http://i1028.photobucket.com/albums/...psna2d8krt.jpg
Sent from my GT-S6312 using Tapatalk
Printable View
http://i1028.photobucket.com/albums/...psna2d8krt.jpg
Sent from my GT-S6312 using Tapatalk
Dear முத்தையன் சார்,
Pudhiya Paravai & Ganaoli Stills amazing , hats off for your hard work
Dear Vasudevan Sir,
Amazing write up of NT in Garuda Soukyama
அன்பு நண்பர் திரு joe அவர்களுக்கு,
உங்கள் பதிவு கண்டேன்! உங்கள் மனசுக்கு சரியென்று பட்டதை உண்மையாக கூறினீர்கள்! ஒரு ஆரோக்கியமான விவாதம் என்பது இப்படிதான் இருக்க
வேண்டும். தங்களுக்கு நன்றி!
நீங்கள் வயதில் இளையவர்! உங்களுக்கு சில விஷயங்கள் கூறுகிறேன்! நான் சொல்வது தான் சரி என்ற அர்த்தத்தில் கூறவில்லை! இதை படிப்பவர்கள்
அவர்களே முடிவு செய்யட்டும்!
ஸ்தாபன காங்கிரஸ் கட்சியும், காமராஜரும் சிவாஜியால் பயன் அடைந்தனர்! 1967 முதல் 1975 வரை சிவாஜி இல்லாமல் இருந்திருந்தால் ஸ்தாபனகாங்கிரஸ்
சிவாஜி ரசிகர்கள் என்ற இளமை பட்டாளம் இன்றி சோர்ந்து போயிருக்கும்! ஸ்தாபன காங்கிரஸ் கட்சியில் இல்லாவிட்டாலும் சிவாஜி படங்கள் வசூல்
சாதனை புரிந்திருக்கும்! இவை அனைத்தும் சத்தியமான உண்மை! சிவாஜி பட வெற்றிக்கு அவரின் நடிப்பாற்றலை தவிர வேறு எந்த காரணமும் இல்லை
என்பது அனைவரும் ஒப்புக்கொண்ட உண்மை! ஆனால் காமராஜர் தொண்டர்களும் காமராஜ் மேல் பற்று கொண்ட மக்களும் அவரின் மறைவுக்கு பின்பு
சிவாஜியை மட்டுமே தலைவராக ஏற்க விரும்பினர்! சிவாஜி அதை பயன் படுத்தி கொள்ளவில்லை! மேற்கொண்டு அரசியலுக்குள் நுழைய விரும்பவில்லை! ஒரு விஷயம் மட்டும் கேட்கிறேன் joe sir! காமராஜரால் சிவாஜிக்கு சினிமா ரீதியாக பயன் கிடைத்திருக்காது! சிவாஜிக்கு சினிமாவில்
ஜெயிக்க எந்த கொம்பனின் செல்வாக்கும் தேவையில்லை என்பதும் உண்மை!
காமராஜருக்கு தமிழ்நாட்டில் மிகுந்த செல்வாக்கு இருந்த மாவட்டம் கன்யாகுமாரி மாவட்டம்! காமராஜர் மேல் மிகுந்தபற்று கொண்ட மக்கள் அதிகம்
இன்றும் உள்ளது கன்னியாகுமரி மாவட்டம் அதாவது நாகர்கோவில் ஏரியா! சரிதானே சார்?
ஏன் சிவாஜிக்கும் தமிழ் நாட்டின் மற்ற பகுதிகளை விட நாகர்கோவில் ஏரியா இன்றைக்கும் செல்வாக்கு அதிகம் உள்ள பகுதியாக உள்ளது?
நீங்கள் திமுக அனுதாபி ஆனாலும் சிவாஜி நாகர்கோயிலில் போட்டியிட்டு இருந்தால் சுலபமாக வெற்றிபெற்று இருப்பார் என்று கூறுகிறீர்களே!
காமராஜரின் அரசியல் செல்வாக்கை அறுவடை செய்யும் பொன்னான வாய்ப்பை நம் நடிகர்திலகம் கோட்டைவிட்டார் என்பதுதான் உண்மை!
நீங்கள் நாகர் கோவில் காரர்! நான் நாகர்கோவிலில் 1995 முதல் 2001 வரை அதிகாரியாக பணியாற்றியவன்!
அதனால் தான் உங்களுக்கு இந்த விவரங்களை கூறினேன்! joe sir என் கருத்துக்களை கூறிவிட்டேன்! உங்களுக்கு மீண்டும் நன்றி சார்!
Quote:
ஸ்தாபன காங்கிரஸ் கட்சியும், காமராஜரும் சிவாஜியால் பயன் அடைந்தனர்! 1967 முதல் 1975 வரை சிவாஜி இல்லாமல் இருந்திருந்தால் ஸ்தாபனகாங்கிரஸ்
சிவாஜி ரசிகர்கள் என்ற இளமை பட்டாளம் இன்றி சோர்ந்து போயிருக்கும்!
.... அரசியலுக்குள் செல்ல விரும்பவில்லை என்று கூறுவது... திரும்பத்திரும்பத் தன் கருத்தைத் திணிப்பது...Quote:
காமராஜரின் அரசியல் செல்வாக்கை அறுவடை செய்யும் பொன்னான வாய்ப்பை நம் நடிகர்திலகம் கோட்டைவிட்டார் என்பதுதான் உண்மை
மேலே தரப்பட்டுள்ள மேற்கோளில் முரண் உள்ளதா இல்லையா..
நாகர்கோயிலில் நின்றிருந்தால் காமராஜர் செல்வாக்கினால் தான் சிவாஜி ஜெயித்திருப்பார் எனக் கூறுகிறார்.. இவர் சொல்படியே பார்த்தால் மற்ற ஊர்களில் காமராஜருக்கு செல்வாக்கு இல்லையா..
நடிகர் திலகம் நாகர்கோயிலில் நின்றிருந்தால் மேலும் அதிகம் வாக்குப் பெற்றிருப்பார், வெற்றியும் பெற்றிருப்பார் என்பதெல்லாம் மறுக்கக்கூடிய வாதமும் அல்ல, இதை அவரிடம் நாங்கள் சொல்லாமலும் இல்லை...உங்கள் கூற்றுப்படியே சொல்கிறேன், அவரை திருவையாறில் நிற்கும்படி வற்புறுத்தியது யார், நீங்கள் அவரை திருவையாறு தொகுதியில் நிற்கக் கூடாது என மனு கொடுத்தவர்களெல்லாம் எப்படி நடந்து கொண்டார்கள், இப்போது என்ன செய்கிறார்கள், யாரால் நடிகர் திலகத்துடன் இணைந்து பணியாற்ற வந்த பல அரசியல் தலைவர்கள் வரமுடியாமல் போயிற்று, இன்றைக்கு அவர்கள் எங்கிருக்கிறார்கள், என்ன செய்கிறார்கள், எல்லாவற்றையும் சொல்ல வேண்டியது தானே..
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டிலேயே திராவிடக் கட்சிகளைப் பின் தள்ளி முதல் இரண்டு இடங்களைத் தேசிய கட்சிகளுக்கு அளித்த பெருமை மிகு மாவட்டம் கன்னியாகுமரி என்பதை முன்னமே இத்திரியிலேயே கூறியிருக்கிறேன். பாராட்டியும் இருக்கிறேன். இதை தங்களுடைய அருமை நண்பர், என்னை விமர்சனம் செய்வதையும் கேலி செய்வதையுமே குறிக்கோளாகக் கொண்ட, என்னை ஒரு அரசியல் சார்புள்ளவனாக சித்தரிக்க மிகவும் பிரயத்தனம் செய்யும் திரு ஜோ அவர்களும் அறிவார்.
நண்பர்களே,
மீண்டும் மீண்டும் திரு பாஸ்கர் அவர்கள் நடிகர் திலகத்தைக் குறை கூறுவதிலேயே பிடிவாதமாக இருக்கிறார். அவர் கருத்தைக் கூறும் போது நான் பதிலளிக்காமல் இருக்க மாட்டேன்.
மாற்றுத் திரி நண்பர்கள் விமர்சிக்கும் போது ஏன் வெகுண்டு எழவில்லை என்று கேட்கிறார். திருப்பி அவர்கள், உங்கள் திரியிலேயே உங்கள் நண்பர்களே உங்கள் தலைவனை விமர்சிப்பதும் இழிவாகப் பேசுவதும் உங்கள் கண்ணுக்குத் தெரியவில்லையா, எங்களிடம் ஏன் வருகிறீர்கள் எனக் கேட்க மாட்டார்களா..
முதலில் நம் மக்கள் தலைவனை நாம் விமர்சிக்காமல் இருந்தால் தான் மற்றவர்களிடம் செல்ல முடியும். எதிர் கருத்து சொல்லக் கூடாதா எனக் கேட்கிறார்கள். எதிர் கருத்து என்றால் அவர்களும் கேட்கலாம் அல்லவா.. இது பொது விவாத அரங்கமாயிற்றே. நம் நண்பர்கள் மட்டும் எதிர் கருத்து சொல்லலாம், மாற்றுத் திரி நண்பர்கள் சொல்லாமல் இருக்க வேண்டும் என நாம் எதிர்பார்ப்பதில் என்ன நியாயம் இருக்கப் போகிறது.
மீண்டும் மீண்டும் சொல்கிறேன்.
நடிகர் திலகம் அரசியலில் அப்பழுக்கற்ற தலைவர். பொது வாழ்க்கையிலும் சரி, தொழிலிலும் சரி, தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, எந்தத் தவறும் இழைக்காத உயர்ந்த மனிதர், தெய்வப் பிறவி, தமிழ்த்தாய் ஈன்ற தவப்புதல்வன், உத்தம புத்திரன் என்றால் அதை நிரூபித்து வாழ்ந்தவர், அவரைத் தலைவராக ஏற்று வாழ்பவர்கள் கனவில் கூட அவரைக் குறை சொல்ல முனைய மாட்டார்கள்.
இதையும் மீறி திரும்பத் திரும்ப அவரைக் குறை கூற வேண்டும் என பிடிவாதம் பிடிக்கிறார்கள் என்றால் அவர்களின் நோக்கத்தைப் பற்றி படிப்பவர்களே யூகித்துக் கொள்ளட்டும்.
இப்படியும் ஒரே சிவாஜி ரசிகரா ?
நம்பவே முடியவில்லை . உண்மையில் அந்த ரசிகரை பாராட்டியே தீர வேண்டும் . நெறியாளரின் அனுமதியோடு எத்தனை பெயர்களில் ஒரே ஒருவர் தன்னுடைய திறமைகளை வெளிபடுத்தி அத்தனை பேரையும் நம்ப வைத்து இருப்பது மகத்தான சாதனை .சாந்தம் , வெகுளி , நகைச்சுவை , ஆத்திரம் என்று நவ ரச பதிவுகள் வழங்கி சிறப்பாக நடித்து கொண்டு வரும்
சாரதா - நீண்ட நாட்களாக அந்த பெயரில் வருவது இல்லை .
கார்த்திக் - தற்காலிகமாக வருவதில்லை .
ஆதிராம் - சாட்சாத் கார்த்திக் .
கல்நாயக் 100% கார்த்திக் .
பரணி -
பாஸ்கர
இன்னும் பல பெயர்கள் . என்ன பயன் ? தன்னை யார் என்று அடையாளம் காட்ட முடியாத கோழையாக ,கபட நாடகம் போடுவதும் ஏனோ?
தைர்யம் இருந்தால் நான்தான் கார்த்திக் , நான்தான் ஆதி ராம் , நான்தான் கல்நாயக் ,நான்தான் எல்லாமே என்று உண்மையை உலகிற்கு சொல்லலாமே . அதை விட பரிதாபம் இவரை காப்பாற்ற நெறியாளர் முன் வருவது .சிவாஜிக்கும் , அவரது புகழுக்கும் துரோகம் செய்யும் இந்த ரசிகர் உலகிற்கு தன்னை முதலில் யார் என்று அடையாளம் காட்டட்டும் . செய்வாரா ?
October 1
kalaiyulaga deivam avatharitha naal.