வாருங்கள் வந்து
எங்கள் தலைவன் புகழ் பாடுங்கள்
Printable View
Goodmorning everybody
ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தேவனென்று போற்றுவோம்
அன்னை இதயமாக அன்பு வடிவமாக வந்து வழிகாட்ட வேண்டும் என்று வணங்குவோம்
கடவுளிலே கருணை தனை காணலாம்
அந்த கருணையிலே கடவுளயும் காணலாம்
நல்ல மனசாட்சியே தேவன் அரசாட்சியம்
அங்கு ஒருபோதும் மறையாது அவன் சாட்சியாம்
பாவம் என்ற கல்லறைக்கு பலவழி
என்றும் தர்மதேவன் கோவிலுக்கு ஒரு வழி
இந்த வழி ஒன்று தான் எங்கள் வழியென்று நாம்
நேர்மை ஒருநாளும் தவறாமல் நடை போடுவோம்
இதய தெய்வம் நமது அண்ணா தோன்றினார்
அவர் என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார்
அந்த ஒளி காணலாம் சொன்ன வழிபோகலாம்
நாளை வரலாறு நமக்காக உருவாகலாம்
ஒரு தாய் மக்கள் நாம் என்போம்
ஒன்றே எங்கள் குலம் என்போம்
தலைவன் ஒருவன் தான் என்போம்
சமரசம் எங்கள் வாழ்வென்போம்
ஒரு தாய் மக்கள் நாம் என்போம்
ஒன்றே எங்கள் குலம் என்போம்
தலைவன் ஒருவன் தான் என்போம்
சமரசம் எங்கள் வாழ்வென்போம்
சமரசம் எங்கள் வாழ்வென்போம்
ஒரு தாய் மக்கள் நாம் என்போம்
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
பொதிகை மலையில் பிறந்தவளாம்
பூவை பருவம் அடைந்தவளாம்
கருணை நதியில் குளித்தவளாம்
காவிரி கரையில் களித்தவளாம்
ஒரு தாய் மக்கள் நாம் என்போம்
உரிமையில் நான்கு திசை கொண்டோம்
உறவினில் நண்பர்கள் பலர் கொண்டோம் மூத்தவர் என்னும் பெயர் கொண்டோம்
முத்தமிழ் என்னும் உயிர் கொண்டோம்
ஒரு தாய் மக்கள் நாம் என்போம்
தர்மத்தின் சங்கொலி முழங்கிடுவோம்
தமிழ் தாயின் மலரடி வணங்கிடுவோம்
தர்மத்தின் சங்கொலி முழங்கிடுவோம்
தமிழ் தாயின் மலரடி வணங்கிடுவோம்
அமைதியை நெஞ்சினில் பொஆற்றி வைப்போம்
ஆனந்த ஜோதியை ஏற்றி வைப்போம்
அமைதியை நெஞ்சினில் போற்றி வைப்போம்
ஆனந்த ஜோதியை ஏற்றி வைப்போம்
ஒரு தாய் மக்கள் நாம் என்போம்
ஒன்றே எந்கள் குலம் என்போம்
ஒன்று எங்கள் ஜாதியே
ஒன்று எங்கள் நீதியே
உழைக்கும் மக்கள் யாவரும்
ஒருவர் பெற்ற மக்களே
உழைக்கும் மக்கள் யாவரும்
ஒருவர் பெற்ற மக்களே
வெள்ளை மனிதன் வேர்வையும்
கருப்பு மனிதன் கண்ணீரும் (2)
உப்பு நீரின் வடிவிலே ஒன்று சேரும் கடலிலே (2)
ஆதி மனிதன் கல்லை எடுத்து வேட்டை ஆடினான்
அடுத்த மனிதன் காட்டை அழித்து நாட்டை காட்டினான்
மற்றும் ஒருவன் மண்ணில் இறங்கி பொன்னைத் தேடினான்
நேற்று மனிதன் வானில் தனது தேரை ஓட்டினான்
இன்று மனிதன் வெண்ணிலாவில் இடத்தை தேடினான்
வரும் நாளை மனிதன் ஏழு உலகை ஆளப் போகிறான்
(ஒன்று )
மன்னராட்சி காத்து நின்றதெங்கள் கைகளே
மக்களாட்சி காணச் செய்ததெங்கள் நெஞ்சமே
எங்கள் ஆட்சி என்றும் வாழும் இந்த மண்ணிலே
கல்லில் வீடு கட்டித் தந்த்தெங்கள் கைகளே
கருணை தீபம் ஏற்றி வைப்பதெங்கள் நெஞ்சமே
இல்லை என்பதில்லை நாங்கள் வாழும் நாட்டிலே
இல்லை என்பதில்லை நாங்கள் வாழும் நாட்டிலே
(ஒன்று )
http://i62.tinypic.com/2eq6etu.jpg
எல்லாருக்கும் வணக்கம். என் பெயர் ஷாரியார். மக்கள் திலகம் புகழ் பாடுவதில் உங்களோடு சேர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனும் ஆன அல்லாஹ்வின் திருப்பெயரால் ........ (தொடங்குகிறேன்)
http://www.dinamalar.com/news_detail.asp?id=897687
1982ம் ஆண்டு மதுரை சர்க்யூட் ஹவுஸ்க்கு முதல்வராக வந்திருந்த எம்ஜிஆரை பார்க்க திரண்டு நின்ற கூட்டத்தை எம்ஜிஆர் நின்று கொண்டும், நாற்காலியில் உட்கார்ந்து கொண்டும் பார்ப்பது போன்ற படமும் அதில் ஒன்று. உண்மையில் அது தினமலர் பேப்பர் கட்டிங்.அதை இந்த அளவு பாதுகாத்து வைத்திருந்தவரை இந்த நேரத்தில் பாராட்டத்தான் வேண்டும்.
நான் எடுத்த அந்த படம் எங்கெங்கோ பயணித்து விட்டு கடைசியில் என் பார்வைக்கே வந்து அந்த படத்தின் பின்னணி சுவராசியமானதாகும். காரணம் அன்று நடந்த சம்பவம் அப்படியே பசுமரத்தாணி போல பதிந்து போயிருப்பதுதான்.
"வழக்கமாக வருட பிறப்பு அன்று எம்ஜிஆர் சென்னையில்தான் இருப்பார் இப்போது மதுரையில் தங்கியுள்ளார், அவரை பார்க்க நிறைய பிரமுகர்கள் வருவார்கள். நம்மை உள்ளே விட மாட்டார்கள் அரசாங்க போட்டோகிராபரே எல்லா படமும் எடுத்து கொடுத்து விடுவார் எதற்கும் நீங்கள் அங்கே போய்விடுங்கள்" என்று என்னை அனுப்பியிருந்தனர்.
நான் போனபோது சர்க்யூட் ஹவுஸ் என்ற அந்த விருந்தினர் மாளிகை முழுவதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அதிலும் சுற்றுப்பக்கம் உள்ள ஏழை, எளிய கிராம பெண்கள் திரளாக அதிகாலை முதலே வந்து காத்திருந்தனர். யாருக்கும் அனுமதியில்லை. எம்ஜிஆர் என்ன நினைப்பார் என்ன செய்வார் என்பது தெரியாத நிலையில் மக்களோடு மக்களாக நானும் நின்று கொண்டிருந்தேன்.
அறை எண் ஒன்றில் அவர் தங்கியிருந்தார், நேரமோ காலை 9 மணியிருக்கும். அறை வாசலில் அமைச்சர்கள், நகர பிரமுகர்கள், அதிகாரிகள் என்று வரிசையாக கோயில் பிரசாதம், மாலைகள், பூங்கொத்துகளுடன் நின்று கொண்டிருந்தனர். அந்த நீண்டு கிடந்த வரிசையைப் பார்த்தபோது இவர்கள் எல்லாம் ஒவ்வொருவராக உள்ளே போய் சாதாரணமாக பார்த்து விட்டு வந்தாலே மதியம் ஆகிவிடும் பாவம் இந்த கிராம மக்கள், இவர்கள் வெயிலில் காத்து கிடக்கிறார்கள், இப்படி இவர்கள் காத்து கிடப்பது பற்றிய தகவலாவது எம்ஜிஆருக்கு சொல்லப்பட்டு இருக்குமா? என்ற எண்ணத்துடன் நின்று கொண்டிருந்த எனக்கு அடுத்த சில நிமிடங்களில் ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது.
எம்ஜிஆரின் அறைக்கதவு திறந்தது. பிரமுகர்கள் தங்களை சரி செய்து கொண்டு உள்ளே போக தயரானபோது அவர்களை தடுத்த பாதுகாவலர் சிஎம் முதல்ல மக்களை பார்க்க வருகிறார் என்று சொல்லிவிட்டார்.
அவர் சொன்ன அடுத்த வினாடி சிரித்த முகத்துடன் கைகூப்பி வணங்கியபடி சவுக்கு கட்டை தடுப்பில் தேக்கி வைக்கப்பட்டிருந்த மக்களை நோக்கி வந்துவிட்டார். அப்போதுதான் எம்ஜிஆரை அவ்வளவு நெருக்கத்தில் நானும் பார்க்கிறேன்.
வந்தவர் சவுக்கு கட்டையின் மீது கையை வைத்துக் கொண்டு ஒவ்வொரு முகமாக பார்த்து சிரித்தபடி அவர்களது வாழ்த்தை பெற்றுக்கொண்டிருந்தார். இது எதிர்பாராத நிகழ்வு என்பதால் அரசு புகைப்படக்கலைஞர் உள்பட யாரும் அங்கு வரவில்லை.
வந்தவர் வழக்கமான தலைவர்கள் போல கையை காட்டிவிட்டு உள்ளே போய்விடுவார் என்று எண்ணினால் அப்படியே நின்றுவிட்டார். அங்கு இருந்த பல பெண்கள் சந்தோஷத்தில் அவரை நோக்கி கையை நீட்ட அவரும் கைகொடுத்து அவரை மகிழ்வித்தார். பிறகு என்ன நினைத்தாரோ உள்ளே இருந்த ஒரு நாற்காலியை கொண்டுவரச் செய்து அதில் உட்கார்ந்து கொண்டார்.
சில வினாடியாவது பார்க்க முடியுமா என்று எண்ணிய தங்கள் தலைவரை, இவ்வளவு நேரம் பார்க்க முடிந்ததே என எண்ணி பல பெண்கள் கண்ணீர்விட்டே அழுதேவிட்டனர். சவுக்கு கட்டையின் வழியாக தனது கரங்களை நீட்டி அவர்களின் கண்ணீர் துடைத்து தனது அன்பை வெளிப்படுத்தினார். அவர்கள் கூறிய குறைகளையும் கேட்டார், கொடுத்த மனுக்களையும் வாங்கிக் கொண்டார். இந்த காட்சிகள் அனைத்தையும் கறுப்பு, வெள்ளையில் (ஆர்வோ பிலிம்) அனைத்தையும் பதிவு செய்தேன். அதன் அபூர்வம் இப்போதுதான் தெரிகிறது.
இப்படியே அன்று வந்திருந்த பெரும்பாலான மக்கள் அவரை நெருங்கி வந்து பார்த்துவிட்டு சந்தோஷத்துடன் சென்றனர். அவர்களுக்கு எல்லாம் அது மறக்கமுடியாத புத்தாண்டாகும்.
இப்படி நீண்ட நேரம் மக்களுடன் இருந்துவிட்டு திரும்ப அறைக்கு சென்றார். அவர் ஏன் மக்கள் திலகம் என்று கொண்டாடப்படுகிறார் என்பதற்காக சரியான விடையும் அன்று கிடைத்தது.