இன்னொருவருக்குச்
சொந்தமான பொருள் தான்
நன்றாகப் புரியுதடி
அதற்காக
பார்க்கும் போதெல்லாம்
திருப்பிக் கொள்ளாதே பார்வையை..
சற்றேனும் என் கண்களைப்
பார்த்தால்
உனக்கு தெரியக்கூடும்
பெற்றவளின் வலி...
Printable View
இன்னொருவருக்குச்
சொந்தமான பொருள் தான்
நன்றாகப் புரியுதடி
அதற்காக
பார்க்கும் போதெல்லாம்
திருப்பிக் கொள்ளாதே பார்வையை..
சற்றேனும் என் கண்களைப்
பார்த்தால்
உனக்கு தெரியக்கூடும்
பெற்றவளின் வலி...
வலி கொஞ்சம் மிஞ்சும்
லாபங்கள் அதிகம்
நட்டங்களும் தான்
விட்டுக் கொடுத்துப் பிடித்து
கூட்டிக் கழித்துப் பார்த்து
பழைய கணக்கு சலிக்குது
சலிக்குது வயதும் ஆக
..சுவைபட வாழ்ந்த வாழ்க்கை
வலிக்குது செய்த பாவம்
..வயணமாய் நெஞ்சில் கூடி
துளிர்க்குது பயமும் மெல்ல
..துன்பமும் சற்றே சூழ
களிப்புடன் இருந்த நாட்கள்
..கடுகியே வருமோ மீண்டும்..
மீண்டும் வருக
ஊர் எல்லையில் பலகை
ஏக்கப் பெருமூச்சு
இல்லை சாத்தியம்
சாத்தியம் இல்லை..
அழகான ஏரி
நடுவில் படகு
இரவு
அமைதி
கூட அழகியஇளம் பெண்
பால் ஒளி நிலவு..
இருந்தும்
அமைதியிலலா மனதில்
கவிதை வராது..
சுற்றிலும் வாகனச் சத்தங்கள்
சிவப்பு மாறக்
காத்திருக்கும் பொழுதிலும்
கவிதை துள்ளிக் குதிக்கும்..
தேவை
கவிதை மனசு...
மனசு ஆனது கொதிகலன்
துடிக்குது மெல்லிய உதடு
சிவக்குது வேலான கண்ணிரண்டு
அட்டைக்கத்தி வீசும் வீரனுக்கு
கொடும் வதை காத்திருக்கு
கொற்றவை சீற்றம் தப்பாது
தப்பாது வந்த் பார்வை
..தடுக்காமல் நெஞ்சில் பாய
கப்பல்கள் புயலின் போது
..கடலன்னை மடியின் மேலே
சப்பரங்கள் கொண்ட தேர்தான்
..சாய்ந்துதான் அசையும் வண்ணம்
தொப்பலாய் அச்சம் வந்து
..திகைப்பிலே நனைக்கும் அங்கே..
மெல்லவே அருகில் சென்று
..மென்மையாய்க் கர்ம் பிடித்தால்
சொல்லொணா ஏக்கம் காட்டும்
..சுவைமிகும் கண்கள் மெளனம்
கொள்ளவும் கோதை தன்னைக்
..கொஞ்சியே அருகில் கூட்டி
அள்ளவும் அஞ்சு கத்தின்
..அனலது தணியு மன்றோ
தணியுமன்றோ தாபமும் கோபமும்
குரோதமும் குமுறும் வஞ்சமும்
இழந்ததை மீட்க முடியாததை எண்ணி
இன்னலுற நாட்கள் அதிகமில்லை இனி
enakku idhu kavidhaiyaanu theiryala.. edho thonichu... :ashamed: please ignore if it is inappropriate...:)
இனியாவது விதி செய்வோம்
என்று போராடி கொண்டிருந்தான்
ஆவியாக முண்டாசு கவிஞன்
//ms welcome...commentskku thani thread irukku..anga vaanga//
கவிஞன் ஆவான் காதலன்
கண்ணே மணியே என்பான்
கைபிடித்த பின் என்னாவான்
கடைசியில் சாயம் போனவன்
போனவன் திரும்ப வந்து
...பொங்கிடும் நெஞ்சில் நன்றாய்
வானவில் வண்ணம் கூட்டி
...வார்த்தைகள் கோர்த்த நல்ல
கானமாய்த் துள்ள வைத்து
...கட்டியே அணைக்க அங்கே
நாணமோ வந்து வஞ்சி
...நல்முகம் தழையு மன்றோ..
தழையுமன்றோ நிலம் பார்த்து
காய்த்துக் கனத்த வாழைப்பூ
கதிர் முற்றிய நெல்லுப்பயிரு
அடக்கிக் குனியுது பொருளுள்ளது
அழகும் அர்த்தமும் அங்கிருக்கு
புரிய வேண்டுமிது மனிதனுக்கு
மனிதனுக்குத் தேவை
மனிதம் தான்..
கை தட்டல் ஒலி முடிந்ததும்
பேச்சாளர் கீழிறங்க
தொண்டர்கள் மகிழ்ச்சியில்
கை கொடுக்கப்பார்க்க
சிரித்த படி கொடுத்த
வேட்பாளரின் கண் சிவந்ததில்
மனிதம் தொலைந்து போயிருந்தது..
தொலைந்து போயிருந்தது முன்பிருந்த வனப்பு
வெய்யிலில் கருக்காதிருக்க தடவிட ஓர் களிம்பு
வயதின் சுருக்கம் மறைத்திட இன்னொரு பூச்சு
வதனத்தில் பொலிவு மின்ன பல உத்தியிருக்கு
வறண்டுவிடாமல் கூந்தலுக்கு ஏற்றிடும் கருப்பு
அப்பப்பா பேரிளம் பெண்களுக்கெத்தனை பொறுப்பு
பொறுப்பு ஏற்பதென்றால் வரும் வெறுப்பு - ஆவதென்ன
ஏற்காமல் போவதனால் போவதென்ன - யாருக்கும்
ஆகாது தீங்கெதுவும் - ஆகுமே
தீங்குனக்கு - போகுமே
விருப்பில் வந்த வழி!
வந்த வழி மறக்கவில்லை
போகும் வழி புரியவில்லை
வழி மாறி போகாதே - அழுதாள் அம்மா
வந்துவிட்டேன்
இனி யோசித்து பயனுமில்லை
பயனுமில்லை பலனுமில்லை
அழுவதினால் திறனும் இல்லை..
தாரைவார்த்த தந்தையவர்
தலை சாய்ந்து சென்றுவிட,
அழுகின்றேன்..
குடிகாரன் பின்னாலே
தள்ளி விட்ட விதியை நொந்து!
பயன் எங்கே?
உதை பெற்றேன்..
வீரம் கொண்டேன்..
இவனிடம் நான் பிள்ளை பெறேன்..
தள்ளிவிட்டேன்..
உதறி விட்ட என் சமுதாயம் - உதறிவிட்டேன்..
என் வாழ்க்கை நான் நடத்தி
உந்தி சென்றேன்..
தத்தெடுத்த என் குழந்தை அவள்
எதிர்காலம் காண சென்றேன்..
பெண் என
பெருமை கொண்டேன்!
//very touching one srini :bow: //
கொண்டேன் அழகான காதல்
அறுபது நாள் தான் என்றது உலகம்..
நம்பினேன் என் தலைவனை..
ஏமாற்றம் தான் மிஞ்சியது...
எனக்கில்லை... ஊர் வாய்க்கு
மெல்ல அவல் இல்லையே என்று...
இல்லையே என்று இன்று வரை ஏங்கியதில்லை
மீசை முளைப்பதில்லை வீரத்தில் சோடையில்லை
தசையில் வலு அதிகமில்லை உலகை தாங்குவேன்
வீணே ஊரைச் சுற்றித் திரியும் சுதந்திரம் எனக்கெதுக்கு
என்னைச் சுற்றியே இயக்கங்கள் நடக்கப் பார்க்கிறேன்
வெட்டி அதிகாரம் இல்லாமல் ஆளுகிறேன் கர்வமாய்
கர்வமாய் மனப்பலூனுக்குள் காலடி வைத்து
இயல்பை மறைத்து தற்பெருமை பெருக்கி
இறுதியில் ஆளுமை வெடித்துச் சிதறும் நான்.
நான் ஓடி வருகிறேன் என்று சென்றவர்கள்
நய வஞ்சக நரிகளின் செயலால்
நடந்து வருவார்களா என்பதே
கேள்விக்குறியானது!!!!
-
கிறுக்கன்
கேள்விக்குறியானது
நமது வாழ்க்கை என
நினைக்கவேண்டாம் தோழர்களே..
தலைவர் மறைந்தால் என்ன..
நாம் அவர் பாதையில்
தொண்டாற்றுவோம்..
பேச்சாளர் பேசி முடிக்க
கைதட்டிய தொண்டர்களின் ஒலியில்
தெரிந்தது
ஆச்சர்யக் குறி
அச்சர்யக்குறிக்கு பக்கத்தில் கேள்விக்குறியை போட்டால்
அர்த்தமென்னவோ என்றெல்லாம் யாரும் குழம்பினால்
அது ஓர் அதிசயமான ஆனால் நம்பமுடியாத சங்கதி
என்பது வழக்கமாய் குசும்பர்களின் குறுக்கு அகராதி
அகராதி பிடிச்சவம்பா..
யாரையும் மதிக்கவில்லை என
கோபுவை
அலுவலகத்தில் அனைவரும்
சொல்வர்..
கோபுவோ
தானுண்டு தன் வேலை உண்டு
என இருப்பவன்..
அதே கோபு
செகரெட்டரி பாஸ்கருக்கு
விபத்து ஏற்பட
மருத்துவ மனையில் சேர்த்து
ரத்தம் கொடுத்து
உயிர் பிழைக்க வைத்து
திரும்பி வீட்டுக்கு வந்த போது
வந்த மார்வலியில்
பொசுக்கென்று போய்விட
மலர்வளையம் வைக்க வந்தவர்கள்
சொன்னார்கள்
என்ன மனுஷம்ப்பா
ரொம்ப நல்லவர்...
நல்லவர் ஒருவர் கூட இல்லை துரியோதனன் பார்வையில்
கெட்டவர் ஒருவரும் தெரியவில்லை அண்ணன் தருமனுக்கு
இரு குணமுமிங்கு வெவ்வேறு விகிதத்தில் கலந்துதானிருக்கு
துரியோதனும் தருமனும் நம்மிடையேயில்லாதது ஆறுதலே
ஆறுதலே என்றாலும் கண்ணின் ஓரம்
...ஆற்றாமல் பொங்கிவரும் ஈரம் மேலும்
தேறுதலைச் சொன்னவர்கள் தோளின் மீது
..தொன்மையாகச் சாய்ந்திடவும் கொஞ்சம் தோன்றும்
ஊருசனம் கூடிவந்து சொல்லி என்ன
...உயிர்பிரிந்த உற்றாரும் மீண்டு வாரார்
மாறுதலைக் கொண்டதுதான் மனித வாழ்க்கை
..மறதியதன் விலையொண்ணா சொத்தும் ஆகும்..
<Good one Chinnakkannan :) >
ஆகும் வடு உள்ளத்தில்
மறதி கொண்டு அழிப்பதென்றால்
போகுமா சோகம்
ஆகாது மறதி மட்டும்
உடன் தேவை அன்பும்
தரும் அரவணைப்பும்..
படிக்கட்டுகளே..
படிக்கட் டுகளே கேட்டிடுவீர்
...பாங்காய் மேலே செல்லுதற்கு
அடியில் தரையில் இருந்தாலும்
...அழகாய் எம்மை ஏற்றிடுவீர்
வடிவம் எல்லாம் பார்க்காமல்
...வாகாய்ச் செல்ல இருப்பதனால்
துடிப்பாய் இருக்கும் உங்களையே
..தாண்டிச் சென்றால் மறந்திடுவோம்..
மறந்திடுவோம் கோடையிலே
மார்கழிப் பனி வாடையிலே
மேனி நடுங்கியதை கம்பளியை
கதகதப்பை சுடு பானம் நாடியதை
அருவியாய் ஓடும் வியர்வை
அடித்துச் செல்கிறது ஞாபகத்தை
ஞாபகத்தை வெறுக்கின்றேன்
மறக்க முயல்கின்றேன்
என் வலிகளை நினைக்க மறுக்கின்றேன்
ஞாபகம் வருகிறதே என் செய்வேன்
சொல்லாயோ என் மனக்குப்பையே..!!!!!!!
மனக்குப்பையே தீதின் காரணம்
வயது வரம்பின்றி அது குவியும்
விதவிதமாய் நிதம் வெளிப்படும்
விரோதம் விகாரம் வெத்தாட்டம்
சுத்தம் செய்திட ஓர் துடைப்பம்
உனக்குள்ளே தேடு கிடைக்கும்
அன்புள்ள இடத்தில் பண்பு கிடைக்கும்
ஆண்டவன் இடத்தில் அமைதி கிடக்கும்
இச்சையில் தவழ்ந்தால் அழிவு கிடைக்கும்
ஈ போல் பறந்தால் இழிவு கிடைக்கும்
உள்ளத்தில் என்றும் தெளிவு கிடைக்கும்
ஊக்கம் கொண்டால் வெற்றி கிடைக்கும்
எட்டாது என நினைத்தால் என்ன கிடைக்கும்
ஏறுவேன் என நினைத்துப்பார் எதுவும் கிடைக்கும்
ஐயம் கொண்டால் தவறு கிடைக்கும்
ஒருக்காதே ஒருவரையும் நேயம் கிடைக்கும்
ஓரமாய் உன்னையும் பார் ஞானம் கிடைக்கும்
ஒளவையாரின் ஆத்திச்சூடிக்கு போட்டி எங்கே கிடைக்கும்
ஃ இல் தாய் தமிழ் சிறப்பு கிடைக்கும்
தேன் பாய்கிறது என்னிரு காதில்
வேறு சத்தமில்லா பெரிய வீட்டில்
மூன்று கூண்டில் மூன்று வகை
வண்ணக்குருவிகள் பொழுதெல்லாம்
கீச்கீச் சத்தம் சிங்கார சீட்டியொலி
அழகுயிர்கள் என் மனதிற்கு குளிர்ச்சி
குளிர்ச்சியாகத் தான் இருந்தது
நெஞ்சில் இனித்தது காதல்
இருவரும் பிரியும் வரை
இன்று நேரில் பார்த்துக்கொண்டாலும்
யார் நீ என்று கேட்காதது ஒன்று தான் குறை
அடிநாக்கில் கசந்தது காதல்
காதல் கத்திரிக்காயுடன் உறவு கொண்டது எப்படியோ
சாப்பாட்டுப் பிரியர்கள் சவடாலாய் பேசி உருவானதோ
அடுக்களை புகுந்து இருட்டில் சட்டி பானையை உருட்டி
கலவரம் நடத்தும் திருட்டுப் பூனைதானது ஐயமின்றி
ஓசையின்றிதான் மனதுக்குள் புகுந்தாலும் தவறாமல்
வெளிப்பட்டுவிடும் அது நிகழ்த்தும் தடுமாற்றங்களால்
தடுமாற்றங்களால் துவண்டுவிட்டேன்
காதல் தொடுக்கும் வேதையினால்..
பலர் நா புரட்டும் காலம் இது!
காதல் என்ன காதல்?
வெற்று மனிதன் மீது
மனது கொண்ட எக்கச்சக்க அன்பு காதல்..
நமது என்று சுயநலம் போற்றி
நஞ்சாய் தினமும் மாறும் போதை..
விழுந்து உடைந்த பொருள் ஒன்று
குடையுமா ஒருவர் உள்ளத்தை?
காதலை அங்கே சேர்த்துக்கொள்..
தருமே அல்லவா வேதனை!
உன்னையே உன்னிடம் திருடிவிட்டு
ஆஹா ஓஹோ போடவைத்து
மாயை வலையில் எளிதில் தள்ளி
வானம் அழகு
வாத்தும் அழகு
மரம் அழகு
மட்டையும் அழகு
உலகம் அழகு
அழகோ அழகு
ஐய்யோ அழகு
எல்லாம் அழகு
இப்படி எல்லாம் பிதற்றவைத்து
பித்தும் நன்றாய் பிடிக்க வைத்து
உன்னை எளிதாய் அழித்த பிறகு
வேறு என்ன பேச வைக்கும்
வேதனை என்னும் மந்திரம் தவிர..
காதல் ஒருவரில் நேசம் வளர்த்து
கருணை கொண்ட மனிதன் ஆக்கும்..
மிகுதியானால்..
மிருகம் ஆக்கும்!
மிருகம் ஆக்கும் மனிதனை
என்று அதையும் இதையும்
கோபத்தை போதையை
காரணம் காட்டிக் காட்டி
பேராசையின்றி எளிமையாய்
இனம் காத்து வலிமையாய்
அழகாய் ஒழுங்காய் வாழும்
ஐந்தறிவினத்தை பழிக்காதீர்
பழிக்கா தீர்நீர் என்றெல்லாம்
..பாங்காய் மொழிந்த பேச்சாளர்
விழிகள் கொஞ்சம் தான்சிவக்க
..வியப்பை அதனுள் கூட்டிவிட்டே
தெளிவாய்ச் சொன்னார் தெம்மாங்கில்
..தோதாய் எடுத்தே எதிர்க்கட்சி
வழிகள் எல்லாம் தனைச்சாடி
..வாகாய் முடித்தார் தன்னுரையை..