வாசு - சாந்தியை அழித்து வணிகவளமாக மாற்ற போகிறார்கள் என்பதை அறிய மிகவும் சங்கடமாக உள்ளது - அந்த முயற்சி அவர்களுக்கு சாந்தியை தருமா ? நம் எல்லோருடைய வளர்ச்சியிலும் , சாந்தி திரை அரங்கம் பெரும் பங்கை கொண்டுள்ளது - அந்த இடத்தை அழித்தே ஆகவேண்டும் என்று நினைத்தவர்கள் நாமெல்லாம் ஆவலுடன் எதிர் பார்த்துகொண்டிருக்கும் தலைவரின் மணி மண்டபத்தை அங்கு கட்டி இருக்கலாம். சாந்தி என்னும் ஒரு திரை அரங்கம் அழிந்தால் என்ன ? நம் மனங்களில் என்றும் குடியிருக்கும் , தலைவர் மூலம் ஏற்படும் சாந்தியை யாரால் அழிக்க முடியும் ?