:yes::exactly:
Printable View
எலிசபெத் டெய்லர்.
எட்டுமுறை மணவிலக்கு -- இதற்கே
என்னென்ன காரணமோ?
ஒட்டிவாழும் முனைமுகத்தில் -- எதையும்
வெட்டிப்பேசும் தோரணையோ?
ஆடவனை அடைந்தபின்பே -- அவன்
அசடுவந்து குடைந்ததுவோ?
பாடிவந்த காதல் தேனீ --- வீசும்
பனிக்காற்றில் தெலைந்ததுவோ?
மரணத்தின்பின்தான் சொர்க்கம்
மகிழ்வாய் நீ இனியுறங்கு.
சரியான இரங்கற்பா!
nanRi madam.
வந்துகண் டோர்க்கெலாம் வாரி வழங்கினார் அருளை;-அத்துடன்,
வந்தண் மியோர்க்கு வடித்தளித் தார்பொற் பொருளை! -எத்திசை,
சென்றிடு போதிலும் சீரிய அவர்புகழ் கேட்டோம் --ஒத்தவர்
சீருல கத்தினில் யாரையும் கொணர்ந்தெதிர் காட்டோம்.
தெய்வமென்றே யாரும் பூசனை செய்தவர் தமக்கு --ஒருசிறு
தீமையும் நேர்ந்ததென் றாலதை ஏற்குமோ நெஞ்சம்?
கையுயர் போதெலாம் பற்பல படைத்தளித் தவர்க்கு-- பிணிதரு
காய்ச்சல் எனவொரு நாடக மேஇனி மிஞ்சும்.
கேட்டபோ தெல்லாம்நீ உதவி செய்தாய்,
கேடகற்றி வாழ்வைநீ விளக்கம் செய்தாய்!
ஊட்டமிகப் பெற்றதெலாம் மறக்கப் போமோ?
ஊரறிய விந்தைபுரிந்் துயர்ந்து நின்றாய்.
நாட்டமுடன் நானுனையே வணங்க, இங்கே
யாமிருக்க அச்சமிலை எனவே கையை
ஆட்டியப யம்தந்தாய் அயர்வு தீர்ந்தேன்
அகிலம்நீ நீங்கினையோ என்றும் உள்ளோய்!
உடற்சட்டை களைந்ததனால் ஓய்வ துண்டோ
உன்பற்றா ளர்தமக்குன்் கடைக்கண் பார்வை?
கடல்வட்டம் நிலவரம்போ டிவை கடந்து
கனிந்தஅருள் நீபொழியத் தடைகள் ஏது?
விடலறியார் உமதுதிரு வடிகள் தம்மை
விழைந்தணுகும் நல்லடியார்; சத்ய சாயி,
உடலொருமைக் குள் அடங்கா ஆன்ம ஞானி
உலகில்நீ வலம்வந்தே ஓங்கி நிற்பாய்.
உயர்ந்த மகானுக்கு அழகிய அஞ்சலிக் கவிதை..
உலகம் முழுக்க செலுத்துகிறது அஞ்சலி!
Thanks for your appreciation ! supra
தேர்வும் தேர்தலும் ஒன்றுக்கொன்று
திறமான ஒற்றுமைகள் தெரியக்காட்டும்,
ஆர்வம் கூடிவர ஆடிப்பாடி
அகமகிழ அவைபோலச் சிலவே யுண்டு.
தோற்றவர்க்கு மறுவழியில் அமைச்சர் வேலை.
துரைத்தனத்தார் தரவந்த போதும், "வேண்டாம்!
ஏற்றவனாய் மக்கள் எனைக் கருத வில்லை,
இனி எதற்கோ?" என்று நின்றார் அஃதே வீரம்!