http://tamil.oneindia.in/movies/spec...ay-177769.html
50% are NT Songs
Printable View
http://tamil.oneindia.in/movies/spec...ay-177769.html
50% are NT Songs
புட்டண்ணா கனகல் டைரக்ட் செய்த படம் .இவர் நிறைய கன்னட படம் டைரக்ட் செய்து உள்ளார்
பாரதி ராஜா இவர்ட்ட அச்சிச்டன்ட் டைரக்டர் ஆக வேலை செய்தார் என்பார்கள் .
ஈஸ்ட்மேன் கலர் படம்
(கார்த்திக் சார் பாஷையில் சொல்வது என்றால் 5000 சிவாஜி )
ஏவிஎம் ராஜன்,முத்துராமன்,வாணிஸ்ரீ (டபுள் ரோல்),நாகேஷ்,
ரங்கராவ்,நாகையா நடித்து வெளி வந்தது
ஒரு வாணிஸ்ரீ கொஞ்சம் மாடர்ன் டைப் .எல்லா ஆண்களையும் தன வலையில் விழ வைக்கிற டைப். முத்துராமன் இவரை நம்பி வீணா போய் தற்கொலை செய்து கொள்வார் .இதனால் ஏவிஎம் ராஜன் இந்த வாணிஸ்ரீ மீது வெறுப்பு கொள்வார். இதே நேரத்தில் அவருக்கு பெண் பார்க்க ஏற்பாடு செய்வார்கள். அந்த பெண் இன்னொரு வாணிஸ்ரீ
ரொம்பவும் அடக்கம் ஏவிஎம் ராஜனுக்கு குழப்பம்.
இறுதியில் வழக்கம் போல் மாடர்ன் டைப் வாணிஸ்ரீ செத்து போவர் என்று நினைக்கிறன் .
மாமா இசை musical ஹிட் வீணை எல்லா பாடல்களிலும் கொஞ்சி விளையாடும்
பாட்டு எல்லாம் ரொம்ப ச்வீட் ஆக இருக்கும்
1. ஹே ஹே mr ப்ரம்ஹச்சரி ஹே ஹே ஒரிஜினல் பிரமஹச்சரி
நான் கட்டிக்கொண்டு பாடினால் உன்னை ஒட்டிக்கொண்டு பாடினால்
நாளை முதல் சம்சாரி ஹோ i am வெரி சாரி
(எங்கள் தங்க ராஜா - சாமியிலும் சாமி இது ஊமை சாமி பாட்டை நினவு படுத்தும் )
2. வானிலே மண்ணிலே வளியிலே ஒளியிலே
எல்லாம் நீ தானம்மா செல்வம் நீ தனம்மா
உன் மார்பிலே என்னை சீரட்டம்மா
உன் மடியிலே என்னை தலாட்டம்மா .. அம்மா
(சுசீலா excellant ஹம்மிங் உடன் )
இந்த பாட்டின் முதல் வரியை கண்ணதாசன் மாணிக்கவாசகரின் திருவாசகத்தில் இருந்து சுட்டது என்று நா காமராசன் ஒரு அரங்கத்தில் கூறியது
நாவுக்கரசரின் தேவாரம்
"வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமும் ஆய் இன்மையும் ஆய்
கோனாகி யான் எனது என்று அவர் அவர்ஐ
கூதாட்டுவானக்கி நின்றே என் சொல்லி வாழ்த்துவனே "
3. திருமகள் தேடி வந்தாள் - சுசீலா ஒரு தடவையும்
மற்றும் பாலா ஒரு தடவையும் (அருமையான மெலடி )
இந்த பாடலின் இணை இசை ரொம்ப அருமையாக
பாடல் வரிகளை சாப்பிடாமல் அடங்கியே வரும்
இது பாலாவின் மெலடி வித் excellant ஹம்மிங்
திருமகள் தேடி வந்தாள் ஆ.ஆஆஆ
என்தன் இதயத்தில் குடி புகுந்தாள் ஆஆ ஆஆஆ
குலமகள் கோலத்திலே தேவி மருமகளாக வந்தாள் ஆஆஆஆஆஆஆ
திருமகள் தேடி வந்தாள் என்தன் இதயத்தில் குடி புகுந்தாள்
குலமகள் கோலத்திலே தேவி மருமகளாக வந்தாள் ஆஆஆஆஆஆஆ.
திருமகள் தேடி வந்தாள்
ஆஆ..... ஆஆஆ
மஞ்சள் தந்தவள் விசாலாட்சி நல்ல மலர்களைத் தந்தவள் மீனாட்சி
குங்குமம் தந்தவள் காமாட்சி எங்கள் குடும்பத்தில் தேவியுன் அரசாட்சி
திருமகள் தேடி வந்தாள் என்தன் இதயத்தில் குடி புகுந்தாள்
குலமகள் கோலத்திலே தேவி மருமகளாக வந்தாள் ஆஆஆஆஆஆஆ
திருமகள் தேடி வந்தாள்
ஆஹாஹா அ ஆஹாஹா ஆஹஹஹா ஹ ஹாஆஆஆ (ஹம்மிங் by ப.வசந்தா or சுசீலா )
இந்த சரணத்தில்
பாலாவின் "கனிவாய் " என்று நிறுத்தி பாடும் அழகு
திருமலை திருப்பதிப் பால் பழங்கள் - உயர்
தென் திருப்பழனியின் தேன் குடங்கள்
கனிவாய் மொழிதரும் வாசகங்கள் - என்
காதல் தெய்வத்தின் உயர் குணங்கள்
காதல் தெய்வத்தின் உயர் குணங்கள்
திருமகள் தேடி வந்தாள் என்தன் இதயத்தில் குடி புகுந்தாள்
குலமகள் கோலத்திலே தேவி மருமகளாக வந்தாள் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
திருமகள் தேடி வந்தாள்
சுசீலா மெலடி - புதுமனை புகு விழாவின் போது
(வாணிஸ்ரீயின் பாந்தமான நடிப்பு )
(சுற்றிவர குமரி ருக்மணி தெலுகு நிர்மலம்மா என்று கும்மி அடித்து
இருப்பார்கள் அதிலும் ஒரு சரணத்திற்கு முன் குமரி ருக்மணியிடம்
நிர்மலம்மா வாணிஸ்ரீ யை காண்பித்து அவர் அழகை வர்ணிக்கும்
முக குறிப்பு உடனே குமரி ருக்மணியின் பூரிப்பு - நல்ல காட்சியமைப்பு
திருமகள் தேடி வந்தாள்
இன்று புது மனை குடி புகுந்தாள்
குலமகள் குங்குமத்தில்
தேவி கோயில் கொண்டாட வந்தாள்
தேவி கோயில் கொண்டாட வந்தாள்
வடதிசை காவல் விசாலாட்சி
இங்கு தென் திசை காவல் மீனாட்சி
மேல் திசை காவல் காமாட்சி
எங்கள் கீழ் திசை காவலில் அரசாட்சி
திருமலை திருப்பதிப் பால் பழங்கள் - உயர்
தென் திருப்பழனியின் தேன் குடங்கள்
இல்லத்தில் என்றும் நிறைந்து இருக்க
எங்கள் உள்ளத்தில் புன்னகை மலர்ந்து இருக்க
மங்கல மங்கையர் குங்குமமும்
அவர் மஞ்சளும் தாலியும் மனையறமும்
பொங்கி நலம் பெற அருள் புரிவார்
எங்கள் புது மனை வாழ்வில் வளம் தருவாள்
நெஞ்சம் மறப்பதில்லை..
பாடலில் சுசிலாவின் குரல், ஒரு பெண்ணின் ஏக்கத்தை, அன்பின் தவிப்பை நுட்பமாக வெளிப்படுத்தும். பெண் நூறு சதவீதம் உணர்வுகளால் நிரம்பியவள் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும்.
குறிப்பாக, பாடலின் துவக்கதிலும், ‘நெஞ்சம் மறப்பதில்லை…’ என்ற வரியை தொடர்ந்தும் வருகிற அந்த ஹம்மிங், அய்யோ… வாய்ப்பே இல்ல.. No chance.
http://www.youtube.com/watch?v=NdnCxcEderU
இருளும் ஒளியும் சில மாதம் முன்பு தான் பார்த்தேன்..அவ்வளவாய் வாணி சுவாரஸ்யமாய் இல்லை..மிக்க ஏமாற்றம்..கடைசியில் கெட்ட வாணி பொசுக்கென்று செத் போவதும்.. பாடல்கள் குட்.. நினைவு படுத்தியமைக்கு நன்றி கிருஷ்ணா சார்..
பாலா சார்.. நெஞ்சம் மறப்பதில்லை என்று தேவிகாவெல்லாம் நினைவு படுத்தக் கூடாது..பாப்பா பாவம் (அடியேன் தான்) :)
என்னுள் கலந்த கானங்கள் 5
அருளும் அணியாய் முறுவல் முகத்தில்
..அணையாச் சுடராய் மிளிர்ந்தே ஒளிரும்
புருவம் வளைந்தே அழகாய் விரிந்தே
..புவனம் த்னையே சிரித்தே மயக்கும்
சிறுவன் எனவே நினைத்தால் மிகவும்
..சிறப்பாய்த் தகப்பன் குறையை அகற்றும்
குருவே முருகா உனையே பணிந்தேன்
..கொடுப்பாய் பணிவும் அறிவும் அறமும்..
ஹை..எஸ்.. முருகன் பாட்டுத் தான்..ஆனால் பாடுவது சுசீலா என்ற இசைக் குயில் ப்ளஸ் கண்ண தாசன்..
ம்ம் நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் பாடல்..பட்த்தில் கே.ஆர்.வி என நினைவு பஞ்சவர்ணக் கிளி இன் ப்ளாக் அண்ட் ஒயிட்..
முருகன் மேல் ஆசைப் பட்ட் அந்தப் பொண் என்ன்ன்னு பாடறா.. பன்னிரண்டு கண்ணழகைப் பார்த்திருந்த பெண்ணழகை...
*
சத்தியம் சிவம் சுந்தரம் ஆ....
சரவணன் திருப்புகழ் மந்திரம்
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்
அண்ணல் உறவுக்கென்றே உடலெடுத்தேன்
அவன், அருளைப்பெறுவதற்கே உயிர் வளர்த்தேன் ஆ...
பனி பெய்யும் மாலையிலே பழமுதிர்ச் சோலையிலே
கனி கொய்யும் வேளையிலே கன்னி மனம் கொய்து விட்டான்
பன்னிரண்டு கண்ணழகை பார்த்திருந்த பெண்ணழகை
வள்ளல்தான் ஆள வந்தான் பெண்மையை வாழ வைத்தான்
மலை மேல் இருப்பவனோ மயில் மேல் வருபவனோ
மெய்யுருகிப் பாட வந்தால் தன்னைத் தான் தருபவனோ
அலை மேல் துரும்பானேன் அனல் மேல் மெழுகானேன்
ஐயன் கை தொட்டவுடன் அழகுக்கு அழகானேன்
அழகுக்கு அழகானேன் ஆ...
**
முருகா டச் பண்ணினவுடன் இன்னும் அழகாய்டறாளாம்.. நைஸ் இல்லியோ..
பின்ன வாரேன் :)
வாணிஸ்ரீ , தேவிகாவையும் நினைவு படுத்தாமல் ஒரு சாகவரம் பெற்ற பாடல் . அன்றும் , இன்றும் , என்றும்
Can any one upload Video of this song.
படம்: ஒரு குடும்பத்தின் கதை - 1975;
இசை: ஷங்கர் கணேஷ்;
பாடல் வரிகள்:- வாலி;
பாடகர்கள்: K.J.யேசுதாஸ், B.S.சசிரேகா;
மலை சாரலில் இளம் பூங்குயில்
அதன் மார்பினில் ஒரு ஆண்குயில்
அது நானல்லவா.. துணை நீயல்லவா
அன்பு கீதம் நாம் பாடும் நாள் அல்லவா
ஈரேழு ஜன்மதின் பந்தம் இது - ஒரு
இழை கூட பிரியாத சொந்தம் இது
தெய்வீகம் பெண்ணாக நேர் வந்தது -எந்தன்
திருவீதி வழி தேடி தேர் வந்தது
தொடும் உறவானது தொடர் கதையானது
இந்த நாதம் கலையாத இசையானது (மலை)
பனி தூங்கும் மலரே உன் மடி என்பது - இரு
கனி தூங்கும் தேன் திராக்ஷை கொடி என்பது
நினைத்தாலும் அணைத்தாலும் கொதிக்கின்றது - அதில்
நான் தேடும் இன்பங்கள் உதிக்கின்றது
விழி சிரிக்கின்றது.. கவி படிக்கின்றது
திருமேனி தாளாமல் நடிக்கின்றது
சின்னக் கண்ணன் சார்,
உங்க 'லத்து' கிருஷ்ணா சாரை ரொம்பவே பாதிச்சுடுத்து போல. சிலாகிக்கிறார்.
இன்னும் நீங்க வச்சி இருக்குற பட்டப் பெயரையெல்லாம் கேட்டா என்ன ஆவாரோ!
ஆமாம்! வாணிஸ்ரீக்கு என்ன 'வானு'வா?
சின்னக்கண்ணன் சார்
ரசிச்சேன் ரொம்ப.
அழகன் முருகனிடம் ஆசை வச்சவங்க கூட கம்மி
ஆனா அந்தப் பாட்டு மேல ஆசை வச்சவங்க அதிகம்.
ரொம்ப அழகா துவனி அழகா முடிச்சிறிக்கீங்க.
'பின்ன வாரேன்' (நன்னாயிட்டு)
வழி பார்த்திருப்பேன்.
கிருஷ்ணா சார்,
http://www.inbaminge.com/t/i/Irulum%20Oliyum/folder.jpg
நாலே வரியில் இவ்வளவு ஸ்வீட்டா ஷார்ப்பா இருளும் ஒளியும் பற்றி எழுதி விமர்சனம் பண்ணிட்டீங்களே! (அதுக்கு மேல அதுல ஒன்னும் இல்ல)
ஆனா பாடல்களை ஒத்துக்கணும்.
மாமா நல்லா ஒத்துழைச்சி இருப்பார்.
'ஹே ஹே மிஸ்டர் பிரம்மச்சாரி' முடிந்தவுடன் டடடங் டடங் பேஸ் கிடார் இன்னும் கொஞ்சம் வராதான்னு இருக்கும். எனக்கு ரொம்ப பிடித்த இடம் அது.
ஆனால் வாணிஸ்ரீ 'you know ... you know' ன்னு ரொம்ப ஓவர். தாங்க முடியாது. அந்த குருவிக் கூட்டுத் தலையை விடவே மாட்டார்.
பூசணிக்காய் வெடிச்சு விடும் பாருங்க முற்றிப் போய். அது மாதிரி நம் நடிப்புச் சுடர் முகம் எப்ப சைடில கிருதாவுக்குப் பக்கத்துல அகலமாகி வெடிச்ச்சுடுமோன்னு பயமா இருக்கும். (புதுக்கோட்டைகாரங்களுக்கு அப்படித்தான் கன்னம் உப்பி இருக்குமாம். காதல் மன்னன், ராஜன் என்று)
அவர் எல்லாப் படத்திலேயும் ஒன்னு இழுப்பார்.. எ...ன்..ன... சொ...ல்..ற...? யப்பா!
எல்லாமே இருள் ஒளி மாமா.
//ஆனால் வாணிஸ்ரீ 'you know ... you know' ன்னு ரொம்ப ஓவர். தாங்க முடியாது. அந்த குருவிக் கூட்டுத் தலையை விடவே மாட்டார்.// அட ஆமாம் வாசு சார்.. அந்தத் தலை ரொம்பவ்வே இரிடேட் பண்ணும்..வாணுன்னு சொல்லலாம் தான்..:)
நன்றி தங்கள் பாராட்டுக்கு.. நிறைய எழுதணும்..பார்க்கறேன்
//பாடகர்கள்: K.j.யேசுதாஸ், b.s.சசிரேகா;// நல்ல பாட்டு பாலா சார்.. ரேடியோவில் கேட்டு க் கேட்டு மனனம் ஆன பாட்டு..ஆமா படத்துல யாராக்கும் பாடியிருப்பாங்க..
பாலா சார்,
அருமையான எல்லோருக்கும் பிடித்த படலை மீண்டும் நினைவு படுத்தி உள்ளீர்கள். அப்போது இந்தப் பாடல் செம ஹிட்.
இதே படத்தில் சுசீலாவின் கண்ணீர் சிந்த வைக்கும் அருமையான பாடல் ஒன்று உண்டு
சந்தோஷமாக வாழ்ந்த தன் அக்காள் இறந்து போகிறாள். அந்தக் குடும்பத்தை சுமக்க வேண்டிய பாரம் அவள் தங்கை மேல் விழுகிறது. அவளுக்கும் சின்னவள் பருவ வயது காரணமாக காதல் கனவு கண்டு தூக்கத்தில் சிரிக்கிறாள். தூக்கமே வராமல் தவிக்கும் பாரத்தை சுமக்கும் தங்கை தன் செல்லத் தங்கையை மடியில் கிடத்தி மனம் வெதும்பி தவிக்கையில் இந்தப் பாடல்.
10 மாதத்தில் தாய் சுமக்கும் பாரத்திலிருந்து விடுபட்டாள். தந்தை தான் இருக்கும் வரை குடும்ப பாரத்தை சுமந்தான். அக்காளின் கணவன் நல்லவன். ஆனால் அக்காள் இறந்தபின் அவனுக்கு எது வேலை? இனி குடும்பத்தைக் கவனிக்கும் பொறுப்பு தங்கையுடையதுதானே!
சோகத்தை சுசீலாவின் குரல் என்னமாய் பிரதிபலிக்கிறது?
தங்கையாக சுமித்ரா குடும்ப பாரத்தை சுமப்பார் என்று நினைவு. சின்ன வயதில் பார்த்தது. முத்துராமன், நந்திதா போஸ் இருப்பார்கள் என்றும் நினைக்கிறேன்.
சோகம் பிழியும் படம்.
பாடலைப் பார்ப்போம்.
கற்பனையில் மிதந்தபடி
கனவுகள் வளர்ந்தபடி
கண்ணுறங்கும் பருவக்கொடி
சிரிக்கிறாள்
இவள் காவலுக்கு நின்ற கொடி
கண்ணுறக்கம் மறந்தபடி
கண்ணீரில் நனைந்தபடி துடிக்கிறாள்
கண்ணீரில் நனைந்தபடி துடிக்கிறாள்
தாயாரின் சுமை எல்லாம்
ஐயிரண்டு மாதம் வரை
தந்தையின் சுமை எல்லாம்
தான் இருந்த காலம் வரை
மன்னவன் சுமையெல்லாம்
மூத்தவள் வாழ்ந்தவரை
சின்னவள் சுமைகளெல்லாம்
எத்தனை காலம் வரை
தொட்டு தொட்டு எத்தனையோ
தொல்லைகள் வந்ததம்மா
கட்டுப்பட்டு அத்தனைக்கும்
கன்னிமனம் நின்றதம்மா
பட்டவரை போதுமென்று படைத்தவன் விடுவானோ
இல்லை இல்லை என்றவன் நினைப்பானோ
கற்பனையில் மிதந்தபடி
கனவுகள் வளர்ந்தபடி
கண்ணுறங்கும் பருவக்கொடி
சிரிக்கிறாள்
இவள் காவலுக்கு நின்ற கொடி
கண்ணுறக்கம் மறந்தபடி
கண்ணீரில் நனைந்தபடி துடிக்கிறாள்
கண்ணீரில் நனைந்தபடி துடிக்கிறாள்
டியர் வாசு சார், & பாலா சார்,
ஒரு குடும்பத்தின் கதை படத்தில் இடம்பெற்ற அருமையான இரண்டு பாடல்களை ஆளுக்கொன்றாக அலசித் தள்ளிவிட்டீர்கள். இவைகளைக் கேட்டு / பார்த்து பல ஆண்டுகளாகி விட்டன. நம்ம சேனல்கள் தான் கடிவாளம் கட்டிய குதிரைகளாக இருக்கின்றனரே.
அபூர்வ பாடல்களை அலசிய இருவருக்கும் நன்றி.
டியர் சின்னக்கண்ணன்,
அழகன் முருகனிடம் பாடல் விவரிப்பு நன்றாக உள்ளது. தேவிகாவை நினைவுபடுத்தக் கூடாது என்று சொல்லிவிட்டு, விஜயாவை மட்டும் நினைவுபடுத்தலாமாக்கும். அதுசரி, அந்தப்பாடலில் விஜயாவை யார் பார்த்தது. கண்கள் முழுக்க விஜயலட்சுமி மீதுதான் மொய்த்திருந்தன.
sorry karthik sir
நமது இந்த திரியில் நீங்கள் சொன்னது போல் நானும் படித்த நினவு
தயவு செய்து உங்களை hurt செய்ததாக நினைத்து விடாதீர்கள்
ஒரு குடும்பத்தின் கதை
இந்த படத்தில் இன்னொரு பாட்டும் ஒன்னு நினவு உண்டு சார்
பாலாவின் குரலில் குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடும் பாடல்
ஒரு குடும்பத்தின் கதை இது
அன்பு கரங்களால் வரைந்தது
பாட்டுக்கு நடுவில் பாலாவின் ச்வீட் குரலில் ஒரு விடுகதை வரும்
மனிதனுக்கு எத்தனை கண்கள்
இரண்டு
இல்லை 23
என்ற பாடலும் மிக நன்றாக இருக்கும்
5000 சிவாஜி என்பது பார்த்தசாரதி சார் சொன்னது
49வது பக்கத்தில் இருக்கிறது
மன்னிக்கவும் கார்த்திக் சார்
அழகன் முருகனிடம் பாடல் விவரிப்பு நன்றாக உள்ளது. தேவிகாவை நினைவுபடுத்தக் கூடாது என்று சொல்லிவிட்டு, விஜயாவை மட்டும் நினைவுபடுத்தலாமாக்கும். அதுசரி, அந்தப்பாடலில் விஜயாவை யார் பார்த்தது. கண்கள் முழுக்க விஜயலட்சுமி மீதுதான் மொய்த்திருந்தன
100% -you are correct karthik sir
http://youtu.be/7qpeuaM39RM
டியர் கிருஷ்ணாஜி,
இருளும் ஒளியும் படத்தைப்பற்றிய நியாயமான விமர்சனம். சுமார் படமானாலும் பாடல்களால் பிடித்திருந்தது. இருவேடங்களையும் வித்தியாசப்படுத்திக் காட்ட வாணிஸ்ரீ (செல்லப்பெயர் என்ன வாணுவா, இப்படி பெயர் வைப்பதைவிட வாணிஸ்ரீ என்றே சொல்லிவிட்டுப்போகலாம்) ரொம்ப மெனக்கெட்டிருப்பார். அந்த வருடம் சிறந்த நடிப்புக்காக பரிசெல்லாம் வாங்கினார், இந்தப்படத்துக்காக.
டியர் வினோத் சார்,
காசேதான் கடவுளடா படத்தின் இரண்டு பாடல்களின் வீடியோவை உடனே அளித்து சிறப்பு சேர்த்ததற்கு மிக்க நன்றி.
கிருஷ்ணா சார்,
மகராஜா வந்தான்
என் வாசல் தேடி
மழை மேகம் போலே
மலர் என்னை நாடி
சொந்தம் பந்தம் இன்பம் துன்பம்
எல்லாமே உன்னால்தானய்யா
சுசீலா பின்னும் இந்தப் பாடலும் 'ஒரு குடும்பத்தின் கதை' படத்தில்தானே சார்?
அருமையான மெலடி.
நன்றி கார்த்திக் சார்.. நன்றி வினோத் சார் வீடியோவிற்காகவும்.. :)
வாணிஸ்ரீ ந்னா ரொம்ப நீளமா இருக்குங்களே கார்த்திக் சார்..;)
என் மீது கொண்டுள்ள அதீத அன்பின் காரணமாக என்னை பெரிதும் பாராட்டிய கார்த்திக், வாசு, கண்ணன் மற்றும் கிருஷ்ணாஜி ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி.
கிருஷ்ணாஜி, சுப்ரபாதம் படத்தின் கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும் பாடலுக்கு கோடி நன்றி. எனக்கு மிக மிக பிடித்த பாடல். 1979 ஏப்ரல்-ல் மதுரை தங்கம் திரையரங்கில் இந்த படத்தை பார்த்த அந்த நாள் மறக்க முடியாத ஒன்று.
அது போல பாலா சார், எப்போது கேட்டாலும் ஒரே நேரத்தில் மனதில் சொல்ல முடியாத சந்தோஷத்தையும் சொல்ல முடியாத சோகத்தையும் ஒரு போல கொண்டு வரும் மலைசாரலில் ஒரு இளம் பூங்குயில் பாடலுக்கு கோடி கோடி நன்றி. பல பல நினைவுகள்.
கண்ணா,
மனதுக்குள் உட்கார்ந்து மணியடித்தாய் பாடலை நினைவுப்படுத்தியதற்கு நன்றி. அன்றைய தூரதர்சனினில் இடம் பெற்ற நிகழ்ச்சிகளின் பெயர்களையே வைரமுத்து பயன்படுத்தியிருப்பார். ஆனால் பல்லவியின் கடைசி இரண்டு வரிகள் பின்னியிருப்பார்.
இளகாத என் நெஞ்சில் இடம் பிடித்தாய்.
இன்று என் காதல் தேருக்கு வடம் பிடித்தாய்.
மீண்டும் சந்திக்கிறேன்.
அன்புடன்
சில வருடங்களுக்கு முன்பு நமது ஹப்பில் நான் எழுதிய பதிவு. காலத்தை வென்ற கவிஞன் கவியரசர் கண்ணதாசன் பிறந்த நாளான இன்று அவர் நினைவாக இந்த மீள் பதிவு.
கண்ணதாசனும் காதலும்
கண்ணதாசனைப் போல் காதலை கொண்டாடியவர்கள் வெகு சிலரே. காதல், காதல் சார்ந்த ஏக்கம், ஏக்கத்தில் தொனிக்கும் விரகம்,தாபம் எல்லாவற்றையும் இலக்கிய நயத்தோடு சொன்னவர் கண்ணதாசன்.
காதல் என்ற உணர்வு மட்டும் ஒரு மனதுக்குள் வெகு விரைவில் நுழைந்து விடுகிறது. எப்படி?
நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
இன்று முதல் நீ வேறோ நான் வேறோ
கண்ணதாசன் காதலை பற்றி கேள்வி கேட்டு பதில் சொல்கிறார்,
காதல் என்பது எதுவரை?
கல்யாண காலம் வரும் வரை.
இளமையிலே காதல் வரும்; எது வரையில் கூட வரும்?
முழுமை பெற்ற காதலெல்லாம் முதுமை வரை ஓடி வரும்.
காதலர்கள் எப்படி இருக்க வேண்டும்? கண்ணதாசனின் பதில்
நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்
மௌனமே காதலாய் ஒரு பாட்டு பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்.
காதல் ஏற்படுத்தும் தவிப்பை அதிலும் குறிப்பாக பெண்ணிடம் ஏற்படுத்தும் உணர்வுகளை எப்படி சொல்கிறார்?
கட்டவிழ்ந்த கண்ணிரெண்டும் உங்களை தேடும்; பாதி
கனவு வந்து மறுபடியும் கண்களை மூடும்.
பட்டு நிலா வான்வெளியில் காவியம் பாடும்; கொண்ட
பள்ளியறை பெண் மனதில் போர்களமாகும்.
காதலர்களுக்கிடையே நிலவும் உறவு எப்படி இருக்கும்?
ஆடச் சொல்வது தேன் மலர் நூறு
அருந்தச் சொல்வது மாங்கனி சாறு
கூடச் சொல்வது காவிரி ஆறு
கொடுப்பார் கொடுத்தால் மறுப்பவர் யாரு
பிரிந்த காதலர்கள் ஒன்று சேரும் போது உணர்வுகள் எப்படி வெளிப்படும்?
பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது அழுதால் கொஞ்சம் நிம்மதி
பேச மறந்து சிலையாய் நின்றால்
அதுதான் தெய்வத்தின் சன்னதி
அதுதான் காதல் சன்னதி.
காதலை பற்றி சொல்லும் கவிஞர் அந்த காதல் கனிந்து கல்யாணத்தில் முடிவதை சொல்கிறார்.
மாலை சூடும் மணநாள்; இள
மங்கையின் வாழ்வில் திருநாள்
சுகம் மேவிடும் காதலின் எல்லை
வேறொரு திருநாள் இனி இல்லை
மணமகன் இன்ப ஊஞ்சலில்
மணமகள் மன்னன் மார்பினில்
அங்கு ஆடும் நாடகம் ஆயிரம்
அதில் நாமும் இன்றொரு காவியம்
இதில் ஒருவர் தாளமாம்
ஒருவர் ராகமாம்
இருவர் ஊடலே பாடலாம்
காதல் கனிந்து திருமணத்தில் முடிந்ததும் அடுத்த கட்டத்திற்கு செல்கிறார்.
மலராத பெண்மை மலரும்
முன்பு தெரியாத உண்மை தெரியும்
மயங்காத கண்கள் மயங்கும்
முன்பு விளங்காத கேள்வி விளங்கும்
இரவோடு நெஞ்சம் உருகாதோ
இரண்டோடு மூன்றும் வளராதோ
முதலிரவை பற்றி நாயகன் நாயகியிடையே ஒரு கேள்வி பதில்
முதலிரவு என்று ஒன்று ஏனடி வந்தது ராதா
அது உரிமையில் இருவர் அறிமுகமாவது ராஜா.
முதலிரவில் நாயகியின் வெட்கத்தை கவிஞர் சொல்லும் அழகே அழகு.
பார்வையில் ஆயிரம் கதை சொல்லுவார்
படித்தவள்தான் அதை மறந்து விட்டாள்
காதலை நாணத்தில் மறைத்து விட்டாள்.
தோழியர் கதை சொல்லித் தரவில்லையா
துணிவில்லையா பயம் விடவில்லையா
அந்த உறவின் நிலையை எப்படி சொல்கிறார்?
வாயின் சிவப்பு விழியிலே
மலர் கண் வெளுப்பு இதழிலே
காயும் நிலவின் மழையிலே
காலம் நடத்தும் உறவிலே.
மறுநாள். அந்த இன்ப நினைவுகள் மனதில் வந்து மோத நாயகி இலக்கியம் பேசுகிறாள்.
கண்ணன் கோவிலில் துயில் கொண்டான்; இரு
கன்னம் குழி விழ நகை செய்தான்.
என்னை நிலாவில் துயர் செய்தான்; அதில்
எத்தனை எத்தனை சுகம் வைத்தான்
சேர்ந்தே மகிழ்ந்தே போராடி; தலை
சீவி முடித்தேன் நீராடி
கன்னத்தை பார்த்தேன் முன்னாடி; பட்ட
காயத்தை சொன்னது கண்ணாடி.
இதே இலக்கியம் வேறொரு பாணியில் வேறொரு பெண்ணால் எப்படி சொல்லப்படுகிறது?
காதல் கோவில் நடுவினிலே
கருணை தேவன் மடியினிலே
யாருமறியாப் பொழுதினிலே
அடைக்கலமானேன் முடிவினிலே.
கூடிக் கலந்து மகிழ்ந்த உயிர்கள் பிறிதொரு உயிரை உருவாக்கும் போது அங்கே ஆண் சொல்கிறான்.
நான் காதலென்னும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே.
பெண் என்ன சளைத்தவளா? அவள் உடனே பதிலளிக்கிறாள்
அந்த கருணைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே.
மற்றொரு ஆண் இதையே வேறு விதமாக பாடுகிறான். எப்படி?
கட்டில் கொண்டாள் அங்கு நான் பிள்ளையே
தொட்டில் கண்டாள் அங்கு என் பிள்ளையே.
இந்த உணர்வுகளையெல்லாம் ஒரு மூன்றாம் மனிதனின் கண்ணோட்டத்தில் சொன்னால்?
ஒருவரின் துடிப்பினிலே விளைவது கவிதையடா
இருவரின் துடிப்பினிலே விளைவது மழலையடா.
எதை சொல்வது? எதை விடுவது?
கண்ணதாசனின் கவிதைகளைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.
அன்புடன்.
நேற்று மட்டும் இந்தத்திரி 9 பக்கங்களை எட்டியுள்ளது
மனசெல்லாம் ஜில்லெண்டிருக்கு
ரொம்ப சந்தோஷம்
கோவர்த்தனம்
மெல்லிசை மன்னரின் உதவியாளர் என பல படங்களில் இவர் பெயர் இடம் பெற்றிருக்கும்...
அதற்கும் மேல் இசையமைப்பு கோவர்த்தனம் என்று இன்னும் சில படங்களில் இவர் பெயர் இடம் பெற்றிருக்கும்...
முதலாவது இரண்டாவதற்கு மிகவும் பெரிய உதவியாக இருந்தது என்பது இரண்டாவதில் இவருடைய பணி பறை சாற்றும்...
பட்டணத்தில் பூதம், வரப்ரசாதம், பூவும் பொட்டும், கைராசி படங்கள் இவருடைய பெயரை காலத்திற்கும் கூறிக் கொண்டிருக்கும்..
இவருடைய இசையமைப்பில் மெல்லிசை மன்னரின் சாயல் இடம் பெறுவது தவிர்க்க இயலாதது.
அப்படி ஒரு பாடல், பூவும் பொட்டும் திரைப்படத்திலிருந்து..
பூவும் பொட்டும் படம் என்றாலே நாதஸ்வர ஓசையிலே பாடலும் எண்ணம் போல கண்ணன் வந்தான் பாடலும் தான் சட்டென்று நினைவுக்கு வரும்..
சற்றே வித்தியாசமாக ஈஸ்வரியின் குரலில் உள்ள சிறப்பை அருமையாக வெளிப்படுத்திய பாடல் தான் பொன் வண்டு தீண்டாத மல்லிகை..
ரிதம்... மிகவும் அட்டகாசமாக... அதுவும் இப்பாடலில் இடம் பெறும் பாங்கோஸ் .... கேட்டுக் கொண்டே இருக்கலாம்.
http://youtu.be/r2SOQ3lufsk
இன்றைய ஸ்பெஷல் (13)
1966-ல் ஆர். ஆர். பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த 'பறக்கும் பாவை' வண்ணப்படத்தில் ஒரு அட்டகாசமான ஜாலியான பாடலைப் பார்க்கப் போகிறோம்.
http://i1.ytimg.com/vi/i_1mu9ToOmk/maxresdefault.jpg
'பறக்கும் பாவை' படத்தில் 'மக்கள் திலகம்' எம்.ஜி.ஆர், சரோஜாதேவி, காஞ்சனா, நம்பியார், அசோகன், மனோகர், சந்திரபாபு, தங்கவேலு, ஒ.ஏ.கே தேவர், ஜி.சகுந்தலா என்று பெரும் நட்சத்திரக் கூட்டம்.
இசை 'மெல்லிசை மன்னன்' விஸ்வநாதன் என்று டைட்டிலில் போடுவார்கள். உதவி கோவர்த்தனும், ஹென்றி டேனியலும். வசனம் சக்தி கிருஷ்ணசாமி.
எம்.ஏ.ரஹ்மானின் கண்களை, மனதை குளிர்ச்சியாகும் அம்சமான ஒளிப்பதிவு
முழுக்க முழுக்க சர்க்கஸை பின்னணியாக வைத்து நல்லதொரு பொழுதுபோக்கு சித்திரமாக வழங்கியிருந்தார் இயக்குனர் ராமண்ணா.
சர்க்கஸில் இணைந்து வேலைபார்க்கும் எம்.ஜி.ஆரின் காதலியான சரோஜாதேவியைக் கொலை செய்ய பல முயற்சிகள் நடக்கின்றன. கதாநாயகன் எம்.ஜி.ஆர் சரோஜாதேவியை இந்த ஆபத்துக்களிலிருந்து பாதுகாத்து மீட்கிறார். யார் சரோஜாதேவியை கொலை செய்ய முயற்சிக்கிறார்கள் என்று பல பேர் மேல் நமக்கும், படத்தில் உள்ளவர்களுக்கும் சந்தேகம் வருகிறது. இறுதியில் கொலைகா(ரி)ரன் யார் என்று தெரியும் போது நமக்கு அதிர்ச்சி.
இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் எதிர்பாராத வகையில் அமைந்திருந்தது.
இப்படத்தின் அனைத்து பாடல்களும் முத்து முத்தானவை. சர்க்கஸ் காட்சிகளும் (சர்க்கஸ் காட்சிகள் உதவிகளை 'நேஷனல் சர்க்கஸ்" கம்பெனி செய்து கொடுத்தது)
அழகாகப் படம் பிடிக்கப்பட்டு இருந்தன. தேவர் பிலிம்ஸ் போல இல்லாமல் மிருகங்களுக்கு உரிய சர்க்கஸ் குணங்கள் இயல்பாகக் கையாளப்பட்டிருந்தன. அரங்க அமைப்புகளும் பிரம்மாண்டமாக இருந்தன. பாடல் காட்சிகள் முற்றிலும் வித்தியாசமாகப் படமாக்கப் பட்டிருந்தன.
வழக்கமான ராமண்ணாவுக்கே உரித்தான பிரம்மாண்டங்கள், கமர்ஷியல் அயிட்டங்கள் இப்படத்தில் இடம் பெற்று இருந்தன. (முக்கியமாக 'முத்தமோ... மோகமோ' பாடல் காட்சி அருமையாக பொழுதுபோக்கு அம்சங்களுடன் வித்தியாசமாகப் படமாக்கப்பட்டிருந்தது. இப்பாடலைப் பற்றி தனியாக பிறகு அலசலாம்.)
இப்படத்தின் டைட்டில் காட்சிகள் அப்போதே அசத்தலான கார்ட்டூன் கைவரிசைகளில் உள்ளத்தை உற்சாகம் கொள்ள வைக்கும்.
இந்தப் படத்தின் வண்ணமயமாக்கலையும் மறக்க முடியாது. மனத்தைக் கவரும் வண்ண ரம்மியம். (ஒரு புதிய பறவை, அன்பே வா போல)
வழக்கமான எம்ஜியார் அவர்களின் படங்களிலிருந்து சற்று மாறுபட்ட ஒரு படம். சரி! பாடலுக்கு வருவோம்.
இப்படத்தில் ஹோட்டல் ஒன்றில் கொலையாளி யார் என்று கண்டுபிடிக்க எம்ஜிஆர், சரோஜாதேவி,சந்திரபாபு மூவரும் புதுமையான உடையில் ஆடும் புதுமையான நடனம்.
இப்பாடலை இன்றைய ஸ்பெஷலாக நான் தேர்ந்தெடுத்ததற்கு காரணங்கள் உண்டு.
அதில் முக்கியமான காரணம் வித்தியாசம். வித்தியாசம். வித்தியாசம்.
வித்தியாசம் 1
பொதுவாக மக்கள் திலகம் அவர்களின் நடனக் காட்சிகளில் இருக்கும் வழக்கமான மேனரிசம் முழுமையாக இப்பாடல் முழுவதும் அவரிடத்தில் இருக்கவே இருக்காது. நடன அசைவுகள் மிக வித்தியாசமான முறையில் அமைக்கப்பட்டிருக்கும். எம்.ஜி.ஆர் அவர்களின் பாடலைப் பார்ப்பது போலவே தோன்றாது. வேறு யாரோ வித்தியாசமான நடிகரை பார்ப்பது போல் தோன்றும்.
அலட்டிகொள்ளாத லூஸான கைகால்கள் அசைவுகளில் மூவருமே நன்றாகச் செய்திருப்பார்கள். எம்.ஜி.ஆர் அவர்களும் ஹீராலால், தங்கப்பன் மாஸ்டர் ஆட்டுவித்தபடி நன்றாகவே ஆடியிருப்பார். சந்திரபாபு, சரோஜாதேவி கேட்கவே வேண்டாம். அம்மணி பொம்மை போல கைகால்களை ஆட்டி படுஅலட்சியமாக ஆடி தூள் கிளப்புவார்.
வித்தியாசம் 2
இன்னொரு வித்தியாசம். பெரும்பாலும் தனக்கு வரும் பாடல்களை தன் சொந்தக் குரலிலேயே பாடும் சந்திரபாபுவுக்கு இப்பாடலில் தாஸேட்டன் (நன்றி முரளி சார்) அதாங்க... நம்ம ஜேசுதாஸ் சார் குரல் கொடுத்து பாடியிருப்பார். மிக மிருதுவான மயக்கும் மதுரக் குரல். ஆனால் பாபுவுக்கு பொருந்தவில்லை. (அது செம வாலாயிற்றே!)
வித்தியாசம் 3
மூவரும் மிக அழகாக பேலன்ஸ் செய்து ஆடுவார்கள். கிட்டத்தட்ட சர்க்கஸ் நாகரீகக் கோமாளிகள் போன்ற தோற்றம் கொண்டு. தலையில் கவிழ்த்து வைக்கப்பட்ட வித்தியாச விக். பாபு முன்னாலும் அவருக்குப் பின்னால் அபிநய நங்கையும், அவருக்குப் பின்னால் எம்ஜிஆர் அவர்களும் ஆடும் போது சந்திரபாபு நன்றாக உடலை வளைத்து பின்னல் இருப்பவர்களின் அசைவுகளை அழகாக அட்ஜஸ்ட் செய்து காட்டுவார். இரண்டாவது சரணத்தில் ஒருவரையொருவர் பார்த்தும் பார்க்காமலும் ஆடும் ஸ்டெப்கள் ரொம்ப சந்தோஷத்தைக் கொடுக்கும்.
வித்தியாசங்களை மீறிய இன்னொரு விஷயம்
ராட்சஸி. அடேயப்பா! குரலை உயர்த்தாமல், உச்சஸ்தாயிக்கு செல்லாமல், மெல்லினத்தை வல்லினமாக உச்சரிக்காமல் ஒரே ஸ்டைலில் சீராக தெளிந்த நீரோட்டம் போல எதைப் பற்றியும் கவலைப்படாமல் இவர் பாடும் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை போங்கள். அதுவும் 'நெஞ்சம் மயங்கும் இன்பம்' வார்த்தைகளை அவர் ஆரம்பிக்கும்போது நெ..ஞ்சம் என்று 'நெ' வை சற்றே இழுத்து உச்சரிப்பாரே! இன்பமோ இன்பம். யாரங்கே! எங்கள் ராட்சஸிக்கு திருஷ்ட்டி சுற்றி போடுங்கள்.
https://i1.ytimg.com/vi/AVafGJkn0lE/mqdefault.jpg
இப்போது கூட நான் என்னைக் கிள்ளிப் பார்த்துக் கொள்வதுண்டு இது மக்கள் திலகம் நடித்த பாடல்தானா என்று. பாடலின் இடையிடையே வரும் சதன் கோஷ்டியினரின் கோரஸ் இனிமையோ இனிமை. 'சுகம் எதிலே' என்று வரும் போதெல்லாம் 'ஹ ஹ ஹா' என்று எங்கேயோ கேட்பது போல குரல்கள் ஒலிப்பது படு இனிமை. பாடலின் ஆரம்பத்தில் ஒலிக்கும் கோரஸ் ஜாலியான மூடுக்கு நம்மைக் கொண்டு வரும். பாடலின் பின்னணியில் ஹோட்டல் அரங்கில் 'கோகோ-கோலா' குளிர்பான விளம்பரத்தைப் பார்க்கலாம்.
இந்தப் பாட்டுக்கு முழு கிரெடிட்டும் நடன இயக்குனர் ஹீராலாலையும், அவர் உதவியாளர் தங்கப்பன் மாஸ்டரையும் சாரும். அவர்களுக்கு நம் மனமார்ந்த பாராட்டுக்கள்.
'மெல்லிசை மன்னர்' துள்ளிசை மன்னராக சும்மா புகுந்து விளையாடி விட்டார் இந்தப் பாட்டில். அதுவும் காதுகளுக்குள்ளே இன்பத்தேனைப் பாய்ச்சும் கிடார் இசையை அவர் தரும் சுகமே அலாதிதான்.
நடனம், இசை,பாடல், நடிகர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒத்துழைத்தால் எப்பேற்பட்ட பாடல் கிடைக்கும் என்பதற்கு இப்பாடல் ஒரு சாட்சி
இதில் வருத்தப்படவேண்டிய இன்னொரு கேள்வியும் எழுகிறது. அருமையான இந்தப் பாடல் முழுமையாக எல்லோராலும் ரசிக்கப் பட்டிருக்கிறதா என்ற கேள்விதான் அது. ஆனால் பதில்....
இன்னொன்று இது 'மனதை மயக்கும் மதுரகானங்கள்' என்ற ஒரு பொதுத் திரி. இதில் அனைத்து நடிகர்களின் படங்களின் பாடல்கள் அலசப்படுகின்றன. இதில் இவர் ஒஸ்தி அவர் கம்மி என்ற பேச்சுக்கே இடமில்லை. சிலர் நினைப்பது போல் ஒருவர் சார்புடைய திரியும் அல்ல இது.
அதற்கு உதாரணமாகவே இந்தப் பாடல் அலசல்.
எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்த பாடல் காட்சி ஒன்றை முதல் முதலாக அலசியுள்ளேன். அவர் வித்தியாசமாக நடித்த பாடல் காட்சிகளை நாம் தொடர்ந்து அலசலாம்.
மக்கள் திலகம் கொஞ்சம் அதிகமாகவே வேலை வாங்கி விட்டார்.:)
http://www.youtube.com/watch?feature...&v=CQYfRS6U1nQ
தொடர்ந்து எல்லோருடைய ஆதரவை நாடும்
உங்களின் வாசுதேவன்.
நன்றி!
VASU SIR
இனிய நண்பர் வாசு சார்
மலைக்க வைத்தது உங்களின் உழைப்பு . என்ன ஒரு விரிவான அலசல் . 48 ஆண்டுகள் முன் வந்த மக்கள் திலகத்தின் பறக்கும் பாவை படத்தில் இடம் பெற்ற ''சுகம் எதிலே'' பாடலின் முழு தாக்கத்தைஉங்கள் பதிவு மூலம் படித்ததில் மிக்க ஆனந்தம் .தொடருங்கள் ....
.
http://i59.tinypic.com/if649s.jpg
25/06/2014 - காலை வணக்கம்
வாசு சார்
ஒரு குடும்பத்தின் கதையில் உள்ள இன்னொரு பாடலையும் நினவு கூர்ந்து விட்டீர்கள் .
உண்மையில் நேற்று இரவு இரண்டு நினைவுகள் ஊசலாடின .
ஒன்று நம் திரியில் மக்கள் திலகத்தின் பாடல்கள் அலசப்படவில்லை .
இரண்டாவது முத்துராமன் ஜோதி லக்ஷ்மி
ஜோடியின் ஸ்ரீநிவாஸ் குரலில் வரும்
"உன் அழகை கண்டு கொண்டால் பெண்களுக்கே ஆசை வரும்
பெண்களுக்கே ஆசை வந்தால் என் நிலைமை என்ன செய்வேன் "
பாடலை நினைத்து கொண்டு தூங்கினேன் .
இங்கு வந்து பார்த்தல்
நீங்கள் பறக்கும் பாவையை மிக அழகாக மக்கள் திலகத்தின் ரசிகர்களை விட ஒரு படி மேலாக திறனாய்வு செய்து உள்ளீர்கள்
அதே போல் வேந்தர் சார் அவர்களும் பூவும் போட்டும் திரைபடத்தில் உள்ள நல்லதொரு அரிய் பாடலை பற்றி கூறி உள்ளார்
"நின்றால் கோயில் சிலை அழகு
நிமிர்ந்தால் ஆயிரம் நடை அழகு
நடந்தால் அன்னத்தின் நடை அழகு
நாடகமாடும் இடை அழகு
அழகில் இது புதுவிதமே
இறைவனின் ரகசியமே
இறைவனின் ரகசியமே
கண்ணதாசனின் என்ன ஒரு அழகு வரிகள்
காலை வணக்கம் கிருஷ்ணா சார்!
உங்களை காணாமல் இப்போதெல்லாம் பொழுது விடிவதில்லை.
முரளி சார்
கண்ணதாசனின் பல்வேறு பாடல்களை நினைவு கூர்ந்து உள்ளீர்கள்
அதுவும் இரவு 12 மணி அளவில்
நேற்று இரவு எல்லா சேனல்களுமே கண்ணதாசனின் புகழ் பாடி கொண்டு இருந்தன. (நான் பார்த்த -வசந்த்,மெகா,ஜெயா மக்ஸ்,லைப், முரசு )
"நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை "
//இதில் ஒருவர் தாளமாம்
ஒருவர் ராகமாம்
இருவர் ஊடலே பாடலாம் // முரளி சார் அழகிய மீள் பதிவு..கண்ணதாசனை ப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம்..இன்றும் சொல்லுவேன்..
ராகவேந்தர் சார்.. பூவும் பொட்டும் இந்தப் பாடல் நான் கேட்டிராத ஒன்று நன்றி..
வாசு சார்..பறக்கும் பாவை..சுகம் எதிலே நினைவிலில்லை.. நினைவு படுத்தியமைக்கு நன்றி..
வாசு சார்
எனக்கும் அப்படி தான்
கிழக்கு வெளுத்ததம்மா
கீழ்வானம் சிவந்தம்மா
வாசுவின் இடுகை கண்டு
கிருஷ்ணா மனம் மலர்ந்ததம்மா
கிருஷ்ணா சார்,
வசந்தம் வந்தால் கொடிகளிலே
மலரும் மலர்கள் ஆயிரமே
மலரும் மலர்கள் ஆயி(ழ:))ரமும்
மங்கையின் மலர் போல் ஆவதில்லை
மலர் பறிக்கும் நேரமிதே
பொழுது சென்றால் வாடிவிடும்
பொழுது சென்றால் வாடிவிடும்
வரிகள் கொல்லுகின்றன.
http://i1.ytimg.com/vi/QJY4qKmH5xw/hqdefault.jpg
பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரியில் சாரி பூவும் பொட்டும் படத்தில் ஜோதிலஷ்மி என்ன ஒரு ஸ்லிம். சாமுத்ரிகா லட்சணம் முழுதும் நிறைந்தவராமே இவர்!
//நின்றால் கோயில் சிலை அழகு
நிமிர்ந்தால் ஆயிரம் நடை அழகு
நடந்தால் அன்னத்தின் நடை அழகு
நாடகமாடும் இடை அழகு // நல்ல வரி தான்...ஆனா ப்ளாக் அண்ட் ஒயிட்ல ஒல்லி முருங்கைக்காய் ஜோதிலட்சுமிக்கு முத்துராமன் பாடற பாட்டுன்னு நினைவு..ம்ம் அப்புறம் என்ன ஆகும் இடி மழை இளமை தனிமை..:) ஆள விடுங்க சாமி..கொஞ்சம் வேலை பார்க்கறேன்..
//சாமுத்ரிகா லட்சணம் முழுதும் நிறைந்தவராமே இவர்!/ அப்படியா..ம்ம் எனக்குத் தெரியாதே..
கொஞ்சம் வேலை பார்க்கறேன்னுட்டு இப்பதானே சொன்னீங்க...:)
கிருஷ்ணா சார், சின்னக் கண்ணன் சார்
ஒரு வேண்டுகோள். 'எண்ணம் போலக் கண்ணன் வந்தானை' எனக்குத் தந்து விடுங்கள். இன்றைய ஸ்பெஷல் தொடருக்காக சேர்த்து விட்டேன்.
நாகேஷ் பாடும் சோகம் (கிடாரை வைத்தபடியே)
முதல் என்பது தொடக்கம்
முடிவென்பது அடக்கம்
விடை என்பது விளக்கம்
விதி என்பது என்ன
நாகேஷ் கொஞ்சம் ஓவரா செய்யராறோன்னு நினைக்கத் தோணும்.
ஆனால் அருமையான தத்துவம்.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=5Ckf4DXoSEM
வாசு சார்
ரொம்ப குறும்பு ஆனால் கரும்பு எல்லோரும் விரும்பு(ம்)
( பூவும் பொட்டும் ஆயிரம் )
நீங்கள் நடிப்பு சுடர் பற்றிய நினவு கூறல் ஒரு அருமையான நகைச்சுவை
ரெம்ப ரப்பர்
இவரோட இன்னொரு பாட்டு நினைவிற்கு வருகிறது சார்
தரிசனம் 1969
பாடகர் திலகம் கண்ணிய நாயகி குரல்களில்
"கல்யாணமாம் கல்யாணம் 60ஆம் கல்யாணம் "
ஈஸ்வரி பாடகர் திலகம் குரல்களில்
இது மாலை நேரத்து மயக்கம்
புது மாலை போல் உடல் மணக்கும்
இதழ் மேலே இதழ் மூடி
அந்த இன்பம் தேடுது உனக்கும்
பாடகர் திலகத்தின் சிரிப்பு
நடிப்பு சுடரின் நடிப்பு
இது கால தேவனின் கலக்கம்
இதை காதல் என்பது வழக்கம்
ஒரு ஆணும் ஒரு பெண்ணும்
பெற போகும் துன்பத்தின் துவக்கம்
ஈஸ்வரி குரலில் ஒரு விரக தாபம் நல்ல நோட் பண்ணலாம் சார்
பனியும் நிலவும் பொழியும் நேரம்
மடியில் சாய்ந்தால் என்ன
பசும்பாலை போலே மேனி எங்கும்
பழகி பார்த்தல் என்ன