சிவாஜி செந்தில் சார்,
உங்கள் குறையை ஓரளவிற்கு தீர்க்கும் பாடல். ஆனால் அபூர்வம்தான். ஹீரோ ரேஞ்சிற்கு அட்டகாசமான தலைக் கட்டுடன், கையில் மேன்டலினுடன், நாடோடிக்காரனாய் வில்லங்க வீரப்பா நாடோடி டெண்ட்டுகளுக்கு மத்தியில் ராஜசுலோச்சனாவின் ஆடல் பாடலுக்கு இசை அமைத்து, சுலோச்சனாவைச் சுற்றி வருவது நிச்சயம் வித்தியாசமான புதுமையான ஒன்றுதான். இதுவரை பார்க்காதவர்களுக்கு இது வாய் பிளக்கச் செய்யும் பாடல்தான்.
கோபக் கனல் கண்களில் கொதிக்க, 'ஹா..ஹா' என்று பகீர்ச் சிரிப்பு எதுவுமில்லாமல், எந்தப் பொருள் மீது கை வைக்கிறாரோ அந்தப் பொருள் கோபத்தில் இவரால் தூக்கிப் போடப்பட்டு பல படங்களில் சுக்கு நூறாகும்....நிறைய பூ ஜாடிகள், பூந்தொட்டிகள் என்று.:) அப்படியெல்லாம் இல்லாமல் வீரப்பா மென்மையாக பங்கு கொண்ட அபூர்வப் பாடல் இது.
பாடல் மிக மிக இனிமை. சுலோச்சனாவின் கண் வெட்டுகளும் அருமைதான்.
'ஆசை அன்பெல்லாம் கொள்ளை கொண்ட நேசா
பேசும் ரோஜா என்னைப் பாரு ராஜா'
இந்தப் பாடல் எனக்கு ரொம்ப பிடித்த பாடல்.
ஒரு சிறு குறை. ஆரம்பக் காட்சியைத் தவிர பெரும்பாலும் மற்ற காட்சிகளில் வீரப்பாவின் பின்புறமாகவே காமெரா மேன் அவரை கவர் செய்திருப்பார்.
படம் 1956 ல் வந்தக் 'ஆசை'தான். உங்க 'காதல் மன்னன்' நடித்ததுதான்.:)
இப்போ உங்க 'ஆசை' நிறைவேறிடுச்சா?:) நீங்கதான் சொல்லணும்.
https://youtu.be/Z5vodpSBQ6k