http://i59.tinypic.com/2my19xt.jpg
Printable View
Courtesy : Facebook
http://i61.tinypic.com/ojnimp.jpg
மக்கள் திலகத்தின் மகத்தான காவியம் “அரசிளங்குமரி’ பற்றிய ஒரு சிறு தொகுப்பு :
நம் புரட்சித்தலைவர் அவர்களுக்கு புத்தாண்டு தினம் என்றால் அது தமிழர் திருநாளாம் பொங்கல் நன்னாள். அன்றுதான், அனைவரையும் அழைத்து அவர்களுடன் சிற்றுண்டி மற்றும் உணவருந்தி, அன்பளிப்புக்களையும் அளித்து மகிழ்வார்.
எனவே அவரது காவியங்கள் பெரும்பாலும் தமிழர் திருநாளன்றுதான் வெளியாகும். இதில் சற்று வித்தியாசமாக, ஆங்கிலப் புத்தாண்டு தினத்தன்று (01-01-1961) வெளியான, பொன்மனசெம்மலின் ஒரே காவியம் “ அரசிளங்குமரி ”.
http://i60.tinypic.com/53msn5.jpg
இதற்கு முன்பு வாள் சண்டைகளில் அபாரமாக நடித்திருந்தாலும், இந்த காவியத்தின் இறுதி கட்டத்தில் இடம் பேற்ற வாள் சண்டை காட்சி பிரசித்தம் பெற்றது. அது மட்டுமல்லாது, நம் எழில் வேந்தனுக்கு, “ வாள் வீச்சில் வல்லவர் “ என்ற பெயர் நிரந்தரமாக நிலைக்கச் செய்த காவியம்தான், அரசிளங்குமரி
இந்த காவியத்தின் மற்றொரு சிறப்பு ... நம் கலைச்சுடர் எம். ஜி. ஆர். அவர்கள் இரு வேறு தோற்றங்களில் காட்சியளிப்பார். அறிவழகன் என்ற கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்து அசத்தியிருப்பார் நம் நிருத்தய சக்கரவர்த்தி எம். ஜி. ஆர். அவர்கள்.
கலைஞர் கருணாநிதி அவர்களின் சத்தான கதை வசனத்தில், முத்தான எட்டு பாடல்கள். இவைகளை, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவியரசு கண்ணதாசன், கு. மா. பாலசுப்ரமணியம், முத்துக்கூத்தன், கே. எஸ். கோபாலகிருஷ்ணன் முதலானோர் எழுதியிருக்கின்றனர்.
இதில் பிண்ணனி பாடியிருப்பவர்கள் : வழக்கமான டி. எம். எஸ்., சீர்காழி, பி. சுசீலா, ஜானகி ஆகியோர் தவிர, எஸ்..சி. கிருஷ்ணன், சூலமங்கலம் ஜெயலட்சுமி, ஜமுனா ராணி, பி. லீலா போன்றோர்.
ஜுபிடர் சோமு தயாரிப்பில், ஏ. காசிலிங்கம் இயக்கத்தில் உருவான இக்காவியம், புரட்சித்தலைவரின் புகழ் மகுடத்தில் மற்றுமோர் மாணிக்கக் கல் !
“அரசிளங்குமரி” காவியத்தில் இடம் பாடல்களின் முதலிரண்டு வரிகள் :
பாடல் 1 : தில்லாலங்கடி : தில்லாலங்கடி தெரிஞ்சிக்க வேணும்
(கவியரசு கண்ணதாசன்)
பாடல் 2 : ஏற்றமுன்னா ஏற்றம் – இதிலேயிருக்குது முன்னேற்றம்
(பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்)
பாடல் 3 அத்தானே, ஆசை அத்தானே – அன்பே உன்னை
(கே. எஸ். கோபாலகிருஷ்ணன்)
பாடல் 4 நந்தவனத்திலோர் ஆண்டி – அவன் வந்த இடத்திலோர்
மங்கையை வேண்டி (பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்)
பாடல் 5 கண்டி கதிர்காமம் எஞ்சுப்பையா – கழுகு மலை, பழனி
மழை கால்நடையாப் போக வேணும் (பட்டுக்கோட்டை
கல்யாணசுந்தரம்)
பாடல் 6 சின்னப்பயலே சினப்பயலே சேதி கேளடா
(பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்)
பாடல் 7 தூண்டியிலே மாட்டிக்கிட்டு துடிக்குது – மீனு
துடிக்கிறதை பார்த்து கண்ணு ரசிக்குது
(முத்துக்கூத்தன்)
பாடல் 8 தாரா அவர் வருவாரா – கண்கள் தவிப்பதை தான்
அறிவாரா (கு. மா. பலசுப்ரமனியம்)
Wish you all a Happy new year 2015
http://i62.tinypic.com/ziknsm.jpg