcance Congratulations to our MAKKAL THILAGAM MGR.,-ENGA VEETTU PILLAI - 50 th Golden Jubilee Year completion Function get Huge Reception...
நமது மக்கள்திலகம் திரியின் மூத்த பதிவாளர் திரு வினோத் அவர்களின் தாயார் பூரண நலம் காண வாழ்த்துகிறோம்... திரு முத்தையன் அம்மு அவர்கள் நலம் பெற வேண்டுகிறோம்..
.திரு வரதகுமார் சுந்தராமன் அவர்களின் பதிவுகள் - "மக்கள்திலகம் வரலாறு " - ஆவணங்கள் தேனாக இனிக்கிறது...இன்னும் பற்பல அரிய தகவல்களை இங்கே எதிர்பார்க்கும் அன்பு சகோதரன்...
திருச்சி - காவேரி a/c திரைஅரங்கில் 1985 - ஆண்டுகளில் தொடங்கி நடைபெற்ற வசூல் சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர்., காவியங்கள்: பெரிய இடத்து பெண் , நாளை நமதே, குடியிருந்த கோயில், எங்க வீட்டு பிள்ளை, மாட்டுக்கார வேலன், காலத்தை வென்றவன், பாசம், குடும்ப தலைவன், கலங்கரை விளக்கம், நேற்று இன்று நாளை, வேட்டைக்காரன், குமரிகோட்டம், படகோட்டி, அடிமை பெண் , ஆயிரத்தில் ஒருவன் ...