http://www.jeyamohan.in/wp-content/u...5/04/thumb.jpg
வாசு சார்
அருமை நண்பர் சுந்தரபாண்டியனுக்கும் பேராசிரியருக்கும் உளமார்ந்த நன்றி.
இந்த பொக்கிஷத்தை வெளிக்காட்டிய தங்களுக்கும் ஸ்பெஷல் தாங்க்ஸ்
Printable View
http://www.jeyamohan.in/wp-content/u...5/04/thumb.jpg
வாசு சார்
அருமை நண்பர் சுந்தரபாண்டியனுக்கும் பேராசிரியருக்கும் உளமார்ந்த நன்றி.
இந்த பொக்கிஷத்தை வெளிக்காட்டிய தங்களுக்கும் ஸ்பெஷல் தாங்க்ஸ்
நீலாவுக்கு நெறஞ்ச மனசு
நம்ம வாசுவுக்கும் தான்..
ஒரிஜினாலிட்டி... பாட்டில் கையில் தட்டை வைத்திருக்கும் அந்த பாட்டி..இரண்டழுத்து இனிஷியலில் இரண்டாம் எழுத்து டி...
Ahaa... வாசுஜி... ஃபார் தி சாங் ஆஃப் வண்டி.....தாங்க்ஸ் எ லாட்டி... ( அடச்.. இந்த தங்கவேலு பாட்டைக் கேட்டதிலிருந்து எல்லாத்துக்கும் ஒரு டி சேர்ந்து வருதே... ஓகே ஒகே...)
அது கண்டிப்பா தாராபுரம்தான் (அப்போ காதுக்குள் கேட்ட குரல் கரீட்டுதான் )..
இன்னும் ஒரே ஒரு சந்தேகம்.. அது அன்னை சொன்ன சொல்தானா ... இல்லாட்டி ஒரு வேளை பொய் சொல்லாதேவாக இருக்குமா ? ( ஏனென்றால் பாடியவர் டி.எம்.எஸ் என தப்பாக குறிப்பிட்டிருப்பது போல படமும் மாறி இருக்க சான்ஸ் இருக்கே ).
இதுக்கு யாரு புரூஃப் கொடுப்பாங்க... ? ஆண்டவனே நீ இருந்தா சொல்லு !
Launched
www.mellisaimannar.in
website for MSV ... in Tamizh
http://i872.photobucket.com/albums/a...psygy11jjh.jpg
மெல்லிசை மன்னருக்கு இசை அஞ்சலி நிகழ்ச்சி மேற்காணும் நிரல்படி நாளை 23.10.2015 மாலை நடைபெற உள்ளது. அழைப்பிதழ் வேண்டுவோர் நமது நண்பர் திரு ரவி.ரங்கசாமி அவர்களை 9962027654 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Raghav ji,
Website super :)
Vaazhthukkal
வாசு சார்
1-g, 4-t பாட்டுக்கும் நினைவூட்டியதற்கும் மீண்டும் பாராட்டுக்களும் நன்றியும்
சின்னக்கண்ணா... While doing a google search, I came across the following posting by yourself:
"சில காலம் அட்லீஸ்ட் ஒருவருடம்கழித்து ஸ்ரீதர் சிவகுமார் ஜெயஸ்ரீயை வைத்து எடுத்தார்.. தலைப்பு யாரோ எழுதியகவிதை.. க்ளைமாக்ஸை மாற்றி டாக்டர் அந்த் க் கணவனிடம் செர்த்து வைப்பதாகச் செய்திருந்தார் என நினைக்கிறேன்..அதனாலேயே அது தோல்வி அடைந்திருக்கும்..(இதையே தழுவி பாக்யராஜ் வீட்ல விசேஷங்க எடுத்தார் பிற்காலத்தில்)
இதில் பலபாடல்கள் இருந்தாலும் தெரிந்தபாடல்.. கேஜே ஜேசுதாஸ் வாணி ஜெயராம்..இசை இளைய ராஜா..
ம்ம் வாசு சார் மற்றவர்கள் அனலைஸ் செய்திருக்க மாட்டார்க்ள் என நினைக்கிறேன்.. நாராயணா காப்பாத்து..
பருவம் கனிந்து வந்த பாவை வருக
புடவை அணிந்து வந்த பூவே வருக..."
Hmmm... "இசை இளைய ராஜா.."! Really??? :) All the songs in யாரோ எழுதிய கவிதை were composed by the famous Bengali musician/singer Ananda Shankar who was the son of renowned dancer Uday Shankar and the nephew of sitar maestro Ravi Shankar.
ராஜா ஜிக்கிக்கு சில பாடல்கள் கொடுத்தார்
அபப்டி ஒரு பாடல் இதோ
https://www.youtube.com/watch?v=ezpM6Hyw4mg
சுபாவின் எதிர்காற்று மலையாளத்தில் அர்த்தம் என்றும் தமிழில் எதிர்காற்று
நல்ல படம்
ராஜாவின் இசை
ராஜா இல்லா ராணி என்று ராணிதான் (மதுரை வானொலி அதிகம் ஒலிபரப்பிய பாடல்)
உமாரமணன் உடன் நெப்போலியன் என்ற அருண்மொழி
https://www.youtube.com/watch?v=dxdIkMIbJEM
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்
(நெடுந்தொடர்)
44
'இன்று முதல் செல்வமிது '
'வீட்டுக்கு ஒரு பிள்ளை'
'ராமன்' பிக்சர்ஸ் ராமண்ணாவின் புதுமைச் சித்திரம் 'வீட்டுக்கு ஒரு பிள்ளை' படத்திலிருந்து பாலாவின் இன்றைய தொடர் பாடலைப் பார்க்கலாம்.
https://antrukandamugam.files.wordpr...pg?w=637&h=366
ஜெயசங்கர், (இருவேடங்களில்) எம்.ஆர்.ஆர்.வாசு, மனோகர், நாகேஷ், சுருளி, சசிகுமார், உஷா நந்தினி, ஜி.வரலஷ்மி, சி.ஐ.டி.சகுந்தலா நடிக்க, இப்படத்திற்கு மூலக்கதை கொட்டாரக்கரா. 1971 ஆம் வருடம் தீபாவளிக்கு நடிகர் திலகத்தின் பாபு, திரு.எம்.ஜி.ஆர் அவர்களின் நீரும் நெருப்பும், கோபாலகிருஷ்ணனின் ஆதி பராசக்தி போன்ற பெரிய படங்களுடன் வெளியாகி நல்ல வெற்றியைப் பெற்ற படம் 'வீட்டுக்கு ஒரு பிள்ளை'.
வசனம் சுப்பு ஆறுமுகம். ஒளிப்பதிவு அமிர்தம். இசை 'மெல்லிசை மன்னர்'
பாடல்கள் கவிஞர். இயக்கம் கனக சண்முகம். டைரக்ஷன் மேற்பார்வை ராமண்ணா.
கதை.
மேல்நாடு சென்று படித்துத் திரும்பும் அதே சமயம் தமிழ்க் கலாச்சாரத்தை மறக்காத, ஏழைகளுக்கு நிலத்தைத் திருப்பிக் கொடுக்க ஆர்வம் காட்டும் பணக்கார ஜமீன் வாரிசு நாயகன் ஜெய், சொத்துக்காக அவரை ஒழித்துக் கட்ட சதித்திட்டம் போடும் வில்லி சித்தி வரலஷ்மி, அவரது அல்லக்கைகள் மானேஜர் வாசு மற்றும் தம்பி என்னத்தே கன்னையா, ஜெய் காதலிக்கும் கிராமத்துக் கிளி உஷா நந்தினி, நல்ல டிரைவர் நாகேஷ், வரலஷ்மியின் நாகாரீக கவர்ச்சி மகள் நாட்டிய சகுந்தலா, அவருக்கு வெளிநாட்டு புகழ் அரங்கேற்ற ஆசை காட்டும் டூப்ளிகேட் வெளிநாட்டு ஏஜண்ட் சசிகுமார், தங்கையின் தாறுமாறு போக்கைக் கண்டு கொதிக்கும் அண்ணன் ஜெய், மானேஜர் வாசுவுடன் கள்ளக்காதல் புரிந்தது ஜெய்க்குத் தெரிந்ததால் அவரை வில்லி வரலஷ்மி டைம்பாம் காரில் வைத்து சாகடிக்க, எதிர்பாராமல் திரும்ப அதே உருவில் வேறொரு ஜெய் வருகை, கெட்ட கும்பலுக்கு அது நாயகன் ஜெய் இல்லை என்று அதிர்ச்சி, மீண்டும் வந்த புது நாயகனைக் கொல்ல சதித்திட்டங்கள், இறுதியில் புதிய பறவை பாணியில் வரலஷ்மி வாயாலேயே அவர்தான் ஜெய்யை பாம் வைத்து கொலை செய்தவர் என்று கக்க வைக்கும் போலீஸ், மாட்டிக் கொண்ட வில்லி மலையிலிருந்து கீழே விழுந்து தற்கொலை, இறுதியில் யாருமே எதிர்பாராத இன்னொரு ஆண்டி கிளைமாக்ஸ் என்று கரம் மசாலா பக்காவாக கலந்து தந்து கலக்கிய படம். வசூலில் வாகை.
கிளைமாக்ஸ் சொல்லியே ஆக வேண்டும். இப்போதைக்கு சப்பென்று இருக்கலாம். அப்போதைக்கு அது சூப்பர்தான்.
அதாவது ஜெய் காருக்கு சித்தி வரலஷ்மி கோஷ்டி டைம் பாம் வைக்க, அது தெரியாமல் காரில் செல்லும் ஜெய்யிடம் வழியில் லிப்ட் கேட்கிறார் டிப்-டாப் மனோகர். லிப்ட் கொடுக்கும் ஜெய்சங்கரிடமே அவர் பொருள்களைக் கொள்ளை அடித்து, அவரை கீழே இறக்கி விட்டுவிட்டு, அவரை அடித்துப் போட்டுவிட்டு காரையும் திருடிச் சென்று விடுகிறார். இப்போது காரில் ஜெய்க்குப் பதிலாக மனோகர். டைம் பாம் வெடித்துக் கார் சிதறி மலையிலிருந்து உருண்டு மனோகர் இறந்துவிட, இறந்தவர் ஜெய் தான் என்று தவறான முடிவெடுத்துவிடுகிறது பின்னால் துரத்தி வந்து கண்காணிக்கும் வரலஷ்மி கும்பல். காரிலிருந்து இறக்கிவிடப்பட்ட ஜெய் போலீசில் புகார் செய்யப் போக, அங்கே நாயகன் ஜெய் உருவத்தை ஒத்த சற்று வயதான சி.ஐ.டி ஆக இன்னொரு ஜெய். போலீஸ் ஜெய் ஒரிஜினல் ஜெய்யை தன் பராமரிப்பில் வைத்துவிட்டு, அவராக ஆக மாறி கொலைக்கான காரணகர்த்தாக்களைக் கண்டுபிடிக்க மீண்டும் வில்லி வீட்டுக்குப் போக, அவரையும் கொலை செய்ய வரலஷ்மி திட்டம் போட இறுதியில் அனைத்துத் சதித் திட்ட்டங்களும் பணால். இறுதியில் போலீஸ் ஜெய் எல்லா முடிச்சுக்களையும் அவிழ்க்க ஒரிஜினல் நாயகன் ஜெய் உஷாவுடன் சேர்ந்து படம் பார்த்தவர் அனைவரையும் சந்தோஷமாக வீட்டுக்கு சிரித்த முகத்துடன் அனுப்பி வைக்கிறார்.
கலர்ப் பிள்ளை. அதனால் ஜெய் முதற்கொண்டு அனைவருக்கும் லிப்ஸ்டிக் செக்கச் செவேல்.
அதே போல இன்னொரு சிறப்பம்சம். பாடல்கள். 'வீட்டுக்கு ஒரு பிள்ளை' பாட்டுக்கு ஒரு படம். விஸ்வநாதனின் விஸ்வரூபம். பாடல்கள், பின்னணி இசை என்று பிரம்மாண்டம். டைட்டில் இசை 'ராஜா' போல. (தர தகுர தகுர தகுர தகுத தா..)
சித்தி அனுப்பி வைத்த வில்லன்களுடன் ஜெய், நாகேஷ் டிஷ்யூம் செய்ய, அப்படியே மோதி நிற்கிற ஸ்டில்கள் மத்தியில் டைட்டில் அதம் பறக்கும். லோ டிக்கெட் விசில் சப்தமும்தான். 'பரபர' டைட்டில். இன்றும் ரசிக்க, பரவசமடைய முடிகிறது.
பாட்டுக்கு ஒரு ஈஸ்வரி. (வாசு! காலரைத்தூக்கி விட்டுக் கொள்ளுப்பா!) சும்மா அம்மணி அமளிதுமளி.
சி.ஐ.டி.சகுந்தலா வெளிநாட்டிலிருந்து திரும்பி வரும் அண்ணன் ஜெய்க்கு ஆட்டம் போட்டு பார்ட்டி வைப்பார். அட ராமண்ணா!
'நாகரீகம் வருக! நவநாகரீகம் வருக!'
ஈஸ்வரியின் அதே முத்திரை. 'ஹரே ராம் கிருஷ்ணா ராம்' பஜனையுடன்.
http://s1.dmcdn.net/BN9gc/x240-R6m.jpg
ஜெய் உஷாநந்தினியை வயல்வெளி காடுகளில் துரத்தி விரட்டி 'பாடகர் திலகம்' குரலில் பாடும்,
'நான் போட்ட புள்ளி...ஒரு மாற்றமில்லை...கல்யாணமான கன்னிப் பெண்ணே பொன்னம்மா'
ஜாலியோ ஜாலி கலாய்ப்பு. அமிர்தத்தின் அழகான வெளிப்புறப் படப்பிடிப்பு. அம்சமான பாடல்.
மறுபடி சகுந்தலாவின் மின்னல் வேக ஆட்டம். ராட்சஸி தாண்டவமாடிவிடுவார் சகுந்தலாவை விட. ஆனால் சகுந்தலாவின் மிகக் கடினமான ஸ்டெப்கள் நிஜமாகவே வியப்பைத் தரக் கூடியவை. ஒரு தொலைகாட்சி சேனலில் அவர் சொன்னது.
"இதுவரை நான் ஆடிய ஆட்டங்களிலேயே நான் சிரமப்பட்டு ஆடியது இந்தப் பாடலுக்குத்தான். அவ்வளவு கடினமான நடனம். இப்போதுள்ள கவர்ச்சி ஆட்ட நடிகைகளுக்கு சவால் விடுகிறேன். இது போல ஆடிக் காட்டுங்கள் பார்க்கலாம்"
அவர் சொன்னது உண்மையும் கூட.
என்ன பாடல்? அடடா! என்ன பாட்டு! என்ன டான்ஸ்!
http://s2.dmcdn.net/BNswq/x240--vt.jpg
'பெண்ணென்றால் நானன்றோ!
சொல்லுங்கள் வேறுண்டோ!'
'பாடகியென்றால் நீயன்றோ! இது போலப் பாட வேறுண்டோ!என்று ராட்சஸியைப் பாராட்டாமல் இருக்கவே முடியாது. அதுவும்,
'சொன்னால் புரியும்...சொல்ல என்னால் முடியும்' என்று தெனாவட்டாக ஆணி அறைவாரே! அய்யோ! அமர்க்களம்.
http://i.ytimg.com/vi/qwRZ3o6PLOU/mqdefault.jpg
அடுத்து குழந்தையைக் கொஞ்சுவது போல வீட்டுக்குள் யாருக்கும் தெரியாமல் புகுந்த ஜெய் குழந்தையை ஜானகி குரலில் உஷாநந்தினி கொஞ்சும் பாட்டு.
'ஏண்டா ராஜா என்ன வேணும்
எதைக் கேட்டாலும் அதை நான் தருவேன்
என்ன கண்டு பயந்தாய் சொல்லு ராஜா'
நாடாக் கட்டிலுக்குக் கீழ் நாட்டுக்கட்டை ரேஞ்சிற்கு உஷாநந்தினி பாடும்போது தியேட்டரில் பீடா, டீ ஸ்டால் காத்து வாங்கும். இதுவும் செம லோக்கல் பாட்டு.
ஜெயசங்கரின் பணத்தையெல்லாம் சுருட்டிக் கொண்டு வில்லி வரலஷ்மி வீட்டை விட்டு கிளம்ப அதை வாட்ச் செய்யும் உஷாநந்தினி ஈஸ்வரி குரலில் கிளப்பும்
'ஆட்டக் கடிச்சா மாட்டக் கடிச்சா
ஆளக் கடிச்சா எங்கத்தையம்மா'
பாடல் ஏக ரகளை. அப்போது பட்டி தொட்டியெங்கும் பிரபலம் இந்தப் பாடல். செம நக்கல், நையாண்டிகள் நிறைந்த பாடல். ராட்சஸி தமிழ்நாட்டின் பல ஊர்களில் மேடைக் கச்சேரி செய்யும் போது இந்தப் பாடலை பாடச் சொல்லி மக்கள் விருப்பப்படுவார்கள். அந்த அளவிற்கு ஹிட்டான பாடல்.
ஈஸ்வரியை புகழ் உச்சியில் கொண்டு சென்ற லோ கிளாஸ் பாடல்.
அப்புறம் கிளைமாக்ஸிற்கு முன்னால் ஜெய், நாகேஷ், உஷா நந்தினி வில்லி கோஷ்டியிடம் பேய்கள் கணக்காக ஒகேனக்கல் மலை அருவியில் ஆர்ப்பாட்ட இசையின் பின்னணியில் சண்டையிட்டுப் பாடும்,
'கொண்டுவா நீதி கெட்டவனை நேர்மையற்றவனை கடவுள் முன்னே.
தண்டனை பாதி இங்கு வரும் மீதி அங்கு வரும் விடுவதில்லை'
அமர்க்களமான, படு அமர்க்களமான, இன்னும் அமர்க்களமான பாடல். டி எம்.எஸ், சீர்காழி, ஈஸ்வரி சாறு பிழிந்து விடுவார்கள். 'பென்ஹர்' குதிரை மாதிரி உஷா நந்தினி என்ன ஆட்டம்...என்ன ஓட்டம். (ரவி நாகேஷின் 'அன்று கண்ட முக'த்தின் 'வாடா மாச்சான் வாடா' பாடல் பாணிப் பாடல் இது)
http://i.ytimg.com/vi/XuNvDjyKpLo/hqdefault.jpg
இப்போது அம்சமான பாலாவின் தொடரின் பாட்டு.
தண்ணி போட்டுகிட்டு, மழையில் பனைமட்டையோடு கத்தி பிடித்து, தள்ளாடி தள்ளாடி ஜெயசங்கரை கொலை செய்யச் சுற்றும் ராமண்ணாவின் ஆஸ்தான கண்ணான 'என்னத்தெ'.
மழை 'கொட்டோ கொட்'டென்று கொட்ட, வீராணம் சிமெண்ட் குழாய்களில் ஒயிட் ஜிப்பா அணிந்து ஜெய் சிகப்புப் புடவை, கால்களில் தண்டை, இடுப்பில் ஒட்டியாணம் அணிந்த கிராமத்து கனகாம்பர மங்கை உஷாநந்தினியுடன் செட்டில் உரசி உறவாடும் அருமையான ஜிலுஜிலு குளு குளு காதல் டூயட்.
'இன்று முதல் செல்வமிது
என்னழகு தெய்வமிது
வாழ்வு வந்தது'
பால்வடியும் குரலோனின் பசுமையான, நெஞ்சம் மறக்க முடியாத காதல் கானம். 'கடலலை தாலாட்டும் வேளாங்கண்ணி' போல பாலாவின் குரல் பாடல் முழுதும் ஆரம்பத்திலிருந்தே இதமாக நம்மை இன்பலோகம் இழுக்கும்.
பாலாவுக்கு பொருத்தமாக ஹம்மிங் தேவதை வசந்த வசந்தா. பாலா பாட வேண்டும்...இந்த வசந்த தேவதை ஹம்மிங் தர வேண்டும். காணி நிலம் வேண்டும்...பராசக்தி காணி நிலம் வேண்டும். அங்கு கயிற்றுக் கட்டிலில் இளநீர் அருந்தியபடி இன்பமாக இந்தப் பாடலை மதுரகானங்கள் நண்பர்களுடன் கேட்டு கேட்டு பார்த்து பார்த்து மகிழ வேண்டும். பாலா, வசந்தாவைப் பற்றிப் பேசிப் பேசி மகிழ வேண்டும். நிறைவேறுமா? எண்ணம் நிறைவேறுமா?
பாலா பல்லவி முடித்தவுடன் வசந்தா தரும்,
'லாலாலாலாலா லாலா லாலா
லாலாலாலாலா லாலா லாலா'
ஹம்மிங் லாலா கடை லட்டு.
'எடுத்தேன் நெஞ்சின் பக்கம்
இன்னுமா கண்ணே வெட்கம்'
http://i.ytimg.com/vi/BvACUJth-YQ/hqdefault.jpg
என்று வரிகள் மீண்டும் ஒலிக்கும் போது சிமெண்ட் குழாயில் ஜெய் குழந்தை போல முட்டி போட்டு நகர்ந்து வர, உஷாநந்தினி இரு கைகளையும் சிமெண்ட் குழாயில் முன் வைத்து, தாங்கிப் பிடித்து உடல் வளைத்து, பெண்டாகி ஈரத்துடன் நிற்கும் அந்த போஸ்...சந்நியாசியைக் கூட சம்சாரி ஆக்கிவிடும். சமரசத்துக்கே இடமில்லை.
'கொண்டு வா கொஞ்சும் சொர்க்கம்'
என்று பாலா முடித்ததும்
வசந்தா தரும் அந்த சுகமான,
'யாய்யா யாய்யா யா யாய்யா யாய்யா
யாய்யா யாய்யா யா யாய்யா யாய்யா'
ஹம்மிங்
வார்ரே வாய்யா!
உஷா ஜெய் முதுகு மீது குழாய்க்குள் ஒய்யாரமாக அமர்ந்து...அதே போல் ஜெய் உஷா முதுகு மீது...ஏக ரகளைக் காதல். பாடல் முழுதுமே கட்டுக்கடங்காதக் குதிரையாய்த் திரிகிறார் உஷா நந்தினி. அம்மணியின் உடம்பு கேள்விக்குறி, கமா, ஆச்சர்யக்குறியாக வளைந்து, நெளிந்து, நிமிர்கிறது. பார்ப்பவர்கள் உடலும்தான்.
குழாய்களின் நுழைவுப் பக்கத்தில் மின்னலை உணர்த்துவதற்காக செட்டில் ஆர்க் வெல்டிங் வைப்பார்கள் போலிருக்கிறது. நடுநடுவில் கத்தி காட்டி மிரட்டி ஆள் உயர மரத்துப் பொந்தில் கன்னையா ஒளிந்து கொள்வது...
அவரைப் போல வரும்?... ஆனா வராது.
'பொன்னைத்தான் தெய்வம் என்று
போதை நான் கொண்டேன் அன்று'
என்று ஜெய் உஷாநந்தினியை அலேக்காகத் தூக்கும் போது, அப்போது உஷாநந்தினி ஜெய் தோள்களில் சாய்ந்து குப்பற வளையும் போது அந்த மழைப் பாட்டிலும் நமக்கு 'குப்'பென்று வியர்த்து பின் உடல் சில்லிட்டு விடும்.
அதே போல,
'பொன்னிலே போதை இல்லை
உன்னிடம் கண்டேன் இங்கு'
வரிகள் முடிந்தவுடன்
'ச்சம்ச்சம் ச்சம்ச்சம் ச்சம் ச்சம்ச்சம் ச்சம்ச்சம்
ச்சம்ச்சம் ச்சம்ச்சம் ச்சம் ச்சம்ச்சம் ச்சம்ச்சம்'
என்று வசந்தா பின்னி எடுக்க, அந்த வரிகளின் டியூனுக்குத் தோதாக அங்கிருக்கும் ஆலமரத்தின் விழுதுகளை காதலர்கள் ஊஞ்சல் போலப் பிடித்து தொங்கியபடி ஆடுவது அருமை.
வசந்தா ஹம்மிங் முடித்ததும் பாலா 'ம்ம்ம்ம்'....என்றும் பின் 'ஓஓ...ஹோ' என்று தொடர்வது அருமையிலும் அருமை.
இடையிசை டிரம்பெட்டில் கலக்கும். பல்லவி வரிகளில் கவனித்தால் 'கிளிங் கிளிங்' என்ற மழைத்துளி தெறிப்பது போன்ற ஓசை இடைவிடாது அற்புதமாக ஆங்காங்கே ஒலிக்கும். மழை சிச்சுவேஷனை இசை மழை அப்பட்டமாக அப்படியே நமக்குக் கா(கொ)ட்டும்.
'கைகளால் அத்தான் தன்னை
கைது செய் காதல் பெண்ணே'
எனும் போது தரையில் தவழும் நாயகியின் கால்களைப் பிடித்து, வேகமாக இழுத்து ஜெய் அவரை அணைத்துக் கொள்வது சிலுசிலுப்பு.
சிமெண்ட் பைப்பின் மேலும், ஆலமரத்தின் அடிவேர் சந்து, பொந்துகளிலும் காதல் ஆட்டங்கள் கன்டின்யூ ஆகும். பாம்புகள் ஊர்வது போல சேற்றில் இருவரும் மாறி மாறி ஊர்ந்து வந்து நம்மை கூர்ந்து கவனிக்க வைப்பார்கள்.
கன்னுக்குட்டி போல 'லாலி லாலி லா லாலி லாலி' என்று உஷாநந்தினி முட்டியிட்டு, தலையாட்டியபடி சேற்றில் நகர்ந்து வருவதும் ஜோர். பாடல் முழுவதும் உஷா நந்தினி உற்சாக நந்தினி. மக்கள் கலைஞருடன் மகா நெருக்கம். கவர்ச்சி சற்று எல்லை மீறி இருக்குமே தவிர ஆபாசம் எள்ளளவும் இருக்காது என்பது இப்பாடலின் மிகப் பெரிய வெற்றி. அமிர்தம் ஒரு சிமெண்ட் பைப்பிற்குள் ஏகப்பட்ட வித்தைகளை காமெரா மூலம் செய்து காட்டுவார். திறமை.
இந்த மாதிரிப் பாடல்களில் ஆய்வு எழுதுவது சிரமாக இருக்கிறது. பாலா திறமையை மட்டும் எடுத்து எழுதவும் முடியவில்லை. மற்றவர்களின் திறமைகளை எடுத்துச் சொல்லாமலும் திருப்திப்படவில்லை. எல்லாமே அருமையாய் இருக்கும் போது எதை எழுதுவது? எதை எழுதாமல் விடுவது என்று பெருங்குழப்பம்.
பாலாவின் கேரியரில் கோமேதகப் பாடல். ஒவ்வொரு எழுத்தையும் அனுபவித்துப் பாடியிருப்பார்.
'கொண்டு வா கொஞ்சும் சொர்க்கம்' என்பதில் சொர்க்கத்தை நமக்குக் கொண்டு வந்து காட்டுவார். 'சொர்க்கம்' என்பதை அழுத்தி பேஸ் வாய்ஸில் உச்சரிக்கும் போது மயங்காத மனம் யாவும் மயங்கும். பாடல் முழுதும் அவர் கொஞ்சமும் அலட்டாமல் அலுங்காமல் நலுங்காமல் நூல் பிடித்த மாதிரி அப்படியே வெல்லப் பாகு நீள்வதைப் போல ஒரே சீராக ஸ்ருங்கார ரசம் சொட்ட சொட்டப் பாடியிருப்பார்.
மிக வித்தியாசமான டூயட். பாடலும். வெயிலின் சூட்டிற்கு இதமான தென்றல் போல், மழையின் குளிருக்கு பதமான வெயில் போல உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை சுகம் தரும் அற்புதமான அமிர்தப் பாடல். எங்கயோ நம்மை இனம் புரியாத லெவலுக்கு அழைத்துச் செல்கிறது எப்போது கேட்டாலும் இந்தப் பாடல்.
ஜெயசங்கரின் டூயட்களில் 'என்றும் செல்வம்' இந்தக் காதல் பாடல்.
http://i.ytimg.com/vi/LHIyEd6D0s4/hqdefault.jpg
ம் ஹூம் ம் ஹூம்
ம் ஹூம் ம் ஹூம்
அஆ.........................ஆ
இன்று முதல் செல்வமிது
என்னழகு தெய்வமிது
வாழ்வு வந்தது
மஞ்சளொடு குங்குமமும்
பிஞ்சுமுக சந்திரனும்
காண வந்தது
லாலாலாலாலா லாலா லாலா
லாலாலாலாலா லாலா லாலா
இன்று முதல் செல்வமிது
என்னழகு தெய்வமிது
வாழ்வு வந்தது
மஞ்சளொடு குங்குமமும்
பிஞ்சுமுக சந்திரனும்
காண வந்தது
(அழகான டிரம்பெட் ஓசை)
எடுத்தேன் நெஞ்சின் பக்கம்
இன்னுமா கண்ணே வெட்கம்
ம்ஹூம் ம்ஹூம் வெட்கம்
ம்ஹூம் ம்ஹூம் வெட்கம்
எடுத்தேன் நெஞ்சின் பக்கம்
இன்னுமா கண்ணே வெட்கம்
கொடுத்தேன் கண்ணில் முத்தம்
கொண்டுவா கொஞ்சும் சொர்க்கம்
கொண்டுவா கொஞ்சும் சொர்க்கம்
யாய்யா யாய்யா யா யாய்யா யாய்யா
யாய்யா யாய்யா யா யாய்யா யாய்யா
இன்று முதல் செல்வமிது
என்னழகு தெய்வமிது
வாழ்வு வந்தது
மஞ்சளொடு குங்குமமும்
பிஞ்சுமுக சந்திரனும்
காண வந்தது
பொன்னைத்தான் தெய்வம் என்று
போதை நான் கொண்டேன் அன்று
பொன்னைத்தான் தெய்வம் என்று
போதை நான் கொண்டேன் அன்று
பொன்னிலே போதை இல்லை
உன்னிடம் கண்டேன் இங்கு
உன்னிடம் கண்டேன் இங்கு
ச்சம்ச்சம் ச்சம்ச்சம் ச்சம் ச்சம்ச்சம் ச்சம்ச்சம்
ம்ம்ம்ம்
ச்சம்ச்சம் ச்சம்ச்சம் ச்சம் ச்சம்ச்சம் ச்சம்ச்சம்
ஓஓ......ஹோ
(நடுவில் சந்தூர் இசையும், பின் டிரம்பெட் ஒலியும் இழையும்)
கைகளால் அத்தான் தன்னை
கைது செய் காதல் பெண்ணே
முத்துப் போல் இங்கே மெல்ல
சித்திரம் தந்தால் என்ன
சித்திரம் தந்தால் என்ன
லாலி லாலி லா லாலி லாலி
லாலி லாலி லா லாலி லாலி
இன்று முதல் செல்வமிது
என்னழகு தெய்வமிது
வாழ்வு வந்தது
மஞ்சளொடு குங்குமமும்
பிஞ்சுமுக சந்திரனும்
காண வந்தது
ம் ஹூம் ம் ஹூம்
ம் ஹூம் ம் ஹூம்
ம் ஹூம் ம் ஹூம்
ம் ஹூம் ம் ஹூம்
https://youtu.be/XuNvDjyKpLo
http://sim05.in.com/4f36ccae6019c320...c28ee0ac_m.jpg
ஜி.வரலஷ்மி என்ற பாந்தமான, சாந்தமான, பழைய காலத்து நடிகையை ஜெய்க்கு வில்லி சித்தி ரோல் கொடுத்து, அவரை மது அருந்த வைத்து, இங்கிலீஷ் பேச வைத்து ஒருவழியாக்கியிருப்பார்கள். இதில் மானேஜர் எம்.ஆர்.ஆர்.வாசுவுடன் கள்ள உறவு வேறயாம். மேக்-அப் கொடூரம். வில்லித்தனமும்தான்.
https://antrukandamugam.files.wordpr...pg?w=642&h=364
இந்த நடிகை நடிகர் திலகத்தை வைத்து 'ஹரிச்சந்திரா' என்ற படத்தை நெடுங்காலமாய்த் தயாரித்தார். அவரே சந்திரமதியாகவும் ஹீரோயின் ரோல் செய்தார். இவர்தான் 'வாழ்விலே ஒரு நாள்', 'நான் பெற்ற செல்வம்' போன்ற படங்களில் நடிகர் திலகத்தின் நாயகி. எம்.ஜி.ஆர் அவர்களுடன் 'குலேபகாவலி' படத்தில் ஒரு ஜோடியாக வருவார். ('மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ')
'ஹரிச்சந்திரா' படத்தில் நடிகர் திலகத்துடன் ஜி.வரலட்சுமி
http://d382j8j5g7zlk1.cloudfront.net...arichandra.jpg
'நான் பெற்ற செல்வம்' பட விளம்பரத்தில் ஜி.வரலட்சுமி.
http://directorksomu.com/images/Films/nps_1.jpg
ஹச்சோ ராகதேவன்.. தாங்க்ஸ்..எப்ப்போதோ எழுதினது.. மறந்து தவறாக எழுதிவிட்டேன்..ஷமிக்கணும்.. ஆனந்த சங்கர் உதய் ஷங்கர் மகன், ரவி ஷங்கரின் உறவு என்ற தகவலுக்கு நன்றி.. :) ஆமா எதுக்கு இப்போ யாரோ எழுதிய கவிதை..ம்ம் ஜெயஸ்ரீயைப் பாக்கணும்னு தோணித்தாக்கும் :)
https://youtu.be/OlMBruITiTk
ஹி.ஹி.. நான் பார்க்காத கேட்காத வீடியோ உங்களுக்காக..
ம்ம் வரவர உஷா நந்தினி பாட்டாப் போட்டுக்கிட்டிருக்காங்கப்பா :) இன்று முதல் செல்வமிது பாட் ரொம்பப் பிடிக்கும்..அஸ்யூஸ்வல் வர்ணனை..
//உஷா ஜெய் முதுகு மீது குழாய்க்குள் ஒய்யாரமாக அமர்ந்து...அதே போல் ஜெய் உஷா முதுகு மீது...ஏக ரகளைக் காதல். பாடல் முழுதுமே கட்டுக்கடங்காதக் குதிரையாய்த் திரிகிறார் உஷா நந்தினி. அம்மணியின் உடம்பு கேள்விக்குறி, கமா, ஆச்சர்யக்குறியாக வளைந்து, நெளிந்து, நிமிர்கிறது. பார்ப்பவர்கள் உடலும்தான். // உங்க ரசனை எனக்கு எப்பவும் ஆச்சர்யக் குறி தான் :)
அமிர்தம் ஒரு சிமெண்ட் பைப்பிற்குள் ஏகப்பட்ட வித்தைகளை காமெரா மூலம் செய்து காட்டுவார். திறமை. // :)
இன்னும் இங்கு வந்திருக்கும் நிறைய பாட் நாளைக்காவது கேட்டு எழுதணும்
https://antrukandamugam.files.wordpr...1971.jpg?w=593
'வீட்டுக்கு ஒரு பிள்ளை' படத்தில் ஒரு விறுவிறு காட்சி.
இரண்டாவதாக வந்த டூப் ஜெயசங்கரையும் (சிஐடி) தீர்த்துக்கட்ட வில்லி ஜி. வரலஷ்மி ப்ளான் போடுவார். எம்.ஆர்.ஆர்.வாசு, நாகேஷ்,( நடிப்பார்) 'என்னத்தே' சகிதம் விஷம் கலந்த காப்பியை பிளாஸ்க்கில் ஊற்றி ஜெய் இருக்கும் வீட்டிற்கு எடுத்து வருவார். வீட்டின் மேல் ஏறி, கயிற்றில் சுரடு ஒன்றை மாட்டி, அந்தக் கொக்கியில் பிளாஸ்க்கை வைத்து, ஓட்டைப் பிரித்து மேலிருந்து கீழே இறக்குவார். அங்கே கீழே டேபிளில் இதே கலரில் இன்னொரு பிளாஸ்க் இருக்கும். விஷக் காப்பி உள்ள பிளாஸ்க்கை அந்த இடத்தில் வைத்துவிட்டு ஏற்கனவே அதே கலரில் இருக்கும் பிளாஸ்க்கை அந்தக் கயிற்றின் வழியாகவே எடுத்து விடுவதாக ப்ளான். வரலஷ்மி பிளாஸ்க்கை கயிற்றிலிருந்து விலக்கி கரெக்டாக டேபிளில் வைத்து விடுவார். பக்கத்தில் இருக்கும் பிளாஸ்க்கை கொக்கியில் மாட்ட எத்தனிக்கும் போது டேபிளில் உள்ள போட்டோ ஒன்றில் கயிறு கொக்கி பட்டு கீழே தவறி விழுந்து விடும். உள்ளே ஜெயசங்கர் வேறு அப்போது வந்து விடுவார். இப்போது இரண்டு பிளாஸ் க்குமே மேஜையில் இருக்கும். ஜெய் அதை கவனிக்க மாட்டார். கீழே விழுந்த போட்டாவை சற்று சந்தேகம் கொண்டு பார்த்து விட்டு, பின் அதைத் துடைத்து டேபிளில் மறுபடி வைப்பார் ஜெய். பின் வாஷ் டப் சென்று ஜெய் முகம் கழுவுவார். இதையெல்லாம் மேலே ஓட்டைப் பிரித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் வில்லி வரலஷ்மி இந்த டயத்தில் மறுபடி ட்ரை பண்ணி மேலிருந்து கரெக்டாக விஷமில்லாத காபி உள்ள பிளாஸ்க்கில் கொக்கியில் மாட்டி கயிற்றை மேலே ஜெய் கவனிப்பதற்குள் இழுத்து விடுவார்.
பின் ஜெய்சங்கர் அங்கு அமர்ந்து விஷமுள்ள காபி உள்ள பிளாஸ்க்கை அறியாமல் திறந்து காபி அருந்துவார். இதை மேலே இருந்து பார்க்கும் வில்லி கீழே உள்ள தன் ஆட்களிடம் மேலிருந்து ஜெய்யைப் பார்த்தபடி நேரடி வர்ணனை செய்வார். ('இப்போ குடிக்கிறான்... குடிச்சிட்டான்') விஷக் காபி உள்ளே போனதும் ஜெய் தொண்டையைப் பிடித்துக் கொண்டு துடிப்பார். உயிருக்குப் போராடுவார். அப்படியே மேலே பார்க்கும் போது வரலஷ்மியைக் கவனித்து விடுவார். ஆனால் ஒன்றும் செய்ய முடியாது. மேலே இருந்து வரலஷ்மியும் பயப்படாமல் ஜெய்சங்கரை நேரிடையாக பார்த்து அவர் அவஸ்தைப்படுவதைப் பார்த்து ஆனந்தப்படுவார்.
இந்தக் காட்சி 'பரபர'வென இருக்கும். ஜெய்யிடம் வில்லி மாட்டி விட வேண்டுமே என்ற ஆர்வமும், ஜெய் தப்பிக்க வேண்டுமே என்ற பதைபதைப்பும், எங்கே ஜெய் பிளாஸ்க்கைப் பார்க்காமல் விட்டுவிடுவாரோ என்ற கவலையும், விஷ பிளாஸ்க்கை வைத்துவிட்டு நல்ல பிளாஸ்க்கை வில்லி எடுத்தவுடன் அவள் மீது கோபமும், ஜெய் தெரியாமல் விஷமருந்தியவுடன் அவர் மேல் பச்சாதாபமும், 'உச்' கொட்டும் எண்ணமும் பார்ப்பவர்களுக்கு நிச்சயம் பிறக்கும். எனக்கல்ல.
ஆனால் விறுவிறு சுறுசுறு பதை பதை காட்சிதான்.
//பாலாவுக்கு பொருத்தமாக ஹம்மிங் தேவதை வசந்த வசந்தா. பாலா பாட வேண்டும்...இந்த வசந்த தேவதை ஹம்மிங் தர வேண்டும். காணி நிலம் வேண்டும்...பராசக்தி காணி நிலம் வேண்டும். அங்கு கயிற்றுக் கட்டிலில் இளநீர் அருந்தியபடி இன்பமாக இந்தப் பாடலை மதுரகானங்கள் நண்பர்களுடன் கேட்டு கேட்டு பார்த்து பார்த்து மகிழ வேண்டும். பாலா, வசந்தாவைப் பற்றிப் பேசிப் பேசி மகிழ வேண்டும். நிறைவேறுமா? எண்ணம் நிறைவேறுமா?// தோப்பு மாதிரி இடத்துக்குப் போய் இள நீர் குடிச்சுக்கிட்டே சிடி ப்ளேயர்ல பாட் கேக்கத்தானே முடியும்.. மங்களூர் மடிக்கேரி அந்தப் பக்கம் தான் போய் பார்க்கணும் வின் ட்டர் டயத்துல.. பார்க்கலாம் கால்ம் கனிந்தால் எல்லாமே நடக்கும் வாசு.. :) வீடியோபாக்கணும்னா கொஞ்சம் குட்டி டிவி டிவிடி தான்..கார்ல வைக்கிறது..அத வச்சு த் தான்பார்க்க இயலுமில்லியோ..
வீட்கு ஒரு பிள்ளை சில பல வருடம் முன் பார்த்தது.. மதுரை கல்பனாவில் ரிலீஸ்..ஆனால் அப்போது பார்க்கவில்லை என நினைக்கிறேன்.. அவ்வளவாக நினைவுக்கு வரவில்லை.. ஒரு மாதிரி பனிமூட்டமாக நினைவில்.. பட்..
க்ளைமாக்ஸ் நு பார்த்தா இந்தப் படத்தைப் படிக்கும் போது பிரபு வின் மூடு மந்திரம் நினைவுக்கு வருகிறது..ரேகா ரேகா தான் கொலையாளி என எல்லாரையும் நம்ப வைத்துபின் ட்விஸ்ட் கொடுப்பார்கள்..
மெல்லிசை மன்னரின் புகழ் பாடும் புதிய இணையதளமாம் http://www.mellisaimannar.in/ இணையதளத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ராகவேந்திரன் சார். இணைய தளத்தில் இடம் பெறப் போகும் பல்வேறு இணைப்புகளை ரசிக்க ஆர்வமாய் உள்ளேன். திரை இசைப் பாடல்களை சிறுகுழந்தை கூட ரசிக்கும் அளவிற்கு சாதனைகள் நிகழ்த்திய இசையின் மன்னருக்கு மிகச் சிறந்த அர்ப்பணிப்பு இது. என் மனதார வாழ்த்துகிறேன்.
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி வாசு மற்றும் சி.க. சார்.
தங்கள் ஒவ்வொருவருடைய வாழ்த்தும் ஊக்கமும் உற்சாகமும் தருவதாய் உள்ளன.
தொடர்ந்து தங்களுடைய ஆதரவை எதிர்நோக்கி பயணம் தொடரும்.
வாசு சார்
நடிகர் திலகத்திற்கு வாய்க்க வேண்டிய பல நல்ல பாடல்கள் மற்றவர்களுக்கு சென்று விட்டன. அதில் எனக்கு சற்று வருத்தமே. என்றாலும் சில பாடல்கள் படமாக்கப்பட்டதைப் பார்க்கும் பொழுது நல்ல வேளை தலைவருக்கு இந்த மாதிரி வாய்க்கவில்லையே என மன ஆறுதல் கொள்வதும் உண்டு.
ஆனால் நிச்சயமாக வீட்டுக்கு ஒரு பிள்ளை அப்படி ஒதுக்கிய பாடல் அல்ல. காரணம் இது நடிகர் திலகத்திற்கு பாலா பாடிய முதல் பாடலாயிற்றே. சொர்க்கம் படத்தில் இடம் பெற்றிருக்க வேண்டிய பாடல். கே.ஆர்.விஜயாவுடன் திருமணம் முடிந்தவுடன் முதலிரவில் பாடுவதாக இப்பாடல். வரிகளும் கதாநாயகனின் மனநிலையை பிரதிபலிப்பதாகவே எழுதப்பட்டிருக்கும். தன்னுடைய எதிர்கால கனவுகளை எண்ணியவாறே அவளை கல்யாணம் செய்த வேளை இதெல்லாம் நடக்கும் என்பதாக நினைத்துப்பாடுவதாக வரிகள் எழுதப்பட்டிருக்கும்.
"இன்று முதல் செல்வமிது என்னழகு தெய்வமிது வாழ்வு வந்தது" இந்த வரிகளிலேயே சொர்க்கம் பட கதாநாயகனின் பாத்திரத்தின் மன ஓட்டத்தை கவிஞர் கொண்டு வந்திருப்பார்.சிவந்த மண் படம் வெளியான போதே சொர்க்கம் படத்தின் 78 கிராமஃபோன் ரிக்கார்டுகள் வெளிவந்து விட்டன. பாலா வந்த புதிதில் குரல் மக்களை காந்தம் போல் கவர்ந்திழுத்த நேரம். எனக்குத் தெரிந்து பாலா பாடி வசந்தா ஹம்மிங் குரல் கொடுத்த பதிவு செய்யப்பட்ட பாடல் இதுவாகத்தான் இருக்கும்.
பாலாவின் குரலில் மயங்கினாலும் அந்த ஹம்மிங், படத்தில் கே.ஆர்.விஜயாவின் பாத்திரத்திற்கு ஒத்து வருமா என தலைவர் ஐயம் எழுப்பி, அது எல்லோரிடத்திலும் பாதிப்பை ஏற்படுத்தி பின்னர் அப்பாடல் படமாக்கப்படவில்லை என்றும் அதற்காகவே புதியதாக அழகு முகம் பாடல் பதிவு செய்யப்பட்டு படமாக்கப்பட்டது எனவும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஏன் என்றால் எனக்குத் தெரிந்து அழகு முகம் பாடல் 78 இசைத்தட்டில் வெளியிடப்படவில்லை. அப்பாடல் படத்தில் தான் மக்கள் முதன் முதலில் கேட்டதாய் நினைவு. அதற்குப் பிறகு ரிக்கார்டிங் கம்பெனி சொர்க்கம் படப்பாடல்களை எல்பி இசைத்தட்டில் வெளியிட்ட போது அழகு முகம் பாட்டை சேர்த்ததாகத் தான் எனக்கு ஞாபகம்.
நினைவுகளை அசை போட வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றி வாசு சார்.
தேங்க் யூ ராகதேவன் சார்.
இதோ 'யாரோ எழுதிய கவிதை' இசையமைப்பாளர் பெயர்.
டைட்டிலிலிருந்து.
http://i60.tinypic.com/2qk5hf8.png
'ஆஹா ஆயிரம் சுகம்' 'யாரோ எழுதிய கவிதை' படத்திலிருந்து.
https://youtu.be/nXIGhhOtlc0
அருமை ராகவேந்திரன் சார். எவ்வளவு அரிய விஷயங்கள் தங்களிடம் புதைந்து கிடக்கின்றன! அது போல சரியான சந்தர்ப்பத்தில் வெளி வருகின்றன. ஏற்கனவே நான் தங்கள் மூலம் கேள்விப்பட்டிருந்தேன். இப்போது முழு விவரங்களையும் இங்கு அளித்தமைக்கு நன்றி!
கே.ஆர்விஜயா விஷயத்தில் தலைவருடைய சந்தேகம் நூற்றுக்கு நூறு நியாயமானது. அதனால் பாடலையே இழந்தாலும் பரவாயில்லை.:) குடும்பப் பெண்மணியாக விஜயா கதைக்குப் பொருத்தமானவர் என்பதற்காக ராமண்ணா அவரை சொர்க்கத்திற்காகத் தேர்ந்தெடுத்தார். அது இந்த மாதிரி சில இழப்புகளுக்கு காரணமாய் போய் விட்டது. ஆதிராம் சார் அவருக்குத் தெரிந்த தகவல்களை அருமையாக பரிமாறிக் கொள்வார் என்று நம்பலாம்.
மதுண்ணா!
'பணக்காரக் குடும்பம்' படத்தில் 'இதுவரை நீங்கள் பார்த்த பார்வை' பாடல் கேட்டிருப்பீர்கள். வழக்கத்திற்கு மாறான மிக அமைதியான எம்.ஜி.ஆர் டூயட் பாடல் இது. இதில் ஒரு இடத்தில்
'பேச முடியாத பெருமை
இந்த இனிமை இனிமை இனிமை
இந்த'...... ..... .....
என்று சரோ தொடராமல் நிறுத்துவார்.
அப்போது மீதி 'இனிமை... இனிமை' வார்த்தைகளை புல்லாங்குழல் ஓசை நிறைவு செய்யும் வெகு இனிமையாக. நேர்த்தியாக.
அதே போல 'பாடகர் திலகம்'
'சுகம் கண்டேன் கண்டேன் கண்டேன்
சுகம்'..... ..... ......
என்று தொடராமல் நிறுத்துவார். அதே போல புல்லாங்குழல் இசை மீதி வார்த்தைகளை நிறைவு செய்யும்.
இப்போது உங்களுடைய ஃபேவரிட் பல்லாக்கு போல வண்டி' பாடலின் 'தள்ளம்மா... தள்ளம்மா... தள்ளம்மா' வரிகளின் டியூனை மட்டும் மேற்கண்ட 'இனிமை... இனிமை... இனிமை'...யுடன் மேட்ச் செய்து பாருங்கள். ஏதாவது புலப்படுகிறதா?:)
டியர் வாசு சார்,
இதெல்லாம் ரொம்ப அநியாயம். வீட்டுக்கு ஒரு பிள்ளையின் 'இன்றுமுதல் செல்வமிது' பாடலை பதிவிட்டு தூக்கம் தொலைக்க வைத்துவிட்டீர்கள். (அடிக்கடி இந்த அநியாயத்தை செய்யுங்கள்). இந்த வயதில் போய் தூக்கம் தொலைத்தாயா என்றெல்லாம் கேட்கக்கூடாது. உஷாநந்தினி எங்க காலத்து... ஸாரி நம்ம காலத்து கனவுக்கன்னிகளில் ஒருவர்.
வீட்டுக்கு ஒரு பிள்ளை நல்லதொரு பொழுதுபோக்குப்படம். அப்போதெல்லாம் மக்கள் கலைஞரின் வண்ணப்படங்களை காண்பது மிகமிக அரிது. அதிகம் கருப்பு வெள்ளையிலேயே ஜாலங்கள் நிகழ்த்தி வந்தார். (அவர் வில்லனாக மாறியபின் அவருக்கு வண்ணமாக வந்து குவிந்தது. நிச்சயம் இது கொடுமைதானே). இந்த படம் 71 தீபாவளிக்கு வந்து சக்கைபோடு போட்டதையும், பிரம்மாண்ட படங்களை பின்னுக்கு தள்ளியதையும் முன்பு கார்த்திக் சார் 'பாபு' திரைக்காவியத்தின் ரிலீஸ் தின மலரும் நினைவுகளில் விவரித்திருந்தார். வழக்கமான ராமண்ணாவின் பொழுதுபோக்கு மசாலா காவியம். பெரிய அளவில் வெற்றியடைந்தது.
இப்படத்தின் 'பெண்ணென்றால் நானன்றோ' பாடலுக்கு தவில் அடித்து அசத்தியிருப்பார் மெல்லிசை மன்னர். அவர் தவில் அடித்த பாடல்களில் இன்னொன்று நமது கௌரவத்தில் இதே ராட்சசி தூள் கிளப்பிய 'அதிசய உலகம் ரகசிய இதயம்' பாடல். நம் எல்லோருக்கும் பிடித்த ஜெய்குமாரியின் அழகிய ஆட்டத்துடன்.
இப்படத்தின் வில்லி ஜி. வரலட்சுமியின் கணவர் பயில்வான் தாராசிங்கின் தம்பி பயில்வான் அஜீத்சிங். உலக அளவில் பல மல்யுத்தப் போட்டிகளில் கலந்து கொண்டவர்.
ராமண்ணா படங்களின் டுயட்டுகளுக்கான லொக்கேஷன் நமக்கு தெரிந்ததுதான். பார்க், பீச், வெளிநாடு... ஊஹும்.
பறக்கும்பாவையில் பாத்ரூமுக்குள் டூயட்.
குமரிப்பெண்ணில் ரயில்பெட்டியில் டீசிங் பாடல்
நான் படத்தில் சின்ன பியட் காருக்குள் டூயட்
மூன்றெழுத்தில் சின்ன பெட்டிக்குள் டூயட்
தங்கசுரங்கத்தில் கிணற்றுக்குள் டூயட்
இந்தப்படத்தில் அவருக்கு கிடைத்தது வீராணம் குழாய்கள்.
அதையே அட்டகாசமாக பயன்படுத்தி நம்மையும் அசத்திவிட்டார்.
'இன்று முதல் செல்வமிது' பாடல் அந்தக்கால விவித்பாரதியின் சூப்பர் ஹிட் பாடல்களில் ஒன்று. அதை மிக விரிவாக அருமையாக ஆய்வு செய்துள்ளீர்கள்.
பாராட்டுக்கள்.
அடடே மறந்துட்டேனே. ஆய்வின் இடையிடையே செருகப்பட்டிருந்த கிளுகிளு ஸ்டில்கள் அருமை.
வாசு சார்
பறக்கும் பந்து பறக்கும் பாட்டைப் பற்றி நீங்கள் எழுதியவுடன் ஏனோ எனக்கு தேவன் கோயில் மணியோசை படப்பாடல் நினைவுக்கு வந்து விட்டது.
அந்தப் படத்தின் துவக்க விழாவன்று ரணணா ஸ்ரீதர் இசையில் இரு பாடல்கள் பதியப்பட்டது என நினைக்கிறேன். ஒரு பாடலின் பல்லவி புதிய உலகம் பிறக்கும் என்று துவங்கும். இரண்டாம் வரி கூட ... கதவு திறக்கும்... என்று வரும். இரண்டாம் வரியின் முதல் வார்த்தை ஞாபகத்திற்கு வரவில்லை. அருமையான ட்யூன். டி.எம்.எஸ். பி.சுசீலா பாடியது. அந்தப் பாடலையாவது அவர்கள் வெளியிட்டிருக்கலாம். அந்தக் காலத்தில் அது புதுமையான ட்யூன். நமது நண்பர் ஒருவர் அந்தப் படப் பூஜையன்று அங்கிருந்தார். சில தினங்களுக்கு முன் அவருடன் பேசிக் கொண்டிருந்த போது அவர் அந்த ட்யூனைப் பாடிக்காட்டினார். அது மட்டும் வந்திருந்தால் டி.எம்.எஸ். பி.சுசீலா இணையின் புகழ் மகுடத்தில் மற்றுமோர் வைரமாய் மின்னியிருக்கும். காரணம் நண்பர் பாடிக்காட்டும் போதே அது அவ்வளவு ரம்மியமாக இருந்தது.
//ராமண்ணா படங்களின் டுயட்டுகளுக்கான லொக்கேஷன் நமக்கு தெரிந்ததுதான். பார்க், பீச், வெளிநாடு... ஊஹும்.
பறக்கும்பாவையில் பாத்ரூமுக்குள் டூயட்.
குமரிப்பெண்ணில் ரயில்பெட்டியில் டீசிங் பாடல்
நான் படத்தில் சின்ன பியட் காருக்குள் டூயட்
மூன்றெழுத்தில் சின்ன பெட்டிக்குள் டூயட்
தங்கசுரங்கத்தில் கிணற்றுக்குள் டூயட்
இந்தப்படத்தில் அவருக்கு கிடைத்தது வீராணம் குழாய்கள்.
அதையே அட்டகாசமாக பயன்படுத்தி நம்மையும் அசத்திவிட்டார். // சூப்பர் லிஸ்ட் ஆதிராம் சார்..
காஜல் போல கூகுள் கூகுள் ஸாரி வாசு வாசு பண்ணிப்பார்த்ததில்
ராமண்ணா படத்தில்மிகப் பிடித்த பாடல்கள் என லிஸ்ட் போட்டேன்
அன்று வந்ததும் அதே நிலாவை விட கண்ணென்ன கண்ணென்ன கலங்குது பிடிக்கும்
மெளனம் கலைகிறது மயக்கம் வருகிறது.. ஓஹ்
இன்னும் நிறையச் சொல்லலாம்.. ஆனால் முடியாத்.. ஏனாம்.. கான்செப்ட் கிடைச்சுடுத்தே..
எனில் இன்று விஜயதசமியை முன்னிட்டு...
விஜய என ஆரம்பிக்கும்ஹீரோயின்களின் பாடல்கள்..
முதலாவதாக (ரொம்ப நாளாச்சு) வி.கு பாட் :)
நான்பாடும் பாட்டிலே வான் மீனும் தூங்குமே
https://youtu.be/v17bclS-eyc
விஜயதசமி ஸ்பெஷல்..
வி.கு பாட் டூ :) போனஸாக அசோகன்..
வஞ்சி என்றால் வஞ்சிப்பதோ
வந்த பின்னே இன்னும் சிந்திப்பதோ..
https://youtu.be/ngFgQlu7KC0
pesum padam
http://i45.tinypic.com/a9xqaa.jpg
வி. ஸ்பெஷல் – 3
லேடி சேம்ஸ் பாண்ட் (சி.செ..எங்கே எங்கே.. யாரச் சொல்றீங்க.. சி.க.. இங்க்லீஷ் படத்தப் பத்தி உமக்குத்தான் தெரியும்.. ஒரு கட்டுரை தருவீங்க தானே) தமிழ் விசய லலிதா..
நான் நால்வகை நாடகம் ஆடிடும் பாத்திரம்
பூமேடை நீ போட வா
ஆ..
நான் தரும் தேன்சுவை போதையில்
பொன்னூஞ்சல் நீ ஆடவா.. ( நல்லாத் தாம்மா சொல்றே)
யூ..டோண்ட் டச் மீ யூ.. (சரிம்மா. கத்தில்லாம் வச்சுருக்கயே..யாரும் தொடமாட்டாங்க!)
https://youtu.be/pLYyfyIS_0Y
சின்னா!
எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள். குறிப்பாக 'புன்னகையில் ஒரு பொருள் வந்தது'. மிகவும் நன்றி!
போட்டாச் ஆர் இல்லியா :)
வேதாள உலகத்தைப் பத்தி ஒரு வியாசமே எழுதலாம் வர்றேன்..
சின்னா!
'நான் நால்வகை நாடகம்' பாடல் போட்டிருப்பதைப் பார்த்தால் ரொம்ப ரேர் சாங்க்லாம் பார்த்து பார்த்து தேடறா மாதிரி இருக்கு.:) கமான்.
விஜய சந்திரிகா என்ன படமாக்கும்
விஜய ஸ்ரீ
எல். விஜயலட்சுமி
விஜயலட்சுமி (விஷால் புகழ்!)
விஜயலலிதா
இன்னும் எத்தனை விஜய உண்டு.?