-
ரொம்ப பதிவு சினிமாவைப் பற்றி போட்டாச்சு!. இனி அரசியல் பதிவு ஒன்றை போடலாம் என்று இந்தப் பதிவை வரைய விரும்புகிறேன்.
தலைவரின் அந்தக்கால சினிமா கிளைமாக்ஸ் காட்சிகளை பார்த்திருப்பீர்கள். கதாநாயகியை ஒரு கையில் பிடித்துக்கொண்டு மற்றொரு கையில் வாளேந்தி எதிரிகளை அவர்கள் கோட்டைக்குள்ளே வீழ்த்தி
ஆட்சியை கைப்பற்றி நாயகியையும் காப்பாற்றி கை பிடிப்பது போல் காட்சி அமைத்திருப்பார்கள்.
அதே காட்சி அவரது வாழ்க்கையிலும் அரசியலில் நடைபெற்றது. 1980 ல்
தலைவரது ஆட்சி கலைக்கப்பட்டதும்
அருகிலிருந்த அரசியல் துரோகிகள் அணி மாறிய காட்சி தீயசக்தியின் தூண்டுதலால் அவரின் திரைக்கதையில் தோன்றியவாறு நிகழ்ந்தது.
ஆனால் சற்றும் பதட்டமடையாத தலைவர், தன்னை நம்பி வருபவர்களை மட்டும். இருகம்யூனிஸ்ட், காகாதேகா போன்ற கட்சிகளை மட்டும் அரவணைத்துக் கொண்டு தமிழகத்தின் பெரும் கட்சிகளாக செயல்பட்டு வந்த இ.காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணியை எதிர்த்து தனியொருவனாக களத்தில் நிராயுதபாணியாக மக்கள் ஆதரவு
என்ற தேரில் ஏறி அமர்ந்து அதர்மத்தை அழிக்க சங்கொலி முழங்க களத்தில் முன்னேறி வரும் போது மற்றொரு பக்கம் தீயசக்தி தேர்தலுக்கு பின் அமையப்போகும் மந்திரி சபையில் யார் யார் இடம் பெறுவார்கள் என்ற
பட்டியலை தயாரிக்கும் அதிகார,சதிகார பணியில் இறங்கியிருந்தார்.
அத்தோடு நிற்கவில்லை. வள்ளுவர் கோட்டம் வண்ணமயமாக ஜோடிக்கப்பட்டு பதவியேற்பு விழாவுக்கு ஏற்றவாறு மாற்றப்பட்டுக் கொண்டிருந்தது. புரட்சித்தலைவரோ
சூறாவளி சுற்றுப் பயணத்தில், நான் செய்த தவறென்ன? என்று மக்களைப் பார்த்து கேள்வி எழுப்ப
மக்களோ மகராசா! உன்னிடம் ஏதும் குறை காணவில்லை. அதோ அந்த தவறான பொருந்தாத கூட்டணி மீதுதான் தவறு! என்று மனமேங்கிக் கொண்டு தர்ம தேவனுக்கு வாக்களிப்பது என்ற சங்கல்பத்தை
மேற்கொண்டு செல்லும் இடமெல்லாம் மலர்தூவி நின்றனர்
நம் காவிய நாயகனுக்கு. தேர்தல் வேளை வந்து விட்டது.
தம்முடன் அணி சேர்ந்த கம்யூனிஸ்டுகள் மற்றும் காகாதேகா ஆகிய சிறிய அணிகளுடன் பெரும் போரை நடத்தி எதிரிகளை முன்பைவிட பலமாக தாக்கி ஓட ஓட விரட்டி ஆட்சியை கைப்பற்றிய மாட்சி இருக்கிறதே அது சொல்லில் அடங்கா. இதே காட்சியை சிவாஜிக்கு நினைத்து பாருங்கள். ஆட்சி டிஸ்மிஸ் செய்தவுடன் "தில்லானா மோகனாம்பா"ளில் கத்திகுத்துக்கு உருண்ட மாதிரி இந்திரா அம்மையாரின் காலிலும் தீயசக்தியின் காலிலும் கதறி உருண்டு அழுதிருப்பார். புரட்சித்தலைவரின் வீரத்தையும், ஆற்றலையும் பார்த்தும் சில கோழைகளுக்கு வீரம் வரவில்லையே? என்ன செய்ய! கடவுள் வீரத்தை வாயிலேயே வைத்து விட்டான் வசனம் பேசுவதற்கு.
ஆனால் நம் தலைவரோ 'எதையும் தாங்கும் இதயம் கொண்டு' துரோகிகளை மக்கள் முன் நிறுத்தி தோலுரித்து காட்டி வெற்றி கண்டார். அந்தக் காட்சி "மந்திரி குமாரி"யில் கதாநாயகியை தூக்கிக் கொண்டு போர்புரியும் காட்சியை நினைவு படுத்தவில்லை? "மன்னாதி மன்னனி"ல் கட்டவிழ்த்து பாதபூஜை செய்யச் சொல்லும் போது கொதித்தெழுந்து சோழனின் குலப்பெண்ணையும் தூக்கிக் கொண்டு 'தாயை பழித்தவனை தாய் தடுத்தாலும் விடேன்' என்று வீரத்தின் உச்சியில் எக்காளமிட்டு ரதத்தில் ஏறி அனைவரையும் கண்ணில் விரல் விட்டு ஆட்டி விட்டு தாயகம் திரும்பும் காட்சி நிழாலாடுகிறதா?.
சினிமாவில் மட்டுமல்ல வீரம்? அரசு வித்தைகளிலும் அவர் காட்டும் வீரத்தை மறக்க முடியுமா? 'புறமுதுகு காட்டி ஓடியவர்களுக்கு' இதெல்லாம் புரியுமா என்ன? ஒரு தேர்தலில் தோற்றதற்கு புறமுதுகு காட்டி ஓடி பதுங்கு குழியில் பதுங்கியவர்களுக்கு புரியுமா வீரத்தின் விளையாட்டை?. மீண்டும் சதிகாரனோடு சேர்ந்து சபையில் சங்கமித்து ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க மட்டுமே அவர்களுக்கு தெரியும்.
அந்த தேர்தலில் தன்னை நம்பிய கம்யூனிஸ்ட்கள் பெற்ற அதிகபட்ச வெற்றியே இதுவாகத்தான் இருக்கும்.
கம்யூனிஸ்டுகள் 20 சீட்களில் வெற்றி பெற்றார்கள். குமரி அனந்தனின் காகாதேகாவோ 6 சீட் வெற்றி பெற்றார்கள். இந்தத் தடவை முதலிலே புரட்சித் தலைவரின் வெற்றி அறிவிக்கப்பட்டது. மதுரை மேற்கில் சுமார் 20000 ஓட்டுகள் அதிகம் பெற்ற வெற்றியடைந்த செய்தி கேட்டு ஆனந்தக் கண்ணீர் வடித்த நினைவு நெஞ்சை விட்டகலா!. தீயசக்தி ஹண்டேயிடம்
வெற்றிக்கு அண்ணா நகரில் போராடி பின் தலைவரின் கடைக்கண் பார்வையால் வெற்றி கிடைத்த காட்சியை கண்டு தமிழகமே எள்ளி நகையாடியதும் மறக்க முடியாத காட்சி.
இந்திரா அம்மையாருக்கும் ஊழல் சாம்ராஜ்யத்தின் தலைமையோடு கை கோர்த்தது தவறு என்பதை உணர வைத்த அற்புதமான தேர்தல்.
புரட்சித்தலைவரின் புனிதப் போரில் அதிமுகவின் வெற்றியின் வீச்சு கூடியிருந்தது. தீயசக்திக்கு கணிசமான அளவு ஆதரவு குறைந்து காணப்பட்டது. அவருடைய ஆர்ப்பாட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள்.
தீயசக்தியின் பதவி ஏற்புக்கு அடிக்கப்பட்ட 'வால்போஸ்டர்' என்ன கதி ஆனதோ தெரியவில்லை. இது போன்ற ஒரு வித்தியாசமான தேர்தலை மக்களும் அரசியல் கட்சிகளும் கண்டதில்லை என்றே நினைக்கிறேன். இது ஒரு சரித்திர சாதனை என்றே சொல்ல வேண்டும்..........ks...
-
100% முற்றிலும் உண்மை. 1980ம் வருட தேர்தல் போன்று சிறப்பை பெற்றது வேறில்லை என அடித்து கூறலாம்... அமெரிக்க நாட்டின் TIME, Washington Post, Network Times உட்பட்ட உலக புகழ் வாய்ந்த பத்திரிகைகள் மக்கள் திலகம் அடைந்த பிரம்மாண்டமான வெற்றியை மிகவும் சிலாகித்து எழுதியிருந்த தகவல்கள் நாமறித்து சொல்லொண்ணா மகிழ்ச்சி கொண்டது நினைவிலாடுகிறது. இந்திய ஜனநாயக மாண்பை மிக பாராட்டி எழுதியிருந்தார்கள். மாநிலத்திற்கு யாருடைய ஆட்சி வேண்டும்?!, மத்தியில் எவருடைய ஆட்சி தேவை என்று பகுத்தறிந்து பொது மக்கள் மாபெரும் தீர்ப்பை அளித்திருந்தார்கள். அத்தகைய பெருமைமிகு நிகழ்வுகள் நமக்கெல்லாம் என்றுமே மகத்தான பெருமையே!!!.........
-
" ஏழைப்பங்காளன் " ( 1963 ) - இந்த படத்தில் :
ஜெமினி கணேசன் மற்றும் ராகினி நடித்தது.
இந்த படத்தைத் தயாரித்தவர் ஒரு காங்கிரஸ் அபிமானி,
" ஏழைப் பங்காளன் " என்கிற பெயரையே அவர் , கர்ம வீரர் காமராஜ்
ஐ மனதிற்கொண்டே வைத்தாராம் !
" ஏழைப் பங்காளன் " படத்தை எடுத்த அவர் , அந்த படத்தைப் பார்க்க
வருமாறு காமராஜ் அவர்களை
- இழுத்துக் கொண்டு ( ! )
வந்தாராம் !
" எழைப் பங்காளன் ' படத்தைப் பார்த்தார் காமராஜ்
படத்தைப் பார்த்த அவர் வெளியே வந்தார்....
' விடு விடு/ என்று நடந்தார்....
காரை நோக்கி வந்தார்.....
கார் கதவு திறக்கப் பட்டது....
காரின் உள்ளே செல்ல தயாரானார்.....
" படம் எப்படி இருந்திச்சு, அண்ணாச்சி....ஒண்ணும்
சொல்லாமல் போறீங்களே ? "
- கேட்டவர் தயாரிப்பாளர் !
காமராஜ் அவரை நோக்கினார்.....சொன்னார் :
" அதெல்லாம் நடிக்க வேண்டியவங்க நடிச்சத்தான்
நல்லா இருக்கென்னேன் ! "
காமராஜ் ஏன் அப்படி சொன்னார் ?
" ஏழைப்பங்காளன் " படத்தில் ஜெமினிக்குப் பதில்
எம்ஜிஆர் நடித்திருந்தால் நன்றாக
இருந்திருக்கும் என்று காமராஜ் நினைத்தார் ! -...............Am...
-
#postive #approach.........
வாத்தியாரைப் பொருத்தவரை #தன்னைத்தேடி #வரும் #வாய்ப்புகளை அப்படியே #ஏற்றுக்கொள்வதில்லை. தன்னுடைய படத்தைப் பார்க்க வரும் ரசிகர்களுக்கு அதன்மூலம் #நம்பிக்கையூட்டும் #வகையில் என்ன #கருத்தை சொல்லப் போகிறோம் என்பதற்குத்தான் #முக்கியத்துவம் கொடுப்பார்.
புரட்சித்தலைவரை வைத்து உதயம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் "இதயவீணை" என்ற திரைப்படத்தைத் தயாரித்து மாபெரும் வெற்றியும் பெற்றது. அதைத் தொடர்ந்து எம்ஜிஆரை வைத்து இன்னொரு படம் தயாரிக்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.
எம்ஜிஆருக்கு பொருத்தமாக கதை சொல்ற அளவிற்கு ஒரு கதாசிரியர் வேணும்... அப்படிக் கிடைத்தாலும் அவரோடு ஒத்துப்போகிற அளவிற்கு அந்த கதாசிரியர் இருக்க வேண்டும். எம்ஜிஆர் சொல்கின்ற நியாயமான மாற்றங்களை ஏற்றுக் கொள்ளக் கூடியவராக இருக்க வேண்டும்'. தேடி அலைந்ததில் அப்படி யாரும் கிடைக்கவில்லை.
இறுதியில் இந்தியில் வெளிவந்த ஒரு படத்தைப் போய் பார்த்தார்கள். அந்தப் படம் எம்ஜிஆருக்குப் பொருத்தமாக இருக்கும் என்று நம்பினார்கள். அந்தப் படத்தின் தமிழ் ரீமேக் வாங்குவதற்கு முயற்சி செய்தார்கள்.
இந்தச் செய்தி எம்ஜிஆர் காதுகளுக்கு எட்டியது. உதயம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர்களை நேரில் அழைத்துப் பேசினார். என்ன படம் அது? யாருடைய படம் என்று கேட்டவருக்கு பதில் சொன்னார்கள். அது சாந்தாராமின் 'தோ ஹாங்கி பாராத்'. சாந்தாராமை எம்.ஜி.ஆர் தனது குருவாக வைத்து மதித்தவர். "சாந்தாராமின் படம்னா போட்டுக் காட்டுங்க பார்க்கலாம்," என்றார் எம்ஜிஆர்.
உதயம் புரொடக்ஷன்ஸ் மணியனும், வித்வான் வே.லட்சுமணனும் பார்க்க ஏற்பாடு செய்தார்கள். எம்.ஜி.ஆர். படத்தைப் பார்த்தார். ஒரு ஜெயிலர் கொடூரமான கைதிகளை தனது பொறுப்பில் வெளியே கொண்டு வந்து தனி இடத்தில் வைத்து அவர்களைத் திருத்துவதற்கு முயற்சி செய்கிறார். இறுதியில் ஜெயிலரை கொலை செய்துவிட்டு கைதிகள் தப்பி ஓடி விடுகிறார்கள். இதுதான் இந்திப் படத்தின் கதை.
படத்தைப் பார்த்த எம்ஜிஆர் எந்த கருத்தும் சொல்லாமல் எழுந்து வெளியே போனார். அவரைத் தொடர்ந்து போன மணியனும் வித்வான் லட்சுமணனும், "இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் ரைட்ஸை வாங்கி விடலாமா," என்று கேட்டார்கள்.
"இந்தப் படத்தை அப்படியே எடுக்க வேண்டும் என்றால் எனக்குப் பொருத்தமாக இருக்காது. கிளைமாக்ஸை மாற்ற வேண்டும். ஜெயிலரால் வெளியே அழைத்து வரப்பட்ட #கைதிகள் #இறுதியில் #திருந்தினார்கள் #என #முடியவேண்டும். #எனது #படம் #பார்க்க #வருகிறவர்களுக்கு #நம்பிக்கையைக் கொடுக்க வேண்டும். இந்தப் படத்தை #உண்மையான #கைதிகளே #பார்த்தாலும் #அவர்கள் #மனம்திருந்த #வேண்டும். #அப்படிப்பட்ட #கருத்தைதான் #நாம் #சொல்லவேண்டும் இதற்கு நீங்கள் சம்மதித்தால் ரைட்ஸ் வாங்குங்கள் இல்லையென்றால் என்னை விட்டுவிடுங்கள். வேறு யாரையாவது வைத்து படத்தை எடுத்து கொள்ளுங்கள்," என்றார் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆரின் பேச்சைக் கேட்டதும் உதயம் புரொடக்ஷன்ஸ் அதிபர்கள் அலறினார்கள். "அய்யய்யோ... உங்களை வைத்துதான் நாங்கள் படம் எடுப்போம். நீங்கள் சொன்னபடியே இந்தப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை மாற்றி எடுப்போம்," என்றார்கள்.
அதற்கு எம்.ஜி.ஆர், "க்ளைமாக்ஸ் காட்சியை மாற்றி எடுப்பதாக இருந்தால் சாந்தாராமிடம் எடுத்துச் சொல்லி அதற்கும் அனுமதி பெற்று வாருங்கள்," என்று கூறி அனுப்பிவிட்டார். எம்.ஜி.ஆரின் கருத்தை சாந்தாராமிடம் தெரிவித்து, அனுமதி பெற்று சில மாற்றங்களுடன், கிளைமாக்ஸ் காட்சியையும் மாற்றி படத்தை எடுத்தார்கள். படமும் வெளியே வந்து பெரும் வெற்றிப் பெற்றது. அந்தப்படம்தான்
#பல்லாண்டு #வாழ்க'!.........bsm...
-
1964-ம் ஆண்டில் போலிக் கர்ணன்களை புறமுதுகு காட்டி ஓடச் செய்து வேட்டையாடிய நிஜக் கர்ணனான நம் வேட்டைக்காரனின் அமர்க்களமான ஸ்டில். மக்கள் திலகத்தின் இந்த ஸ்டைலான போஸை எப்படி வர்ணிப்பது? தாவுகிறாரா? தாண்டுகிறாரா? பறக்கிறாரா?
இந்த மாதிரி பக்கவாட்டில் கிட்டத்தட்ட 60 டிகிரி அளவுக்கு சாய்ந்த நிலையில் யாராவது நின்றால் அவர் விழுந்துவிடுவார். தனது உடலின் மொத்த எடையை இடதுகையால் மரத்தை பிடித்தபடி தாங்கி பேலன்ஸ் செய்து நிற்கிறார் மக்கள் திலகம். அப்போதும் அவரது முகத்தில் இதெல்லாம் எனக்கு சாதாரணம் என்பதுபோல ஸ்டைலான அலட்சிய குறும்பு. இந்த துள்ளலும் துடிப்பும் சுறுசுறுப்பும் கடைசிவரை மக்கள் திலகத்திடம் குறையவே இல்லை. ...
அது அந்த தனிப்பிறவிக்கு மட்டுமே உள்ள ஆற்றல்.......... Swamy...
-
அருமையான பதிவு. மலரும் நினைவுகள். 1980 பிப்ரவரி 17 புரட்சித் தலைவர் ஆட்சி கலைக்கப்பட்டது. அன்று ஞாயிற்றுக்கிழமை. பொதிகை தொலைக்காட்சியில் மாலை தியாகராஜ பாகவதர் நடித்தசிவகவி படம் ஒளிபரப்பினார்கள். அதை தலைவர் ரசித்து பார்த்துக் கொண்டிருந்தபோது ஆட்சி கலைக்கப்பட்ட செய்தி வருகிறது. தலைவர் கொஞ்சமும் கலங்காமல் படத்தை ரசித்து பார்த்தார். சமையல்காரர் மணியை அழைத்து இனிப்பு கொண்டுவரச் சொல்லி எல்லாருக்கும் கொடுத்துவிட்டு தானும் மகிழ்ச்சியோடு சாப்பிடுகிறார். இதை அந்த சமயத்தில் புரட்சித் தலைவருடன் உடனிருந்த மணியன் அப்போதே சொல்லியிருந்தார். இது சாதாரண விஷயமா? புரட்சித் தலைவருக்கு எவ்வளவு மன உறுதி. மக்களின் மீது அவருக்கு எவ்வளவு நம்பிக்கை. மக்களுக்கும் அவர் மீது அன்பும் நம்பிக்கையும் இருப்பதை தேர்தல் முடிவுகள் நிரூபித்தன..........Sy.
-
1980 தேர்தல் முடிவில் க்ளைமாக்சும் அதை புரட்சித் தலைவர் முடித்த விதமும் அற்புதம். "பல்லாண்டு வாழ்க" காவிய படத்தில் தன்னைக் கொல்ல வரும் நம்பியாரை மக்கள் திலகம் அடித்து வீழ்த்துவார். அடிதாங்காமல் சுருண்டு கிடக்கும் நம்பியாருக்கு ஒரு தம்ளரில் தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்துவார். அதேபோலதான் அந்தத் தேர்தல் முடிவும் அமைந்தது. சூழ்ச்சியால் புரட்சித் தலைவர் ஆட்சியை இந்திராவைக் கொண்டு கருணாநிதி கலைத்தார். தேர்தலில் மக்கள் ஆதரவுடன் புரட்சித் தலைவர் கொடுத்த அடியால் வீழ்ந்தார். தோல்வியை ஜீரணிக்க முடியாமல் அடி தாங்காமல் கருணாநிதி பெங்களூர் கிளம்பி போய்விட்டார். பல்லாண்டு வாழ்க படத்தில் அடிதாங்காமல் துவண்டு கிடக்கும் நம்பியாருக்கு மனிதாபிமானத்துடன் தண்ணீர் கொடுப்பது போல ஜூன் 3 ம் தேதி காலை கருணாநிதிக்கு போன் செய்து அவருக்கு தலைவர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். இதுதான் தலைவரின் மனிதாபிமானம். ஸ்டைல். தேர்தலில் கொடுத்த அடியைவிட பலமான அடி..........Sy...
-
1980 தேர்தலின்போது தமிழன் தமிழனாக வாழ திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு ஓட்டளிக்குமாறு சிவாஜி கணேசன் பத்திரிகை விளம்பரம் எல்லாம் கொடுத்தார். 1977 நாடாளுமன்ற தேர்தலில் புரட்சித் தலைவரை ஆதரித்தபோதும், 1984 தேர்தலில் ஆதரித்தபோதும் தமிழன் பற்றி அவருக்கு அக்கறை இல்லைபோல.... "நாடாளப்போகட்டும் கருணாநிதி. நடிக்கப்போகட்டும் எம்ஜிஆர்" என்று மேடையில் சிவாஜி கணேசன் வீரவசனம் பேசினார். அப்போதெல்லாம் மனது கஷ்டமாக இருக்கும். இவரை எல்லாம் தம்பி என்று தலைவர் அன்பு காட்டுகிறாரே என்று வருத்தமாக இருக்கும். தேர்தல் முடிவுகள் புரட்சித் தலைவரை அவதூறு பேசியவர்கள் வாயில் .....யை வைத்து அடைத்தது..........Sy.........
-
மக்கள் திலகத்தை முதன் முதலாக பார்த்தபோது.....நெல்லை முத்தையா
பாவேந்தர் நூல்களை வெளியிடுவதற்காக 1944 ல் முல்லைப் பதிப்பகம் தொடங்கப் பெற்றது. சென்னைக்கு வரும்போது அறிஞர் அண்ணா அவர்கள் பதிப்பகத்துக்கு வருவது வழக்கம். பாவேந்தர் அவர்களும் அடிக்கடி வருவார்கள்.
பாவேந்தரும், அறிஞர் அண்ணாவும் ஒரு முறை கூட பதிப்பகத்தில் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டதில்லை.
பாவேந்தரைக் காண இலக்கிய நண்பர்களும் ரசிகர்களும் வருவார்கள்.
அண்ணா அவர்களைக் காண அரசியல் நண்பர்களும், கட்சித் தோழர்களும் அதிகமாக வருவார்கள்.
எஸ்.வி. லிங்கம், நடிகமணி டி.வி. நாராயணசாமி, அரங்கண்ணல், ஆர்.எம்.வீ., பேராசிரியர் அன்பழகன், நாவலர் நெடுஞ்செழியன், டி.எம். பார்த்தசாரதி, சொல்லின் செல்வர் சம்பத், திருமதி சத்தியவாணிமுத்து, முன்னாள் மேயர் முனுசாமி முதலானோர் அண்ணா அவர்களைக் காண பதிப்பகத்துக்கு வருவார்கள்.
முப்பத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி, என் உள்ளத்தில் பசுமையாகத் திகழ்கிறது.
1945-ல் ஒரு நாள் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். அவர்கள் பதிப்பகத்துக்கு வந்தார்கள். பார்த்ததும் நான் தெரிந்து கொண்டேன். அதற்கு முன் நான் பார்த்ததும் இல்லை, பேசியதும் இல்லை.
சிவந்த மேனி, சுருண்ட முடி, வெள்ளைக் கதர் ஜிப்பா, கை சுருட்டி விடப்பட்டிருந்தது. கவர்ச்சி மிகுந்த தோற்றம்.
நான் வணக்கம் தெரிவித்தேன்.
பதில் வணக்கம் கூறி, புன்முறுவலுடன், ‘அண்ணா வந்திருக்கிறார்களா?’ என்று கேட்டார்.
‘வருவார்கள். உட்காருங்கள்.’ என்று கூறி உபசரித்தேன்.
சிறிது நேரம் இருந்துவிட்டு, எழுந்து புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி பீரோவைப் பார்த்து, ‘அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு, பாரதிதாசன் கவிதைகள், குடும்ப விளக்கு, காதல் நினைவுகள்’ ஆகிய நூல்களை எடுத்து, ‘இதற்கு பில் போடுங்கள்’ என்று கூறி நூறு ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து என்னிடம் எடுத்து என்னிடம் நீட்டினார் புரட்சி நடிகர்.
(அப்போது நூறு ரூபாய் நோட்டைக் காண்பதே அரிது.) நான் பிரமித்து விட்டேன்.
‘ரூபாய் வேண்டாம் புத்தகங்களை எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று கூறினேன்.
‘இது வியாபாரம். மூலதனம் போட்டு அச்சிட்டிருக்கிறீர்கள். வருகின்றவர்களுக் கெல்லாம் பணம் வாங்காமல் புத்தகங்களைக் கொடுத்தால் தொழில் என்ன ஆகும்?’ என்று கூறி நோட்டை நீட்டியவாறு இருந்தார்.
அவர் கூறிய சொற்களும், நடந்து கொண்ட பெருந்தன்மையும் என் உள்ளத்தை நெகிழச் செய்துவிட்டது. அதன் பின் என்னால் மறுக்க இயலவில்லை. பணத்தை அந்தச் சிவந்த கரங்களிலிருந்து பெற்றுக் கொண்டேன்.
சிறிது நேரத்தில் அண்ணா அவர்கள் வந்து விட்டார்கள். புரட்சி நடிகரும் அண்ணாவும் சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்து விட்டுப் புறப்பட்டார்கள்.
அப்போது அவர் புன்னகை தவழ எனக்கு வணக்கம் தெரிவித்து விட்டுப் புறப்பட்ட காட்சியும், அவரது பெருந்தகைமையையும் என் உள்ளத்தில் பசுமையாய் பதிந்து விட்டது.
இப்பொழும் அதை நினைத்துப் பார்க்கிறேன். ‘ இந்தப் புத்தகங்களை எடுத்துக் கொள்கிறேன்’ என்று கூறி (பணம் கொடுக்காமல்) எடுத்துச் சென்றவர்களைப் பார்த்திருக்கிறேன். சொல்லாமலேயே எடுத்துக் கொண்டவர்களையும் கண்டிருக்கிறேன்.
ஆனால் வற்புறுத்தி பணத்தைக் கொடுத்து புத்தகங்களைப் பெற்றுக் கொண்ட புரட்சி நடிகரை நினைக்கும் போது எனக்கு பிரமிப்பாக இருந்தது.
- நூல் பதிப்பாசிரியர் திரு. முல்லை முத்தையா. (1982-ல்)
...mgn.........
-
Old IS. GOLD திரைப்படங்கள் ...என்றும் மக்கள் திலகத்தின் காவியங்கள் மட்டுமே.. கடந்த பல ஆண்டுகளாக
மக்கள் திலகத்தின் காவியங்களை வைத்து தான் பல திரையரங்குகள் வாழ்வு பெற்றது.... லட்சத்தில்....
கீழே சிறு துளி விளம்பரங்கள்....
திரையிட்ட விளம்பர விபரங்கள்
++++++++++++++++++++++++++++
26.3.1999. படகோட்டி
திருச்சி பேலஸ் 2 வாரம் ஒடியது.
புதுக்கோட்டை ஈனா
23.9.2001 ரகசியபோலிஸ் 115
கோவை கர்னாடிக் 2 வாரம் ஒடியது.
25.05.1990 உலகம் சுற்றும் வாலிபன்
கோவை கவிதா 2 வாரம் ஒடியது.
01.03.1991 ஒளி விளக்கு
கோவை சண்முகா 14 நாள் ஒடியது.
22.07.1996 அன்பே வா
கோவை டிலைட் 2 வாரம்
11.11.2004 சக்கரவர்த்தி திருமகள்
மதுரை மீனாட்சி 13 நாள் ஒடியது
8.9.2000 குலேபகாவலி
மதுரை மீனாட்சி 2 வாரம் ஒடியது.
14.5.2004 மாட்டுக்கார வேலன்
மதுரை மீனாட்சி இணைந்த 4 வாரம்
திரையிடப்பட்டது.
சேலம் சபரி அடிமைப்பெண்
1997 ல் 2 வாரம்
சேலம் சங்கம் எங்கவீட்டுப்பிள்ளை
04.06.2000 ...15 நாட்கள் ஒடியது..........UR...
-
#உலகம் சுற்றிய எம்ஜியார்#
எந்த அதிகாரப் பதவியில் இல்லாதபோதும் பல்வேறு நாடுகளின் அழைப்பை ஏற்று அந்நாடுகளுக்குச் சென்றுள்ளார் மக்கள் திலகம்..ந*டிக*ரான ஒருவரை அவரது மக்கள் சேவைக்காக பல்வேறு உலக நாடுகள் அழைப்பு அனுப்பி கவுரவித்தது எம்.ஜி.ஆருக்கு மட்டுமே உள்ள சிறப்பு!
#ர*ங்கூன்
சிறு வயதில் நாடகத்தில் நடிப்பதற்காக எம்.ஜி.ஆர். ரங்கூனுக்குச் சென்றுள்ளார்.
#இலங்கை
1965-ம் ஆண்டு இலங்கையில் தொண்டு அமைப்புகள், பத்திரிகை சங்கங்கள் எம்.ஜி.ஆருக்கு அழைப்பு விடுத்தன. அதை ஏற்று, நடிகை சரோஜா தேவி, ஆர்.எம்.வீரப்பன் உள்ளிட்டோருடன் இலங்கை சென்ற எம்.ஜி.ஆரை விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் வரவேற்ற னர். முன்னும் பின்னும் பைலட் கார்கள் அணிவகுக்க எம்.ஜி.ஆருக்கு இலங்கை அரசு சிறப்பான வரவேற்பு அளித்தது. சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் சாலையின் இருபுறமும் மக்கள் திரண்டு நின்று வாழ்த்தொலி எழுப்பி வரவேற்றனர்.
யாழ்ப்பாணம் விளையாட்டு மைதானத்தில் நடந்த வரவேற்பு கூட்டத்துக்கு இலங்கை நீதிபதி தம்பையா தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், ‘‘எம்.ஜி.ஆர். சிறந்த கலைஞர் மட்டுமல்ல; சிறந்த கொடையாளி. என் வாழ்நாளில் இந்தப் பகுதியில் இப்படி ஒரு பெருங்கூட்டத்தை பார்த்ததில்லை. தன்னைக் காண இலங்கையிலும் பெரும் கூட்டம் கூடும் என்பதை எம்.ஜி.ஆர். நிரூபித்துவிட்டார்’’ என்றார்.
இலங்கை பிரதமர் டட்லி சேனநாயகாவை மரியாதை நிமித்தமாக சந்தித்த எம்.ஜி.ஆர், அவருக்கு தென்னிந்திய நடி கர் சங்கத்தின் சார்பில் தந்தத்தால் செய்யப்பட்ட நேரு சிலையையும் தன் சார்பில் தந்தத்தில் ஆன மேஜை விளக்கையும் பரிசளித்தார். சிங்கள திரைப்படக் கலைஞர்கள் சார்பில் இலங்கை விஜயா ஸ்டுடியோவில் எம்.ஜி.ஆருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தான் பிறந்த கண்டி நகரையும் சென்று பார்த்தார்.
1965 அக்டோபர் 22-ம் தேதி கொழும்பு விளையாட்டரங்கில் எம்.ஜி.ஆருக்கு பிரம்மாண்ட பாராட்டு விழா நடந்தது. இலங்கை உள்நாட்டு அமைச்சர் தகநாயகா வரவேற்புரை வழங்கினார். அப்போது பலத்த மழை. அப்படியும் எம்.ஜி.ஆரின் பேச்சை லட்சக்கணக்கானோர் நனைந்தபடியே கேட்டனர். இலங்கை கலாச்சாரத் துறை அமைச்சர் காமினி ஜெயசூர்யா, எம்.ஜி.ஆருக்கு ‘நிருத்திய சக்கரவர்த்தி’ என்ற பட்டம் வழங்கி சிறப்பித்தார்.
#சிங்க*ப்பூர்
சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு நிதி திரட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்த வருமாறு அந்நாட்டு அரசு எம்.ஜி.ஆருக்கு 1972-ல் அழைப்பு அனுப்பியது. அதை ஏற்று, ஜெயலலிதா, முத்துராமன், நாகேஷ் உள்ளிட்டோருடன் சிங்கப்பூருக்கு எம்.ஜி.ஆர். சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தினார். இந்தி நடிகர் சசிகபூரும் வந்திருந்தார். கலை நிகழ்ச்சிகளுக்கு ஏராளமான மக்கள் திரண்டு வந்தனர். சிங்கப்பூர் மேயர், எம்.ஜி.ஆருக்கு வர வேற்பு அளித்தார். எலிசபெத் ராணிக்குப் பிறகு வாகனங்கள் நிறுத்தப்பட்டு எம்.ஜி.ஆருக்கு வரவேற்பு அளிக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது!
‘‘எங்கள் குழுவினரின் கலை நிகழ்ச்சி கள் மூலம் சுமார் ஒரு லட்சம் டாலர் வரை (செலவு போக) சேர்ந்திருக்கும் என எண்ணுகிறேன். அந்த வரவேற்பை, அந்நாட்டின் வளர்ச்சியை என்னால் என்றுமே மறக்க முடியாது’’ என்று 1973-ம் ஆண்டு ஜனவரி மாத ஃபிலிமாலயா இதழில் சிங்கப்பூர் பயணம் பற்றி எம்.ஜி.ஆர். குறிப்பிட்டுள்ளார்.
#மாஸ்கோ
மாஸ்கோவில் 1973-ல் நடைபெற்ற சர்வதேச படவிழாவில் கலந்து கொள்ள வருமாறு எம்.ஜி.ஆருக்கு ரஷ்ய அரசு அழைப்பு விடுத்தது. ரஷ்யா செல்லும் முன் டெல்லி சென்ற எம்.ஜி.ஆருக்கு கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது. ரஷ்ய படவிழாவில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டார்.
இந்திய அரசின் சார்பில் அப்போது செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சராக இருந்த ஐ.கே.குஜ்ரால் (பின்னாளில் பிரதமராகவும் பதவி வகித்தார்) கலந்து கொண்டு பேசினார். படவிழா பிரதிநிதிகளுக்கு எம்.ஜி.ஆரை அவர் அறிமுகம் செய்து வைத்ததோடு, தமிழகத்தில் அவரது செல்வாக்கு பற்றியும் அவரது படங்களின் மகத்தான வெற்றிகள் பற்றியும் எடுத்துரைத்தார். லெனின்கிராடு நகருக்கும் எம்.ஜி.ஆர் சென்றார். ரஷ்ய வானொலி நிலை யத்தினர் அவரைப் பேட்டி கண்டு அதை ரஷ்ய மொழியில் ஒலிபரப்பினர்!
#லண்ட*ன்
பின்னர், மாஸ்கோவில் இருந்து லண்டனுக்குச் சென்றார் எம்.ஜி.ஆர்.!
லண்டன் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் எம்.ஜி.ஆருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு ஏராளமான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட எம்.ஜி.ஆர்., லண்டன் பி.பி.சி. வானொலிக்கு சிறப்புப் பேட்டி அளித்தார்.
#பாரீஸ்
அங்கிருந்து பாரீஸ் நகருக்குச் சென்று அங்கும் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்..
#கிழ*க்கு ஆப்பிரிக்கா
பின்ன*ர் லண்ட*னிலிருந்து கிழக்கு ஆப்பிரிக்கா சென்றுவிட்டு இந்தியா திரும்பினார்!
#மொரீஷிய*ஸ்
நடிகராக இருந்தபோது, ஒரு நாட்டின் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பெருமை எம்.ஜி.ஆருக்கு உண்டு!
1974-ம் ஆண்டு மொரீஷியஸ் நாட்டின் அழைப்பை ஏற்று அந்நாட்டு குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக எம்.ஜி.ஆர். கலந்துகொண்டார்!
#அமெரிக்கா
1974-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களின் அழைப்பை ஏற்று எம்.ஜி.ஆர். அமெரிக்கா சென்றார். அமெரிக்க அரசின் தூதர் வரவேற்று அழைத்துச் சென்றார். ஹவாய் பல்கலைக்கழகத்தில் அளித்த பேட்டியின்போது சிக்கலான கேள்வி களுக்கு எம்.ஜி.ஆர். சாதுர்யமாகவும், நேர்மையாகவும் பதிலளித்து வியப்பில் ஆழ்த்தினார்! புகழ்பெற்ற மவுன்ட் சினாரியோ கல்லூரி சார்பில் அவருக்கு வரவேற்பிதழ் அளிக்கப்பட்டது. அரிசோனா பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் அளிக்க முன்வந்த போது அதை ஏற்க எம்.ஜி.ஆர். மறுத்துவிட்டார்!
ஜப்பான் உள்ளிட்ட கீழ்திசை நாடுகளில் படமாக்கி, தயாரித்து, இயக்கி, எம்.ஜி.ஆர். நடித்த படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’. நிஜத்திலும் அவர் உலகம் சுற்றிய வாலிபன்தான்!.........ns...
-
1972 அக் 20 தேதி வெளியான படம்தான் உதயம் புரடொக்ஷன்ஸாரின் "இதயவீணை". சென்னையில் குளோப் ஸ்ரீகிருஷ்ணா மகாலட்சுமி ராஜகுமாரி ஆகிய 4 திரையரங்குகளில் வெளிவந்து குளோபில் 105 நாட்கள் ஓடிய வெற்றிக் திரைக்காவியம்.
படத்தின் வெளிப்புற படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்தது. ஆரம்ப காட்சியிலேயே காஷ்மீரின் கொள்ளை அழகுடன் தலைவர் தோன்றும் காட்சி மிகவும் சிறப்பாக படமாக்கப்பட்டிருந்தது.
"உலகம் சுற்றும் வாலிபனின்" வெளிநாட்டு படப்பிடிப்புக்கு பேருதவியாக இருந்த மணியனுக்காக எம்ஜிஆர் நடித்துக் கொடுத்த படம். "உலகம் சுற்றும் வாலிபனுக்கு" முந்தி வந்து வெற்றி பெற்ற திரைப்படம். எம்ஜிஆரின் இயல்புக்கு மாறான கதை. மணியன் 'ஆனந்த விகடனில்' தொடராக எழுதி வெற்றி பெற்ற "இதயவீணை" என்ற நாவலின் கதை. பொதுவாக பத்திரிகையில் வருகின்ற கதை வெற்றி பெற்றால் அதை சினிமாவாக தயாரிக்கும் போது அநேக படங்கள் தோல்வியானதை பார்த்திருக்கிறோம். ஆனால் எம்ஜிஆரிடம் அதுவும் பொய்த்து விட்டது.
படம் வெற்றி பெற்று மணியனுக்கும் வித்வான் வே லெட்சுமணனுக்கும் ஒரு புது உத்வேகத்தை கொடுத்தது என்றே சொல்ல வேண்டும்.
பெரியவர் தலைவருக்கு தந்தையாக நடித்திருப்பார். 'பொன்னந்தி மாலைப்பொழுது' எத்தனை முறை பார்த்தாலும் புதிதாக தோன்றும். அப்படி ஒரு நேர்த்தி. பாடல் படமாக்கப்பட்ட விதம் அருமையாக இருக்கும். படத்தில் தலைவரின் ஆடை வடிவமைப்பு கண்கொள்ளா காட்சி.
'இன்று போல என்றும் வாழ்க' பாடல் சாந்தம் தவழும் தலைவரின் முகம் ஞானிகளை நினைவு படுத்தும். 'ஆனந்தம் இன்று ஆரம்பம்' பாடலில் பழைய "வேட்டைக்காரன்" ஸ்டைலில் இளமையாக வந்து கலக்கும் போது அனைவருக்கும் உற்சாகம் பீரிடுவதை பார்க்க முடியும். படத்தின் ஆரம்ப காட்சி ஷூட்டிங் அந்த பாடல் காட்சிதான் என்று நினைக்கிறேன். சிவகுமாரின் வயதுக்கு மீறிய நடிப்பை ரசிக்க முடியவில்லை. அவரெல்லாம் தலைவரை அடிக்கும் போது அவரிடம் மெச்சூரிட்டி இல்லாததை. அந்தக்காட்சி வெளிப்படுத்துகிறது.
நீராடும் அழகெல்லாம்' அருமையான மெலடி. 'ஒரு வாலுமில்லை பாடல்'
அன்றைய அரசியல் சூழ்நிலைக்கேற்ப எழுதிய பாடல் தலைவர் குழந்தையை வைத்து பாடியிருப்பார். கேமரா கோணங்கள் அந்த பாடலில் வெகு சிறப்பாக இருக்கும். 'வசந்தா உன் கையை அய்யா வசம்தா' போன்ற வசனங்கள் படத்துக்கு மேலும் சிறப்பு சேர்த்தது.
'தரையிலே ஓடுமே லாரி' என்று கேட்டதும் நம்பியார் உடனே 'தரையிலும் ஓடும் நான் நினைத்தால் நாலு பேர் தலையிலும் ஓடும்' என்பது அவரது குணாதிசயத்தை ரசிக்கக்கூடிய காட்சி.
தலைவர் அதிமுக ஆரம்பித்தவுடன் வெளிவந்த முதல் படம். அப்போதிருந்த சூழ்நிலையில் நல்ல அரசியல் விழிப்புணர்வு மிக்க படமாக இருந்திருந்தால் ரசிகர்களுக்கு ஊக்கம், உற்சாகம் அதிகமாக பெருகியிருக்கும். ஆனால் இது போன்ற குடும்ப கதைகள் வெளிவரவேண்டிய நேரம் அதுவல்ல. அந்த கால சூழ்நிலைக்கு ஏற்ற படம் "நம்நாடு" மாதிரியான திரைக்காவியம்தான் என்றாலும் தலைவர் படம் என்பதால் சென்னையில் சாதா திரையரங்கில் வெளியாகி 10 லட்சத்தையும் தாண்டி வசூல் செய்தது பிரமிக்க தக்கது.
சென்னையில் மொத்தம் 331 நாட்கள் ஓடி ரூ10,12,765.80 வசூலாகப் பெற்றது. நெல்லையில் 63 நாட்கள் ஓடி மொத்தம் 1,02,078.25 வசூலாக பெற்றது குறிப்பிடதக்கது. மதுரை தேவியில் தொடர்ந்து 100 காட்சிகள் அரங்கு நிறைந்து சாதனை செய்த முதல் படம் இதய வீணைதான். மொத்தம் 112 நாட்கள் ஓடி ரூ 3,11691.20 வசூலாக பெற்று சாதித்த படம் இதய வீணை.
திருச்சி பேலஸில் 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது. கோவையில் இரண்டு திரையரங்குகளில் தொடர்ந்து திரையிட்டு 116.நாட்களும், சேலத்தில் மூன்று தியேட்டரில் வெளியாகி 133 நாட்களும் ஓடியது.
தமிழகத்தில் மொத்தம் 31 திரையரங்குகளில் 50 நாட்கள் ஓடி முதல் ஆறு மாத காலத்துக்குள் 75 லட்ச ரூபாய் வசூல் செய்து சாதனை
படைத்தது.
சென்னை குளோபில் 105 நாட்களும் ஸ்ரீகிருஷ்ணா வில் 86 நாட்களும் மகாலட்சுமி மற்றும் ராஜகுமாரியில் 70 நாட்களும் ஓடி வெற்றியை பதிவு செய்தது. ஆனாலும் கோவையில் தலைவர் படத்துக்கே உரிய கெத்துடன் சிவாஜி படத்தின் வசூலை கால்பந்தாடி மகிழ்ந்ததை காணலாம். 'இதயவீணை'யின் 4 வார வசூலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் கணேசனின் படங்கள்
'தரிகிணதோம்' போட்டதை
பார்க்கவும். (இணைப்பில்). தூத்துக்குடி பாலகிருஷ்ணாவில் 40
நாட்கள் ஓடியது மேலும் சிறப்பு............ks.........
-
எல்லா நடிகர்களுமே தங்களுக்கு என்று ஒரு ஸ்டைல் வைத்திருப்பார்கள். திரையில் அதைக் காட்டுவார்கள். ஸ்டைல் என்ற பெயரில் சில நடிகர்களின் செயற்கையான போஸ்களும், வேண்டுமென்றே இழு....த்து, வெட்டி வெட்டி நடக்கும் நடையும் அஷ்டகோணல் முகங்களும் பார்க்கவே கண்றாவியாக இருக்கும். சில நடிகர்கள் திரையில் ஸ்டைல் என்ற பெயரில் ஏதாவது செய்வார்கள். நேரில், பொது இடங்களில் அவர்களின் நடவடிக்கைகள் மிகச் சாதாரணமாக இருக்கும். சீ.. சீ.. என்று ஆகிவிடும்.
ஆனால், திரையில் மட்டுமல்ல, நேரிலும், படப்பிடிப்பு இல்லாமல் இயல்பாக இருக்கும்போதும் பொது இடங்களிலும் எப்போதுமே ஸ்டைலாக தோற்றமளிக்கும் ஒரே நடிகர், ஒரே தலைவர், ஒரே மனிதர் மக்கள் திலகம் மட்டுமே. தாயின் மடியில் படத்தில் பிரம்பை வளைத்தபடி அவர் ஸ்டைலாக நிற்கும் போஸ் பாருங்கள். பிரம்பை நேராக பிடித்திருந்தால் ஸ்டைலாக இருக்காது. அதற்காக பிரம்பை அவர் எப்படி வளைத்து பயன்படுத்தியிருக்கிறார் பாருங்கள். புருவத்தை லேசாக நெரித்தபடி நெஞ்சை அள்ளும் புன்னகை. அடுத்தபடத்தை கவனியுங்கள். வழக்கமாக பொது இடங்களில் தோன்றும் தோற்றம். அப்போதும் ஸ்டைலாக நாடியில் கைவத்தபடி கலக்கல் போஸ். திரையிலோ, நேரிலோ எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் மாறாத, இளமை குன்றாத வசீகர சிரிப்பு அவருக்கு மட்டுமே சொந்தமானது.
ஸ்டைலில் மக்கள் திலகத்துக்கு ஒரே ஒருவர்தான் போட்டி. அது புரட்சித் தலைவர்தான்..........sy...
-
மக்கள் உள்ளத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
#நடந்த #நிகழ்ச்சி : .........
தென்காசிக்கு அருகேயுள்ள ஒரு கிராமத்தில் வேர்க்கடலை தோண்டும் வேலைகள் நடைபெற்றது. அங்கே ஏராளமான பெண்கள் வேலை பார்த்து வந்தனர். நாள் ஒன்றுக்கு 3 ரூபாய் கூலிக்கு வேலை பார்த்து வந்தார்கள். வேலை பார்க்கும் பெண்களுக்கெல்லாம் தலைவராக கமால்தீன் என்ற ஒருவர் உண்டு !
ஒரு நாள் கமால்தீன் எல்லாப் பெண்களையும் கூப்பிட்டு வரிசையாக நிறுத்தி அதாவது இந்த கிராமத்தில் 15 நாட்கள் தொடர்ந்து வேலை கொடுத்தது நாங்கள் தானே ?
நாளை ஒரு நாள் வேலை இருக்கும். அதனால் நாளை செய்யும் வேலைக்கு சம்பளம் கிடையாது. இலவசமாகச் செய்ய வேண்டும் என்றார். அதற்கு பெண்கள் எல்லோரும் நாங்கள் இலவசமாக செய்கிறோம் ஆனால் நீங்கள் ஒரு நாளைக்கு எம்.ஜி.ஆரை கூட்டி வந்து நேரில் காட்டி விடுங்கள் என்றார்கள். கமால்தீன் திகைத்துப் போனார். 3 ரூபாய் சம்பாதித்தால் தான் சாப்பாடு என்ற நிலையில் இருக்கும் பெண்களின் உள்ளங்களில் கூட புரட்சி நடிகர் குடிபுகுந்து இருப்பதை கண்கூடாகக் காண்கிறோம்.
நேரில் மக்கள் திலகத்தை காட்டிவிட்டால் எத்தனை நாளைக்கும் பட்டினி கிடக்க கூட தயாராக இருப்பார்கள் போல்.
( திரைச் செய்தி - 06- 05- 1967 )
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க...vs...
-
இந்திய அளவில் ...ஏன் உலக அளவில் ...கூட அதிகமான இரட்டை வேட வெற்றி படங்களை தந்தவர் நம் இதயதெய்வம் அவர்கள் மட்டுமே.
1958 இல் மன்னன் மார்த்தாண்டன், போராளி வீராங்கன் ஆக நாடோடி மன்னனில்...
1960 இல் தேசிங்கு மற்றும் தாவூத்கான் ஆக ராஜா தேசிங்கில்.
1961 இல் அறிவழகன் மற்றும் அவர் தந்தை ஆக அரசிளங் குமரியில்.
1963 இல் விண்வெளி கோமாளி மற்றும் போஜன் ஆக கலை அரிசியில்..
1965 இல் ராமு மற்றும் இளங்கோ ஆக எங்க வீட்டு பிள்ளையில்.
1965 இல் மனோகர் வஜ்ரவேல் ஆக நம் ஆசைமுகத்தில்.
1968 இல் மக்கள் திலகம்...மற்றும் சரவணன் ஆக தேர்திருவிழாவில்.
1968 இல் ஆனந்த் மற்றும் சேகர் ஆக நாம் குடியிருந்தகோவிலில்.
1969 இல் வீர வேங்கையன் மற்றும் அவர் தந்தை ஆக அடிமைபெண்ணில்.
1970 இல் வேலன் மற்றும் ரகு ஆக மாட்டுக்கார வேலனில்.
1970 இல் மக்கள் திலகம் மற்றும் தங்கம் ஆக எங்கள் தங்கத்தில்
1971 இல் மணிவண்ணன் மற்றும் கரிகாலன் ஆக நீரும் நெருப்பில்..
1973 இல் சரித்திர வெற்றிபடம் உ.சு.வா வில் முருகன் மற்றும் அவர் தம்பி ராஜு ஆக.
1973 இல் பொன்னையா மற்றும் முத்தையா ஆக பட்டிக்காட்டு பொன்னையாவில்..
1974 இல் மாணிக்கம் குமார் ஆக நேற்று இன்று நாளையில்..
ரத்தினம் என்றும் உண்டு.
1974 இல் ராமு மற்றும் உஸ்தாத் அப்துல் ரகுமான் ஆக சிரித்து வாழ வேண்டும் அதில்.
1975 இல் சுந்தரம் மற்றும் ரஞ்சித் ஆக நினைத்ததை முடித்ததில்..
1975 இல் மீண்டும் சங்கர் விஜயகுமார் ஆக நாளை நமதே இல்.
1976 இல் செல்வம் மற்றும் ராஜா ஆக ஊருக்கு உழைத்தத்தில்.
இன்னும் ஒப்பந்தம் செய்து வெளிவராத படங்கள் தவிர 19 இரட்டை வேட படங்களில் தனி முத்திரை பதித்த ஒரே நடிகர் நம் தலைவர் மட்டுமே ஆவார்.
வாழ்க அவர் புகழ்.
உங்களில் ஒருவன் நன்றி....தொடரும்.
முடிந்தால் மோதி பாருங்கள்... இருந்தால் ஆமோதிக்கிறோம்.
தலைவர் ஒரு பேட்டியில் சொல்கிறார்.
உங்களுக்கு பிடித்த படம் உங்கள் இரட்டை வேடங்களில் எந்த படம் என்று ..
அதற்கு அவர் சொன்ன பதில்..குடியிருந்த கோயில் என்று............Mn...
-
"சபாஷ் மாப்பிளே" 1961 ஜீலை 14ம் தேதி வெளியான முழு நீள காமெடி படம். மக்கள் திலகம் காமெடி முத்திரையில் நடித்த ஒரே படம்.
மக்கள் திலகத்திடமிருந்து இப்படி ஒரு காமெடி படத்தை மக்கள் எதிர்பார்க்கவில்லை. அதனால் அந்த காலகட்டத்தில் இந்த படத்தை சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை என்று நினைக்கிறேன். ஆனால் படம் வெளிவரும் நேரத்தில் பல தியேட்டர் காரர்கள் போட்டி போட்டார்கள் படத்தை எடுப்பதற்கு. அந்த அளவுக்கு படத்தின் மீது ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.
மும்பையில் படப்பிடிப்பு நடத்தியது ஒரு காரணமாக இருக்கலாம். மும்பையை பார்க்கும் போது ஏதோ வெளிநாட்டை பார்ப்பது போல மக்கள் ரசித்தார்கள். ரசிகர்களிடம். முன்பே இது முழுநீள காமெடி படம், என்ற விஷயத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தார்களானு தெரியவில்லை. எனக்கு மிகவும் பிடித்த படம் "சபாஷ் மாப்பிளே"
பாடல்கள் k v மகாதேவன் இசையில் அத்தனையும் ஜொலிக்கிறது. இருப்பினும் சீர்காழி கோவிந்தராஜனை சோகப் பாடலுக்கு மட்டும் பயன்படுத்தி இருக்கலாம். சூலமங்கலத்தின் குரல் தேனாக இனிக்கிறது.. 'மாப்பிள்ளே மாப்பிள்ளே வாராரு', 'ஜிகு ஜிகு உடையிலே', 'யாருக்கு யார் சொந்தம் என்பது' போன்ற பாடல்கள் காதுக்கு இனிமை சேர்க்கின்றது., 'வெள்ளிப்பணத்துக்கும் நல்ல குணத்துக்கும் வெகு தூரம்' இந்த பாடல் மட்டும் ராகவன் பாடியிருப்பார். 'தினம் சிரிப்பவர் சில பேர் அழுபவர் பல பேர்', 'முத்து போலே மஞ்சள் கொத்து போலே" போன்ற முத்தான பாடல்கள் நிறைந்த பொழுது போக்கு படம் "சபாஷ் மாப்பிளே".
எம்ஜிஆருக்கு ஜோடி மாலினி. படத்தின் டைரக்டர் ராகவனின் மனைவி என்று நினைக்கிறேன்..
ஏற்கனவே "சபாஷ் மீனா"விலும் இவர்தான் கதாநாயகி. இதைத்தவிர "அழகுநிலா" என்ற படத்திலும் நடித்த ஞாபகம். எம்ஜிஆருக்குள் இப்படி ஒரு காமெடி சென்ஸா என்று அதிசயிக்க வைத்த படம். வேலை தேடி மும்பை சென்று பணத்தை பறிகொடுத்து
பின் சினிமாவில் நடித்து என்று சோகமயமாக சில காட்சிகள் செல்வது நமக்கு கொஞ்சம் தளர்வாக இருந்தாலும் போகப்போக காமெடியின் உச்ச கட்டத்தில் கொண்டு விடுவார்கள்.
ரசிகர்கள் எம்ஜிஆரை காமெடி ரோலில் பார்க்க விரும்பவில்லை போலும். ஆனாலும் ஓரளவு சுமாரான வெற்றியை பதிவு செய்தது. மறு வெளியீட்டில் நிகரற்ற வெற்றியை பெற்றது. முதல் வெளியீட்டில் நான் பார்க்கவில்லை. ஆனால் பலமுறை தூத்துக்குடி ஜோசப்பில் மறுவெளியீட்டில் திரையிடும் போதுதான் பார்த்தேன். ஆனால் எப்போதுமே படம் எங்கும் ஓடுவதால் புதிய காப்பி திரையிடப்படவில்லை. மிகவும் 'கட்' ஆன பிரிண்டையே அடிக்கடி திரையிடுவார்கள்.
விநியோகஸ்தர்கள், எப்போதுமே இரண்டு காப்பி வைத்திருப்பார்கள். ஒன்று டூரிங் தியேட்டரில் ஓட்டுவதற்கு மற்றொன்று சிட்டியில் திரையிடுவதற்கு. நல்ல பிரிண்டை தலைகீழாக நின்றாலும் டூரிங் தியேட்டருக்கு கொடுக்க மாட்டார்கள். நாம் விநியோகஸ்தரை அணுகி பிரிண்ட் கேட்டால் எந்த ஊர்? என்று கேட்டு புரஜெக்டரின் தன்மை அறிந்து கொடுப்பார்கள்.
சில ஊரிலிருந்து வருபவர்களிடம் என்னப்பா பிரிண்டை இப்படி கொத்தி குதறி வைத்திருக்கிறீர்கள். அதை ஒட்டி எடுப்பதற்குள் 20 நிமிட காட்சி கட் ஆகிவிட்டதப்பா அதற்கு அபராதம் வசூலிக்க போகிறோம் என்று மிரட்டுவார்கள். அடுத்த தடவை புரஜெக்டரை மாத்தலைன்னா இந்த பக்கம் வந்திராதீங்க. வந்தாலும். எம்ஜிஆர் படம் தர மாட்டேன். அங்க பார் ஓடாத எத்தனையோ சிவாஜி படங்களும் மற்ற படங்களும் இருக்கு. எதையாவது எடுத்து போய் தொலை என்று சொல்லி விரட்டி அடிப்பதை பார்த்திருக்கிறேன்.
சில படங்களை சனியன் இங்கிருந்து போய் தொலைய மாட்டேங்குது. அடிக்கடி இதை நாமதான் ஓட்ட வேண்டியிருக்குது, தியேட்டரில் எங்க ஓடுது என்று அலுத்துக்கொள்வதையும் பார்த்திருக்கேன். சிவாஜி படம் போனால் ரிட்டர்ன் டிக்கெட்டோடத்தான் போகும். இரண்டு நாளில் திரும்பவும் பெட்டிக்குள் வந்து அடைந்து விடும். ஆனால் "சபாஷ் மாப்பிளே" எப்போதும் எங்காவது ஓடிக் கொண்டே இருக்கும். சென்னையில் மார்ச் 23 வெளியீடான "திருடாதே" ஓடிய அரங்குகளான பிளாசா, பாரத், மகாலட்சுமியில் ஜீலை 14 முதல் வெளியாகி சென்னையில் 48 நாட்களும் மற்ற ஊர்களில் அதிகபட்சமாக 70 நாட்களும் ஓடி சராசரி வெற்றியை பதிவு செய்தது.
"சபாஷ் மாப்பிளே" ஓடி முடிந்ததும் அதே அரங்குகளில் "நல்லவன் வாழ்வான்" ஆகஸ்ட் 31 முதல் திரையிடப்பட்டது. "நல்லவன் வாழ்வான்" 68 நாட்கள் ஓடியதை தொடர்ந்து நவ 7 ல் வெளியான "தாய் சொல்லை தட்டாதே" அதே திரையரங்குகளில் ரிலீஸ் செய்தார்கள். இப்படி ஒரே குரூப் திரையரங்குகளில் தொடர்ந்து தலைவரின் படங்களே வரிசையாக வெளிவந்து ஆண்டு இறுதி வரை ஓடியது ஒரு அதிசயமே..........ks.........
-
பொன்மனச்செம்மல்...தன் அன்றாட வாழ்வில் என்ன செய்தாரோ .. அதைச் சொல்ல ஒரு படம் -
"#நீதிக்குத் #தலைவணங்கு"
இந்த தலைப்பு மக்களை எந்த அளவு கவர்ந்தது என்பதற்கு ஒரு சிறு நிகழ்ச்சி ...
பாரிமுனையில் பழம் விற்கும் ஒரு தாய், புரட்சித்தலைவர் நினைவாற்றல் இழந்து படுத்திருக்கும் போது, அவர் துதித்து வந்த தாய் மூகாம்பிகைக்கு உயர்நீதிமன்றத்தின் சுவரை ஒட்டி ஒரு சிறு கோவில் அமைத்து, அந்த தாயும், சக வியாபாரிகளும், தலைவர் நலம் பெற வணங்கினர்.
தினசரி பூஜை புனஸ்காரங்களுக்கான செலவுகளுக்கு அந்த தாய் மிகவும் கஷ்டப்பட்டார்...அதைப்பற்றி கேட்டதற்கு..."எனக்கு ஒரு கஷ்டமும் இல்லப்பா, நாங்க எங்க உசுரான தலைவருக்கு, எங்க திருப்திக்காக தான் செய்யறோம்...அவர் கேக்கல...
இதில எங்களுக்கு கஷ்டம் என்னன்னா இக்கோயிலை இடிக்கச் சொல்றாங்க...நாங்க தினம் தினம் போராடறோம்..என்று கண்ணீர் மல்கினார்.
அது சரி கோயில் கட்ட இந்த இடத்தை ஏன் தேர்ந்தெடுத்தீங்க..? எனக் கேட்டதற்கு..
அந்த தாய் கூறியது ..."#என் #தலைவன் .. #நீதிக்குத் #தலைவணங்கினாருப்பா...#மத்தவங்க #போல "#நீதிக்குதண்டனை" #கொடுக்கலை...( 'நீ.தண்டனை.. படம் கருணாநிதி திரைக்கதை வசனம் எழுதியது)
கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் என்பது போல...
#பொன்மனச்செம்மல் #புரட்சித்தலைவரின் #திரைப்படங்களின் "#தலைப்புகள்" #கூட #மக்களின் #மனதில் #நற்பண்புகளை #விதைத்துவிடும்............bsm...
-
திருச்சி மாநகரில் திராவிடத்தின் தலைமகன் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் காலத்தால் அழியாத திரைக்காவியங்கள்* மகத்தான முறையில் ஓடி வரலாறு படைத்துள்ளது...
நகரில் அதிக அளவில் 100 நாட்களை கடந்து சாதனை படைத்த திரைப்படங்கள் இன்று வரை மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ஒருவருக்கு மட்டுமே அதிகமாகும்.
நகரில் 100 காட்சிகளுக்கு மேல் அரங்கு நிறைந்து சாதனை படைத்த திரைப்படங்கள் யாவும் புரட்சித் தலைவருக்கு மட்டுமே அதிகமாகும்.
நகரில் வெள்ளி விழாவை கடந்து 200 நாட்களுக்கு மேல் சாதனை படைத்த காவியங்கள் இரண்டு...
எங்கவீட்டுப்பிள்ளை*
236 நாட்கள்*
உலகம் சுற்றும் வாலிபன்*
203 நாட்கள்
நகரில் மக்கள் திலகத்தின் அதிக கருப்பு-வெள்ளை திரைப்படங் களும், வண்ணப் படங்களும் அதிக அளவில் 100 நாட்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
மக்கள் திலகத்தின் காவியங்கள் தொடர்ந்து ஓடி சாதனைகளை படைத்து முதலிடம் வகிக்கிறது.
திரை உலக சக்கரவர்த்தி மக்கள் திலகத்தின் 43 திரைப்படங்கள் ஒரே திரையரங்கில் 100 நாட்களை கடந்து சாதனை படைத்த அதிசயம் எந்த நடிகருக்கும் கிடையாது.
12வாரங்களுக்கு மேல் ஓடி* தொடர் வெளியீட்டில் 17 காவியங்கள் 100 நாட்களை கொண்டாடி சாதனை படைத்து உள்ளது-
1977 வரை நகரில் மக்கள் திலகத்தின் திரைக்காவியங்களே அதிக அளவில் வசூலில் முன்னணி படைத்துள்ளது.*
100 நாட்களை வெற்றிக்கொண்ட திரைக்காவியங்கள் பட்டியல்.....
தொடர்கிறது.............ur...
-
திருச்சி மாநகரில் 100 நாட்களை கடந்த ஓடிய மக்கள் திலகத்தின் முதல் திரைப்படப் பட்டியல்....
1947 ராஜகுமாரி*
வெலிங்டன் 147 நாட்கள்*
1948 மோகினி*
கெயீட்டி 105 நாட்கள்
1950 மருத நாட்டு இளவரசி
*கெயீட்டி 105 நாட்கள்
1950 மந்திரிகுமாரி*
ஸ்டார் 140 நாட்கள்*
1951 மர்மயோகி*
வெலிங்டன் 126 நாட்கள்*
1951 சர்வாதிகாரி**
ஸ்டார் 117 நாட்கள்
1952 அந்தமான் கைதி*
வெலிங்டன் 105 நாட்கள்*
1952 என் தங்கை*
ஜூபிடர் 147 நாட்கள்*
1953 ஜெனோவா*
ராஜா 105 நாட்கள்*
1954 மலைக்கள்ளன்*
வெலிங்டன் 133 நாட்கள்**
1955 குலேபகாவலி*
பிரபாத் 166 நாட்கள்*
1956 அலிபாபாவும் 40 திருடர்களும்
வெலிங்டன்147 நாட்கள்*
1956 மதுரைவீரன்*
ஜூபிடர் 169 நாட்கள்*
1956 தாய்க்குப்பின் தாரம்*
ராக்ஸி 147 நாட்கள்
1957 சக்கரவர்த்தி திருமகள்*
கெயீட்டி 126 நாட்கள்*
1958 நாடோடி மன்னன்*
ராக்ஸி 161 நாட்கள்*
1961 திருடாதே*
ராக்ஸி 126 நாட்கள்*
1961 தாய் சொல்லைத்தட்டாதே**
ஜுபிடர் 126 நாட்கள்*
1962 தாயைக்காத்த தனயன்*
பேலஸ் 140 நாட்கள்
1964 பணக்கார குடும்பம்*
பேலஸ் 115 நாட்கள்
1965 எங்க வீட்டுப்பிள்ளை
ஜூபிடர்* 236 நாட்கள்**
1966 அன்பே வா*
ராஜா 126 நாள்*
1967 காவல்காரன்*
ஜுபிடர் 126 நாள்.*
1968 ரகசிய போலிஸ் 115
ஜூபிடர் 110 நாட்கள்
1968 குடியிருந்த கோயில்
ராஜா 126 நாள்
1968 ஒளி விளக்கு
ராஜா 116 நாட்கள்
1969 அடிமைப்பெண்
ஜூபிடர் 133 நாட்கள்
1969 நம்நாடு
வெலிங்டன் 119 நாட்கள்
+++++++++++++++++++++++
28 படங்கள் 100 நாட்களை கடந்துள்ள முதல் பட்டியல்...
அடுத்து வசூலுடன்*...
பட்டியல் தொடரும்.......ur...
-
1956 :.மதுரை வீரன்
ஜூபிடர் :169 நாள்
வசூல்: 2,46,381.17
1958 : நாடோடி மன்னன்
ராக்ஸி :.161 நாட்கள்
வசூல் : 2,69,706. 42
1965 : எங்கவீட்டுப்பிள்ளை
ஜூபிடர் : 236 நாள்
வசூல் : 3,36,407.50
1966: அன்பே வா
ராஜா : 126 நாள்
வசூல்: 2,45,781.05
1967 : காவல் காரன்
ஜூபிடர் : 126 நாள்
வசூல் : 2,20,137.50
1968 ரகசிய போலிஸ்115
ஜூபிடர் 110 நாள்
வசூல் : 2,15,306.77
1968 :குடியிருந்த கோயில்
ராஜா 126 நாள்
வசூல் : 2,68,922.30
1968 : ஒளி விளக்கு
ராஜா :116 நாள்
வசூல் : 2, 41,621.65
1969 : அடிமைப்பெண்
ஜூபிடர் : 133 நாள்
வசூல் :.3,14,323.24
1969 : நம்நாடு
வெலிங்டன் : 119 நாள்
வசூல் : 2,63,805.38
++++++++++++++++++
வசூல் விபரங்கள் தொடரும்.......ur...
-
திருச்சி நகரில் மக்கள் திலகம் படைத்த 2 வது சாதனை பட்டியல்....
1970 .....ல்
மாட்டுக்கார வேலன்
பேலஸ் 150 நாள் : 3,00,503.50
என் அண்ணன்
வெலிங்டன் 110 நாள் : 2,59,412.65
தேடி வந்த மாப்பிள்ளை
ராக்ஸி 84 நாள் : 2,17,995.55
தொடர்ந்து மத்மாமணி அரங்கில்*
18 நாட்கள் ஒடி...இணைந்து 100 நாளை கண்டது.....
எங்கள் தங்கம்
பேலஸ் 105 நாள் : 2,41,520.60
தலைவன்
ராக்ஸி 56 நாள் : 1,77,550.75
++++++++++++++++++++++++++
1971......ல்
குமரிக்கோட்டம்
பேலஸ் 86 நாள் :.2,19,503.30
ரிக்க்ஷாக்காரன்
பேலஸ் 142 நாள் : 3,37,402.55
நீரும் நெருப்பும்
ஜூபிடர் 78 நாள் : 2,23,467.45
+++++++++++++++++++++++++++
1972 ....ல்
நல்லநேரம்*
ஜூபிடர் 126 நாள் : 3,29,260.73
தொடர்ந்து ராமகிருஷ்ணாவில் வெளியாகி 28 நாள் ஒடியது.
இதய வீணை*
பேலஸ் : 112 நாள் : 3,11,900.42
+++++++++++++++++++++++++++
1973 ....ல்
உலகம் சுற்றும் வாலிபன்
பேலஸ் 203 நாள் : 5,14,729.73
நகரில் அதிக காட்சி (167) அரங்கு நிறைந்து முதன் முதலில்*
5 லட்சத்தை பெற்றக்காவியம் .
+++++++++++++++++++++++++++++
மேலும் சாதனைகள் தொடரும்.........
நன்றி ...
திருச்சி மாவட்ட எவர்கிரீன் ஹீரோ எம்.ஜி.ஆர் மன்ற மலர்..........ur...
*
-
தனியார் தொலைக்காட்சிகளில் நடிக மன்னன் எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள்*24/09/20 முதல் 30/09/20 வரை வெளியான*பட்டியல் விவரம்*
------------------------------------------------------------------------------------------------------------------------------
24/09/20* - சன் லைப் - காலை 11 மணி - நவரத்தினம்*
* * * * * * * * * மெகா டிவி -மதியம் 12 மணி -கலங்கரை விளக்கம்*
* * * * * * * *புதுயுகம் டிவி - இரவு 7 மணி - சங்கே முழங்கு*
* * * * * * * * *பாலிமர்* டிவி -இரவு 11 மணி - விவசாயி*
25/09/20* *-சன் லைப் - காலை 11 மணி - எங்க வீட்டு பிள்ளை*
26/09/20 -* ஜெயா டிவி -மாலை 5.30 மணி -ஆயிரத்தில் ஒருவன்*
* * * * * * * *தமிழ் மீடியா* -இரவு* 8 மணி - உலகம் சுற்றும் வாலிபன்*
27/09/20 - மெகா டிவி* - அதிகாலை 1 மணி - குடியிருந்த கோயில்*
* * * * * * * *ராஜ் டிஜிட்டல் -காலை* 9.30 மணி - ரகசிய போலீஸ்* 115
* * * * * * * மெகா 24* * -பிற்பகல் 2.30 மணி -* தாய்க்கு தலைமகன்*
* * * * * * * *ராஜ் டிஜிட்டல் -இரவு 8.30மணி - தேடிவந்த மாப்பிள்ளை*
28/09/20 - சன் லைப் - காலை 11 மணி* - நல்ல நேரம்*
* * * * * * * * முரசு* -மதியம் 12மணி/ இரவு 7 மணி -பெற்றால்தான் பிள்ளையா*
* * * * * * * * புதுயுகம் டிவி -இரவு 7 மணி - பெற்றால்தான் பிள்ளையா*
29/09/20-* சன் லைப் - காலை 11 மணி* - காவல்காரன்*
* * * * * * * * மீனாட்சி டிவி -இரவு 9.30மணி - நல்ல நேரம்*
* * * * * * * * பாலிமர் டிவி -இரவு 11 மணி -நவரத்தினம்*
30/09/20 - சன் ;லைப் - காலை 11 மணி -நான் ஏன் பிறந்தேன்*
* * * * * * * * மூன் டிவி* - பிற்பகல் 12.30மணி -காதல் வாகனம்*
* * * * * * * *மெகா* 24 - பிற்பகல் 2.30மணி -தர்மம் தலைகாக்கும்*
* * * * * * * *மீனாட்சி*டிவி*-இரவு 9.30 மணி - வேட்டைக்காரன்*
* * * * * * * எம்.எம்.டிவி - இரவு 10 மணி - கணவன்*
-
கவிஞர் வாலி புரட்சித் தலைவரைப் பாராட்டி இப்படிச் சொன்னார்..
‘‘மனிதர்களில் எவ்வளவோ நடிகர்கள் உண்டு. நடிகர்களில் நான் பார்த்த முதல் மனிதன் நீதான்’’
அவர் சொன்னதுபோல சினிமாவில் எவ்வளவோ நடிகர்கள் இருக்கலாம். அவர்கள் எல்லாம் வெறும் நடிகர்கள். அவ்வளவுதான். கூலிக்கு மாரடித்து பணம் சம்பாதிப்பவர்கள். நடிப்புக்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தம் இருக்காது. கர்ணனாக நடிப்பவன் கஞ்சனாக இருப்பான். கடவுளாக நடிப்பவன் குடிகாரனாக இருப்பான். மனிதர்களிலேயும் நடிப்பவர்கள் உண்டு. ஆனால், நடிகராக இருந்தும் பணம் மட்டுமே வந்தால் போதும் என்று கண்ட படங்களில் நடிக்காமல், ஒரு கொள்கையோடு நடித்து, தனது நடிப்பால், உழைப்பால் கிடைத்த பணத்தையும் மக்களுக்காகவே அள்ளிக் கொடுத்தவர் புரட்சித் தலைவர்.
புகைப்படத்தை பாருங்கள். எந்த ஒரு நடிகரையோ, எந்த ஒரு தலைவரையோ ஒரு ஏழைக் கிழவி தனது சோகத்தைப் போக்க இப்படி கட்டி அணைத்தபடி ஆறுதல் தேட முடியுமா? புரட்சித் தலைவரும் வேறுபாடு பார்க்காமல், அருவெறுப்பு இல்லாமல் அந்த ஏழைக் கிழவியை எப்படி பாசத்தோடு ஆறுதலாக அணைத்திருக்கிறார் பாருங்கள்.
மக்கள் திலகம் வெறும் நடிகர் அல்ல. அதற்கு அப்பாற்பட்ட தலைவர் மட்டுமே அல்ல. அதற்கும் மேலாக நல்ல மனிதர் மட்டுமே அல்ல. அதை எல்லாம் தாண்டி ஏழைகளின் கண்கண்ட கடவுள்.
மகான் " எம்ஜிஆர் "......... Swamy.........
-
சபாஷ் மாப்பிள்ளை ரசிக்கத்தக்க படம். தனக்கு ஆக்*ஷன் நடிப்பு மட்டுமின்றி, காமெடி நடிப்பும் இயற்கையாக வரும் என்று மக்கள் திலகம் நிரூபித்த படம். திருட்டு கொடுத்த பணத்தை கம்பெனியில் கட்டுவதற்காக மக்கள் திலகம் மும்பை சென்று கஷ்டப்பட்டு பணம் சம்பாதித்து வந்து அதையும் திருட்டு கொடுப்பதும் ஜெயிலுக்கு போவதும் எதிர்பாராத ட்விஸ்ட். படம் வெளியான 49 வது நாளில் நல்லவன் வாழ்வான் படம் வெளியானதும் மாப்பிள்ளையின் ஓட்டம் தடைபட்டதற்கு காரணம். சபாஷ் மாப்பிள்ளை படத்தை பார்த்துவிட்டு 'சபாஷ் எம்ஜிஆர்' என்று அண்ணா பாராட்டி அது செய்தியாகவும் வந்தது. இதைவிட வேறு என்ன சிறப்பு வேண்டும்?.........Sy...
-
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர். -வின்*டிவியில் சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*29/09/20 அன்று அளித்த தகவல்கள்*
----------------------------------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் என்கிற மகோன்னதமான கலைஞன், மகோன்னதமான மனிதரின் மகோன்னதமான மகத்தான* பண்பு என்பது எந்த அளவிற்கு மக்களை சென்றடைந்துள்ளது என்பது விந்தையிலும் விந்தை .இன்றைக்கும் ஒரு பல்கலை கழகம் போல அவரது படங்களின் பாடங்கள், படிப்பினைகள் எவ்வளவு பேர்களின் வாழ்க்கைக்கு ஊக்கமும் , நம்பிக்கையும் தருவதாக இருக்கின்றது என்பதை நாம் பார்த்து கொண்டிருக்கிறோம் .
மும்பை தாராவியில் இருந்து புலவர் ராமச்சந்திரன் குறிப்பிட்டு சொல்கிறார் .நீங்கள் கண்டிப்பாக வத்தலகுண்டு ஆறுமுகம் பற்றி சொல்லித்தான் ஆகவேண்டும் .ஏனென்றால் அவர் எம்.ஜி.ஆரின் உண்மை விசுவாசி .உண்மையில் எம்.ஜி.ஆரின் குணம் என்னவென்றால் தனக்காக பாடுபட்டவர்கள், காயப்பட்டவர்கள்,அவதிப்பட்டவர்கள், உயிர் நீத்தவர்கள் இல்லத்திற்கு சென்று ஆறுதல் சொல்வது மட்டுமின்றி ,அவர்களின் குடும்பத்திற்கு தேவையான அளவு நிதி உதவி, அளித்திருக்கிறார் .தொடர்ந்தும் அதை செய்திருக்கிறார். நன்றி மறவாத நல்ல மனம் கொண்டவர் எம்.ஜி.ஆர். அவரே ஒரு படத்தில் இதை பாடியிருப்பார் .அதுவே என் மூலதனம் ஆகும் என்று .எம்.ஜி.ஆரிடம் என்றைக்கோ உதவி பெற்றவர்கள், கடிதம் பெற்றவர்கள் கூட ,அவர் முதல்வரான பின்பு, கோட்டைக்கு சென்று ,நீங்கள் எனக்கு இப்படி ஒரு கடிதம் எழுதி இருக்கிறீர்கள் நினைவிருக்கிறதா என்று காட்டி ,பேசி ,சில உதவிகள் பெற்றிருக்கிறார்கள் .மக்களோடு* நேரடியாக ,மக்களுக்காக மக்களிடமிருந்து கற்று கொண்டு ,மக்களை போலவே செய்து ,மக்களுக்காகவே இருந்தவர், வாழ்ந்தவர்* என்பதற்கு பல்வேறு சான்றிதழ்களை அவரது வாழ்க்கையில் குறிப்பிட்டு சொல்லலாம் .
தமிழகத்திற்கும், கர்நாடகத்திற்கு இடையே காவிரி நீர் பிரச்னைபல காலமாக இருந்து வந்தது .இந்த பிரச்சினையை தற்காலிகமாக தீர்த்து வைப்பதற்கு எம்.ஜி.ஆர் திடீரென புறப்பட்டு பெங்களூரு செல்கிறார் .உள்ளூர் அமைச்சர் ரகுபதியை காண செல்கிறார் .அங்கு சென்றதும் ,ரகுபதியின் தாயார் உடல்நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார் என தெரிந்து அவரை சென்று பார்க்கிறார் .அந்த தாயார் எம்.ஜி.ஆரிடம் பரிவுடன் ,நீங்கள் எங்கள் இல்லத்திற்கு சென்று உணவருந்தி விட்டுத்தான் செல்ல வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறார் .நான் எப்படி உங்கள் வீட்டில் சாப்பிடுவது .உங்கள் மகன்தான் எங்களுக்கு தண்ணீர் தராமல் தண்ணி காட்டுகிறார் என்றார் .உடனே அவர் ரகுபதியின் கையை பிடித்து அவர் கேட்டபடி உடனே தண்ணீர் கொடு என்று கேட்டு கொள்ள ,ரகுபதி உடனே,மருத்துவமனையில் இருந்தபடியே*, கர்நாடக முதல்வர்,மற்றும் தேவகவுடா போன்றவர்களிடம் பேசி உடனடியாக குறிப்பிட்ட அளவு தண்ணீர் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விட ஏற்பாடு செய்தார் .இதுதான் எம்.ஜி.ஆரின் சாமர்த்தியம் ,உத்தி .,தந்திரம்,அன்பு வேண்டுகோள்* என்றுஅந்த காலத்தில் சொல்வார்கள் .
மலைக்கள்ளன் படப்பிடிப்பு நடந்து வந்த சமயம் .அன்றைக்கு படப்பிடிப்பு முடிந்ததும் இசை அமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடுவிடம் எங்கள் உறவினர் இல்லம் அருகில்தான் உள்ளது .வாருங்கள் போய்விட்டு வரலாம் என்று காரில் செல்கிறார் .அப்போது நள்ளிரவு நேரம் .அது ஒரு குடிசைவீடு .அந்த வீட்டில் எம்.ஜி.ஆரின் உறவினரான குஞ்சப்பனின்* உறவினர் தங்கியுள்ளார் .அந்த நள்ளிரவில் சாப்பிட என்ன உள்ளது என்று எம்.ஜி.ஆர். கேட்கிறார் .ஐயா ,மோர் குழம்பு சாதமும், வறுத்த மீன் உள்ளது என்கிறார்கள் .எம்.ஜி.ஆர். பரவாயில்லை இந்த உணவாவது கிடைத்ததே என்றார்.பிற்காலத்தில்* .பல கோடி குழந்தைகளின் வயிற்று பசியை போக்க* சத்துணவு திட்டம் அமுல்படுத்தியவர்*அன்றைக்கு தன்* நண்பருடன் எந்தவித சங்கோஜமும் இல்லாமல் அந்த எளிய உணவை அருந்தினார் .அதுமட்டுமல்ல அந்த வீட்டில் உள்ளவரிடம் நள்ளிரவு நேரத்தில் மோர் சாதம் அருந்துவதைவிட ,கொஞ்சம் ரசம் வைத்து கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டு விரும்பி சாப்பிட்டாராம் .பசித்த வயிற்றுக்கு உணவிட வேண்டும் இங்கு வாழும் மனிதர்களுக்கெல்லாம் என்பது போல அவர் சந்திக்கின்ற ஒவ்வொரு மனிதர்களை எல்லாம் வந்து, மனிதர்களின் மிக பெரிய பிரச்னை என்பது பசிதான் ,அந்த பசி மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் மிக பெரிய பிரச்னைகள்,மிக பெரிய புரட்சிக்கான அடிப்படை காரணங்களே இல்லாமல் போயிருக்கும் .அப்படியான பசியை போக்குவது ,மற்றவர்களை உண்ணவைத்து பார்த்து ரசிப்பது என்பதில் சந்தோசம் அடைவது போன்ற பண்புகள் இருந்ததால்தான் அவர் மகோன்னதமான மனிதராக இன்றைக்கும் கருதப்படுகிறார் .*
நாடோடி மன்னன் படத்தில்*முதியோர் பென்ஷன் திட்டம், தொழில் கல்வி, குடிசை மாற்று வாரியம் ,விவசாயிகள் நல திட்டம் , பெண்கள் பாதுகாப்பு* திட்டம் என்று பல்வேறு திட்டங்கள் தேர்தல் அறிக்கையில் கடந்த காலத்தில் மட்டுமல்ல வரும் காலத்திலும் உள்ள தேர்தல் அறிக்கையில் இடம் பெறக்கூடிய விஷயங்களை எல்லாம் அப்போதே அவர் சிந்திப்பதற்கான அல்லது கட்சியின் திட்டத்தை இவரது திட்டமாக அறிவித்தாரா ,அல்லது கட்சிக்கு இந்த திட்டங்களை முன்வைத்தாரா என்று திரு.துரை பாரதி கேட்டதற்கு*
திரு.கா. லியாகத் அலிகான் அளித்த பதில் : புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். கட்சிக்கு நீங்கள் குறிப்பிட்ட படி இந்த திட்டங்களை முன்வைத்தார் .மக்களுக்காக இந்த திட்டங்களை அமுல்படுத்தவேண்டும் என்று அப்போதே அவர் யோசித்திருக்கிறார் .1957ல்* நாடோடி மன்னன் படம் ஆரம்பிக்கப்பட்டது .1958ல் ஆகஸ்ட் 22ந்தேதி படம் வெளியானது .அவர் எவ்வள்வு பெரிய ஞானி என்பதை சில செய்திகள் அவரது திரையுலக வாழ்க்கையில் நடந்ததை வைத்து அறிந்து கொள்ளலாம் .அசோக்குமார் என்கிற படத்தில் ஒரு காட்சி .அதில் தீயால் சுட்ட ஒரு இரும்பு கம்பியால் கதாநாயகனாக நடித்த தியாகராஜ பாகவதர்*கண்களில் குத்தி குருடாக்க வேண்டும் என்பது மன்னரின் கட்டளை .தவறினால்*இந்த தண்டனையை நிறைவேற்றாத குற்றத்திற்காக அவரது தலை வெட்டப்படும்.ஆனாலும் அந்த கொடுமையான காட்சியில் நடிக்க மறுத்துவிடுகிறார் .கண்ணீர் விட்டு கதறுகிறார் . இது வெறும் நடிப்புதான் ராமச்சந்திரா .அதுவும் கண்களை குத்துவதுபோல்* நிஜமாக படமாக்க போவதில்லை .வெறும் பாவனைதான் .நான் கண்ணிழந்தவன் போல் கத்தி கதறவேண்டும்* நடித்து சமாளித்துவிடுவேன் என்று கூறியும்.உங்கள் கண்களை பறிக்கும்* இந்த காட்சிக்கு என்னால் நடிக்க முடியாது என்று*.தீர்மானமாக மறுக்கவே ,வேறு வகையில் படமாக்கப்பட்டது .தான் கதாநாயகன் அந்தஸ்திற்கு உயராத* நிலையில் ,சிறு வேடங்கள், துணை வேடங்கள் நடித்து வந்த காலத்தில்*இப்படி அசாத்திய மனதைரியம் ,துணிவு, தெம்புடன் நான் இந்த மாதிரியான காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று மறுத்த தலைவன் அப்போதே உதயமாகிவிட்டான் .அதாவது ,இயக்குனர்,தயாரிப்பாளர் என்ன நினைப்பார்களோ என்று கூட யோசிக்காமல் திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைப்பதே அரிதான காலத்தில்,தனக்கு அப்படிப்பட்ட காட்சியும் வாய்ப்பும் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை என்று ஒதுங்கி கொண்டு**இப்படி ஒரு துணிச்சலான முடிவு எடுப்பதற்கு யாருக்கு மனமிருக்கும் .
திரு.துரை பாரதி : அடிப்படையிலேயே தனக்கொரு பாணி, பாதை, ஒரு பயணம் ,கொள்கை ,எதிர்கால வாழ்வில் நம்பிக்கை ,அதாவது வாழ்க்கையின் இளமை பருவத்தில் ,தான் முன்னுக்கு வராத காலத்தில் அடிப்படையிலேயே வறுமை, வேலை வாய்ப்பின்மை இருந்தபோது ,எதிர்காலத்தில் பிரகாசமான ஒரு நம்பிக்கை ஒளி யுடன் , தனக்கென்று சில கொள்கைகள் வைத்திருந்தார் .அந்த கொள்கைகளின் அடிப்படையில் நடைபோட்டதன் வெளிப்பாடுதான்* நாடோடி மன்னன் படத்தயாரிப்பு* பாவப்பட்ட ஏழை மக்களின் ஒரே நம்பிக்கை மனம்தான் .அதிலே நாம் கைவைக்க கூடாது .அதுவும் கடவுள் நம்பிக்கைக்கு எதிராக நடந்து கொள்ள கூடாது என்பதிலும் உறுதியாக இருந்துள்ளார் .
திரு.கா. லியாகத் அலிகான் : ஒரு கவிஞன் சொன்னது போல இயற்கையை நேசிக்கிறபோது எல்லா மனிதர்களுக்கும் இரண்டு யோசனைகள் வருமாம்*பணிகளை கவனித்து வரும்போது அவரது உள்ளத்திலே சில கடமைகள் பற்றி*யோசனை வருமாம் .தான் என்ன செய்ய வேண்டும் ,என் கடமை என்ன .தனக்குள்ள பிரச்னைகள் என்ன என்று . அதாவது இயற்கையை நேசிக்கும் போது*எப்படிப்பட்ட மனிதனுக்கும் இயற்கையையோ, அழகையோ ரசிச்சாலும் அவருக்கு செய்ய வேண்டிய கடமைகள் நினைவுக்கு வரத்தான் செய்யும் . ஆனாலும் அதை சரிசமமாக பங்கிட்டு அந்த இயற்கையை அனுபவித்தே ஆகவேண்டும் எம்.ஜி.ஆருக்கு*.* தான் இந்த காட்சியில் நடிக்கவில்லை .ஒருவரின் கண்களை பறிக்கும் காட்சியில் நடிக்க மனம் இடம் கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, அதை தவிர்த்துவிட்டோம் என்கிற மனநிறைவு*கிடைத்தது என்று நினைத்தாரே தவிர ,வேறொன்றும் நினைக்கவில்லை .
திரு.துரை பாரதி :எம்.ஜி.ஆர். அந்த காலகட்டத்தில் குலேபகாவலி, அலிபாபாவும் 40 திருடர்களும் ,பாக்தாத் திருடன் போன்ற அரேபிய கதைகளில்* இஸ்லாமிய*வேடத்தில் நடித்து வெற்றி படங்களை அளித்துள்ளார் .அதற்கு முன்பு மலைக்கள்ளன் படத்திலும் , சில காலம் கழித்து வெளிவந்த சிரித்து வாழ வேண்டும் படத்திலும் இஸ்லாமியர் வேடத்தில் நடித்துள்ளார் .
திரு.கா.லியாகத் அலிகான் :புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் ஒரு காலத்தில் இயேசு பிரானாக நடிக்க பரமபிதா என்கிற படத்திற்கு* ஒப்பந்தம் செய்யப்பட்டார்*ஆனால் சில பாதிரியார்கள் அந்த படத்தின் கதையை கேட்டறிந்து* கிறிஸ்துவ மத கோட்பாட்டுக்கு ஒவ்வாத சில காட்சிகள் இடம் பெறுவதாக கருதுவதால் இந்த படத்தில் நடிப்பதை எம்.ஜி.ஆர். அவர்கள் தவிர்க்க வேண்டும் என்று கேட்டு கொண்டதால் மேற்கொண்டு படத்தில் அவர் நடிக்காமல் கைவிடப்பட்டது .இன்றைக்கும் எம்.ஜி.ஆர். ஏசுபிரானாக வேடம் தரித்த புகைப்படங்களை காணலாம் .நாம் மனதில் கற்பனை செய்யும் ஏசுபிரானை போலவே எம்.ஜி.ஆரின் தோற்றம் தத்ரூபமாக* இருக்கும் .அந்த வேடம் அவருக்கு அவ்வளவு கச்சிதமாக பொருந்தியது* மேலும் அந்த ஏசுபிரான் வேடம் தரித்த*எம்.ஜி.ஆரின் புகைப்படங்கள் வைத்து சிலர்*பூஜைகள்,ஆராதனைகள் செய்து வணங்கி வந்ததாக*செய்திகள் எம்.ஜி.ஆர்.அவர்களுக்கு கிடைத்தது .அதை நினைத்து* மிகவும் மனம் வருந்தினார் .யாரும் அப்படி செய்ய கூடாது,எனக்கு*அதில் உடன்பாடு இல்லை**என்று அறிக்கை வெளியிட்டார்*. ஏசுபிரானாக எம்.ஜி.ஆர். நடிக்காமல்*போனதற்கு*இதுவும் ஒரு காரணம் என்று பேசப்பட்டது .நாடோடி மன்னன் படத்தில் வசனம் பேசியிருப்பார் .அதாவது அமைச்சரே, எனக்கு*வாள் பிடித்து களத்தில்**சண்டை செய்யவும் தெரியும்* கலப்பையை பிடித்துநிலத்தில்* ஏர் உழவும் தெரியும்*இருக்கின்ற 2000 உடைகளில்*எதை அணிவது*என்கிற*திண்டாட்டத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் .ஏதாவது ஒரு உடை இருந்தால் போதும் மானத்தை மறைக்கலாமே என்று மக்கள் இருக்கிறார்கள் .அப்படிப்பட்ட மக்களுக்காக*வாதாடத்தான் நான் இருக்கிறேன் .சட்டம் இயற்றும் அதிகாரம் முழுவதும் என் கையில் இருந்தால்தான் நான் மன்னன் ஆவதற்கு சம்மதிப்பேன் .என்று வசனம் பேசி அந்த காலத்திலேயே தான் யாருக்கும் அடிபணிய*மாட்டேன் .என் எண்ணங்கள், கொள்கைகள் ,திட்டங்கள் அனைத்தும் ஏழை எளியவர்களுக்கு செய்து முடிக்கும்*வரை நான் ஓயமாட்டேன் ,உறங்கமாட்டேன் என்பதில்*திட்டவட்டமாக இருந்தார் .நாடோடி மன்னன் படத்தை அவர் மிகவும் சிரமப்பட்டு ,கடன் வாங்கி ,சொத்துக்களை அடகு வைத்து ,தயாரித்தார் .அதனால்*அவருக்கு வேண்டாதவர்கள் அவர் நிச்சயம் நாடோடியாக போய்விடுவார் என்று கருத்து*சொன்னார்கள் . இந்த படம் தோல்வி அடைந்தால் நான் நாடோடி, வெற்றி பெற்றால்*மன்னன் என்று அவர்களுக்கு பதில் அளித்தார் .படத்தின் முடிவு எப்படி இருந்தாலும் என் எண்ணங்கள், கொள்கைகள் ,திட்டங்கள்*ஆகியவற்றை**ஏழை எளிய மக்களுக்கான நல்வாழ்வுக்காக என்பதை பறைசாற்றுவேன் என்று தெரிவித்தார் .ஆனால் எதிரிகள்*படம் வெளியாகி வெற்றி பெற்றதும் துவண்டு ,திக்கு திசை தெரியாமல் போய்விட்டார்கள் .படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றது .எம்.ஜி.ஆர்.அவர்கள் சிறந்த நடிகர்,சிறந்த இயக்குனர் ,சிறந்த தயாரிப்பாளர் என்று பத்திரிகைகளும் ,பாராட்டின .மக்களின்*ஏகோபித்த ஆதரவு இந்த படத்திற்கு*கிடைத்தது .என்று திரு.லியாகத்*அலிகான் பேசினார் .
எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணி பிரெஞ்சு புரட்சி ,ரஷ்ய நாவல்கள் ,ஆங்கில புத்தகங்கள் பலவற்றை*படித்திருந்தார் .அவர் ஒருமுறை தன் தம்பியிடம்*ராமச்சந்திரா ,இந்திய*சுதந்திரத்திற்குமுன்னால் இருந்த நல்ல பழக்கம் என்னவென்றால் எந்த ஆங்கிலேயன் எந்த ஒரு கட்டளை*இடுவதாக இருந்தாலும் மக்களுடைய சேவகனாகத்தான் இருந்தார்கள் .ஆனால் இன்றைக்கு நமது மக்கள் அதை மறந்துவிட்டார்கள் .இன்றைக்கு ,ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் அவர்களின் பதவி,அதிகாரத்தைத்தான் பெரிதாக நம்புகிறார்கள் .அவர்கள் மக்களின்*சேவகன் என்ற வாசகத்தை பயன்படுத்த வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள் என்று கூறியிருந்தார்*
பொதுவாக ஆட்சிக்கு வந்த சில காலத்திற்கு பின்னர் ஆட்சியாளர்கள் நல்லவர்களாக இருப்பதில்லை .நல்லவர்களாக இருப்பவர்கள் ஆட்சியில் தொடர்ந்து நீடிப்பதில்லை இப்படிப்பட்ட கருத்துக்கள், ஆலோசனைகள் பலவற்றை*எம்.ஜி..சக்கரபாணி அவர்கள் தன் தம்பி எம்.ஜி.ஆர். அவர்களுக்கு அவ்வப்போது அறிவுரையாக கூறியுள்ளார் .ஆனாலும் கூட*தன் குடும்பத்தில் இருந்து எவரையும்*ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கொள்ளவோ ,தலையிடவோ*எம்.ஜி.ஆர். அனுமதிக்கவில்லை .அப்படி யாராவது*நடந்து கொண்டால்*அதற்கு அவர்களே*சொந்த பொறுப்பு .என்னை கட்டுப்படுத்தாது என்று பகிரங்க அறிக்கை வெளியிட்டார் .தன்* குடும்பத்தில் இருந்து அரசியல் வாரிசாக*யாரையும் எம்.ஜி.ஆர். அறிவிக்கவில்லை* நாடோடி மன்னன் படத்தில் அறிவித்தது போல குடும்ப வாரிசு, பரம்பரை வாரிசு ஆகியவற்றை அடியோடு*புறக்கணித்தார் எம்.ஜி.ஆர். மற்ற தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில் தொடரும் .
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள்*/காட்சிகள் விவரம்*
------------------------------------------------------------------------------------
1.வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ -தெய்வத்தாய்*
2.எம்.ஜி.ஆர். மனோகர்*உரையாடல் - ஆயிரத்தில் ஒருவன்*
3.நான் உங்கள் வீட்டு*பிள்ளை* - புதிய பூமி*
4.எம்.ஜி.ஆர்.-திருப்பதிசாமி உரையாடல் - விக்கிரமாதித்தன்*
5.சம்மதமா ,நான் உங்கள் கூட வர சம்மதமா -நாடோடி மன்னன்*
6.எம்.ஜி.ஆர்.உணவருந்தும் காட்சி*- மாட்டுக்கார வேலன்*
7.திரு.கா.லியாகத் அலிகான்*அவர்களின்*பேட்டி*
8.எம்.ஜி.ஆர்.-தேங்காய் ஸ்ரீநிவாசன் உரையாடல் - நம் நாடு*
9.மன்னனாக*திட்டங்கள் அறிவுக்கும் எம்.ஜி.ஆர்.-நாடோடி மன்னன்*
*
-
#முயற்சியே #வெற்றி
எந்த ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டாலும், அது தமக்குப் புதியதாகவே இருப்பினும், அவ்விஷயத்தைத் துளியும் கௌரவம் பார்க்காமல் கற்றுணர்ந்து, தமது மிகையான தன்னம்பிக்கையாலும், புத்திக் கூர்மையினாலும் அதில் தேர்ச்சி பெற்று உச்சத்தை அடைவதென்பது வெறும் சாதாரணவிஷயமல்ல...
விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்ற புரட்சித்தலைவரின் தாரகமந்திரத்தை தனது லட்சியமாகக் கடைபிடிக்கும்
புரட்சித்தலைவரின் தீவிர ரசிகை சாரதா கண்ணனுக்கு இது பெரிய விஷயமுமல்ல...
தனது தன்னடக்கத்தினால் மேன்மேலும் உயர்வுபெறும் இவரின் கவிதைகள் பல பத்திரிகைகளிலும், தனியார் வானொலிகளிலும், யூ டியூப்பிலும் வெளிவந்துள்ளது அனைவரும் அறிந்த ஒன்று...
அனைத்திற்கும் சிகரம் வைத்தாற்போல... சமீபத்தில், பிரான்சில் வெளியான சிறந்த இலக்கிய இதழான "தமிழ் நெஞ்சம்"' என்னும் பத்திரிக்கையில் சாரதா கண்ணனின் 'முகப்புப்படமும், அவரைப்பற்றிய குறிப்புகளும், கவிதை வரிகளும்' இடம் பெற்றுள்ளன என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்...
கடல் கடந்து சாரதா கண்ணன் ஆற்றும் தமிழ்ப்பணி, இவ்வையகம் முழுவதும் பரவும் நாள் வெகுதொலைவில் இல்லை...
பொன்மனச்செம்மலின் அருளாசியுடன் சாரதாகண்ணனை வாழ்த்தி மகிழ்கிறேன்...
கீழ்க்கண்ட link ல் Download. செய்து படிக்கவும்...
http://tamilnenjam.com/?p=5051.........MT...
-
Chuck Norris
இவர்
World karate champion
இவர் Return of the dragon ல் நடித்தவர்
இவரின் Roundhouse kick மிகப் பயங்கரம்
எதிராளி கவனம் சிதறினால் மரணம் நிச்சயம் .
Van Damme: Bruce LeeJackie CJim Kelly
Tony : Jet Ll
இவர்கள் அனைவரும்
Martial arts super stars
இவர்களை இங்கே குறிப்பிட காரணம் நான் எம் ஜி ஆர் படங்களை மட்டும் பார்க்கவில்லை இந்த Hollywood ஜாம்பவான்களை வெகுவாக ரசித்தவன் ரசித்துக் கொண்டிருப்பவன் ஆனால் இவர்கள் மக்கள் திலகத்தை போல் மற்ற துறைகளில்
ஈடுபடாதவர்கள்
Kung fu வில் மட்டுமே கவனம் செலுத்து பவர்கள்.
குடியிருந்த கோவில் இந்த சண்டைகாட்சியை பாருங்கள்
Hand rotating punch
Neck Lock
Horse kick
ஒரே நேரத்தில்
Front kick
Back kick
என்ன லாவகமாக செய்கிறார் பாருங்கள்.
Hand rotating punch
மிக மிக கடினம் ஸ்பேரிங் செய்பவருக்குத்தான் அந்த வலி புரியும் .
மக்கள் திலகம் இந்த சண்டைகாட்சியில் நடித்து பத்தாண்டு கழித்து தான் கராத்தே வந்தது அப்போழுதே என்ன வேகம் பாருங்கள்.
அக்கால கட்டத்தில் உலக திரைப்பட சண்டைகாட்சிகளில்
எம் ஜி ஆர் தான் முதல்வர் என்றால் அது மிகையாகாது
ஹயாத் .
குறிப்பு : இந்த ஹாலிவுட் நடிகர்கள் தொழில்நுட்பம் வெகுவாக முன்னேறியபின் வந்தவர்கள் எம் ஜி ஆர் காலத்தில் ஒரு குருவியை படமெடுக்க மூன்று நாட்கள் காத்திருந்தனர் ........Hd...
-
நம்ம கணேசனின் கைபுள்ளைங்க தொல்லை தாங்க முடியலைப்பா. சுத்தி சுத்தி மூட்டைப்பூச்சி கடிக்கிற மாதிரி கடிச்சுக்கிட்டே இருக்காங்க. அவங்க வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏத்தியாச்சு! அதனால தாங்கமுடியாம சும்மா புலம்புவதுடன் பொய் வசூல் தயார் பண்ணும் பேக்டரி உருவாக்கி வாய்க்கு வந்தது வராதது என்று சகட்டுமேனிக்கு கூவிட்டு வராங்க.
நாம என்ன செய்ய! சும்மா மரண அடி கொடுக்கிறாப்பல வசூல் விபரங்களை கொடுத்தவுடன் தலைவர் சினிமாவில் மன்னனாக இருந்தவரைக்கும் 1977 வரைக்கும் பதுங்கி இருந்தவனெல்லாம் இப்போ
ஏதாவது ஒரு மொக்கை சிவாஜி படத்தை தூசு தட்டி அதுக்கு பேக்டரிலே போய் புது வசூல் போட்டு கொண்டு வராங்க.
அதுவும் பழைய படங்கள் எல்லாம் வசூல் விபரங்களை ஏற்கனவே பதிவிட்டமையால் புதிதாக இதுவரை வசூல் விபரங்கள் வெளியிடாத படுதோல்விப் படங்களை தூக்கிட்டு போய் புதுசா வசூல் போட்டு நல்லா டெக்கரேஷன் பண்ணி போட ஆரம்பிச்சுட்டாங்க. "16 வயதினிலே" சப்பாணி மாதிரி 'சந்தைக்குப் போணும் ஆத்தா வையும் காசைக்கொடு' ன்னு அழ ஆரம்பிச்ச மாதிரி ஒரே அழுகை. தாங்க முடியலப்பா.!
சரி எம்ஜிஆர் சினிமாவை விட்டு அரசியலில் இறங்கி அங்கும் முடி சூடிய மன்னனான பிறகு பொறாமையில்
அல்லக்கைகள் அலற ஆரம்பித்தன.
தற்போது எம்ஜிஆர் சினிமாவில் இருக்கும் வரை தங்களால் ஒன்றும் செய்ய இயலாது என்று புரிந்து கொண்ட கைபுள்ளைங்க தற்போது கையில "வெள்ளை ரோஜா" வை எடுத்து சமாதானத்துக்கு வராமல் சண்டைக்கு வருகிறார்கள்..
சரி நம்மவர் தான் முதல்வர் ஆகிவிட்டாரே இனியென்ன நமக்கு என்று நாம் சும்மா இருந்தாலும் இருக்க விட மாட்டார்கள் போலும்!.
அதனால் நம்ம சிவாஜியின் 1983 தீபாவளிக்கு வெளியான "வெள்ளை ரோஜா" சினிமா ஜீனியர்களின் கையால் மரண அடி வாங்கி சீரழிந்த கதையை சொன்னால்தான் அடங்குவார்கள் என்று நினைக்கிறேன். அதனால் நம்ம தலைவர் ரசிகர்கள் கொஞ்சம் வேடிக்கை பாருங்கள் சின்ன நடிகர்களிடம் சிவாஜி படம் புறமுதுகு காட்டி ஓடுவதைக் கண்டு கை கொட்டி சிரிக்கலாம். ஏனென்றால் புறமுதுகு காட்டுவது அவருக்கு ஒன்றும் புதிதல்ல.
இப்போது சொல்லுங்கள் "வெள்ளை ரோஜா" வின் வசூலை. சென்னையில்
தேவி. 104. 722685.00
சபையர். 76. 815663.00
புவனேஸ் 104. 516565.50
கிரவுன். 104. 472690.60
உதயம். 104. 314695.00
அபிராமி. 104. 246618.50
-------------------
மொத்தம். 30,88,917.60
--------------------
இதுதான் "வெள்ளை ரோஜா" வின் மொத்த சென்னை நகர வசூல் என்று சொல்லியிருக்கிறார்கள். நாமும் சோதனை செய்யாமல் அப்படியே அதை எடுத்துக் கொள்வோம். தலைவர் நடித்துக் கொண்டிருந்தால். இந்த வசூலெல்லாம் வெளிச்சத்துக்கே வந்திருக்காது. என்ன செய்வது நம்ம கணேசனுக்கு களத்தில் எதிரி இருந்தாலே அரசியலில் நடுங்கிய மாதிரி கைகால் எல்லாம் உதறல் எடுத்து விடும். ஆளே இல்லாத களத்தில்தான் கொஞ்சம் தைரியமாக வெளியே வருவார்.
சரி, விஷயத்துக்கு வருவோம்.
1982 ல் வெளியான "சகலகலா வல்லவன்" சுமார் 4 அரங்கில் வெளியாகி 48 லட்ச ரூபாய் வசூலாக பெற்றதை முறியடித்தீர்களா?
இல்லையே. 1984 ல் வெளியான "காக்கிசட்டை"யின் 42 லட்ச ரூபாய் வசூலை முறியடித்தீர்களா? 3வதாக வசூலில் முன்னணியில் நிற்கும் படம் "முந்தானை முடிச்சு" அதுவும் சுமார் 42 லட்சங்களை வசூலாக பெற்ற படம். அதன்பின் வருவது "மைதிலி என்னை காதலி" அதுவும் 42 லட்சங்களை கடந்த படம்தான்.
"வெள்ளை ரோஜா" கூட வெளியான "தூங்காதே தம்பி தூங்காதே" "தங்கைக்கோர் கீதம்" பட வசூலையாவது முறியடித்தீர்களா?
அதையாவது நிரூபணம் செய்ய முயலுங்கள்.இதில் எதையும் நெருங்க முடியவில்லையே.
10 வருடங்களுக்கு முன்னால் உள்ள படங்களை வசூலில் கம்பேர் செய்தால் அய்யோ பாவம் மூளை குழம்பி விட்டதோ என்று நினைக்க தோன்றுகிறது. வேண்டுமானால் "உலகம் சுற்றும் வாலிபன்" வசூலை 1983 க்கு தகுந்தவாறு மாற்றி ஒப்பிட்டால் சரியாக இருக்கும்.
10 ஆண்டுகளுக்கு முன்னால் உள்ள டிக்கெட்டை. விலையை விட சுமார் 3 மடங்கு 1983 ல் அதிகம். அதை கணக்கில் எடுத்து "உலகம் சுற்றும் வாலிபன்" வசூலை மூன்றால் பெருக்கி பார்த்துக் கொள்ளுங்கள்.
23,40,000×3 = 70,20,000. இப்போ புரிகிறதா. வித்தியாசம் எவ்வளவு என்று. "வெள்ளை ரோஜா" வெறும் 30 லட்சம்தான். அதிலும் தலைகுனிவுதான்.
போய், முக்காடு போட்டு மூலையில் அமருங்கள். அதை விட்டு விட்டு அடுத்த வேலையை ஆரம்பித்து விட்டார்கள். உள் நாட்டில் விலை போகாத மாடு வெளிநாட்டில் விலை போகுமா? என்பார்கள், அதுபோல் தமிழகத்தில் படுதோல்வியடைந்த "உத்தமன்" இலங்கையில் என்ன ஊத்திக்கொண்டதோ தெரியவில்லை, கைபுள்ளைங்க சாதனை என்று சொல்லி அடுத்த வெட்டி வேலையை ஆரம்பித்து விட்டார்கள்.. இனிமேல் அதை பார்க்க வேண்டும். இப்படி எதையாவது சொல்லி அரிப்பை தீர்த்துக் கொள்ள முயலும் அவர்களை பார்த்தால் பரிதாபமாக இருப்பதுடன் பாவமாகவும் இருக்கிறது. ஐயோ, பாவம்..........ks.........
-
#காந்தீயவாதி
#காந்தி #ஜெயந்தி #வாழ்த்துக்கள்
ஒரிஜனல் பாய்ஸ் நாடக கம்பெனி சென்னைக்கு வந்து "தேசம் காக்கும்" என்ற நாடகத்தை ஆரம்பித்து நடத்த ஏற்பாடு செய்தது. நடிகர்கள் தேர்வு நடந்தது. இந்த நாடகம் காந்தியவாதி, சுதந்திர போராட்ட கதை பெரிய நாடகம் ...
1930ல் இதில் நடிக்க எம்ஜிஆருக்கு ஒரு சிறப்பான வேடம், அதாவது தேசபக்தியுள்ள ஒரு சாமியார் வேடம், கிடைத்தது...
நாடகம் நடத்த அன்றைய வெள்ளையர் ஆட்சி காலத்தில் போலீஸ் தடை விதித்தது. ஆனால், தடையை மீறி நாடகம் நடத்தப்பட்டது. போலீஸ் தடியடி நடத்தியது. இதில் எம்ஜிஆரும் காயமடைந்து மூர்ச்சையானார்...
இந்த செய்தி சென்னை நகரில் மற்றும் அல்லாமல் தமிழ்நாடு முழுவதும் பெரிய பரபரப்பை உண்டாக்கியது "தேசபக்தி" என்றதும் இந்த நாடகத்திற்கு பொதுமக்கள் ஆதரவு பெரும் அளவில் ஏற்பட்டது.
"17 வயது பையன் சாமியார் வேசத்தில் நடிக்கிறான்..." என்றதும் மக்கள் திலகம் அவர்களுக்கு பொதுமக்களிடமிருந்து பாராட்டு கிடைத்தது...
பழுத்தபழம் போல், தேசபக்தியை விதைக்கும் சாமியார் வேடத்தில் மிக சிறப்பாக நடித்து இருந்தார் நம்ம புரட்சித்தலைவர்...
இப்படி ஒரு காந்தீயவாதியாக தனது கலையுலக வாழ்வைத் தொடங்கினார் மக்கள்திலகம்... Bsm...
-
மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மனக்கும் என கூறியவர் அண்ணா! அதன் படி நடந்து செயலில் காட்டியவர் எம் ஜி ஆர்!
காங்கிரசும், அண்ணா தலைமையிலான திமுகவும் அரசியல் களத்தில் அனல் கிளப்பிவந்த 60 களில், எம்.ஜி.ஆரை மையமாகக் கொண்டு திமுகவில் ஒரு புயல் கிளம்பியது. அண்ணாவின் தலைமையிலான திமுகவில் முக்கிய தலைவர்கள் வரிசையில் கொண்டாடப்பட்ட எம்.ஜி.ஆர், எதிர் கூடாரத்திலிருந்த காமராஜர் மீது கொண்ட காதலுக்கு அந்த சம்பவம் சாட்சியானது.
கருத்தியல் ரீதியாக எம்.ஜி.ஆரை திமுகவிடமிருந்து தனிமைப்படுத்திய அந்த சம்பவம் ஒரு வரலாற்று நிகழ்வும்கூட. திமுகவில் ஒரு பெரிய புயலை கிளப்பிய அந்த சம்பவம் நிகழ்ந்தது 1965 ம் ஆண்டு காமராஜரின் 62 வது பிறந்தநாள் விழாவின்போது.
சென்னை, எழும்பூர் பெரியார் திடலில் நடந்த அந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர், மேடையில் சற்று உணர்ச்சிவயப்பட, பின்னாளில் அது பெரும் சலசலப்பை திமுகவில் உருவாக்கியது.
எம்.ஜி.ஆரின் சர்ச்சைக்குரிய உரை இதுதான்...
“காமராஜரின் பிறந்த தின விழாவில் நானும் கலந்து கொண்டு, அவரை வாழ்த்தி, அவர் நீடூழி வாழவேண்டும் என்று வாழ்த்தும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தமைக்குப் பெருமைப்படுகிறேன். தலைவர் காமராஜர், தோழர் காமராஜர், அய்யா காமராஜர் என்று பலர் அழைக்கும் நிலையை காமராஜர் அடைந்திருக்கிறார். எல்லோராலும் பாராட்டப்பட வேண்டியவர்; பாராட்டப்பட வேண்டும். நல்ல உள்ளம் கொண்டவர்களை எல்லோரும் பாராட்டித்தான் தீரவேண்டும். மனிதனை மனிதன் பாராட்ட வேண்டும். நல்லவனை நல்லவன் பாராட்ட வேண்டும்.
கொள்கைக்காக வாழ்கிறவனை, கொள்கைக்காக வாழ்கிறவர்கள் பாராட்டியாக வேண்டும். யார் யாரை மதிக்கிறார்களோ அவர்களைப் பாராட்ட வேண்டும். யாரால் மதிக்கப்படுகிறார்களோ அவர்களைப் பாராட்டியாக வேண்டும். இந்த நிலை மாறும்போது அருவருப்பான சூழ்நிலை ஏற்படுகிறது.
நண்பர் சிவாஜி கணேசன் ஒரு கட்சியில் (தி.மு.க.) இருந்து விட்டுப்போனவர். அவருடைய ‘கட்டபொம்மன்’ நாடகத்திற்கு எங்கள் தலைவர் அண்ணா போய் எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்த்தினார். சிவாஜி நம்மை விட்டுப்போய்விட்டாரே என்ற எண்ணத்திற்கே அங்கு இடமில்லை. அதுதான் நல்ல பண்பு.
காமராஜர் என்னை விட்டுப்போகவில்லை. நான் அவரைவிட்டு வந்தவன் (எம்.ஜி.ஆர். ஆரம்பத்தில் காங்கிரஸில் இருந்தவர்). நான் காமராஜரைப் பாராட்டிப் பேச வந்ததற்கு வேறு உள் காரணங்கள் தேடினாலும் கிடைக்காது. காமராஜர் வாழ்ந்தால் யாருக்கு லாபம்? வாழாமல் இருந்தால் யாருக்கு லாபம்? காமராஜர் ஒரு ஏழையாக வளர்ந்திருக்கிறார். யாரும் மேடையில் ஏறி அவர் சொத்து சேர்த்திருக்கிறார் என்று சொல்ல முடியாது. தன்னை ஈன்றெடுத்த தாய் நோய்வாய்ப்பட்டிருந்தாலும் அவரை 10 நிமிடங்கள், 5 நிமிடங்களுக்கு மேல் இருந்து பார்ப்பதில்லை.
தன் தாயை ஈன்ற இந்த நாட்டின் கடமைகளை விடாமல் செய்து வருகிறார். காமராஜரைப் புகழ்வதில் யாருக்கு நஷ்டம்? நான் ஒரு கலைஞன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர். அண்ணா வழியில் நடப்பவன். அவர் கொள்கை எனது உயிர். அப்படிப்பட்ட நான் காமராஜரையும், அய்யாவையும் (பெரியார்) பாராட்டாமல் வேறு யாரைப் பாராட்ட முடியும்?
இதே மேடையில்தான் பெரியாரைப் பாராட்டிப் பேசினேன். நமது தலைவர் காமராஜரைப் பாராட்டிப் பேசுகிறேன். நமது தலைவர் என்று நான் சொல்வது மக்கள் ஏற்ற தலைவர் அவர். அதனால் நமது தலைவர் என்று சொல்கிறேன். காமராஜர் இரவு-பகல் பாராமல் பாடுபடுகிறார். அவரை ஏன் பாராட்டக் கூடாது? என் கொள்கையை நான் கடைப்பிடிப்பதிலும் ஏன் இந்த இலக்கணத்தை பின்பற்றக்கூடாது? எங்கெங்கு நல்லது இருந்தாலும் அதனை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். ஏழைகளுக்கும், பின்தங்கிய மக்களுக்கும் உயர்ந்த நிலையை உருவாக்கித் தந்தவர் காமராஜர். ஏழைகளை வாழவைக்க வேண்டும் என்று காமராஜர் சொல்கிறார். நானும் அதைத்தான் சொல்கிறேன். என் கட்சியும் அதைத்தான் சொல்கிறது. அதனால் அவருக்கு மாலையிடுகிறேன்.
பண்புள்ளவன், பகுத்தறிவுள்ளவன் அண்ணா வழியில் நடப்பவன் மாலை இடுகிறான். காமராஜர் நேரில் இருந்திருந்தால் மாலைகளைக் குவித்திருப்பேன். ஏழைகளின் நல்வாழ்வுக்காக காமராஜர் தன்னையே தியாகம் செய்து கொண்டவர், அவருடைய லட்சியத்தில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்கமுடியாது. அவர் மேற்கொண்டுள்ள லட்சியம்தான் நம்முடைய வழி. நான் ‘நாடோடி மன்னன்’ படத்தில் சொன்ன கருத்துக்கள், போட்ட சட்டங்கள் அனைத்தையும் காமராஜர் அமல்படுத்தி வருகிறார். எல்லோருக்கும் இலவச கல்வி என்றேன். அது நடந்து வருகிறது. உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்குத்தான் எல்லா வசதியும் என்று இருந்த நிலைமையை மாற்றி தாழ்ந்த வகுப்பினருக்கும் எல்லாவற்றிலும் எங்கும் முதலிடம் என்று அமைத்தவர் காமராஜர்.
இங்கு காமராஜரை சந்தனக் கட்டைக்கு ஒப்பிட்டுப் பேசினார்கள். நான் இதை ஏற்க விரும்பவில்லை. ஏனென்றால், சந்தனக் கட்டையை அரைக்க அரைக்க மணம் வீசுவது உண்மை. ஆனால் அது தேய்ந்து மறைந்து விடுகிறது. ஆகவே சந்தனக் கட்டைக்கு ஒப்பிட்டுப் பேசுவது முறையல்ல சரியல்ல.
என்னைப் பொருத்தவரை காமராஜரை நான் உதயசூரியனுக்கு ஒப்பிடுகிறேன். சூரியன் கிழக்கிலிருந்து உதிர்த்து மேற்கில் மறைவதுபோல் தோன்றுகிறது. உண்மையில் அது மறையவில்லை. இருந்த இடத்தில்தான் இருக்கிறது. அதுபோல காமராஜரின் புகழ், தொண்டு உதயசூரியனைப்போல் பிரகாசித்துக்கொண்டு இருக்கிறது. நான் இதுவரை எந்தவித தியாகமும் செய்யவில்லை. அப்படிப்பட்ட சந்தர்ப்பமும் ஏற்படவில்லை. ஆனால் தியாகிகளின் கூட்டத்தில் கலந்து கொண்டு தியாகிகளால் பாராட்டுவதை கேட்கும்போது எனக்குப் பெருமையும், மகிழ்ச்சியும் ஏற்படுகிறது.
காமராஜர் அவர்கள் நூறு ஆண்டுகள் வாழ்ந்து நாட்டிற்குச் சேவை செய்ய வேண்டும். மக்களின் கவலைகளைப் போக்கி நல்வாழ்வைக் கொடுக்கவேண்டும். கல்யாண வீடு போல நாம் இங்கே சிரித்துப் பேசிக்கொண்டு இருக்கிறோம். அதோடு நாம் சிந்திக்கவேண்டும். அதற்கு நாம் காமராஜரை வணங்கித்தான் ஆகவேண்டும். மக்களை ஒற்றுமைப்படுத்தும் காமராஜர் நீடூழி வாழவேண்டும்.
ஜனநாயக சோஷலிசம் என்று காமராஜர் சொல்கிறார். இது சரியா என்று சிலர் கேட்கிறார்கள். சர்வாதிகார ஆட்சி வேறு, பரம்பரையாக நாட்டை ஆள்வது வேறு, ஜனநாயகத்தில் மக்கள் விருப்பத்துடன் அமல்படுத்தப்படுவது சோஷலிசம், பேதமற்ற சமுதாயம் காண்பதுதான் அதன் அடிப்படை. ராஜாஜி இங்கே முதல் அமைச்சராக இருந்தபோது குலக்கல்வி திட்டத்தைக் கொண்டு வந்தார். அதனை தி.மு.க.கழகம் எதிர்த்தது. காமராஜர் முதல் அமைச்சராக வந்தவுடனேயே மாற்றப்பட்டது. காங்கிரசின் திட்டத்தை அதே காங்கிரஸ்காரர் மாற்றினார். எப்படி மாறியது? ஒரு மனிதன் நல்லவனாக இருந்தால் கட்சிக் கொள்கையும் மாறுகிறது. அதற்கு எடுத்துக் காட்டு காமராஜர்.
இப்படிப்பட்டவரைப் போற்றாமல் தி.மு.க.கழகத்தில் எனக்கு வேறு என்ன வேலை இருக்க முடியும். தி.மு.க.வின் லட்சியங்களைக் காமராஜர் நிறைவேற்ற விரும்புகிறார். அதற்குக் காலதாமதம் ஆகலாம். காமராஜர் என் தலைவர். அண்ணா என் வழிகாட்டி. என்னைவிடச் சிறந்தவர்களை என் தலைவர்களாக ஏற்கிறேன். இங்கே பேசிய என்.வி. நடராஜன், ‘காமராஜர் எதிர்கட்சித் தலைவராக இருக்க வேண்டும்‘ என்று குறிப்பிட்டார். நல்ல ஒரு எதிர்க்கட்சி தேவைதான். காங்கிரசை தி.மு.க.கழகம் எதிர்க்கிறது. தி.மு.கவை காங்கிரஸ் எதிர்க்கிறது. இரண்டும் எதிர்க்கட்சிகள்தான். அதில் எது உயர்ந்த கட்சி என்பதை எதிர்காலம்தான் முடிவு செய்ய வேண்டும். மக்கள் மனமாற்றத்திற்கேற்ப மாறும் ஆட்சிதான் தேவை.
ஒருசமயம் காமராஜரை நேரில் சந்தித்து எங்கள் குறைகளை அவரிடம் ஒரு மணி நேரம் விளக்கிப் பேசினேன். அப்போது அவரது நல்ல எண்ணத்தைத்தான் கண்டேன். எண்ணி எண்ணிப் பூரித்தேன். என்னை அவர் தன்பக்கம் இழுக்கவோ, அவமானப்படுத்தவோ இல்லை. மாநகராட்சித் தேர்தலின்போது அவர் ‘வேட்டைக்காரன்’ வருகிறான் ஏமாந்து விடாதீர்கள் என்று ஏதேதோ பேசினார். நானும் பதிலுக்கு ஏதேதோ பேசினேன். அது அரசியல், தனிப்பட்ட முறையில் அவர் நல்லவர், பெரிய முதலமைச்சர் பதவியையே தூக்கி எறிந்தவர். தொண்டராய், தோழனாய் இருந்து மக்கள் சேவை செய்யமுடியும் என்று கருதி பதவியைத் துறந்தார்.
சாதாரண கட்சித் தலைவர்கள் ஒவ்வொருவரும் இதைப் பின்பற்ற வேண்டும். எம்.ஜி.ஆர். சிகப்பு, நான் கறுப்பு என்று (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) முகவை ராஜமாணிக்கம் குறிப்பிட்டார். மனிதனுக்கு இந்த இரண்டு ரத்தமும் தேவை. ஏதாவது ஒன்று அதிகமாகி விட்டால் வியாதிதான். கறுப்பு என்றால் களங்கம் அல்ல. இரண்டும் சேர்ந்தால்தான் ஜனநாயக சோஷலிசம் மலரும்." என்று பேசினார் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆரின் இந்தப் பேச்சு திமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. 'கட்சியின் முக்கியத் தலைவர் அந்தஸ்தில் இருப்பவர், எப்படி மாற்றுக்கட்சியின் தலைவரை புகழலாம்' என கட்சியில் கலகக்குரல் எழுந்தது. குறிப்பாக, 'காமராஜரை தலைவர் எனக் குறிப்பிட்டது அண்ணாவை அவமதிக்கும் செயல்' என பரபரப்பு கிளப்பினர் எம்.ஜி.ஆருக்கு எதிரான கோஷ்டியினர்.
இருப்பினும் எம்.ஜி.ஆர் தன் நிலைப்பாட்டில் உறுதியாக நின்றார். அண்ணாவிடம் தன் நிலைப்பாட்டை அவர் ஒரு சந்தர்ப்பத்தில் எடுத்துரைத்தார். எம்.ஜி.ஆரை நன்கு புரிந்தவரான அண்ணா, மற்றவர்களின் பேச்சை பொருட்படுத்தவில்லை. .........sbb...
-
MGRamachandiran
URIMAI KURAL
C.V.Sridhar
Le 7 novembre 1974
Le 124ème MGR
Review :
Chitryuga’s
URIMAI KURAL - 1974
starred
MGR,
Latha, SVSahasranamam, Anjali Devi, MNNambiyar & others...
In the period in which directors were distinctly branded as belonging to either MGR or Sivaji camps, Sridhar, in spite of having a separate identity for himself, was considered closer to Sivaji.
He had worked as a scriptwriter for Sivaji films like ETHIR PAARAATHATHU, UTHAMA PUTHIRAN, AMARADEEPAM and PUNARJENMAM ; and had directed Sivaji in VIDIVELLI, SIVANDHA MANN, OOTY VARAI URAVU and NENJIRUKKUM VARAI.
In the early 70s, some of Sridhar’s films didn’t do too well commercially – (AVALUKKENDRU OR MANAM, ALAIGAL, etc…).
He embarked on an ambitious project with Sivaji, grandly titled Hero - 72.
Due to various reasons, the filming ran into rough weather, and Sridhar was facing financial ruin.
(It is another story that Hero - 72 underwent some modifications and was finally released in 1975 as VAIRANENJAM).
Sridhar, in a “do or die” situation, approached MGR to help him out (I cannot help thinking that in similar circumstances, Sridhar ‘did’, while GV ‘died’ :
(- perhaps there aren’t people like MGR around any more).
In an interview, Sridhar recalled how magnanimous MGR was, and how he was treated with honor, understanding and respect :
In order not to give Sridhar a bad name that we went begging to MGR, “Makkal Thilagum” suggested that they have a discreet meeting in Nambhiyar’s house.
But Sridhar, insisting that he had no fear of such a ‘bad name’, went to Ramavaram Thottam.
Sridhar explained his circumstances, and asked MGR to help him out by acting a film in his direction.
MGR replied that he was happy to get a chance to work with Sridhar.
He then assured Sridhar of his fullest cooperation and gave him bulk dates.
He went one step further and gave a handwritten note that he was giving priority to complete Sridhar’s film.
Sridhar was overwhelmed when MGR explained that this note would help Sridhar to get the necessary finances for the venture.
It was a hit Telugu film - DASARA BULLUDU (starring Nageswara Rao) that was the inspiration for URIMAI KURAL, though Sridhar adapated it to suit MGR and the Tamil milieu.
However, MGR insisted on copying the attire of Nageswara Rao in the original, including the Andhra style dhothi.
As was his won’t, Sridhar wanted Kannadassan to write the lyrics.
Considering the fact the MGR and Kannadassan weren’t the thickest of pals (!), Sridhar asked MGR’s permission to do so, MGR readily gave the go ahead (“Kavignarudan thaan poosal, avar varigaludan alla- dhaaaralamaaga ezhuthattum”).
Sridhar got two songs written by Kannadassan and composed and recorded by MSVisuwanadhan (“Vizhiye kathai ezhuthu” and “Aambalaingala neenga aambalaingalaa”).
It was then that Kannadassan wrote a particularly virulent piece against MGR in a magazine, and Sridhar got the jitters, and asked MGR about the fate of the songs - MGR replied that he still had no objection to Kannadassan writing the songs.
However, if Sridhar felt that MGR fans might not take kindly to Kannadassan’s songs, he was free to change the lyricist, he would not interfere in the matter and it was up to Sridhar to decide.
Sridhar consulted some distributors, who advised him to use the two songs written by Kannadassan for some other film, and get the songs for URIMAI KURAL written by some other lyricist.
Accordingly, Sridhar approached Vaali and got a fresh set of songs written, composed and recorded.
(Sridhar approached Vaali only after explaining his predicament to Kannadassan, who agreed to the change).
When MGR got to know this, he called Sridhar and told him to retain Kannadassan’s two songs as well, as those songs were really good.
URIMAI KURAL went on to become a super hit, and the songs are popular to this day.
The soundtrack :
Vizhiye kathai ezhuthu
KJYésudass and PSusheela
Kannadassan
Aambalaingalaa neenga aambalaigalaa
LREswari
Kannadasan
Oru thaai vayitril vandha udanpirappil
TMSoundher Radjan
Vaali
Kalyana valaiyosai kondu
TMSoundher Radjan and PSusheela
Vaali
Nethu poothaale roja mottu
TMSoundher Radjan
Vaali
Ponna porandhaa aambalaikkitta
TMSoundher Radjan
Vaali
Maatikkittaaradi mayilakkaala
LREswari
Vaali
Though Vizhiye kathai ezhuthu was the pick of the lot, Kalyana valaiyosai kondu has its own folksy mellow enchantment- Latha carrying MGR’s sathunavu and walking towards the field, where MGR is engaged in an honest day’s labour.
Sighting his beloved and hearing her call, he wipes the sweat off his brow, and washes his hands in the pump-set, and wipes them in Latha’s mundhaanai.
He has his fill of both the lunch and Latha, and returns, fully refreshed, to yer-ottify!
Though KJYésudass and SPBalasubramanium were increasingly singing for MGR, the 70s too had some memorable TMSoundher Radjan and PSusheela s’duets in MGR s’ films- Kalyana valaiyosai kondu ranks along with Azhagiya thamizh magal ival, Nallathu kanney kanavu kanindhadhu, Kanni oruthi madiyil, Lily malarukku kondattam, Nee ennenna sonnalum kavithai, Inbamey undhan peyar pennmaiyo, Kanavugaley aayiram kanavugaley…......FL...
-
சேலம் மாநகரில்*திரையுலக ஏக வசூல் சக்கரவர்த்தி...
கலையுலக பேரொளி*...
எம்.ஜி.ஆர். அவர்கள் படைத்த மாபெரும் வெற்றி சாதனைகள்*...
100 நாட்களுக்கு மேல் சாதனை புரிந்த திரைப்படங்களின் பட்டியல்கள்.....
++++++++++++++++++++++++++++
1947 ராஜகுமாரி
ஒரியண்டல்* : 115 நாள்
1948 மோகினி
ஒரியண்டல் 105 நாள்
1950 மருதநாட்டு இளவரசி
நியூசினிமா 100 நாள்
1950 மந்திரிகுமாரி
ஒரியண்டல் 147 நாள்
1951 மர்மயோகி
ஒரியண்டல் 126 நாள்
*1951 சர்வாதிகாரி
நீயூசினிமா : 116 நாள்
*1952 என் தங்கை
அம்பிகா : 105 நாள்*
1954 மலைக்கள்ளன்
ஒரியண்டல் :.147 நாள்*
1955 குலேபகாவலி
நியூ சினிமா 140 நாள்
1956 அலிபாபாவும் 40 திருடர்களும்
வெலிங்டன்* : 154 நாள்
1956 மதுரைவீரன்
ஒரியண்டல் : 161 நாள்*
1956 தாய்க்குப்பின் தாரம்
நீயூ சினிமா : 119 நாள்*
1957 சக்கரவர்த்தி திருமகள்
நீயூசினிமா :.112 நாள்*
1958 நாடோடி மன்னன்
நீயூசினிமா : 147 நாள்
1961 திருடாதே
நீயூசினிமா : 97நாள்*
1961 தாய் சொல்லை தட்டாதே
நீயூசினிமா : 116 நாள்*
1962 தாயைக் காத்த தனயன்
பேலஸ் : 126 நாள்*
1963 நீதிக்கு பின் பாசம்
நீயுசினிமா : 100 நாள்*
1963 பரிசு
ஒரியாண்டல் :105 நாள்*
1964 வேட்டைக்காரன்
நீயூசினிமா :.112 நாள்
1964 பணக்கார குடும்பம்
சென்ட்ரல் விக்டோரியா 112 நாள்*
1965 எங்க வீட்டுப் பிள்ளை
சாந்தி : 113 நாள்*
1965 ஆயிரத்தில் ஒருவன்
ஒரியண்டல் :125 நாள்*
1966 அன்பே வா
ராயல் : 112 நாள்*
1967 காவல்காரன்
ஒரியண்டல் : 110 நாள்*
1968 ரகசியபோலிஸ்115
ஒரியண்டல் :110 நாள்
1968 குடியிருந்த கோயில்
சங்கம் : 86 நாள்
1968 ஒளி விளக்கு
சங்கம் : 85 நாள்*
1969 அடிமைப்பெண்
சாந்தி : 133 நாள்
1969 நம்நாடு
பேலஸ் : 107 நாள்*
1970 மாட்டுக்கார வேலன்
ஜெயா : 156 நாள்*
1970.என் அண்ணன்
அலங்கார் : 110 நாள்*
1070 எங்கள் தங்கம்
பேலஸ் :* 105 நாள்
1971 குமரிக்கோட்டம்
பேலஸ் : 101 நாள்*
1971 ரிக்க்ஷாக்காரன்
அலங்கார் : 118நாள்
1972 நல்ல நேரம்
ஒரியண்டல் : 126 நாள்*
1973 உலகம் சுற்றும் வாலிபன்
சங்கம் : 126 நாள்*
1974 உரிமைக்குரல்
சங்கம் 127 நாள்*
1975 இதயக்கனி*
அலங்கார் : 115 நாள்
1975 பல்லாண்டு வாழ்க
அப்ஸரா* : 112 நாள்.........ur...
-
1933 – 34 ஆண்டுகளில் எம்.ஜி.ஆர் காங்கிரசில் உறுப்பினராக சேர்ந்தார். அவர் காந்தியவாதியாகவும், காந்தியை நேசிப்பவராகவும் எப்போதும் இருந்தார். “புத்தன், ஏசு, காந்தி பிறந்தது பூமியில் எதற்காக?” என்று பாடியவருக்கு, புத்தர், ஏசுவை விட காந்தியை மிகவும் பிடிக்கும். “காந்தி மாதிரி ஒரு மகானைப் பார்த்தது இல்லை. இயேசுவும், புத்தரும் கூட மதத்தைத்தான் பரப்பினார்கள். ஆனால், காந்தி ஒருவர்தான் அரசியலை நேர்மையோடு நடத்தினார்” என்பார்.
. 1930ம் ஆண்டு வாக்கில் காரைக்குடியில் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி நாடகத்தில் எம்.ஜி.ஆர் நடித்துக்கொண்டிருந்த சமயம். காந்தியடிகள் காரைக்குடிக்கு வருகைதந்தார். அப்போது காந்தியை முதன்முதலாக பார்த்ததாக எம்.ஜி.ஆர் தெரிவித்திருக்கிறார்.
“காந்தியக் கொள்கைகளை முழுவதுமாக கடைபிடித்த தலைவர் அண்ணா மட்டுமே. அவருடைய புத்தகங்களை படித்தேன். அவருடைய நியாயமான கோரிக்கைகள்தான், தமிழகத்திற்கும், இந்திய துணை கண்டத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும் என்ற காரணத்தால் தி.மு.கழகத்தில் சேர்ந்தேன்.” என்று தி.மு.கவில் இணைந்த போதும் காந்திய கொள்கையில் பற்றுள்ளவராகவே இருந்தார்.
காந்தியடிகளின் பல்வேறு கொள்கைகளை தன்னுடைய வாழ்க்கையில் கடைபிடித்தார் எம்.ஜி.ஆர். அதிலொன்று கதர் சட்டை உடுத்துதல். நாடக நடிகராக இருந்த பொழுதிலிருந்து கதர் மீது பாசம் கொண்டவராக இருந்தார் எம்.ஜி.ஆர். இளம் வயதில் அணிந்திருந்த துளசிமாலையை துறந்தவிட்ட போது கூட, கதராடையை விடவில்லை.
அன்பே வா திரைப்படத்திற்கான படபிடிப்பு சிம்லாவில் நடைப்பெற்றது. படபிடிப்பு முழுவதும் முடிந்ததும், டெல்லியில் உள்ள காந்தி, நேரு போன்ற தலைவர்களின் சமாதிக்கு சென்றார் எம்.ஜி.ஆர். காந்தி சமாதியில் மலர்வளையம் வைத்து வணங்கியவர், சமாதியை ஒரு முறை சுற்றி வந்து வணங்கி அங்கேயே அமர்ந்து சில நிமிடங்கள் தியானமும் செய்திருக்கிறார்.
. “காந்திஜி கூறிய உயர்ந்த கருத்துக்கள், தத்துவங்கள் அனைத்துமே அன்றாட வாழ்க்கையில் பின்னிப் பிணைந்திருக்கின்றன. மது விலக்கை பற்றி யாராவது வலியுறுத்தினால் அங்கே காந்தி இருக்கிறார். தீண்டாமையை எதிர்த்து எவரேனும் போராடினால் அங்கே காந்தி இருக்கிறார்.உண்மை, எளிமை, அன்பு, நேர்மை ஆகிய பண்புகள் எங்கெங்கு இருக்கின்றனவோ, அங்கெல்லாம் காந்தி இருக்கிறார்” என்று காந்தியை நேசித்த எம்.ஜி.ஆர் மதுவிலக்கையும் தீவிரமாக கடைபிடிக்க எண்ணினார்.
காந்தியின் கொள்கையில் மதுவிலக்கை மிகவும் நேசித்தார் எம்.ஜி.ஆர். மதுவிலக்கு கொள்கையை அண்ணா கொண்டுவந்த போது அகம் மகிழந்தார். இருந்தும் அரசியல் காரணங்களுக்காக அடுத்தமுறை தி.மு கழக அரசு அதை நிறுத்தியது. அக்காலக்கட்டத்தில் மதுவிலக்கு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு செய்தார் எம்.ஜி.ஆர். “கள்ளுக்கடைப் பக்கம் போகாதே உன் காலைப் பிடித்து கெஞ்சுகிறேன்” என்று யாழ்பாணத்தினைச் சேர்ந்த திரு நித்தி கனகரத்தினம் பாடிய பாடலை, தமிழ்நாட்டின் மதுவிலக்கு பாடலுக்கு தேர்ந்தெடுத்தார் எம்.ஜி.ஆர்.
“அமைதியும் எளிமையுமே உருவான அவரை பார்த்ததும் ஏதோ தெய்வ தன்மை பொருந்திய ஒருவரை பார்ப்பது போன்ற பக்தி உணர்வு தான் ஏற்பட்டது. அந்த புன் சிரிப்பும், அவரது நடையும், குனிந்த தலையும் என் உள்ளத்தில் இன்றும் சித்திரமாக பதிந்து இருக்கின்றன.” என்று காந்தியை பார்த்த போது உணர்ந்தவற்றை பதிவு செய்திருக்கிறார் எம்.ஜி.ஆர்
. காந்தியின் அகிம்சையில் நம்பிக்கை கொண்டிருந்த எம்.ஜி.ஆர், உண்ணாவிரதம் கூட இருந்திருக்கிறார். தமிழ்நாட்டுக்கு மத்திய அரசாங்கம் அரிசி அனுப்பாததைக் கண்டித்து முதல்-அமைச்சராக இருந்த காலத்தில் எம்.ஜி.ஆர். 10 மணியிலிருந்து உண்ணாவிரதம் இருக்க தொடங்கினார். உண்ணாவிரதம் தொடங்கிய ஒரு மணிநேரத்திலேயே மத்திய உணவு மந்திரி ராவ்பீரேந்திரசிங் தொடர்பு கொண்டு டெல்லியில் வந்து பேசும் படி கூறினார். இருந்தும் எம்.ஜி.ஆர் திட்டமிட்டபடி மாலை 5 மணி வரை உண்ணாவிரததினை தொடர்ந்தார்.
காந்தியின் கொள்கைகளான மது விலக்கு, தீண்டாமை ஒழிப்பு, சமூக சேவை, எளிமை, உண்மை, தேசிய உணர்வு என்று அனைத்தையும் நேசித்தவர் எம்.ஜி.ஆர். இதனை நான் கண்ட காந்தி என்ற தலைப்பில் ஆனந்த விகடன் இதழுக்கு பேட்டியாக தந்திருக்கிறார். காந்திப் படத்தையும், அண்ணா படத்தையும் வழிபட்ட பின்பே முதல்வர் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார் எம்.ஜி.ஆர்........sbb...
-
மதம், மொழி, இன வேறுபாடுகள் அற்றவர் எம்.ஜி.ஆர்
பாரத ரத்னா விருது இந்திய இலங்கையின் ஒற்றுமைக்காகப் பாடுபட்டதால் நம் நாட்டின் தேசியத் தலைவர்களுள் ஒருவரான எம்.ஜி.ஆருக்குக் கிடைத்தது. தென்னிந்திய மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் வடக்கே டில்லி பம்பாய் கொல்கத்தா ஆகிய நகரங்களிலும் அ.தி.மு.க கட்சி செயல்பட்டதால் எம்.ஜி.ஆர் தேசியக் கட்சி தலைவர் அந்தஸ்தை பெற்றார். இந்த அந்தஸ்துக்குரிய அஸ்திவாரம் எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றங்களால் 1953 முதல் அமைக்கப்பட்டது. பாரதப் பிரதமராக லால் பகதூர் சாஸ்திரி இருந்த போது அவர் அந்தமான் தீவில் பணத்தோட்டம் எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றத்தை திறந்துவைத்தார். இன்றும் உலகில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் எம்.ஜி.ஆர் பற்றிய நினைவுகள் பசுமையாக உள்ளன. வெளிநாடுகளில் குறிப்பாக ஃபிரான்ஸ், சிங்கப்பூர் மலேசியா போன்றவற்றில் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் விழா வருடந்தோறும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. கர்நாடகாவின் தலைநகரான பெங்களூரிலும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. மகாராஷ்ட்டிராவின் எம்.ஜி.ஆர் மன்ற தலைவர் இதயக்கனி இதழுக்கு விளம்பரமும் நூற்றாண்டு விழா வாழ்த்தும் அனுப்புகிறார்.
நாடெங்கும் கட்சிஅலுவலகமாக மாறிய ரசிகர் மன்றம்
அவசர நிலையைப் பிரகடனம் செய்த பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் மாநிலக் கட்சிகளின் வளர்ச்சியை விரும்பவில்லை. அவற்றை ஒடுக்கிவிடுவார் என்ற தகவல் வந்தபோது எம்.ஜி.ஆர் தனது அண்ணா தி.மு.கவை அனைத்திந்திய அண்ணா தி மு க என்ற பெயரில் தேசியக் கட்சியாக மாற்றினார். இதற்காக மற்ற மாநிலங்களில் கட்சி அலுவலகங்கள் திறக்கப்பட்டன. உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. அ.தி.மு.க சார்பில் தேர்தலில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். அவர்கள் சட்டமன்றத்தில் அந்த மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்காக குரல் கொடுத்தனர். இவற்றுக்கெல்லாம் அடிப்படையாக இருந்தவை மற்ற மாநிலங்களில் இயங்கி வந்த எம்.ஜி.ஆர் ரசிகர்மன்றங்கள் ஆகும்.
எம்.ஜி.ஆர்
மற்ற மாநிலங்களுக்குச் செய்த உதவிகள்
எம்.ஜி.ஆர் நடித்து வந்த காலத்திலும் அரசியலுக்கு வந்த பிறகும் பிறருக்கு உதவுவதில் அவர் நம்மவர்,வேற்றவர் என்று வேறுபாடு கண்டதில்லை. எந்த மாநிலமாக இருந்தாலும் எந்த மொழி பேசும் மக்களாக இருந்தாலும் அவர் உதவி செய்யத் தயங்கியதே இல்லை. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல அவர் செய்த உதவிகளில் சிலவற்றை மட்டும் இங்கு காண்போம்.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே போர் வந்த போது உடனே எம்.ஜி.ஆர் போர் நிதியாக ரூ. 75,000 தருவதாக அறிவித்து முதல் தவணையாக காமராஜரிடம் 25,000க்கான காசோலையை தந்தார். அதற்கு பாரத பிரதமர் நேருஜி அவர்கள் நன்றி தெரிவித்து கடிதமும் அனுப்பினார்.
ஒரிசாவுக்கு நிவாரண நிதி திரட்டும் முயற்சியில் சென்னையில் ஒரு இந்தி படத்தைப் போட்டு அதன் வசூலை அனுப்ப சிலர் முயன்ற போது அதற்கான அழைப்பு எம்.ஜி.ஆருக்கு வந்தது. அந்தப் படத்தின் வசூல் தொகைக்குச் சமமான அளவு தொகையை எம்.ஜி.ஆர் தனிப்பட்ட முறையில் வழங்கினார்.
ராஜஸ்தானுக்கு அவர் அடிமைப்பெண் படப்பிடிப்புக்குச் சென்றபோது அண்மையில் அங்கு ஏற்பட்ட தீ விபத்துக்கு ஐம்பதாயிரம் நிதி உதவி அளித்தார். மறுநாள் செய்தித்தாள்களின் தலைப்புச் செய்தியாக இச்செய்தியே இடம்பெற்றது.
கர்நாடகாவில் ஒரு விழாவில் கலந்துகொள்ள எம்.ஜி.ஆர் சென்றிருந்த போது அங்கு பார்வையற்றோருக்கும் பேசும் திறனற்றோருக்குமாக ஐம்பதாயிரம் ரூபாய் உதவியளித்தார். எம்.ஜி.ஆர் அமெரிக்கா போய் சிகிச்சை பெற்று வந்த பிறகு அவருக்குப் பேசும் திறன் குறைந்தபோது அவர் அந்தக் கஷ்டத்தை உணர்ந்து தன் ராமாவரம் தோட்டத்தில் இக்குறைபாடு உடைய சிறுவர்களுக்குப் பள்ளி அமைக்கும்படி தன் உயிலில் எழுதிவைத்திருந்தார் என்று நம்மில் பலர் கருதுகிறார்கள். ஆனால், அவர நன்றாகப் பேசி வந்த காலத்திலேயே அவருக்கு மாற்று திறனாளிகள் மீது அன்பும் அக்கறையும் இருந்தது. அவர், அவர்களுக்கு பல உதவிகள் செய்திருக்கிறார். தமிழ்நாட்டிலும் அவர் பார்வையற்றோர் பள்ளிகளுக்கு நிறைய உதவியிருக்கிறார்.
கொல்கத்தாவுக்குப் பணம் படைத்தவன் படப்பிடிப்புக்குச் சென்றிருந்த போதும் அவர் அங்கு கொல்கத்தா தமிழ்ச் சங்கத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். அச்சங்கத்தின் வளர்ச்சிக்கு நிதி அளித்தார். பின்பு அவர் முதல்வரான பிறகு அங்கு சென்றிருந்த போது அவரை அங்குள்ள ஆளுநர் மாளிகையில் தங்கச் செய்தனர். ஆனால், அங்கிருந்த கெடுபிடிகளைப் பார்த்துவிட்டு என்னைப் பார்க்க வரும் பொது மக்களுக்கு இந்த இடம் வசதிப்படாது என்று சொல்லிவிட்டு ஓர் ஓட்டலில் வந்து தங்கினார். அங்கு எம்.ஜி.ஆரைப் பார்க்க வந்த தமிழர்களின் கையில் அவர் தனிச்செயலர் ரூபாய் நோட்டுக் கட்டிலிருந்து பிரித்து ரூபாய் நோட்டுகளைக் கொடுத்துக்கொண்டே இருந்தார்.
அமெரிக்காவுக்கு எம்.ஜி.ஆர் போயிருந்தபோது ஒரு பெண் அங்கு வந்து எம்.ஜி.ஆரிடம் உதவி கேட்டார். எம்.ஜி.ஆர் அவர் கேட்டதுக்கும் அதிகமான டாலர் நோட்டுக்களை அவருக்குக் கொடுத்து உதவினார்..........
-
1980-ல்தமிழக சட்டமன்றத் தேர்தலில் அண்ணா திமுக
மீண்டும் அமோக வெற்றி பெற்றது . அந்தத் தேர்தலில்
ஆண்டிபட்டி தொகுதியில் கழகத்தின் சார்பில் நின்ற
இலட்சிய நடிகர் , புரட்சித்தலைவர் எம்ஜியாரை விட
அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் .
தேர்தல் முடிவு வந்த அடுத்தநாள் தலைவரை
சந்திக்க ராமாவரம் தோட்டம் சென்றார் எஸ்.எஸ்.ஆர் .
அவரை அகமகிழ்ந்து வரவேற்ற தலைவர் , அவருடன்
காலை சிற்றுண்டி உண்டபடியே , " என்ன ராஜு , மந்திரி
ஆகணுமா ? என்ன இலாகா வேண்டும் சொல் " என்று கேட்க ,
" அண்ணே ,மந்திரி எல்லாம் வேண்டாம் ; நான் முதல்
மந்திரி ஆகணும் " என்று சொல்ல ,
தலைவர் சிரித்துக்கொண்டே
" நான் இருந்தால் என்ன , நீ இருந்தால் என்ன நீயே இருந்து
கொள் " என்று சொல்ல , எஸ்.எஸ்.ஆர் சிரித்துக்கொண்டே
" அண்ணே நீங்கள் இருந்தால் நாங்கள் இருந்த மாதிரி ,
தொடர்ந்து இரண்டாம் முறையாக நீங்கள் முதலமைச்சர்
ஆக வேண்டும் .
அது மட்டுமல்ல நீங்கள் உள்ளவரை நீங்களே
முதல்வராக ஆள வேண்டும் என்ற என் விருப்பத்தை
நேரில் தெரிவிக்கவே வந்தேன் " என்று கூறினார்.
அதன் பிறகு அமைச்சருக்கு இணையான ,
' சிறு சேமிப்புத்திட்டத் துணைத்தலைவர் ' பதவியை
வழங்கி இலட்சி நடிகரை சிறப்பித்தார் புரட்சித்தலைவர்.
( இந்தப் பதவி திமுக ஆட்சியில் எம்ஜியார் வகித்த பதவி ).........bsm.........
-
#டாக்டர் என்ற பட்டத்தை யாரெல்லாம் எதற்காகவோ வாங்கியிருக்கலாம்...
தமது பெயருக்கு முன் அதைப் போட்டுக்கொண்டு பெருமதிப்பைத் தேடிக்கொள்ள விரும்பலாம்...
பொன்மனச்செம்மலுக்குப் பல நாடுகளில் மொத்தம் 52 பட்டங்களை மக்களே விரும்பிக் கொடுத்துள்ளனர்...
தகுதி பார்த்தே தந்தனர்...
எந்தப்பட்டத்தையும் கொடுத்தபோது மறுக்காமல் வாங்கிக்கொண்டவர் மக்கள்திலகம் ...!!!
அதன் உண்மையான காரணத்தை ஒரு முறை மனம் திறந்தார்...
"நான் படிக்க ஆசை..ஆனால் முடியவில்லை...என்னை வக்கீலாக்க வேண்டும், அந்த உடை போட்டு என்னைப் பார்க்கவேண்டுமென்பது என் அம்மாவின் பெரிய ஆசை, வயிற்றைக் கிள்ளும் வறுமையால் பள்ளிக்கே செல்லமுடியாத நிலை..
ஆனால் .. எப்படியோ வளர்ந்து நானோ என் தாயோ நினைத்துக்கூடப் பார்க்கமுடியாத பதவியில் உக்காரந்துட்டேன்...
இப்போ இந்த பட்டம், அதை வாங்க ஒரு உடை. அந்த உடையோடு #என் #அம்மா #மேல்உலகத்திலிருந்தாவது #என்னைப் #பார்த்து #ஆனந்தப்படட்டும்..அதனால் தான் மறுக்காம வாங்கிக்கறேன் " என்று கண்ணீர் மல்கினார்.
#புரட்சித்தலைவர் #பயப்படுவது #மக்களின் #விமர்சனத்துக்கே. எந்த காரியத்தையும் அடுத்தவர் விமர்சிக்கும் அளவுக்கு செய்யமாட்டார்.
அவர்களை, டாக்டர் பட்டம் வாங்கிய தன்னை விட அறிவாளியாக ...
தன்னிடம் நலன் கண்டால் வாதிக்கும் வக்கீலாக...
தவறு கண்டால் தண்டனை தரும் நீதிபதிகளாகவே கருதினார்..
அந்த நினைப்பே புரட்சித்தலைவரைப் பதவியில் நிலைக்கவைத்தது............bsm.........
-
காந்திஜியின் பேரில் எம்.ஜி.ஆர். கொண்டுள்ள பக்திக்கு அளவேயில்லை. இதோ… காந்திஜி பற்றி சொல்கிறார் எம்.ஜி.ஆர்.
காந்திஜியை நீங்கள் எப்போது முதலில் பார்த்தீர்கள்?
1930ம் ஆண்டு என்று நினைக்கிறேன்.. காரைக்குடியில் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி நாடகத்தில் நான் நடித்துக்கொண்டிருந்த பொழுது காரைக்குடிக்கு வந்திருந்தார் காந்திஜி. அப்போது தான் அவரை பார்த்தேன்.
அவரை பார்த்ததும் முதன்முதலில் உங்களுக்கு எத்தகைய உணர்வு ஏற்பட்டது?
அமைதியும் எளிமையுமே உருவான அவரை பார்த்ததும் ஏதோ தெய்வ தன்மை பொருந்திய ஒருவரை பார்ப்பது போன்ற பக்தி உணர்வு தான் ஏற்பட்டது. அந்த புன் சிரிப்பும், அவரது நடையும், குனிந்த தலையும் என் உள்ளத்தில் இன்றும் சித்திரமாக பதிந்து இருக்கின்றன.
காந்திஜியின் கொள்கைகளில் உங்களுக்கு பிடித்தமானவை எவை?
மது விலக்கு, தீண்டாமை ஒழிப்பு, சமூக சேவை, எளிமை, உண்மை, தேசிய உணர்வு என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
காந்திஜியை பற்றி அண்ணா உங்களிடம் எப்போதாவது கருத்து பரிமாறிக் கொண்டதுண்டா?
கருத்து பரிமாறிக்கொள்ளும் அளவுக்கு நான் பேரறிஞர் அண்ணாவுக்கு சமமானவன் அல்ல. காந்திஜிக்கு முன்பு இருந்த அரசியல்வாதி“கள் எப்போதும் தாங்கள் எடுத்துக் கொண்ட காரியத்தின் வெற்றியை பற்றித்தான் கவலைப்பட்டார்களே தவிர அந்த வெற்றியை அடைவதற்கான வழிகளை பற்றி கவலைப்பட்டது இல்லை. காந்திஜி தான் அரசியல் உலகத்திலும் உண்மையையும், நேர்மையையும் கடைப்பிடித்து வெற்றி காண முடியும் என்று நிரூபித்தவர் என்று அண்ணா பல முறை கூறியிருக்கிறார்.
திரைப்படங்கள் மூலமாக காந்திஜியின் கொள்கைகளை எப்படி பரப்பலாம்?
காந்திஜி கூறிய உயர்ந்த கருத்துக்கள், தத்துவங்கள் அனைத்துமே அன்றாட வாழ்க்கையில் பின்னிப் பிணைந்திருக்கின்றன. மது விலக்கை பற்றி யாராவது வலியுறுத்தினால் அங்கே காந்தி இருக்கிறார். தீண்டாமையை எதிர்த்து எவரேனும் போராடினால் அங்கே காந்தி இருக்கிறார்.உண்மை, எளிமை, அன்பு, நேர்மை ஆகிய பண்புகள் எங்கெங்கு இருக்கின்றனவோ, அங்கெல்லாம் காந்தி இருக்கிறார். மனித வாழ்க்கையிலுள்ள நல்ல தன்மைகள் தான் மகாத்மா. சுருக்கமாக சொன்னால் மனித தன்மை தான் மகாத்மா. ஆகவே அவருடைய கருத்துக்களை பரப்புவதற்கென்று தனியாக படம் எடுக்க வேண்டும் என்பதில்லை.
உயர்ந்த கருத்துக்கள் உள்ள ஒரு படத்தை எடுத்தாலே, அது காந்திய கருத்துக்கள் உள்ள படம் என்று தான் பொருள்.
காந்திஜிக்கு மது, புகை இவை பிடிக்காது. இந்த கொள்கைகயை நடைமுறையில் கடைப்பிடித்து வரும் நீங்கள் அண்மையில் சிகரெட் கம்பெனி நடத்திய விழாவில் கலந்து கொண்டது ஏன்?
ஆரம்பத்தில் அதற்கு ஒப்புக்கொண்ட போது எனக்கு அந்த விவரம் தெரியாது. வறட்சி துயர் துடைப்பு பணிகளுக்காகம், ஸ்டான்லி மருத்துவமனைக்காகவும் நிதி சேர்க்கும் நல்ல காரியம் ஒன்று மட்டும் நினைத்து ஒப்புக்கொண்டேன். பிறகு தான் உண்மை தெரிந்தது. வருத்தப்பட்டேன். அத்துடன் நிற்கவில்லை அதை அன்று மேடையிலேயே கூறி விட்டேன். நிறைய செலவழித்து சிகரெட்டுக்கு விளம்பரம் செய்து மக்களை குறிப்பாக இளம் உள்ளங்களை கவர்வதை விட, இதே பண்தை எவ்வளவோ நல்ல காரியங்களுக்கு செலவழிக்கலாம் என்று பகிரங்கமாகவே பேசினேன். கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களுக்கு இதில் வருத்தம் தான். இருந்தாலும் எனக்கு சரியென்று பட்டதை மறைக்காமல் சொன்னேன். அப்படி பேசிய பிறகு தான் என் மனதுக்கு நிம்மதியாக இருந்தது.
ஆனந்த விகடன்- (08.10.2008)
நீங்கள் எந்த அரசியல் கட்சியில் முதலில் இருந்தீர்கள்?
காங்கிரஸில். காந்திய வழியில் சமதர்மத்தை விரும்பும் ஒருவனாக இருந்தேன்.
அந்தக் கட்சித் தலைவர்களில் நீங்கள் யாரிடம் ரொம்பவும் நெருங்கிப் பழகி இருக்கிறீர்கள்?
அந்த அளவுக்கு அப்போது நான் வளர்ந்திருக்கவில்லை. அதாவது நான்கு பேர் என்னைத் தெரிந்து கொள்ளுமளவுக்கு விளம்பரம் பெற்றிருக்கவில்லை.
தி.மு.க.வில் எந்த ஆண்டு சேர்ந்தீர்கள்?
1952-ஆம் வருடம் தி.மு.க.வில் சேர்ந்தேன்.
தி.மு.க.வில் சேரக் காரணம் என்ன?
எனது காந்திய வழிக் கொள்கைகள் அண்ணாவினால் உருவாக்கப்பட்ட தி.மு.க.வில் இருப்பதை அறிந்து சேர்ந்தேன்....sbb
-
"அப்போது நான் ‘தாய்’ வார இதழில் உதவி ஆசிரியர்.
#எம்ஜிஆர் அவர்களால் நடத்தப்பட்ட இதழ் அது.
அவரது வளர்ப்பு மகன் அப்புவின் நிர்வாகத்தில் இயங்கிக் கொண்டிருந்த்து.
அப்போது எம்.ஜி.ஆர்-தான் தமிழகத்தின் முதல்வர். அது சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்த வேளை.
எனக்கு இன்னமும் நன்றாக நினைவிருக்கிறது அந்த நாள். ஜனவரி மாதத்தின் மூன்றாம் வாரத்தில் ஒரு திங்கட்கிழமை.
அன்றைக்கு வழக்கத்தைவிடவும் கொஞ்சம் சீக்கிரமாகவே அலுவலகத்திற்கு வந்துவிட்டேன்.
ஆசிரியர் வலம்புரி ஜான் அறையிலிருந்த டெலிபோன் ஒலித்ததும், அவர் வரத் தாமதம் ஆகும் என்பதால் நான் போய் எடுத்துப் பேசினேன்.
எதிர்முனையிலிருந்து ஒரு குரல்...
”நான் எம்.ஜி.ராமச்சந்திரன் பேசுகிறேன்… ஆசிரியர் இருக்கிறாரா?”
அந்த நொடி எனக்குள் லேசான அதிர்ச்சி. சுதாரித்துக் கொண்டு...
”இன்னும் வரலை சார்….”
”நீங்க யார் பேசறது?”
”நான் உதவி ஆசிரியர், கல்யாண்குமார்”
“சரி, கடந்த பொங்கல் தாய் சிறப்பு இதழில் எத்தனை அரசு விளம்பரங்கள் வந்தன என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார் எம்.ஜி.ஆர்.
என்னிடம் அதற்கான பதில் இல்லை. காரணம் நான் ஆசிரியர் குழுவைச் சேர்ந்தவன். விளம்பர சம்பந்தமான விபரங்களை நான் அறிய வாய்ப்பில்லை. ஆனாலும் சுதாரித்துக் கொண்டு,
”ஒரு ஐந்து நிமிடம் எனக்கு நேரம் தந்தால் அதுபற்றி முழுவிபரங்களையும் விளம்பர மானேஜர் பத்மானாபனிடம் கேட்டுச் சொல்லிவிடுகிறேன்.. அவர் ஏற்கனவே வந்து விட்டார்..” என்றேன்.
“இல்லை ஆசிரியர் வந்ததும் என்னை அந்த விபரங்களோடு தொடர்பு கொள்ளச் சொல்லுங்கள். நன்றி. வணக்கம்.”
-என்று நான் பதில் வணக்கம் சொல்லுமுன்னே போனை வைத்துவிட்டார்.
ஓ! திரையில் பார்த்துப் பிரமித்த ஒரு மனிதரிடம் போனில் பேசிவிட்டோம்! பிரமிப்பாகத்தான் இருந்தது எனக்கு அந்த வாரம் முழுக்க!
சற்று நேரத்தில் ஆசிரியர் வந்ததும் விபரத்தைச் சொன்னேன். அவரும் உடனடியாக அவர் கேட்ட விபரங்களை சேகரித்துக் கொண்டு திரும்ப எம்.ஜி.ஆரிடம் பேசினார்.
விஷயம் இத்தோடு முடிந்துவிடவில்லை. மறுநாள் அலுவலகம் வந்த ஆசிரியர் இன்னொரு புது விஷயத்தைச் சொன்னார்.
முதல் நாள் என்னோடு பேசுவதற்கு முன் எம்.ஜி.ஆர்., ஆசிரியர் வலம்புரி ஜானின் வீட்டுக்குப் போன் செய்திருக்கிறார்.
ஆனால் அப்போதுதான் ஆசிரியர், அலுவலகத்திற்குக் கிளம்பி இருக்கிறார்.
அப்போது அவரது குடும்பம் வெளியூர் போயிருந்தபடியால் வீட்டில் இருந்த பதின்மூன்று வயது வேலைக்காரச் சிறுமிதான் போனை எடுத்துப் பேசியிருக்கிறாள்.
அவளுக்கும் எம்.ஜி.ஆருக்குமான உரையாடல் இப்படி நிகழ்ந்திருக்கிறது:
”ஹலோ.. யாருங்க பேசறது?” இது வேலைக்காரச் சிறுமி.
”நான் எம்.ஜி.ராமச்சந்திரன் பேசுகிறேன். வலம்புரி ஜானிடம் பேசவேண்டும்”
#எம்ஜியார் எப்போது, யாருடன் பேசினாலும் தன் முழுப்பெயரையும் சொல்லித்தான் பேசுவாராம். அதனால் பேசுவது எம்.ஜி.ஆர் என்பது தெரியாமலே அந்த வேலைக்காரச் சிறுமி பதில் சொல்லியிருக்கிறாள்!
“அய்யா இப்பதான் ஆபீஸுக்குக் கிளம்பிப் போனாங்க”
“நீங்க யார் பேசறது?”
”நா இங்க வேலைபாக்குற பொண்ணு. அம்மா, அக்காவெல்லாம் ஊருக்குப் போயிருக்காங்க.”
“உங்க பேரு என்ன?”
“லச்சுமி”
“எந்த ஊரு?”
“தூத்துக்குடி பக்கத்துல வள்ளியூர் “
“இங்க வேலைக்கு வந்து எத்தனை வருஷமாச்சு?”
“மூணு வருஷமா இங்கதான் இருக்கேன்”
“அப்படியா? என்ன சம்பளம் கொடுக்குறாங்க?”
“அதெல்லாம் எனக்குத் தெரியாது. மாசாமாசம் ஊருக்கு அப்பாவுக்கு அனுப்பிடுவாங்க. எனக்கு சாப்பாடு போட்டு தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ்க்கு துணி எடுத்துக் கொடுத்துருவாங்க.”
“உன்னை நல்லா வச்சுக்கறாங்களா? சாப்பாடெல்லாம் நல்லா இருக்கா?”
“ம்ம்ம்… நல்லா இருக்கும்.. அய்யாவுக்கு தினம் கறிச்சோறு செய்வாங்க. எனக்கும் கொடுப்பாங்க”
“சினிமாவுக்கெல்லாம் கூட்டிட்டுப் போவாங்களா?”
“ஆமா. லீவு நாள்ல எல்லாரும் போவாங்க. என்னையும் கூட்டிட்டுப் போவாங்க..”
“உனக்கு அய்யாவைப் புடிக்குமா? அம்மாவப் புடிக்குமா?”
“ரெண்டு பேரையுமே புடிக்கும். அய்யா எதாவது கடைக்கு அனுப்பினா மிச்சக் காசை என்னையே வச்சுக்கச் சொல்லுவாரு. சேர்த்துவைக்கிறேன்.”
“எப்ப ஊருக்குப் போகப்போற?”
“எங்க அப்பா வந்து கூட்டிட்டுப் போவாரு. இப்பதான் பொங்கலுக்குப் போயிட்டு வந்தேன். இனி தீபாவளிக்குப் போவேன். புதுத்துணியெல்லாம் அம்மா எடுத்துக் கொடுப்பாங்க..”
“சரி, அய்யா வந்ததும் நான் பேசுனதாச் சொல்லு”
“உங்க பேரு என்ன சொன்னீங்க?”
“எம்.ஜி..ராமச்சந்திரன்”
“மறுபடி சொல்லுங்க….”
“எம்.ஜி.ராமச்சந்திரன்”
அப்போதும்கூட தான் எம்.ஜி.ஆர் என்பதை அவர் சொல்லிக் கொள்ளவேயில்லை!
இரவு வீட்டுக்குத் திரும்பிய ஆசிரியரிடம் அந்த வேலைக்காரச் சிறுமி இந்த போன் விபரத்தைச் சொல்லியிருக்கிறாள்.
அத்தனை நேரம் உன்னிடம் பேசிக் கொண்டிருந்தது, எம்.ஜி.ஆர் என்ற விபரத்தை ஆசிரியர் அவளிடம் சொன்னபோது அதை அவள் முழுசாய் நம்பவில்லை.
எம்.ஜி.ஆரின் முழுப்பெயர் அவளுக்குத் தெரியாததால், ‘அவரு எம்.ஜி.ஆருன்னு சொல்லவேயில்லையே.. எதோ ராமச்சந்திரன்ன்னுதானே சொன்னார், அய்யா பொய் சொல்கிறார்’ என்றுதான் நினைத்திருக்கிறாள்.
ஆனால் அடுத்தமுறை வலம்புரி ஜான், எம்.ஜி.ஆரைச் சந்திக்கப் போனபோது அந்தச் சிறுமி பற்றி விசாரித்த எம்.ஜி.ஆர் அவளிடம் சேர்ப்பிக்குமாறு ஒரு கணிசமான தொகையைக் கொடுத்துவிட்டிருக்கிறார்.
அவ்வளவு பணமும் தனக்குத்தான், அதுவும் எம்.ஜி.ஆரே கொடுத்து விட்டிருக்கிறார் என்று அறிந்தபோதுதான்...
சில நாட்களுக்கு முன் தன்னோடு பேசியது சாட்சாத் எம்.ஜி.ஆரேதான் என்பதை அவள் நம்பியிருக்கிறாள்.!"
-கல்யாண்குமார் | தாய் இதழ் உதவி ஆசிரியர்.....
-
#புரட்சிதலைவர்
#இதயதெய்வம்
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். #அவர்களின்_ஆசியோடு_நண்பர்கள் #அனைவருக்கும்_இனிய
#காலை_வணக்கம்...
இதயதெய்வம் டாக்டர் எம்ஜியார்
அதிமுகவை தொடங்கிய பின் சுதந்திரா கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவரை விரும்பி அழைத்து கட்சியில் சேர்த்துக் கொண்டார். தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தபோதும் மருத்துவரான அவரது சேவை கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராகவும் ஆக்கினார். அவர்...டாக்டர் எச்வி.ஹண்டே.
‘‘எம்.ஜி.ராமச்சந்திரனை திமுகவில் இருந்து விலக்கியது மறைந்த அண்ணா அவர்களையே விலக்கியது போலாகும். தனித்துப் போராடுகிறார் எம்.ஜி.ஆர்.! மகாபாரத அர்ஜுனனைப் போல அவரை வெற்றி வீரர் ஆக்குங்கள்’’… திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டபோது மூதறிஞர் ராஜாஜி சொன்ன வாசகங்கள்தான் இவை. 1971-ம் ஆண்டு தேர்தலில் பெருந்தலைவர் காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸும் மூதறிஞர் ராஜாஜியின் சுதந்திரா கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டு திமுகவிடம் கடும் தோல்வியை சந்தித்தன.
அதிமுகவையும் திமுகவையும் சமதூரத்தில் வைத்துப் பார்த்த காமராஜருக்கு, ராஜாஜியின் எம்.ஜி.ஆருக்கு ஆதரவான அறிவிப்பு ஏற்புடையதாக இல்லை. சுதந்திரா கட்சியில் இருந்த டாக்டர் எச்.வி. ஹண்டேயை அழைத்து தனது அதிருப்தியை ராஜாஜியிடம் தெரிவிக்குமாறு காமராஜர் கூறினார்.
அதற்கு ராஜாஜியின் பதில், ‘‘காமராஜரும் எம்.ஜி.ஆரை ஆதரிக்க வேண்டும்’’ என்பதே. அவரது பதிலோடு தன்னை சந்தித்த ஹண்டே யிடம், ராஜாஜியை அவரது பிறந்தநாளின்போது சந்தித்து பேசுவதாகக் கூறியிருக்கிறார் காமராஜர். ‘‘ஆனால், அதற்குள் ராஜாஜி உடல் நலம் பாதிக்கப்பட்டு மறைந்துவிட்டார்’’ என்கிறார் டாக்டர் ஹண்டே. ‘‘அடுத்த சில மாதங்களில் நடந்த திண்டுக்கல் இடைத்தேர்தலில் அதிமுக பெற்ற அமோக வெற்றி, ராஜாஜியின் கணிப்பை உறுதிப்படுத்தியது’’ என்றும் கூறுகிறார்.
சட்டப்பேரவையில் அப்போதைய திமுக அரசை எதிர்த்து சுதந்திரா கட்சியின் பேரவைத் தலைவராக இருந்த ஹண்டேயின் செயல்பாடுகளை பார்த்த எம்.ஜி.ஆர்., ‘‘ராஜாஜி என்னை ஆதரித்தார். அவரது விருப்பப்படி நீங்கள் அதிமுகவில் சேர வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார். அதன்படி, 1973 ஜூன் 19-ம் தேதி அதிமுகவில் ஹண்டே சேர்ந்தார். அதிமுகவின் முதல் தலைமை நிலையச் செய லாளர் ஆக அவரை எம்.ஜி.ஆர். நியமித்தார். 1980-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை அண்ணாநகர் தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதியை எதிர்த்து போட்டியிட்டு 699 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை ஹண்டே இழந்தாலும், அவரை அமைச்சரவை யில் சேர்த்துக்கொண்டு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக்கினார் எம்.ஜி.ஆர்.!
எம்.ஜி.ஆருடன் சேர்ந்து பணியாற்றிய தனது அனுபவத்தில், அவர் தனது அரசியல் எதிரிகளைக்கூட கடுமையாகப் பேசி ஹண்டே பார்த்தது இல்லை. எதிர்க் கட்சியை சேர்ந்தவர்களின் தொகுதிகளுக்கும் பாரபட்ச மில்லாமல் அரசின் திட்டங்களை எம்.ஜி.ஆர். செயல்படுத்தியிருக்கிறார். அப்படி ஒரு அனுபவம் ஹண்டேவுக்கே உண்டு.
திமுக ஆட்சியில் சட்டப்பேரவை சபாநாயகராக இருந்தவர் புலவர் கோவிந்தன். கருணாநிதிக்கு நெருக்கமானவர். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக ஹண்டே இருந்தபோது, அவரை புலவர் கோவிந்தன் சந்தித்தார். வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள தனது செய்யாறு தொகுதியில் சுகாதாரத்துறை சார்பில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஒரு பட்டியலைக் கொடுத்தார்.
அந்தப் பட்டியலை எடுத்துக் கொண்டு முதல்வர் எம்.ஜி.ஆரை ஹண்டே சந்தித்து விஷயத்தைத் தெரிவித்தார். அதற்கு எம்.ஜி.ஆர்., ‘‘எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. அந்தப் பணிகளை உடனே நிறைவேற்றுங்கள். புலவர் கோவிந்தன் நல்ல மனிதர். அவர் திமுகவில் இருந்தாலும் நீங்கள் செய்யாறு தொகுதிக்கு நேரடியாகச் சென்று பணிகளை முடிக்க ஏற்பாடு செய்யுங்கள்’’ என்றார். இந்த பதிலால் ஹண்டேயின் மதிப்பிலும் மனதிலும் எம்.ஜி.ஆர். விஸ்வரூபம் எடுத்து நின்றார்.
தன் மீது வீசப்படும் கடுமையான விமர்சனங்களுக்குக் கூட எம்.ஜி.ஆர். கோபப்பட மாட்டார். அதே நேரம் அந்த விமர்சனங்களுக்கு அவர் அளிக்கும் பதில் மிகக் கூர்மையாக இருக்கும்.
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, பரமத்திவேலூர் என்ற இடத்தில் அதிமுக பொதுக்கூட்டம். அதில் கலந்து கொள்வதற்காக எம்.ஜி.ஆருடன் ஹண்டே சென்றார். ஹண்டேயின் கையில் அன்றைய மாலை நாளிதழ் இருந்தது. ‘‘என்ன நியூஸ்?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார். சொல்வதற்கு ஹண்டேக்கு தயக்கம். என்றாலும் தயங்கியபடியே சொல்லிவிட்டார். ‘‘திமுக தலைவர் கருணாநிதி உங்களுக்குப் பொருளாதாரம் தெரியாது என்று விமர்சித்திருக்கிறார்’’ என்றார் ஹண்டே.
அதைக் கேட்டு எம்.ஜி.ஆர். கோபமோ, வருத்தமோ அடையவில்லை. நிதானமாகச் சொன்னார்… ‘‘திமுக தலைவர் கூறுவது உண்மைதான். நான் பெரிய படிப்பு படித்தவன் அல்ல. பொருளாதாரம் பற்றி எனக்கு சொல்ல, அதுபற்றி நன்கு அறிந்த உயர் அதிகாரிகள் இருக்கிறார்கள். ஆனால், பல முதல் அமைச்சர்களுக்குத் தெரியாத விஷயம் எனக்குத் தெரியும். பசி என்றால் என்னவென்று எனக்குத் தெரியும். அந்தக் கஷ்டம் புரியும். மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய முதல் அமைச்சருக்கு இது தெரிந்தால் போதும்.’’
‘‘எம்.ஜி.ஆர். சொன்னது கரெக்ட்தானே’’ என்கிறார் டாக்டர் ஹண்டே!
மூதறிஞர் ராஜாஜி நகைச்சுவை உணர்வு உடையவர். எம்.ஜி.ஆரும் அப்படியே. அதிமுகவைத் தொடங்கிய புதிதில் ராஜாஜியின் ஆசியை பெறுவதற்காக அவரை எம்.ஜி.ஆர். சந்தித்தார். படப்பிடிப்பு இருந்ததால் அதை முடித்துவிட்டு ராஜாஜியை பார்க்கச் சென்றபோது தாமதமாகிவிட்டது. வருத்தம் தெரிவித்த எம்.ஜி.ஆர்., ‘‘ஷூட்டிங்கினால் தாமதமாகிவிட்டது’’ என்றார். அதற்கு, துப்பாக்கிச் சூடு சம்பவத்தை குறிப்பிடும் வகையில் ‘‘ஷூட்டிங்தான் ஏற்கெனவே முடிஞ்சுடுத்தே‘‘ என்று சிலேடையாக ராஜாஜி சொல்ல, ரசித்து சிரித்தார் எம்.ஜி.ஆர்.!
அன்புடன்...vr...
-
எம் ஜி ஆர் நல்லவனுக்கு நல்லவன் ...
எம் ஜிஆர் வல்லவனுக்கு
வல்லவன் ...
சென்னையில் ஒரு பகுதி மிகுந்த பரபரப்பரப்பான ஏரியா ...அங்கு ஒரு சிறு வியாபாரி அந்த பகுதி ரௌடிகளால் தொலை அனுபவிக்கிறார் பல நாள் பொறுத்து கடைசியில் அவர் தினம் வணங்கும் பொன்மன செம்மல் எம் ஜி ஆருக்கு ஒரு கடிதம் போடுகிறார் தன் நிலைமையை குறித்து
ஒரு நாள் ரௌடிகள் கூடும் நேரம் ஒரு அரசு வண்டி வந்து நிற்க அதில் இருந்து சூரியன் போல் எம் ஜி ஆர் இறங்கி கடைகாரர் பெயரை கூப்பிட்டு நலமா ஏன் தோட்டத்திற்கு வரகூடாதா?! என நலம் விசாரித்துவிட்டு ஒரு பொட்டலம் பணம் கொடுத்து போகிறார் கடைகாரர் கடவுளை கண்ட பக்தனாக திகைத்து விட்டார்...
இதன் பின் அந்த கடைகாரரிடம் எவராவது வம்பு வளர்ப்பார்களா ...
எம் ஜி ஆர் நினைத்திருந்தால் போலீஸ் கொண்டு அடக்கி இருக்கலாம் ... ஆனால் அது கடைகாரரிடம் பகைதான் வளரும் என்று கருதியே தானே களம் இறங்கி உதவினார் ...
இது பொதிகை டிவியில் எம் ஜி ஆர் நூற்றாண்டு விழா மேடையில் அதன் தலைமை அதிகாரி உரையில் இருந்து அறியபட்டது
வாழ்க எம் .ஜி .ஆர் ., புகழ்.........vrh...