-
கிருஷ்ணாஜி ,
நீங்கள் cut paste பண்ணும் நிறைய பதிவுகள் விவகாரமானவை. படித்து விட்டு, சிலவற்றை நீக்கி பதிக்கவும்.
எனக்கு யாரையும் விரோதிகளாய் எண்ணியதில்லை. உள்ளதை சொல்வேன்,சொன்னதை செய்வேன் ,வேறொன்றும் தெரியாது, உள்ளத்தில் இருப்பதை வார்த்தையில் மறைக்கும் கபடம் தெரியாது.அடிப்பது போல கோபம் வரும்.அதில் ஆபத்து இருக்காது.
இனியாவது இந்த மறை போர் உத்திகளை மறந்து,கருத்து வேற்றுமை இருந்தால் நேரடியாக வரவும்.
நட்போடு தொடர்வதில் விருப்பமே.
-
சின்னஞ்சிறு பெண்போலே சிற்றாடை இடையுடுத்தி..
- சீர்காழியார் சென்னைத் தொலைக்காட்சிக்கான நிகழ்ச்சிக்கான கச்சேரி ஒன்றில் பாடியது.
http://www.youtube.com/watch?v=eoldjJS1OWI
இதே பாடலை நாதஸ்வரத்தில் இஞ்சிக்குடி சுப்ரமணியன்(ஒரே ஊர்க்காரர்!) வாசித்திருப்பதையும் பார்த்து கேட்டு மகிழலாம்.
http://www.youtube.com/watch?v=qmoGvnVV9pY
-
-
-
-
ஹாய் குட்மார்னிங்க் ஆல் :) கொஞ்சம் லேட்டு..
வாங்கோ வெங்க்கி ராம்.. எனக்குப் பிடிச்ச பாட்டு சின்னஞ்சிறு பெண் போலே..அப்புறமா மாலை கேட்கிறேன் தாங்க்ஸ்.. //வெகு சின்ன வயது..மூத்த அக்கா கல்யாணம்.. நாதஸ்வர வித்வானிடம் போய் இந்தப் பாடல் ரெக்வஸ்ட்..மாப்பிள்ளை அழைப்பு டைம்.. அவர் பாடவில்லை..ஆனால் கல்யாணம் முடிந்த இரவோ அல்லது மா.அ அன்று இரவோ நினைவில்லை அவராகவே இசைக்க வேகமாக ஓடி தாங்க்ஸ் மாமா நன்னா வாசிச்சேள் எனச் சொல்ல..கண்களில் ஆனந்தம் பொங்கியது என்ற வார்த்தையை நேரில் பார்த்தேன்..ஒரு சின்னச் சிரிப்பு.. நன்னா இரு..என்பது போல் சொன்ன நினைவு..//
ஸ்வர்ணலதா பாடல்களுக்கு நன்றி ராஜேஷ் ஜி.. சின்னஞ்சிறிய வண்ணப் பறவைக்கு நன்றி எஸ்வி சார்..
அது சரி..போன வருடம் காஷ்மீர் ப்யூட்டிஃபுல் காஷ்மீர் அப்புறம் லே லடாக் போய்க் கொண்டிருந்த போது -ஜீப் - ஒற்றைப்பாதை டூவே ட்ரை- மலைப்பகுதி - போய்க்கொண்டிருக்கையில் - டிரைவர் நிறுத்திவிட்டான்..ஏண்டாப்பா.. இல்லீங்க்னா பக்ரா.. ஆடு என்றான்.. பார்த்தால் - நாங்கள் போய்க்கொண்டிருந்த சாலை ஒருபக்கம் கிடுகிடுபள்ளம் இன்னொரு பக்கம் மலை..அந்த மலைச்ச்சரிவில்சிலபல செம்மறி ஆடுகள் எதிர்பாராமல் பாயும் மாறன் மலர்க்கணை அம்புகள் போல (சே உவமை பொருந்தலை :) ) சரிவில் இறங்கி சாலையில் டபக் படக் என ஓடிக் காணாமல் போயின..ஸம் டைம்ஸ் அவை இறங்கும் போது பாறைகள் கற்களும் சேர்ந்து உருட்டி விடுமாம்.. ஐந்து நிமிடம் கழித்து ஜீப்பைக் கிளப்பிய டிரைவர் சொன்னான்..
எதுக்காக இது..யெஸ் ஹாங்க் ஜீ.. செம்மறி ஆடு..(ஒரு ஆட்டுப் பாட்டுக்குஇவ்ளோ பில்டப்பா டூமச் கண்ணா)
செம்மறி ஆடே செம்மறி ஆடே செய்வது சரியா சொல்
செவத்த பொண்ணு இவத்த நின்னு தவிக்கலாமா சொல்ல்
தவிக்கின்ற நெஞ்சம் ஒன்று துணை இன்று பெறலாமா
துணை இங்கு நீ என்று ஊர் சொல்ல வேண்டாமா..
நல்ல பாட்டு படம் உழவன் மகன்..எஸ்பி பாலு அண்ட் வித்யாவாம்...
-
vanga si.ka. sowkiyama?paarthu romba nalachu?
-
செளக்கியமே கோபால் சார்.. :)
இந்த ஆயலோட்டும் பெண்ணேல்ல வர்ற ஆயல் என்பது பறவைகளையாக் குறிக்குது..
-
ஆடு பாடல்கள் என்று பார்த்தால்..
இந்த ஆட்டுக்கும் நம்ம நாட்டுக்கும் வெகு பொருத்தம் இருக்குது..
சாஞ்சா சாயற பக்கம் சாயற செம்மறி ஆடுகளா..
ஆனா மாட்டுக்கு நிறைய இருக்கறாப்பல இருக்கே
காடுமலை மேடு கண்ட மாட்டு ப் பொண்ணே - பப்ளிமாஸ் கன்ன கல்யாண் குமார் ஏறக்குறைய ஸேம் ஸேம் அன்ன தேவிகா..
மாட்டுக்கார வேலா உன் மாட்டைக் கொஞ்சம் பாத்துக்கடா
காளை இருக்கு செவலை இருக்கு கண்ணுக்குட்டி எங்கய்யா
அந்தக் கன்னுக்குட்டிய விட்டுப் பாரு கட்டிப் பிடிப்பேன் நானய்யா..
மணப்பாற மாடு கட்டி மாயவரம் ஏரு பூட்டி வயக்காட்ட உழுது போடு செல்லக் கண்ணு..
மாடாட்டம் வண்ண மயிலாட்டம்..ஓ அது மானாட்டமோ.. அதுக்கப்புறம் நெஞ்சுல மாடு முட்ட மாட்டேங்குது.
-
http://i58.tinypic.com/28ich0j.gif
மனதை மயக்கும் மதுர கானங்கள் - 15.9.2014 அன்று வெற்றிகரமான 100 வது நாளை தொடுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கின்றேன் . ம .ம . ம .கா நிறுவன தலைவர் திரு வாசுதேவன் அவர்களின் தலைமையில் இந்த திரி 8.6.2014 அன்று துவங்கி மாண்பு மிகு உறுப்பினர்களால் சிறப்புடன் பல பாடல்கள் பற்றிய
பதிவுகள் - அலசல்கள் - கருத்து பதிவுகள் என்று பெருமையுடன் 15.9.2014 அன்று வெற்றிகரமான 100 வது நாளை
காண்கிறது .
இந்த இனிய நேரத்தில் மாண்பு மிகு உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துக்களும் .
மதிப்பிற்குரிய ஆய்வாளர்கள் .
நிறுவனர் - நெய்வேலி திரு வாசுதேவன்
உப தலைவர் - சென்னை திரு கிருஷ்ணா
பொங்கும் பூம்புனல் - திரு ராகவேந்திரன்
பூலோகம் - திரு சின்னகண்ணன்
திரு ராஜேஷ்
திரு மது
மாஸ்டர் ஆப் ஆல் சப்ஜெக்ட்ஸ் - திரு கோபால்
நடமாடும் பல்கலை கழகம் - திரு கார்த்திக்
திரு வெங்கி ராம்
திரு வாசுதேவன்
திரு யுகேஷ் பாபு
திரு முரளி ஸ்ரீனிவாசன்
திரு SSS
மற்றும் பல நண்பர்கள் .
அடுத்த வெளியீடு .
மனதை மயக்கும் மதுர கானங்கள் - பாகம் - 3 விரைவில் .........................