Veerapandiya kattabomman ..covai sivaji fans: http://youtu.be/UtRolHzvcLY
Printable View
Veerapandiya kattabomman ..covai sivaji fans: http://youtu.be/UtRolHzvcLY
Veerapandiya Kattabomman 'Conquered' Land of Pyramids
http://www.newindianexpress.com/citi...cle2987210.ece
dear murali, please post madurai celeb pictures. madurai celebrations should easily beat other district celebrations!!!??
regards.
Ayyo Paavam.....! Adhu illai....Idhu illai...Adhuvum illai....Idhuvum illai......
Verum 350 poster Mattume Ottappattadhu...idhellaam oru vilambaramaaa.....Aanaal VPKB kko miga periya vilambaramaaga 225 poster ottappattadhu...Digital undu, neenda ideiveli undu....Evvalavu Periya Vilambaram...!
Vetrigaramaaga Pulambal Thodangivittadhu !!!!!!...Innum nirayya varum...kaathiruppom !!!
பெரியோர் கூட்டத்தில் சேர
வந்திருக்கிற நான்...
எறும்பு போல சிறியவன்.
எறும்புக்கு இங்கே என்ன வேலை என்கிற கேள்வி
எல்லோர்க்கும் எழலாம்.
இதயவேந்தர் சிவாஜி என்கிற
மகாகலைஞரை,மாமனிதரைப்
பற்றி நல்லோரெல்லாம்
இனிக்க,இனிக்கப் பேசும் இடமல்லவா இது?
இனிப்பு சிந்திய இடம் நோக்கிய
இந்த எறும்பின் வருகை
வியப்பில்லையே..!?
பதினாறாம் திரியில் பண்பாளர் நடிகர் திலகமெனும் ஒளிச்சுடர் ஏற்றியிருக்கிற திரு.சிவாஜி செந்தில் அவர்களுக்கும்,
அன்புடன் என் படைப்புகளுக்கு
வழிகாட்டி வரும் அய்யா.திரு.ராகவேந்திரா அவர்களுக்கும்,
என் முயற்சிகளைக் கூட
படைப்புகளென்று அங்கீகரித்து
என்னை ஊக்குவித்து வளர்க்கும் அய்யா திரு.முரளி ஸ்ரீநிவாஸ் அவர்களுக்கும்..
எல்லோருக்கும்...
எனது நன்றி கலந்த
முதல் வணக்கம்.
-ஆதவன் ரவி-
Dinamani Part-2
http://media.dinamani.com/2015/08/19...60/veera_6.jpg
http://media.dinamani.com/2015/08/19...al/veera_4.jpg
கு.மா.பாலசுப்ரமணியம் பாடல்கள் எழுத, ஜி.ராமநாதன் இசையில் அத்தனையும் சூப்பர் ஹிட். சிவாஜியின் ஜோடியாக முதலும் கடைசியுமாக எஸ்.வரலட்சுமி நடித்தார். சொந்தக்குரலில் அவர் பாடிய ‘சிங்காரக் கண்ணே...’ இன்றைக்கும் தேன் வார்க்கும்.
சக்தி கிருஷ்ணசாமியின் புகழ்பெற்ற கட்டபொம்மன் வசனம், கொலம்பியா ரெக்கார்டுகளில் ஆறு செட்களாக வெளியாகி பரபரப்பாக விற்பனை ஆனது.
*
கட்டபொம்மனை நம் கண் முன் நிறுத்திய வி.சி.கணேசனின் மனக்கூட்டிலிருந்து பாய்ந்து வரும் வார்த்தை அருவி உங்களுக்காக -
‘கம்பளத்தார் கூத்தில் கட்டபொம்மனைப் பார்த்துவிட்டு, என்றாவது ஒருநாள் கட்டபொம்மனாக நடிப்போம் என்ற நம்பிக்கையில், நான் அநாதை என்று சொல்லிக்கொண்டு நாடகக் கம்பெனியில் போய்ச் சேர்ந்தேன். ஆகவே, கட்டபொம்மனை நான் இறந்தாலும் மறக்கமாட்டேன்.
கட்டபொம்மன் நாடக, திரைப்பட நினைவுகளெல்லாம் என் மனத்தில் பசுமரத்து ஆணிபோல் பதிந்துள்ளது. ஒருமுறை மூதறிஞர் ராஜாஜி, கட்டபொம்மன் நாடகத்தைப் பார்த்துவிட்டு, இடைவேளையின்போது மயங்கிக் கீழே விழுந்துவிட்டார்.
நான் உடனே அவர் அருகே ஓடிச்சென்று, என்னவென்று கேட்டேன். அதற்கு அவர், ‘ஒன்றுமில்லை, கவலைப்படாதே! ஸ்ட்ராங்கா ஒரு கப் காபி கொண்டு வா’ என்றார். கொடுத்தேன், குடித்தார். ‘நாடகத்தை நடத்துங்கோ’ என்றார். கட்டபொம்மனை முழுவதுமாகப் பார்த்து ரசித்துவிட்டு,
‘சிவாஜி, கட்டபொம்மனாக நன்றாக நடிக்கிறான். நாட்டுக்குத் தேவையான நல்ல கருத்துகளை இந்த நாடகம் மூலம் எடுத்துக் கூறுகின்றான். இதையெல்லாம் ஜீரணிப்பதற்கு உங்களுக்குத் திராணி இருக்கிறதா...?’ என்றார். அதை என்னால் மறக்கவே முடியாது.
வீரபாண்டிய கட்டபொம்மன் கதையில் வெள்ளையத்தேவன் என்றொரு ரோல் உள்ளது. அதில் முதலில் எஸ்.எஸ்.ராஜேந்திரன் நடிப்பதாக இருந்தது.
கட்டபொம்மன் தெலுங்கன்; மருது சகோதரர்கள் தமிழர்கள் என்று பேதம் காட்டி, ‘சிவகெங்கைச் சீமை’ படம் ஆரம்பமானதாக அப்போது பேசிக்கொண்டார்கள். ஆகவே, கட்டபொம்பனில் நடிக்க முடியாது என்று எஸ்.எஸ்.ஆர். கூறிவிட்டார்.
உடனே நான் ஒரு யோசனை செய்தேன். நடிகை சாவித்ரி அப்போது நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்தார். அவர்களிடம் சென்று,
‘ஜெமினி கணேசனை இந்தப் படத்தில் நடிக்க என்னுடன் அனுப்பு. ஒரு அண்ணனுக்கு தங்கை ஏதாவது உதவி செய்ய வேண்டுமென்றால், இதுபோன்ற நேரத்தில்தான் செய்ய வேண்டும்’ என்று சொன்னேன்.
சாவித்ரி எனக்குத் தங்கைபோல். தங்கமான மனசு! அப்போது பேறுகால நேரமாக இருந்தாலும்கூட, அதைப் பெரிதாகக் கருதாமல், தன் கணவன் ஜெமினி கணேசனை என்னுடன் அனுப்பிவைத்தார்கள்.
1959, மே 16-ல் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ வெளியானது. நான் ஏழு வயதில் கண்ட கட்டபொம்மன் கனவு, என்னுடைய முப்பது வயதில் பூர்த்தியானது.
கட்டபொம்மனை ஆசிய-ஆப்பிரிக்க திரைப்பட விருதுக்காக இந்திய அரசு தேர்வு செய்தது. அதிலும், சில முக்கியமான ஆட்கள் நுழைந்து, ‘போட்டியில் கட்டபொம்மன் கலந்துகொள்ளக்கூடாது’ என்று தடுக்க முயற்சி செய்திருக்கிறார்கள். வேறு ஒரு படத்தையும் நகல் எடுத்து அனுப்பினார்கள். ஆனால், கட்டபொம்மன் மட்டுமே தகுதி உடையது என்று அதனையே அனுப்பிவைக்குமாறு சர்க்கார் கூறிவிட்டது.
அந்த விழாவுக்காக நான், பி.ஆர்.பந்துலு, பத்மினி ஆகியோர் எகிப்து தலைநகர் கெய்ரோவுக்குச் சென்றோம். கட்டபொம்மன் திரையிடப்பட்டது.
‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்துக்கு பெஸ்ட் ஹீரோ, பெஸ்ட் மியூசிக் டைரக்டர், பெஸ்ட் டான்ஸர், பெஸ்ட் ஸ்டோரி அவார்டுகள் கிடைத்தன.
என்னை மேடைக்கு அழைத்தார்கள். எழுந்து சென்றேன். படத்தில் கட்டபொம்மனைப் பார்த்து, நான் ஆறடி அல்லது ஏழடி இருப்பேன் என்று நினைத்திருந்தார்கள். ஆனால் நான் ஐந்தடிதான் இருந்தேன்.
நான் மேடைக்குப் போனவுடன் எல்லோரும் எழுந்து நின்று ஐந்து நிமிடம் தொடர்ந்து கை தட்டினார்கள். எனக்கு அப்போது திடீரென்று மயக்கமே வந்துவிட்டது. கீழே விழ இருந்தேன். பக்கத்தில் நின்ற பத்மினி என்னைப் பிடித்துக்கொண்டார்.
அதிகக் குளிராக இருந்ததால், குளொஸ் கோட் அணிந்திருந்தேன். அதையும் மீறி பக்கெட்டிலிருந்து தண்ணீர் ஊற்றுவதுபோல் உடம்பெல்லாம் வியர்த்து வழிந்தது.
அவ்வளவு இன்ப அதிர்ச்சி! அத்தனை பெரிய பெருமை கிடைக்குமென்று நான் ஒரு போதும் நினைத்தது கிடையாது. எவ்வளவு ஆர்ட்டிஸ்டுகள் இருக்கிறார்கள். அவர்களில் எனக்கு பெஸ்ட் ஆர்ட்டிஸ்ட் அவார்ட் கிடைத்ததென்பது ஆண்டவன் அருளல்லவா? இப்பெருமை எல்லாம் என் குருவைத்தான் சேரும்.
விருது வழங்கும் விழாவில், எகிப்து அதிபர் நாசர் கலந்துகொள்ளவில்லை. சிரியா போயிருந்தார். விழா முடிந்ததும், நாசர் அவர்களின் வீட்டுக்குப் போனேன். நாசரின் மனைவியைச் சந்தித்தேன்.
‘அவர் கையால் விருது கொடுப்பதற்கு அவகாசம் இல்லை. நாசர் அவசர அவசரமாக சிரியா போய்விட்டார். அதிபரின் சார்பாக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ என்றார் அம்மையார்.
‘மன்னிப்பு எதற்கு அம்மா. இந்தியாவுக்கு மிஸ்டர் நாசர் வந்தாரென்றால், என்னுடைய விருந்தாளியாகக் கொஞ்ச நேரமாவது இருக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். அதை மட்டும் அவரிடம் கூறி நிறைவேற்றி வையுங்கள்’ என்றேன்.
இறைவன் செயலால், எகிப்து அதிபர் நாசர் இந்தியாவுக்கு வந்தார். உடனே நான் நேருஜிக்குக் கடிதம் எழுதினேன். ‘மிஸ்டர் நாசர் சென்னை வரும்போது சிறிது நேரம் என்னுடனும், என் குடும்பத்துடனும் விருந்தாளியாகக் கலந்துகொள்ள வேண்டும்’ என்று வேண்டினேன்.
சென்னையில் சில்ரன் தியேட்டர் (கலைவாணர் அரங்கம்) முழுவதும் அழகாக அலங்காரம் செய்தோம். மகாத்மா காந்தியின் ஃபோட்டோக்களை ஒட்டினோம். ஒரு ஃபர்லாங் தூரம் ரெட் கார்பெட் போட்டோம். மூன்றரை லட்ச ரூபாய் செலவில் வெள்ளியில் ஒரு ஷீல்டை உருவாக்கினோம்.
சிதம்பரம் நடராஜர் சிலைக்கு இருபுறமும் எகிப்து நாட்டு பிரமிட் வடிவமும், தஞ்சாவூர் கோபுரத்தின் எழில் உருவமும், அவற்றின் இரு பக்கத்திலும் ஒரு யானை மற்றும் ஒட்டகச் சிற்பமும் வைத்தோம். ஆங்கிலத்தில் திருக்குறள் மற்றும் டெல்லியில் இருந்து ஒரு மவுல்வியை வரவழைத்து, அவர் எழுதித் தந்த அரபு மொழி வாசகங்களும் பொறிக்கப்பட்ட தங்கத் தகட்டையும் ஷீல்டில் பதித்து, நாசருக்குப் பரிசாக வழங்கினேன்.
அரசு அதிகாரிகள் இரண்டு மணி நேரம் ஒதுக்கி, நாசரை என்னுடன் விருந்தினராக அனுப்பிவைத்தனர். ஆனால் நாசர், என்னுடன் மூன்றரை மணி நேரம் இருந்தார். வீரபாண்டிய கட்டபொம்மனை கவுரவித்ததற்காக என் சார்பிலும், நம் நாட்டின் சார்பிலும் அவருக்கு நன்றியைத் தெரிவித்தோம்.’
*
ஆசிய-ஆப்பிரிக்கப் படவிழாவுக்கு, பந்துலு தலைமையேற்று தன் சொந்த செலவில் நடிகர் திலகம் - பத்மினி ஆகியோரை அழைத்துச் சென்றார். பரிசு பெற்றுத் திரும்பிய சிவாஜி கணேசனுக்கு, 1960, மார்ச் 12-ல் சென்னை விமான நிலையத்தில் மாபெரும் கோலாகல வரவேற்பை வழங்கியது கலை உலகம்.
வெளிநாட்டில் விருது பெற்றுத் திரும்பிய முதல் தமிழ்ப்படமான கட்டபொம்மனுக்கு, நமது டெல்லி சர்க்கார் வழங்கியது வெறும் நற்சான்றிதழ் பத்திரம்! அந்த ஆண்டுக்கான வெள்ளிப் பதக்கம், சிவாஜி கணேசனின் ‘பாகப்பிரிவினை’ படத்துக்குக் கிடைத்தது.
கயத்தாறில் கணேசன்!
கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட பகுதி கயத்தாறு. அங்கு, 1971 ஜூலையில், எங்கிருந்து பார்த்தாலும் தெரியுமாறு, மிக உயர்ந்த ஒரு பீடத்தில், கட்டபொம்மனுக்கு மிகப் பிரம்மாண்ட சிலை ஒன்றை அமைத்தார் நடிகர் திலகம். அதற்காக, தன் சொந்தப் பணத்தில் அங்கு 47 சென்ட் நிலம் வாங்கினார்.
சிலைத் திறப்பு விழா, நீலம் சஞ்சீவ ரெட்டி தலைமையில் நடைபெற்றது. கட்டபொம்மனின் சிலையை காமராஜர் திறந்துவைத்தார். எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.ஆர். போன்று ஓரிருவர் தவிர, ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகும் கயத்தாறில் கூடி, கட்டபொம்மனின் பெருமை பேசியது.
1999, அக்டோபர் 16-ல், கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டதன் 200-வது ஆண்டு நினைவு புகழாஞ்சலி விழா, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்தது. அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி தலைமையில் கட்டபொம்மன் நினைவு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. கட்டபொம்மன் தபால் தலை வெளிவரக் காரணமாக இருந்த வை.கோ. அதனைப் பெற்றுக்கொண்டார்.
அவ்விழாவில், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார் சிவாஜி கணேசன். அவர் பேசியதிலிருந்து -
‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ என்ற மாபெரும் வீரன் தூக்கிலிடப்பட்ட இடம், தற்போது எனது சொத்தாகும். அந்த நிலத்தை என் நண்பராகிய கலைஞரிடம் கொடுக்கிறேன். அவர், தமிழக அரசு மூலம் அதைச் செம்மைப்படுத்தி, அதில் வருடந்தோறும் விழா நடத்த வேண்டும் என்று பணிவாகக் கேட்கிறேன்’.
தமிழக முதல்வர், தன் உரையில் -
‘இங்கே நம்முடைய செவாலியர் சிவாஜி விடுத்த வேண்டுகோளை, அருமைச் சகோதரரின் அன்புக் கட்டளையாக ஏற்றுக்கொண்டு, இன்றைக்கு இந்த விழாவை அரசின் சார்பில் நடத்திக்கொண்டிருக்கிறோம். கயத்தாறிலே சிவாஜியால் வைக்கப்பட்ட கட்டபொம்மன் சிலை இருக்கின்ற அந்த இடத்தைச் சுற்றியுள்ள நிலப்பகுதியை அரசாங்கத்திடம் ஒப்படைக்கிறேன் என்று தந்தார். பெற்றுக்கொண்டேன்.
வறண்டு காட்சி தருகின்ற அந்த இடத்தில் சிவாஜி எழுப்பியிருக்கின்ற, அந்த நீண்டு உயர்ந்த கம்பத்தின் உச்சியில் அமைந்திருக்கின்ற கட்டபொம்மன் சிலைக்கு மேலும் அழகு ஊட்டுகின்ற வகையில், அவர் தந்துள்ள அந்த இடத்தில், ஒரு அழகான பூஞ்சோலை அமைக்கப்படும் என்பதை நான் இங்கே தெரிவித்துக்கொள்கிறேன்’.
*
பத்மினி பிக்சர்ஸின் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ உள்ளிட்ட அநேக படைப்புகளின் நெகடிவ் உரிமையைக்கூட பந்துலு தன் வசம் வைத்திருக்கவில்லை. பிரம்மாண்டத் தயாரிப்புகளுக்கு ஆகும் செலவினங்களுக்காக, அவற்றையும் சேர்த்தே விற்றுவிட்டார். கட்டபொம்மனின் ஒரிஜினல் நெகடிவ் சேதமாகிப் போனது.
பின்னர், பூனா திரைப்படக் கல்லூரியின் ஆவணக் காப்பகத்தில் இருந்த கட்டபொம்மனின் ஹிந்தி டப்பிங் பிரின்ட்டில் இருந்து (ஒலி நீக்கிய) டூப் நெகடிவ் போட்டு, இங்கிருந்த தமிழ்ப் படத்தின் நெகடிவ்வில் இருந்து ஒலி சேர்த்தார்கள்.
நாடகமாகவும் சினிமாவாகவும் கட்டபொம்மனை மக்கள் முன் சிவாஜி கணேசன் கொண்டுசெல்லாமல் இருந்திருந்தால், கட்டபொம்முவுக்கு இத்தகைய உலக வெளிச்சம் கிடைத்திருக்குமா என்பது சந்தேகம். மக்களால் நிறைய விடுதலை வீரர்கள் மறக்கப்பட்டதுபோல், கட்டபொம்முவும் காலாவதி ஆகியிருக்கக்கூடும்.
இரு வேறு நூற்றாண்டுகளில் வாழ்ந்து மறைந்த கட்டபொம்மனையும் கணேசனையும் பிரிக்க இயலாதபடி, காலம் அவர்களை ஒரு சேரக் கட்டிப் போட்டுவிட்டது. இருவரின் புகழும் ஒரு கொடியில் இரு மலர்களாக என்றும் இணைந்தே வாசம் வீசும்!
ஒன்று நிஜம்! மற்றது நிழல். நிழலால் நிஜம், கலைக் கரூவூலம் ஆனது.
*
1984, ஆகஸ்டு 15-ல், மறு வெளியீட்டில் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ பல ஊர்களில் வெற்றிகரமாக 50 நாள்களைக் கடந்து ஓடியது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அரசு, கட்டபொம்மனுக்கு குறிப்பிட்ட காலத்துக்கு கேளிக்கை வரியில் இருந்து விலக்கு அளித்தது. பல கோடி மக்கள், மிக மலிவான கட்டணத்தில் கண்டுகளிக்க வழி அமைத்தது.
ஒரு வேண்டுகோள்: மாவீரன் அழகு முத்துக்கோன், மகாகவி பாரதியார், வ.உ.சிதம்பரனார், ம.பொ.சி. என, எத்தனையோ விடுதலைப் போராட்ட வீரர்களுக்குத் தலைநகர் சென்னையில் சிலை அமைந்துள்ளது. ஆனால், முதல் சுதந்தர முழக்கம் செய்த வீரபாண்டிய கட்டபொம்மனுக்குச் சிலை இல்லாதது வியப்பைத் தருகிறது; ஏமாற்றம் அளிக்கிறது.
சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு அருகில், பட்டொளி வீசிப் பறக்கும் நமது தேசியக் கொடியின் நிழலில், வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சிலை அமைத்தல் பொருத்தம். ஒவ்வோர் ஆண்டும் சுதந்தர தின விழாவில், கட்டபொம்மனுக்கு முதல் மாலை அணிவித்து விழாவைத் தொடங்குதல் சிறப்பாகும்.
மாண்புமிகு ஜெயலலிதா அவர்கள், இந்தக் கோரிக்கையைப் பரிசீலித்து நிறைவேற்ற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
ஆதவன் ரவி அவர்களே!
நடிகர்திலகம் புகழ் பரப்பலே உயிர்மூச்சான இத்திரியில் தங்களின் பங்களிப்புக்கள் நிறைந்து அவர் காலடியில் காணிக்கைகளாகிட வாழ்த்தி வரவேற்கிறேன்!
செந்தில்
என் ஆண்டவன் புகழ் பாட வரும்
ஆதவனே வருக! வருக!
எல்லாத் திசைகளிலும் கட்டபொம்மன் ராஜ்ஜியம் கொடி கட்டிப் பறக்கிறது. வெற்றிச் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.
ஆதவன் ரவி அவர்களே
வருக வருக...
ஹரிபாபு மேக்கப்மேன் மகன்...ஷன்முகம் (நடிகர் திலகம் தம்பி) உடன் சிவாஜி பிலிம்ஸ் ஆபிஸ அப்ப அப்ப வருவார்.
அவர் Bengali .Dr Nihar guptha எழுதிய நாடகமோ writer நாவலோ...
சிவாஜி uncle இடம் சொல்ல...
பெரியண்ணண் தயாரிப்பில் எடுக்கபட்டது..
நல்ல கதையோ அல்லது படமோ யார் சொன்னாலும் அதை ஏற்று கொள்ளும் குணம் நடிகர் திலகத்திடம் இருந்தது,
https://scontent-hkg3-1.xx.fbcdn.net...8b&oe=567B7BD1
https://www.facebook.com/photo.php?f...3722207&type=1
காத்திருப்பு
சுகமானது.
முற்றிய இரவுகளில்,
நம்பிக்கையோடு
கண்ணுறங்காது
காத்திருக்கும் மனிதர்களுக்கு
நல்ல விடியல்கள்
கிடைக்கின்றன.
விருப்பத்திற்குரியவள்
சொன்ன இடத்தில்
வெகுநேரம் காத்திருக்கும்
ஆடவனுக்கு
காதலியின் கரிசனம்
கிடைக்கிறது.
நல்லவிதமாய் தேர்வெழுதிக்
காத்திருக்கும் மாணவனுக்கு
மகிழ்வளிக்கும் தேர்ச்சி முடிவு
கிடைக்கிறது.
உண்மை பக்தியுடன்
உருகி அழுது
காத்திருக்கும் பக்தனுக்கு
கடவுளின் கருணை
கிடைக்கிறது.
அலுப்பு,சலிப்பின்றி
அல்லும் பகலும்
உழைத்துக் காத்திருப்பவனுக்கு
அமோகமாய்
வெற்றி கிடைக்கிறது.
காத்திருப்பு சுகமானது.
-------------------------------
நெஞ்சத் திரையில்
எப்போதும் ஓடும்
வீரபாண்டிய கட்டபொம்மனை
வெள்ளித்திரையில் காண
நாங்கள் ஆவலோடு
காத்துக் கொண்டிருந்தோம்.
இத்தனை நாட்கள்
நாங்கள் செய்த
காத்திருப்பு தவத்திற்கு..
இதோ..
மூன்று மணி நேரத்தில்
எங்களுக்கு
மோட்சமே
கிடைக்கிறது.
காத்திருப்பு சுகமானது.
-ஆதவன் ரவி-
மாவீரன் சிவாஜியின் வசனம் கேளுங்கள்!!.
https://scontent-hkg3-1.xx.fbcdn.net...f8&oe=56818EE7
சிவாஜி தாழ்ந்த ஜாதி! அரசியலே அறியாதவன்!
யார்? தானும் நாடும் ஒன்றெனக் கண்டு
தன்னையே தந்த மன்னன் சிவாஜி தாழ்ந்த ஜாதியா?
மன்னர் குலத்தில் பிறக்காதவன்,
பரம்பரை உரிமை இல்லாதவன்,
மானம் காக்கும் குடியானவன்,
மகுடம் தாங்க முடியாதா?
தார்தாரியார் தந்த புரவியில் அமர்ந்து
ஆர்த்தெழுந்த சிவாஜியைக் கண்டு
நாட்டுக்குடைய நல்லவனென்றும்
போர்ப்பாட்டு முழக்கும் மன்னவனென்றும்
ஆரத்தியெடுத்த மக்களேங்கே?
ஓரத்தில் நின்று வெற்றி வரட்டும்
அதன் சுகத்தை அனுபவிப்போம் என்று
காத்திருந்த இந்த ஆணவக்காரர்கள் எங்கே?
உறையிருந்த வாளெடுத்து
ஒவ்வொரு முறையும், மராட்டியம்
என்றே முழங்கி இரையெடுக்கத்
துடித்த வேங்கை போல்
எங்கே பகைவர் எங்கே பகைவர்
என்று தேடி கறை படியாத என்
அன்னை நாட்டை காப்பேன்! காப்பேன்!
என சூளுரைத்து இந்த நாடு என் சொந்த நாடு
. இந்த மக்கள் என் சொந்த மக்கள்,
உயிரினும் இனிய என் மக்களுக்காக
ஓடினேன். பகைவரைத் தேடினேன்.
வாள் கொண்டு சாடினேன். வெற்றியை நாடினேன்
. பகைத் தேடி வெல்ல மட்டும் உரிமை உண்டாம்
. முடி சூட்டிக் கொள்ள மட்டும் தடை செய்வாராம்.
அரசியலை நான் அறியாதவனா? ஹ…
அரசு வித்தைகள் புரியாதவனா? ஹ… ஹ…
எவனோ வந்தவன் சொன்ன வாய்ப்புரை கேட்டு
நொந்து போக நான் நோயாளி அல்ல!
என்னை விட்டொருவன் இந்த தரணியாளும் தகுதியை அடைந்துவிட்டானா?
ஏமாந்த மக்களிடம் ஏற்றம் கொண்டு
நாமேதான் நாடொன்று தலைதூக்கித்
திரியும் அந்த புல்லுருவிகள் எனது
முடியைத் தடுக்கிறார்களா அல்லது
தங்கள் முடிவைத் தேடுகிறார்களா?
thanks: https://www.facebook.com/photo.php?f...6316014&type=1
இந்த புகைப்படம் பற்றி ஏதாவது தகவல்கள் :
http://i39.photobucket.com/albums/e1...psnrvsrh3u.jpg
மீண்டும் சிவாஜி தாசன்!
கடந்த சில மாதங்களாக இந்த திரியில் பங்களிப்பு ஏதும் செய்யாமல் வெறும் பார்வையாளனாக இருந்த என்னிடம் இப்போது ஏன் நீங்கள் எதுவும் எழுதுவதில்லை என்று திரு. ராகவேந்தர் சார், திரு. முரளி சார், திரு. நெய்வேலி வாசுதேவன் சார் மற்றும் இந்த திரியின் 16ம் பாகத்தின் துவக்கத்தில் வாழ்த்து சொல்ல வந்தபோது திரு. சிவாஜி செந்தில் சார் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க நான் மீண்டும் தொடர்ந்து எழுத வேண்டும் என்கிற எண்ணம் தோன்றியிருக்கிறது. மேலும் கடந்த ஞாயிறு அன்று சாந்தி திரையரங்கில் மாலைக் காட்சி திரு. முரளி சார், திரு.நெய்வேலி வாசுதேவன் சார் மற்றும் அவரது மகன் ஆகியோரோடு அமர்ந்து ரசித்தது ஒரு புது உத்வேகத்தை தந்துள்ளது. இனிவரும் காலங்களில் என்னுடைய பங்களிப்பு சிறப்புடையதாக இருக்கும் என நம்புகிறேன்.
நட்புடன்
சிவாஜிதாசன்
கண்களில்
பக்தியும், பண்பும் நீந்த,
கந்தக் கடவுளுக்கு முன்
கைகூப்பி நிற்கிற
கம்பீரத்தை..
மக்களின் குறை கேட்க
ஓட்டமும், நடையுமாய்
விரைந்தோடும் எழிலை..
தம்பி மகள்
வாள் சுழற்றும்
அழகை ரசிக்கையில்,
வாளோடு வாளாகச்
சுழலும் அந்தக் கண்களை..
திருடனைப் பிடித்து
விட்டால்
அவன் குடும்பம் என்னாகும்?
என குழந்தை வினவ,
அந்த அக்கறையை வியக்கும்
அய்யாவின் பாவனையை..
சிறு தொகையாவது
வரியாகச் செலுத்தக் கோரும்
ஆங்கில அதிகாரியிடம்,
மறுத்து அவர்
நியாயம் உரைக்கும்
தோரணையை..
வேறு வேடத்தில் வந்த
எட்டப்பனைப் புரிந்து கொண்டு
மடக்கும் வீராவேசத்தை..
அவனைப் புரிந்து
கொண்டாலும், காட்டிக்
கொள்ளாமல்
கிண்டலாகச்சொல்லும்
'அதாவது'களை..
பாம்பிடமிருந்து
காதலர்களைக் காப்பாற்றி,
"நான்கு நாட்கள்
பொறுக்க முடியுமா?"
எனக் கேட்டுச் சிரிக்கும்
தெய்வீகச் சிரிப்பை..
வந்து பேட்டி காணும்படி
கர்வமாய் w.c.ஜாக்ஸன் எழுதிய
கடிதம்
வாசிக்கப்படும் போது,
"பார்த்தீர்களா?"என்பது போல்
அய்யா முகம் கேட்கும்
கேள்வியை..
அளிக்கப்படாத ஆசனத்தை
தனதாக்கிக் கொள்கிற
ஆண்மையை..
அமர்ந்த ஆசனத்தின்
கைப்பிடியில் இடக்கை ஊன்றி
விரல் நுனிகளைத்
தொட்டு உருட்டும் அழகை..
கொள்ளையையும்,
கொலையையும்
தடுக்க வேண்டிய மந்திரியே
கொள்ளைக்கும்,கொலைக்கும்
காரணமானது கண்டு
வெகுண்டு,
ஆத்திரமும், ஆவேசமும்,
அர்த்தமுள்ள
உள்ளப் பொருமலுமாய்
அவரை வாங்கு, வாங்கென்று
வாங்குவதை..
முருகக் கடவுளை
வணங்கி நிற்கையில்,
எட்டப்பர் உளவு சொல்லி,
அன்றிரவே ஆங்கிலேயர்
படையெடுத்து வரப் போகும்
தகவல் வர,
உடல் திருகி, விழி உருட்டி,
கை பிசைந்து
அடி வயிற்றிலிருந்து
சொல்லும்
வெற்றி வேல்..வீரவேலை..
வெள்ளையத் தேவனும்,
ஊமைத்துரையும்
அவரவர் மனைவியரிடம்
பக்கம்,பக்கமாய்ப் பேசும்
வசனத்திலிருக்கும் வீரத்தை,
உருவிய குறுவாளை
மீண்டும் உறைக்குள்ளிடும்
ஒரே விஷயத்தில்
காட்டுகிற திறமையை..
நாடு விட்டு
வந்திருக்கலாகாது
எனக் காட்டும்
குற்ற உணர்வுக்கான
குரல் கரகரப்பை..
பிடிக்க ஆளனுப்பிய
புதுக்கோட்டை மன்னருக்கு
எள்ளலுடன் போடும்
"ராஜ..ராஜ.."-வை..
கொக்கரிக்கும்
இரும்புத் தலையருக்கு,
கோபத் தமிழால் கொடுக்கும்
வசனச் சாட்டையடிகளை..
அணிவகுத்து நின்று
அழுது கதறும்
மனிதப் பெருங்கூட்டத்தின்
நடுவே,
ஒரு சிங்கமென
நடந்து செல்லும்
பேரழகை..
நான் போவது
வருத்தமெனினும்
நாடு காக்க
ஒரு கூட்டம் வருமென்று,
தூக்குக் கயிறை
முத்தமிட்டுத் தரும்
கடைசி நம்பிக்கையை..
விழிகளிளெல்லாம்..
மனங்களிலெல்லாம்..
நீக்கமற நிறைந்திருக்கிற
நம் நடிகர் திலகத்தின்,
"வீரபாண்டிய கட்டபொம்மன்"
எனும்
ஐம்பத்தாறு ஆண்டுகளுக்குப்
பிறகு புதிய தொழில் நுட்பம்
அணிந்து வந்த
புரட்சிக் காவியத்தை..
பார்த்தேன்.
பார்த்தீர்கள்.
பார்ப்போம்..!
பார்ப்போம்..!
பார்ப்போம்..!
-ஆதவன் ரவி-
அன்பு நண்பர் சிவாஜிதாசன் அவர்களே
நமது அன்னை இல்லத்துக்குள் நாம் நுழைய எந்த பார்மாலிடியும் தேவையில்லை.
வாடி உதிர்கின்ற இலைகளாக இன்றி துளிர்த்து வளர்கின்ற கிளைகளாக உங்கள் பதிவுகள் அமைந்து நடிகர்திலகத்தின் புகழாலமரத்தின் விழுதுகளாக வேரூன்ற வேண்டும்! ! வருக வருக!!
அன்புடன் செந்தில்
அன்பு சிவாஜி தாசன் சார்,
மிக்க நன்றி!
தாங்கள் மீண்டும் புது உத்வேகத்துடன் திரியில் பங்களிப்பது குறித்து அறிவித்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. தங்களுடன் அமர்ந்து நம் தெய்வத்தை சாந்தியில் தரிசித்தது மறக்க முடியாதது.
இன்னும் அடிக்கடி வர முடியாத நண்பர்கள் அனைவரும் கண்டிப்பாக திரியில் சற்று சிரமம் பாராமல் பங்கு கொண்டார்களானால் நமது திரி இன்னும் எங்கோ சென்று விடும்.
எனவே உறுப்பினராக இருக்கும் அனைத்து நண்பர்களும் தினம் ஒரு மணி நேரமாவது நேரம் ஒதுக்கி திரியில் பங்கு கொள்ள வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
அதுவும் இந்த நேரம் கட்டபொம்மன் வெற்றி மகிழ்ச்சியின் பொன்னான தருணம். இந்த நேரம் அதை எல்லோரும் பகிர்ந்து கொண்டால் அதை விட சந்தோஷம் ஏது?
வருடம் ஒருமுறை அல்லது இருமுறை அதாவது பிறந்த தினம், நினைவு தினம் மட்டும் வந்து ஓரிரு வரிகளில் பதிவுகள் இட்டுச் செல்வது மாற வேண்டும். இதற்காக சிரமப்பட்டு உறுப்பினராக ஆக வேண்டியிருக்கவே வேண்டாமே! பல பேர் இன்னும் உறுப்பினராக நெடுநாள் வெயிட் செய்து கொண்டிருக்கிறார்கள். உறுப்பினர் ஆவதே சிரமம் ஆகும் பட்சத்தில் உறுப்பினரகளாக இருப்பவர்கள் இனி தினம் ஒரு பதிவாவது இட வேண்டும் என்று முடிவெடுக்கலாமே!
எல்லோருக்குமே வேலைகள் உள்ளது. எங்களுக்கும் உள்ளது. ஆனால் எல்லோரும் பங்கு கொண்டால் எப்படி இருக்கும் நமது திரி என்று கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.
எனவே அனைத்து உறுப்பினர்களும் பார்வையாளர்களாய் இருப்பதை கொஞ்சம் தவிர்த்து முனைப்பாக இங்கு பங்களிக்க விழையுங்கள் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
ஆதவன் ரவியா ?
அதிரடி கவியா ?!
மாதவம் செய்திட்டோம்
நடிகர்திலகத்தின் புகழ் விழுதுகள்
துளிர்விடத் தொடங்கிவிட்டன
அரிமா செந்தில்
சுந்தராஜன்
சிவாஜி தாசன்
ஆதவன் ரவி .......
கட்டபொம்மரின் வெற்றிப் பவனி
வாசு சாரின் மீள் விசுவரூபம்
துளிர்களின் மூலம் வெற்றிக்கனி
நெஞ்சம் நிறைந்து விட்டது
வாழ்த்துக்கள் வரவேற்புக்கள்
அன்புடன் செந்தில்
அலைச்சல்..
அசதி..
பெருமூச்சில் அனல்..
பெருஞ்சோர்வு..
அத்தனையையும்
ஓட ஓட விரட்டிற்று..
உங்கள்
குரல் வழியே பாய்ந்த
"வெற்றிவேல்..வீரவேல்.."
திரையரங்கத்திற்குள்ளேதான்
போனோம்.
படம் முடிந்த பின்..
பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து
வெளியே வருகிறோம்.
குழந்தை மீனா
கேட்கிறாள்..
"ஏம்ப்பா..ஒரு மாதிரி
இருக்கே..
சண்டையிலே தோத்துட்டியா?
அவசரமாய் மறுத்து விட்டுச்
சொல்கிறீர்கள் ...
"இல்லையம்மா..
நான் ஜெயிக்கிறேன்..!"
உண்மைதான்..
56 வருடங்களுக்குப் பிறகும்
நீங்கள்தான்
ஜெயிக்கிறீர்கள்.
BO news: VPKB tomorrow 4.00pm show at PVR: Amba Skywalk, Chennai Normal is already SOLD OUT.
http://in.bookmyshow.com/buytickets/...CH-MT/20150826
சிங்க தமிழன் வசூலில் சாதனை படைக்கிறார். ஆதவன் ரவி அவர்கள் சொல்வது போல் 56 வருடங்கள் கழித்தும் அவரே வசூல் மன்னராக திகழ்கிறார். A gem of accomplishment from one and only NT.
அன்புமிக்க சிவாஜி தாசன் அவர்களே
தங்கள் மீள்வரவிற்கு நம் அனைவரின் சார்பில் நல்வரவு.
இதன் மூலம் பெருகட்டும் நம் உறவு..
வருக வருக
ஒரு சிங்கம்,
குதிரை மீது
எறி வருவதை
எல்லோரும்
வியப்புடன்
பார்க்கிறார்கள்.
ஆதவன் ரவி அவர்களே
வருக வருக...
கற்றும் கொடுக்கும் இனம்
தமிழனம்.
நடிப்பென்றால்
இதுதானென்று,
கற்றுக் கொக்கும்
தமிழனத்திற்கே
கற்றுக் கொடுத்தவர்...
நீங்களன்றோ..?
அதிரடி கவி, ஆதவன் ரவி அவர்களுக்கு, வாழ்த்துக்கள்!
அழகான பெண்ணை கல்யாணம் செய்து கொண்ட எல்லா ஆண்களும் மட்டுமின்றி நடிகர் திலகம் அவர்களை ரசிக்கின்ற ஒவ்வொருவரும் கவிஞர்கள் தான் என்பதை நிருபித்திருக்கின்றீர்கள்.
நட்புடன்
சிவாஜிதாசன்
கடந்த அக்டோபர் மாதம் 5ம் தேதி lic முகவர்களுக்கு பயிற்சி அளிக்கும் ஒரு பயிற்சி மையத்தின் சார்பாக நடைபெற்ற பட்டிமன்றத்தில் நான் கலந்து கொண்டு உரையாடினேன். அதில் நடிகர்திலகம் அவர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற சில சம்பவங்களை நினைவு கூர்ந்துள்ளேன். அதனுடைய கானொளி விரைவில் உங்கள் பார்வைக்கு...
நட்புடன்,
சிவஜிதாசன்
Welcome Mr Athavan Ravi Sir to this wonderful & glorious thread of ACTING GOD as well as EMPEROR OF BOX OFFICE OF
WORLD CINEMA.
தமிழன் கடமை
http://www.apnewstimes.com/wp-conten...e-Photos-5.jpg
ஒரு விஷயம்.
'வீரபாண்டியக் கட்டபொம்மன்' காவியம் சிவாஜி ரசிகர்களுக்கு மட்டும் சொந்தமல்ல. அது ஒரு உலகப் பொதுமறை போல. திருக்குறள் போல. அவர் இவர் என்றில்லாமல் எல்லோரும் சொந்தம் கொண்டாடக் கூடிய உரிமை உடையது. நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் போற்றி வைத்துக் கொண்டாடப்படுவது. கொண்டாடப்படவும் வேண்டியது.
நடிகர் திலகம் ரசிகளுக்கென்று பல படங்கள் உள்ளன. தெய்வ மகன், ராஜா, திரிசூலம் இப்படிப் பல. இவைகளும் பொது மக்களின் ஏகோபித்த பாராட்டுதல்களைப் பெற்றாலும் சிவாஜி ரசிகன் என்பவன் இந்தப் படங்களின் மேல் அதிக உரிமை எடுத்துக் கொள்வான். சொந்தமும் கொண்டாடுவான்.
கட்டபொம்மன், கர்ணன், கப்பலோட்டிய தமிழன் படங்களெல்லாம் அப்படி அல்ல. சிவாஜி ரசிகர்களையும் மீறி உலகமே கொண்டாடப்பட வேண்டிய உன்னதங்கள். கொண்டாடிய உன்னதங்களும் கூட.
உதாரணத்திற்கு நடிகர் திலகத்தின் படம் ஒன்றையே எடுத்துக் கொள்வோம். 'திரிசூலம்' நடிகர் திலகம் நடித்த படங்களில் வசூலில் முதன்மையானது. கட்டபொம்மனை விடவும் கூட. இது அனைவரும் அறிந்தது. இப்போது ஒரே நேரத்தில் கட்டபொம்மனும், திரிசூலமும் மறுவெளியீடு காண்கிறது என்று வைத்துக் கொள்வோம். ஒரு குடும்பத்தின் பொதுவான தந்தையாக ஒரு குடும்பத் தலைவன் தன் மனைவி குழந்தைகளை முதலில் கட்டபொம்மன் படத்திற்குதான் அழைத்துச் செல்வான். பிறகு சிவாஜி ரசிகனாக தான் மட்டுமோ அல்லது குடும்பத்தோடு சேர்ந்தோ திரிசூலம் பார்ப்பான். வசூலில் கொடிகட்டியது என்பதற்காக திரிசூலம் கட்டபொம்மனுக்கு இணையாகி விடாது.
வசூல், ஓட்டம் இதையெல்லாம் தாண்டி ஒரு தமிழனால், அவன் சிந்திய ரத்தத்தால் நம் தமிழ்ப் பட உலகை உலக அளவில் தலை நிமிரச் செய்த ஒரு படம். உலகையே நம்மை திரும்பிப் பார்க்க வைத்த படம். இப்படி ஒரு நடிகன் ஒருவன் இருக்கிறானா என்று அனைத்து நாடுகளும் வியந்து வியந்து பார்த்த படம். விருதுகளை தமிழனுக்கு அள்ளித் தந்த படம். அந்த உன்னத நடிகனை 'இங்கு வந்து எங்கள் நாட்டுக்கு பெருமை சேர்' என்று அவரை அழைத்து அழைத்து மரியாதை அளிக்க வைத்த படம். இது யாருக்குப் பெருமை? தமிழராய்ப் பிறந்த நம் அனைவருக்கும்தானே! இந்தியனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும்தானே!
ஜாதி, மத, இன, மொழி, ரசிக வேறுபாடுகளையெல்லாம் வேரறுத்து நம் பெருமையை அந்நியர் உணர வழிவகை செய்த படமல்லவா? இந்தப் படத்தின் வெற்றியில் ஒவ்வொரு தமிழனும், ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் பெருமையடைய வேண்டுமல்லவா? நம் தேச பக்தியை மீண்டும் நாம் வெளிப்படுத்த நமக்குக் கிடைத்துள்ள அருமையான சந்தர்ப்பமல்லவா?
பிள்ளைகளிடம் கட்டபொம்மன் கதையைக் காட்டி, பாடுபட்டு எப்படியெல்லாம் சுதந்திரம் பெற்றோம் என்று சுதந்திர உணர்வை அவர்களுக்கு ஊட்ட வேண்டிய படமல்லவா? ஒரு அருமையான வாய்ப்பு அல்லவா?
தாய், தந்தை, மனைவி மக்கள் என்று குடும்பத்துடன் சென்று தலை நிமிர்ந்து, நெளியாமல், வளையாமல் பார்த்து, ஆணி அடித்தாற் போன்று அமர்ந்து கட்டபொம்மனோடு வாழ்ந்து கண்ணீரோடு திரும்பும் கௌரவத்தை இது போன்ற ஒரு சில காவியங்கள் மட்டும்தானே அளிக்க முடியும்? இன்றும் கூட குடுமபம் குடும்பமாக அரங்குகளில் கட்டபொம்மனைக் காண்கிறார்கள் என்றால் அது யாருக்குப் பெருமை? கட்டபொம்மனை சிறுமைப்படுத்துவதால் அது யாருக்கு இழிவு? தமிழர்களாகிய நமக்கேதானே? வசூல், இத்தனை நாட்கள் ஓடியதா... கூட்டம் கூடியதா... இல்லையா என்றெல்லாம் விவாதிப்பதற்கு அப்பாற்பட்ட ஒரு அற்புதக் காவியமல்லவா இது! பேதங்கள் மறந்து ஒவ்வொருவரும் அந்த வெள்ளைய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து உயிர் துறந்த வீரனின் பெருமையை பறை சாற்ற வேண்டிய நேரமல்லவா? பாகுபாடுகளுக்கும், வேறுபாடுகளுக்கும் இடம் தராமல், பழி உணர்ச்சிகளுக்கு ஆளாகாமல் நீ பெரியவன்..நான் பெரியவன் என்ற அற்ப உணர்ச்சிகளுக்கு ஆளாகாமல் அனைவரும் உண்மையான தமிழர்களாக கட்டபொம்மனை கண்டு அவனை நினைவு கூர்வது ஒன்றே நாம் தமிழன் என்பதை உணர்த்தும். பறை சாற்றும். அதுவே கட்டபொம்மனுக்கு நாம் செலுத்தும் அஞ்சலியும், கடமையும் ஆகும்.
சிவாஜியின் புகழ் பரப்பவோ அல்லது இந்தப் படம் வசூலில் எல்லாப் படங்களையும் முந்த வேண்டும் என்ற சொற்ப சந்தோஷங்களுக்காகவோ இந்தப் பதிவை நான் இட வில்லை. உலகம் முழுதும் என்றோ மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்று விட்ட காவியம்தான். இப்போது ஒவ்வொரு தமிழனும் இந்தப் படத்திற்கு அளிக்க வேண்டிய பங்கைப் பற்றித்தான், முக்கியத்துவத்தைப் பற்றிதான் நட்பு ரீதியாக நினைவுபடுத்துகிறேன். அதுவே அன்றி வேறு எந்த நோக்கமும் என் பதிவில் இல்லை.
இப்போதைய இளையதலைமுறைகளுக்கு நம் கட்டபொம்மனைப் பற்றி தெரிந்து கொள்ள அவர்களுக்கு ஏற்றார் போல டிஜிட்டல் மெருகேற்றப்பட்டு புதுப் பொலிவுடன் வந்திருப்பதால் பெரியவர்களாகிய நமக்கு இன்னொரு அருமையான சந்தர்ப்பம். பழைய படம்தானே என்று அவர்கள் சலிக்கக் கூடும். ஆனால் நம் ஒவ்வொருவரின் கடமையும் என்னவென்றால் அவர்களை அழைத்து சென்று அந்த மாவீரனின் வீர வரலாற்றை அவர்களின் நெஞ்சில் பதிய வைப்பதே ஆகும். அவர்கள் மனதில் சிவாஜி என்ற நடிகன் பதிவதைவிட கட்டபொம்மன் என்ற கருஞ்சிறுத்தைதான் பதிவான். அவர்கள் மனதில் சுதந்திர வேட்கையை ஊட்டுவான். அறிவை ஊட்டுவான். வீரத்தை ஊட்டுவான். நல்ல தமிழை ஊட்டுவான். தன்மானத்தை ஊட்டுவான். அடிமைத்தனத்தை விரட்டுவான்.
அப்படிப்பட்ட பெருமை தரக் கூடிய விஷயத்தை நாம் தவற விடலாமா?
எனவே அனைவரும் மனமாச்சரியங்கள் மறந்து அந்த மாபெரும் வீரனை குடும்பத்துடன் சென்று கண்டு தரிசித்து வாருங்கள். ஒரு தகப்பனாக பிள்ளைகளுக்குத் தன் இன்னொரு கடமையைச் செய்யுங்கள். பெருமை தானாக உங்களை வந்து அடையும்.
இது ஒன்றே அனைவரிடமும் நான் வேண்டுவது.
தம்பியின் ஒற்றனை
அவசரப்பட்டு
தவறாகக் கருதி
சாட்டையால் அடித்து..
பின் தனது தவறுணர்ந்து
அவனிடமிருந்தே
சாட்டையடி தண்டனை
பெற்றுக் கொள்ளத்
தயாராகும் போது..
அந்த நல்ல ஒற்றன்,
மாறுவேடத்திலிருப்பது
மன்னன் என்பதறியாமல்
மாளாத ஆத்திரத்துடன்
மன்னனின்
மடி பிடித்து இழுக்கிறான்.
---------
பேட்டி காணப்
போன இடத்தில்,
வீரனின் விழி நெருப்பில்
பொசுக்கப்பட்ட அவமானத்தில்,
ஜாக்ஸன் துரையும்
மடி மீது
கை வைத்திழுக்கிறான்.
----------
தவறுணர்ந்து
தனக்கான தண்டனையாக
அந்த முதல் மடியிழுப்பைப்
புன்னகையோடு
ஏற்றுக் கொள்ளும்
நடிப்பின் வெளிப்பாடு...
அதிகார போதையும்,
ஆணவமும் கூடிப் போய்
ஆற்றல் மிக்க வீரனை
அவமதிக்கும் நோக்கத்தில்
செய்யப்படும்
இரண்டாம் மடியிழுப்புக்கு
வெடிக்கும் கோபத்தின்
வெளிப்பாடு..
எங்கள் நடிகர் திலகம் போல்
இரண்டையும்
வித்தியாசப்படுத்த
எவரால் இயலும்..?