http://i65.tinypic.com/3021eg2.jpg
சென்ற ஞாயிறுக்கிழமை நான் போட்ட பதிவு மய்யம் நிர்வாகிகள் அறிவித்துள்ளபடி எதிர்பாராமல் அழிந்துவிட்டது. அதனால், அழிந்துபோன அந்தப் பதிவையும் இதயக்கனி படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட அபூர்வமான புகைப்படத்தையும் மறுபடியும் பதிவு செய்கிறேன்.
=============================================
மக்கள் திலகத்தை வைத்து படம் எடுக்கும் சில தயாரிப்பாளர்கள் ஒரு படத்தோடு ஒதுங்கிவிடுவார்கள் என்று அந்தக் காலத்தில் விமர்சனங்கள் எழுந்தன. அதற்கு காரணம் உண்டு. மக்கள் திலகம் தனது படங்களில் நடிப்பவர்களுக்கும் மற்ற கலைஞர்களுக்கும் மற்ற படங்களை விட கூடுதல் சம்பளம் கிடைக்க ஏற்பாடு செய்வார். பேசியபடி சம்பளம் எல்லாருக்கும் கொடுக்கப்பட்டதா என்பதை உறுதியாக தெரிந்து கொண்டுதான் இறுதி கட்ட படப்பிடிப்பில் மக்கள் திலகம் கலந்து கொள்வார். அவருக்கு என்ன சாப்பாடு வழங்கப்படுகிறதோ அதே தரத்தில் சுவையான சாப்பாடு கடைசி தொழிலாளிக்கும் கிடைக்கச் செய்வார்.
தன்னை வைத்து படம் எடுத்து லாபம் சம்பாதிக்கும் தயாரிப்பாளர்கள், தானே லாபம் மொத்தத்தையும் அனுபவிக்காமல் எல்லா கலைஞர்களுக்கும் அதன் பலன் கிடைக்க வேண்டும் என்று மக்கள் திலகம் நினைப்பார். இது சில தயாரிப்பாளர்களுக்குப் பிடிக்காது.
வி்க்கிரமாதித்தன் படப்பிடிப்பின்போது மக்கள் திலகம் நடிக்க வேண்டிய ஒரு காட்சி படமாக்க வேண்டும். ஒருவாரமாக அவர் படப்பிடிப்புக்கு வரவில்லை. தயங்கியபடி தயாரிப்பாளர் மக்கள் திலகத்திடமே கேட்டார். நாளை அவசியம் படப்பிடிப்பில் கலந்து கொள்வேன் என்று உறுதியளித்த மக்கள் திலகம் அதுபோலவே படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார். அவர் ஒரு வாரம் படப்பிடிப்புக்கு வராத காரணம் என்ன தெரியுமா?
படத்தில் துணை நடிகர்களுக்கு கூடுதல் சம்பளம் கொடுக்க வேண்டும் என்று மக்கள் திலகம் கூறியதை தயாரிப்பாளர் ஏற்கவில்லை.. அதனால்தான் மக்கள் திலகம் படப்பிடிப்புக்கு வரவில்லை. கோபத்தாலோ பழிவாங்குவதற்கோ இல்லை. அந்த ஒரு வாரமும் துணை நடிகர்கள் மேக்அப் போட்டுக் கொண்டு செட்டில் காத்திருந்தார்கள. மக்கள் திலகம் வராததால் படப்பிடிப்பு ரத்தானது. ஆனால், துணை நடிகர்கள் நடிக்காவிட்டாலும் அவர்களுக்கு தினப்படி சம்பளம் கொடுத்துவிட வேண்டும். அதன்படி, அந்த ஒரு வாரத்தில் மக்கள் திலகம் கோரிய அளவு தொகை அவர்களுக்கு கூடுதல் சம்பளமாக கிடைத்துவிட்டது. மக்கள் திலகம் ஒரு வாரம் வரமாட்டேன் என்று சொல்லியிருந்தால் படப்பிடிப்பு ஏற்பாடே நடந்திருக்காது. துணை நடிகர்களும் அழைக்கப்பட்டிருக்கமாட்டார்கள்.
மற்றவர்கள் நலனுக்காக, தனக்கு கெட்ட பெயர் வந்தாலும் பரவாயில்லை என்று அதைப்பற்றி கவலைப்படாமல் துணை நடிகர்களுக்கு நியாயமான சம்பளத்தை மறைமுகமாக அவர்களுக்கு பொன்மனச் செம்மல் கிடைக்கச் செய்துவிட்டார்.