நம் வீட்டுப்பிள்ளையை நாம் உரிமையோடு பேசுவதில் உள்ள அக்கறைக்கும், அதே நம் பிள்ளையை எதிர்வீட்டினர் கேலியாகப் பேசுவதில் உள்ள ஏளனத்துக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் எல்லாம் பதிவிட்டால் இப்படித்தான் இருக்கும்.
Printable View
உங்க வீட்டுப் பிள்ளையை உங்கள் வீட்டுக்குள் பேசினால் யாரும் வரமாட்டார்கள். நீங்கள் பேசுவது நடுரோட்டில்..Quote:
நம் வீட்டுப்பிள்ளையை நாம் உரிமையோடு பேசுவதில் உள்ள அக்கறைக்கும், அதே நம் பிள்ளையை எதிர்வீட்டினர் கேலியாகப் பேசுவதில் உள்ள ஏளனத்துக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் எல்லாம் பதிவிட்டால் இப்படித்தான் இருக்கும்.
என் கருத்துக்களுக்கு நேரடியாக பதிலளிக்க முடியாதவர்கள் எப்போதும் செய்யும் பலவீனமான வாதம் இது. நான் எந்த ஒரு விவாதத்தையும் சூடாக செய்ய ஆரம்பித்தவுடன் உடனே தலைதூக்கும் வாதம் இது.
இப்போது திருச்சி நண்பர் பாஸ்கரும் நான்தான் என்ற முடிவுக்கு வந்தாசா?. பலே. என்னே அறிஞர்களின் கண்டுபிடிப்பு. பட்டியலை ஏன் சுருக்கமாக முடித்து விட்டீர்கள்?. வழக்கமாக நண்பர்கள் இன்னும் சில பெயர்களை என்னோடு இணைப்பது வழக்கமாச்சே. சமயங்களில் 'ஜோ' அவர்களும் என் கருத்தையே பிரதிபலிக்கிறாரே அவரையும் இணைத்து ஒரு பெரிய குழுவாக்கி விடுங்களேன்.
அதாவது ஒத்த கருத்துடையவர்கள் ஒரே மாதிரி வாதிட்டால் உங்களைப் பொருத்தவரைக்கும் அவர்கள் அனைவரும் ஒரே ஆள். அப்படித்தானே.
இதில் நெறியாளர்களையும் ஏன் வம்பில் இழுக்கிறீர்கள்?.
இந்த ஆதிராமுக்கு இன்னொரு பெயர் மட்டுமே உண்டு, அதுதான் என் ஒரிஜினல் பெயரான அனந்தராமன்.
(நாளை எங்கள் தலைவரின் பிறந்த நாள். ஆகவே இதுபோன்ற வெட்டி விவாதங்களால் திரியை நிரப்ப விருப்பமில்லை.)
நண்பர்களுக்கு, இடையூறுக்கு மன்னிக்கவும். இங்கு நடக்கும் விவாதங்களை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். உங்களுக்குள் நடக்கும் விவாதத்தில் தலையிட வேண்டாம் என்று பார்த்தாலும் இரண்டு காரணங்களால் தலையிட வேண்டியிருக்கிறது. முதலில் எங்களுக்கும் நண்பரான திரு.ராகவேந்திரா சாரை சிலர் இழிவாக பேசுவது. இரண்டாவது, அதில் எங்களையும் தொடர்புபடுத்துவது. இந்தக் காரணங்களால், உங்களுக்கென்ன? நீங்கள் தலையிடத் தேவையில்லை என்று யாரும் சொல்ல முடியாது.
திரு.ஆதிராம் அவர்கள் கூறியுள்ளார்.
//அந்த திரியின் இன்னொரு நண்பர், (நடிகர்திலகத்துக்கு அரசு மணிமண்டபம் கட்டவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தபோது) "பி.யு.சின்னப்பா முதல் எஸ்.எஸ்.ராஜேந்திரன் வரை அனைத்து நடிகர்களுக்கும் அரசு செலவில் மணிமண்டபம் கட்டியிருக்கும்போது சிவாஜிக்கு மட்டும் ஏன் கட்டவில்லை?" என்று குத்தலாக கேட்டாரே. (அதாவது அவர்களைப்போல இவரும் ஒரு நடிகர்தானாம்) அப்போது உங்கள் வீரம் கொப்பளிக்கவில்லையே.//
முதலில் ஒன்றை அவருக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன். திரு.சைலேஷ் சார்தான் மணிமண்டபம் பற்றி கருத்து சொன்னார். அவர் சிவாஜி கணேசன் அவர்களுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்றுதான் ஆரம்பத்தில் இருந்து கூறி வருகிறார். வேறு எந்த நடிகருக்காவது இதுவரை கட்டியிருக்கிறார்களா? என்று தெரிந்து கொள்ளத்தான் கேட்டார். வீணாக அபாண்டமாக பழி சுமத்தாதீர்கள். எஸ்.எஸ்.ஆர். வரை அனைத்து நடிகர்களுக்கும் அரசு செலவில் மணிமண்டபம் கட்டியிருக்கும்போது என்று அவர் கேட்கவேயில்லை. சின்னப்பாவுக்கும், எஸ்.எஸ்.ஆருக்கும் ஏது மணிமண்டபம்? இதுகூட தெரியாமலா அவர் கேட்பார்? சண்டை போட வேண்டும் அதற்கு ஏதாவது கிடைக்காதா? என்று பார்க்காதீர்கள் திரு.ஆதிராம். அப்படி அவர் சொல்லியிருந்தால் எந்த பதிவில் என்று காட்ட முடியுமா? சொல்லுங்கள் பார்ப்போம்.
நடிகர் திலகத்தைப் பற்றி சொன்னால் ஏன் வீரம் கொப்பளிக்கவில்லை? என்று திரு.ராகவேந்திரா சாரை கேட்கிறீர்களே? நடிகர் திலகம் திரு.சிவாஜி கணேசன் அவர்களை அரசியலில் முட்டாள் என்று இங்கே ஒருவர் சொன்னாரே? அவரை நீங்கள் கண்டித்தீர்களா? எந்த ஒரு சிவாஜி ரசிகரும் திரு.சிவாஜி கணேசன் அவர்களை முட்டாள் என்று சொல்லமாட்டார். ஆனால், அப்படி சொன்னவரை கண்டித்த ஒரே நபர் திரு.ராகவேந்திரா அவர்கள். அப்போது நீங்கள் எங்கே போனீர்கள்? அப்போது உங்கள் வீரம் தலைதூக்கவில்லையா?
இன்னொருவர்... அவர்தான் சிவாஜி கணேசன் அவர்களை முட்டாள் என்று சொன்னவர். அவர் திரு.ராகவேந்திரா சாரைப் பார்த்து ‘துப்பில்லை’ என்கிறார். மக்கள் திலகம் திரியில் இருக்க வேண்டியவர் என்றும் அவரை கிண்டல் செய்கிறார்.
சிவாஜி ரசிகனாகவே பிறந்து, சிவாஜி ரசிகனாக வளர்ந்து, சிவாஜி ரசிகனாக வாழ்ந்து, அவருக்காக பெருந்தலைவர் காமராஜரிடமே விவாதித்து, சிவாஜி அவர்களுடன் நெருங்கிப் பழகி, அவருடன் ஏற்றத் தாழ்வுகளில் உடனிருந்து, தனி ஒரு மனிதனாக நடிகர் திலகம் டாட் காம் தொடங்கி, இந்த வயதிலும் 25வயது இளைஞன் போல உற்சாகம் குறையாமல் அவரது புகழ் பரப்பி, சிவாஜியை மூச்சாகக் கொண்டிருக்கும் திரு.ராகவேந்திரா சாரைப் பார்த்து ‘துப்பில்லை’ என்றெல்லாம் மிகக் கடுமையாக பேசுபவரை எப்படி இங்கே நண்பர்கள் அனுமதிக்கிறீர்கள்?
ராகவேந்திரா சாருக்காக இங்கே குரல் கொடுக்க யாருமே இல்லையா? அதற்காக, அப்படி கூறுபவருடன் சண்டையிடச் சொல்லவில்லை. அவரை அப்படி சொல்லாதீர்கள். மக்கள் திலகம் திரியில் இருக்க வேண்டியவர் என்று சொல்லாதீர்கள். என்று சொல்லக் கூடவா ஒருவரும் இல்லை? வருத்தப்படுகிறேன் நண்பர்களே.
இதைக் கூட நீலிக்கண்ணீர் என்று சிலர் சொல்லலாம். அதைப்பற்றி எங்களுக்கு கவலையில்லை. நாங்கள் ‘ரவி சாரை ரவிக்கை அணிந்து கொண்டு சரணாகதி அடைந்து விட்டார்’ என்று கூறியதை கண்டித்தோம். சில மாதங்களுக்கு முன் ராகவேந்திரா சாரை தரக் குறைவாக விமர்சித்தபோதும் கண்டித்தோம். நண்பர்களை விட்டுக் கொடுக்க மாட்டோம்.
இன்னொன்று, மாற்று முகாம் நண்பர்கள் என்னையே விமர்சித்தபோதுகூட நான் அதை நீக்கவில்லை என்று திரு.முரளி கூறியிருக்கிறார். நானும் அவரை விமர்சித்திருக்கிறேன். ஆனால், அவர் என்னை விமர்சித்த பிறகுதான் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நானாக யாரையும் விமர்சித்ததில்லை. கடந்த வாரம் கூட அவர் என்னைப் பார்த்து அண்ட..... என்று கூறிய பிறகுதான் நான், பதிலுக்கு அவரை ஆகாச .... என்று கூறினேன்.
ராகவேந்திரா சார், உங்களுக்கு எங்கள் முழு ஆதரவு உண்டு. தொடர்ந்து உங்களை தாக்கினால் நாங்கள் ஒவ்வொருவராக வந்து பதிலளிப்போம்.
நண்பர்களே, ஒருவர் கூட பரிந்து பேசாமல் இருப்பதால் சிவாஜியையே தனது உயிர்மூச்சாக கொண்டிருக்கும் ராகவேந்திரா சாரின் மனம் என்ன பாடுபடும்? என்பதை சிந்தியுங்கள்.
நான் பலமுறை கூறியது போல, மீண்டும் அழைப்பு விடுக்கிறேன். ஒற்றுமையாக செயல்படுவோம். அதற்கு நடிகர் திலகம் திரு.சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்த நாள் ஒரு தொடக்கமாக அமையட்டும்.
நடிகர் திலகம் திரு.சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்த நாளில் மக்கள்திலகம் திரியின் சார்பில் நண்பர்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
பிறந்தது ஒரு முறை ... பிறவி எடுத்ததோ எத்தனை முறை ...
பார்க்க பார்க்க உத்வேகம் வரும் உன் முகம்
பகைமையும் பல மறந்து போகும் உன் வசம்
தேச ஒற்றுமை என்றுமே உன் மூச்சு
ஒண்ணா இருக்க சொல்லுமே உன் பேச்சு
பிறந்த நாளில் மட்டுமல்ல எல்லா நாளிலும்
http://i39.photobucket.com/albums/e1...psnwn8hhpc.png
https://www.youtube.com/watch?v=smlQQAZHKpk
Director S.P. Muthuraman write up in today's Tamil The hindu.
சினிமா எடுத்துப் பார் 28 - ‘சிவாஜிக்கு முன், சிவாஜிக்குப் பின்
http://tamil.thehindu.com/multimedia...a_2566196g.jpg
http://tamil.thehindu.com/multimedia...1_2566195g.jpg
நான் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்த நாட்களில் ‘பராசக்தி’ படம் பார்த்தப் பிறகுதான் சினிமா ஆசையே எனக்கு வந்தது. கலைஞர் அவர்களின் வசனமும், அண்ணன் சிவாஜிகணேசனின் நடிப்பும் அந்த வயதில் எனக்குள்ளே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. அந்தத் தாக்கம்தான் என்னை மட்டுமல்ல; ஆயிரக்கணக்கான இளைஞர்களை சினிமாவில் பங்குபெற வைத்தது.
ஏவி.எம் நிறுவனமும், ஜே.ஆர் மூவிஸ் கம்பெனியும் இணைந்து ‘எங்க மாமா’ என்ற திரைப்படத்தை எடுக்க முடிவு செய்தார்கள். அந்தப் படத்தை என் குரு நாதர் ஏ.சி.திருலோகசந்தர் இயக்கினார். குருவுக்கு சிஷ்யன் நான். சிவாஜி அவர் கள்தான் ஹீரோவாக நடிக்கப் போகிறார் என்று கேள்விப்பட்டதும், நான் மகிழ்ச்சி யின் உச்சத்துக்கே போய்விட்டேன். படத்தில் நாயகி செல்வி ஜெயலலிதா அவர்கள்.
‘ஒரே கல்லில் இரண்டு மாங்காய்’ என்பது மாதிரி இரண்டு பெரிய நட்சத்திரங்கள் நடிக்கும் படத்தில் வேலை பார்க்கும் வாய்ப்பு எனக்கு அன்றைக்கு அமைந்தது. ‘எங்க மாமா’ படத்தில் 12 குழந்தைகள் நடித்திருப்பார்கள். படப்பிடிப்பில் அவர்கள் செய்த குறும்புத்தனத்தை நாங்கள் சமாளித்த கதை ஒரு பெரிய சவால்!
அந்தப் படத்துக்கு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசை. கவியரசர் கண்ணதாசன் அனைத்து பாடல்களையும் எழுதியிருந்தார்கள். இசையும் பாடலும் இணைந்து இன்றும்கூட அந்தப் படத்தின் பாடல்கள் புகழ் பரப்பிக்கொண்டிருக்கின்றன. ஆஸ்டின் காரில் குழந்தைகளை அழைத்துக்கொண்டு சிவாஜி நகர்வலம் வருவதுபோல எடுக்கப்பட்ட
‘நான் தன்னந்தனிக் காட்டு ராஜா
என் தோட்டத்தில் எத்தனை ரோஜா’
என்ற பாட்டில் அந்த குழந்தை மலர்களை, தன்னைச் சுற்றி அமர வைத்துக்கொண்டு அப்படி ஒரு பாவனையோடு சிவாஜி அவர்கள் நடித்திருப்பார்கள். அதேபோல, பியானோ வாசித்துக்கொண்டே பாடும்
‘எல்லோரும் நலம் வாழ
நான் பாடுவேன்
நான் வாழ யார் பாடுவார்’
- என்ற பாட்டின் ஒவ்வொரு வரியிலும் ஜெயலலிதா அவர்களின் முகபாவனை மாறிக்கொண்டே இருக்கும். சிவாஜி பியானோ வாசிக்கிற நடிப்பும், அந்த ஸ்டைலும் அவரால் மட்டும்தான் அது முடியும்!
இன்றைக்கு மேலோட்டமாக யோசித் துப் பார்த்தால் கர்ணன், கட்டபொம்மன், பாரதி, வ.உ.சி போன்றவர்களை நினைக் கும்போது சிவாஜிதான் நமக்கு ஞாபகத்து வருவார். இவர்களைப் போல் சிவாஜி நடித்தார் என்று சொல்வதைவிட அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். ‘கி.மு., கி.பி’ என்று சொல்வதைப் போல் நடிப்பை பொறுத்தவரை ‘சிவாஜிக்கு முன், சிவாஜிக்குப் பின்’ என்றுதான் சொல்ல வேண்டும்.
நாளை அக்டோபர் 1-ம் தேதி நடிப்புக்கு இலக்கணம் வகுத்த அண்ணன் நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் பிறந்தநாள். அவருக்கு இதய பூர்வமான என்அஞ்சலி.
அவருடைய மகன்கள் ராம்குமார், பிரபு மற்றும் ஹரி சண்முகம் ஆகியோர் சேர்ந்து அவரது பெயரில் ஒவ்வோர் ஆண்டும் சிறப்பாக விழா எடுத்து வருகிறார்கள். இந்த ஆண்டு நடைபெறும் நிகழ்ச்சியில் சிவாஜி பெயரில் எனக்கும், என்னோடு சேர்ந்த 5 கலைஞர்களுக்கும் விருது கொடுக்கிறார்கள். இதை எங்களுக்குக் கிடைத்த பெரும் பேறாக நினைக்கிறோம். சிவாஜி அவர்களின் மகன்களுக்கும், குடும்பத்தாருக்கும், ரசிகர்களுக்கும் சிவாஜி அவர்களை நினைத்துக்கொண்டு எங்களின் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
செல்வி ஜெயலலிதா அவர்கள் நடிப்புத் திறமை மிக்கவர். வசனமாக இருந்தாலும், பாடலுக்கு நடனமாக இருந் தாலும் ஒரு தடவைதான் கேட்பார், பார்ப்பார். அதை அப்படியே உள்வாங்கிக் கொண்டு சிறப்பாக நடித்து முடிப்பார். அந்த சக்தி அவருக்கு இயல்யாக இருந்தது. நடிப்பில் அப்படி ஓர் ஈடுபாடு. படப்பிடிப்பில் பேசிக்கொண்டிருப்பது, அரட்டை அடிப்பது இதெல்லாம் அவரிடம் இருக்காது. ஷாட் முடிந்ததும் புத்தகம் படிப்பார். தான் உண்டு, தன் வேலை உண்டு என்று கடமை ஆற்றுவார்.
நான் இயக்குநராகி மூன்று, நான்கு படங்கள் இயக்கியிருந்த நேரம். விசி.குகநாதனும், கோவிந்தனும் இணைந்து ‘அன்புத் தங்கை’என்கிற படத்தை எடுக்க முடிவு செய்தார்கள். இந்தக் கதைக்கு செல்வி ஜெயலலிதா அவர்கள் சரியாக இருப்பார் என்று முடிவெடுத்து, நான் இயக்கலாம் என்று கூறினார்கள். அப்போது நான் புது இயக்குநர் பட்டியலில் இருந்தேன். ‘இந்தக் கதையை ஒரு சீனியர் இயக்குநர் எடுத்தால் நன்றாக இருக்கும் என்று செல்வி ஜெயலலிதா கூற வாய்ப்பு உள்ளது. அதனால் அவரிடமே கேட்டுவிட்டு முடிவு செய்யுங்கள்’ என்று கூறியிருந்தேன்.
செல்வி ஜெயலலிதா அவர்களிடம் வி.சி.குகநாதன் கதையை சொல்ல ‘‘கதை எனக்குப் பிடித்திருக்கிறது. யார் டைரக்டர்?’’ என்று கேட்டிருக்கிறார். “எஸ்பி.முத்துராமனை இயக்க சொல்லலாம் என்றிருக்கிறோம்’’ என்று கூறியிருக்கிறார்கள். உடனே செல்வி ஜெயலலிதா ‘‘அவரைத் தெரியுமே ஏ.சி.டி டைரக்*ஷனில் நான் நடித்த ‘எங்க மாமா’படத்தில் வேலை பார்த்திருக்கிறார். அவரே இயக்கட்டும்’’ என்று உடனே ஒப்புக்கொண்டார். அது எனக்கு அவர் தந்த அங்கீகாரம்.
‘அன்புத் தங்கை’ படப்பிடிப்பை ஆரம்பித்தோம். அதில் ஒரு பாடல் காட்சி. செல்வி ஜெயலலிதாவோடு ஒரு புத்தத் துறவி நடிக்க வேண்டும். யாரை நடிக்க வைப்பது? குழந்தை நட்சத்திரமாகவும் நடிக்க முடியாது. நாயகனாகவும் நடிக்க முடியாது. அப்படி ஒரு ரெண்டுங்கெட்டான் வயசு கமல்ஹாசனுக்கு. அந்த நேரம் நடன இயக்குநர் தங்கப்பன் மாஸ்டரிடம் உதவியாளராக அவர் பணிபுரிந்துகொண்டிருந்தார். எங்களுக்கு கமல்ஹாசன் நினைவு வந்தது. கமலை புத்தத் துறவியாக்கி செல்வி ஜெயலலிதாவோடு நடிக்க வைத்தோம். என் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த முதல் படம் அது.
இயக்குநர் திருலோகசந்தர் அவர்களிடம் 13 படங்களில் உதவி இயக்குநராக ஏவி.எம்மில் வேலை பார்த்தேன். தொடர்ந்து ஏவி.எம் நிறுவனத்துக்கு படம் இயக்கி வந்த திருலோகசந்தர் ஒருமுறை, ‘‘வெளியில் போய் படம் பண்ணலாமா?’’ என்று மெய்யப்ப செட்டியாரிடம் கேட்டார். ‘‘விரும்பியதை செய்யுங்கள்’’ என்று செட்டியாரும் கூறினார். ‘‘தங்கக் கூட்டுக்குள் இருந்த என்னை வெளி வானத்தில் சுதந்திரமாக பறக்க அனுமதித்தது தாய் பறவை’’ என்று அவர் ஒரு புத்தகத்தில் நன்றியுடன் குறிப்பிட்டிருந்தார்.
அந்த நேரத்தில் திருலோகசந்தர் அவர்கள், ‘‘நீங்களும் என்கூட வாங்க’’ என்று என்னை அழைத்தார். செட்டியார் அவர்கள் ‘‘முத்துராமன் இங்கேயே இருக்கட்டும்’’ என்று கூறிவிட்டார். வெளியில் படப்பிடிப்பு நடக்கும்போதெல்லாம், ஏசி.திருலோகசந்தர் ‘முத்துராமன்… முத்துராமன்’ என்றே பலமுறை அழைத்திருக்கிறார். என் நினைவு அவரை விட்டு போகவில்லை என்பதற்கு இதெல்லாம் உதாரணம் மட்டுமல்ல; அது எனக்குக் கிடைத்த பாராட்டு. என்னைப் பற்றி ஏசி.திருலோகசந்தர் குறிப்பிடும்போதும், ‘‘சகல பிரிவுகளிலும் தெளிவு. எல்லா விஷயங்களையும் தன் நகநுனியில் வைத்திப்பார். அபார ஞாபக சக்தி, தலைக்கனம் இல்லாதவர். எளிமையாக பழகக்கூடியவர் எந்தவித கிசுகிசுவுக்கும் ஆளாகாதவர். ஏவி.எம்மின் தூண். எனக்கு எல்லா வகையிலும் பெருந்துணையாக இருந்தவர். இன்றும் இருப்பவர்’’ என்று எனக்கு நற்சாட்சிப் பத்திரம் வழங்கியிருக்கிறார்.
நான் இயக்கும் எல்லா படங்களின் ஸ்க்ரிப்டையும் எனது குருநாதரின் கைகளில் கொடுத்து காலில் விழுந்து வணங்கி ஆசீர்வாதம் பெற்ற பிறகே, என் படங்களின் படப்பிடிப்பைத் தொடங்குவேன்.
அண்ணன் சிவாஜியை வைத்து நானே இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அது எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியை தந்திருக்கும்..
Courtesy:Facebook
http://i1065.photobucket.com/albums/...pslm5v9jrq.jpg
நடிகர்திலகம் ஒட்டப்பட்ட.,பைண்ட் செய்யப்பட்ட புத்தகங்கள் கூட எந்த சேதாரமும் ஏற்படக்கூடாது என்று அவற்றை பொக்கிஷம் போல் பாதுகாத்து வரும் ரசிகர்கள் எத்தனையோ பேர் இன்றும் உள்ளனர்.ஒரு உதாரணம் இது.
http://i1065.photobucket.com/albums/...psnh8kexce.jpg