கலைமகள் மாத இதழ் -செப்டம்பர் 2016
http://i68.tinypic.com/2nv72c4.jpg
Printable View
கலைமகள் மாத இதழ் -செப்டம்பர் 2016
http://i68.tinypic.com/2nv72c4.jpg
http://i63.tinypic.com/11aeiiv.jpg
தினத்தந்தி இணையதளத்தில் இருந்து..
http://www.dailythanthi.com/News/Ind...requesting.vpf
தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் சித்தராமையாவுக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடிதம்
பதிவு செய்த நாள்:
திங்கள் , செப்டம்பர் 12,2016, 9:35 PM IST
சென்னை,
சென்னை,
கர்நாடகாவில் உள்ள தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு எழுதிஉள்ள கடிதத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்திஉள்ளார்.
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு கூடுதலாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. தமிழகத்துக்கு கூடுதல் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு வெளியானதால் பெங்களூரு, மைசூரு, மாண்டியா உள்பட மாநிலம் முழுவதும் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது.
கர்நாடகாவில் தமிழகர்களின் கடைகள், வாகனங்கள் குறிவைத்து தாக்கப்படுகிறது. பெங்களூருவில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
மேலும் நகர் முழுவதும் 15 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மைசூரிலும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதற்கிடையே ராணுவத்தை அனுப்ப கர்நாடக அரசு கோரிக்கை விடுத்து உள்ளது.
இந்நிலையில் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு இந்த விவகாரம் தொடர்பாக கடிதம் எழுதி உள்ளார். கர்நாடகாவில் உள்ள தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திஉள்ளார். தமிழக மக்கள் மற்றும் அவர்களுடைய உடமைகள் மீதான தாக்குதல்கள் வருத்தம் அளிக்கிறது என்று குறிப்பிட்டு உள்ளார்.
ராஜ்நாத் சிங்
இதற்கிடையே உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், கர்நாடக, தமிழக சட்டம் ஒழுங்கு நிலை குறித்து ராஜ்நாத் சிங் கேட்டறிந்தார். நிலை குறித்து தமிழக மற்றும் கர்நாடக முதல்வர்களிடம் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தொலைபேசியில் பேசிஉள்ளார். மத்திய அரசு இரு மாநிலங்களுக்கும் அனைத்து உதவிகளையும் செய்ய தயார் என்று ராஜ்நாத் சிங் கூறிஉள்ளார்.
http://i66.tinypic.com/r2tj5z.jpg
நன்றி - மயில்ராஜ் முகநூல் பக்கம்
மக்கள் திலகத்தின் மாபெரும் மாண்புகளில் ... அற்புதமான ஒன்று ... தான்...இன்றைய எனது களம்...
ஒரு பாடகர்... மக்கள் திலகத்திடம் வாய்ப்பு கேட்டு வருகிறார்... தலைவர்... எதனையும் ஆழ்ந்து யோசித்து முடிவெடுப்பவர் ஆதலால்... "ஆகட்டும் பார்க்கலாம்..." என்கிறார்... அது தான் அவருக்குரிய மரியாதை... அதோடு அவர் போய் இருந்தால்... மக்கள் திலகத்தின் மாண்பு வெளிப்பட்டு இருக்காது... அரை நூற்றாண்டை நெருங்கும் இந்த பழைய நிகழ்வை நாமும் அசை போட்டு இருக்க மாட்டோம்... ஆசை...ஆசையாய்...
"நானும் உங்க ஆளுதான்... நானும் கேரளாதான்... அதுனால கொஞ்சம் பாத்து பண்ணுங்க..." - என்று சொல்ல...
கண்கள் கனல் கக்க... தலையை மட்டும் ஆட்டி நாகரீகமாக அனுப்பி வைத்து விட்டு... சிபாரிசுக்கு அழைத்து வந்தவரை உண்டு... இல்லை... என்று... பண்ணி விட்டாராம்... நம் பண்பாளர்...
பின்னாளில் அதே பாடகரை மன்னித்து வாய்ப்பு அளித்தார்! என்பதே நம் மக்கள்திலகத்தின் மாண்புமிகு வரலாறு...
நான் ஏன் சொல்கிறேன்... என்றால்... இன-மத-பேதமறியா நம் உன்னதரின் வழியில்... நாமும் இணைந்தே... இன்னும் பல சாதனை சாதிக்க வேண்டிய சூழலில்... ஆங்காங்கே... ஒற்றுமை எனும் பேரில்... இன ரீதியான வேற்றுமையே... இப்போது தாண்டவமாடுகிறது...
அதை தூண்டும் எவரும் ... மக்கள்திலகத்தின் பெயரை கூட உச்சரிக்கும் தகுதி அற்றவரே...!
இன பேதம் தூண்டுவோரே...!
உன்னதரின் பெயரை உச்சரிக்காதீர்...!
- மக்கள் திலகத்தின் மாணவன் மயில்ராஜ்
http://i68.tinypic.com/oa2fyw.jpg
நமது மக்கள் திலகம் பக்தர்களுக்கு என்று இல்லை. திரியை படிக்கும் எல்லாருக்கும் ஒரு வேண்டுகோள். மற்ற மாநில மக்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் செய்திகளையோ கருத்துக்களையோ தயவு செய்து பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பதிவிடாதீர்கள் என்று இதைப் படிக்கும் நண்பர்களை பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்.
வன்முறை எதற்கும் தீர்வு இல்லை. மக்கள் திலகம் தனது வாழ்க்கையில் மட்டுமல்லாது, படத்திலும் கூட எதிரிகளை அவர்கள் என்ன கொடுமை செய்திருந்தாலும் மன்னிப்பார்.
அவர் வழியில் நாமும் காவிரி பிரச்சினையில் நல்லது நடக்கும் என்று நம்பிக்கையுடன் பொறுமையாக இருப்போம்.
http://i67.tinypic.com/30db0qu.jpg
நிர்வாகத்தில் சிறந்து விளங்கியவர்!
M.G.R. பற்றி பொதுவாக ஒரு விமர்சனம் உண்டு. அவர் நல்லவர். மனிதாபிமானம் மிக்கவர். என்றாலும் அரசு நிர்வாகத்தில் அவர் அத்தனை சிறப்பாக செயல்படவில்லை என்று கூறப்படுவது உண்டு. ஆனால், முதல்வராக இருந்தபோது நிர்வாகத்தில் எவ்வளவோ சிக்கலான விவகாரங்களுக்கும் உணர்வுபூர்வமான பிரச்சினைகளுக்கும் தனக்கே உரிய மதிநுட்பத்தோடு காதும் காதும் வைத்தது போல கச்சிதமாக தீர்வு கண்டவர் எம்.ஜி.ஆர்.
காவிரிப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணக் கோரி டெல்லியில் விவசாயிகள் இரண்டு நாட்கள் முன்பு மனித சங்கிலி போராட்டம் நடத்தியுள்ளனர். கர்நாடகாவுக்கும் தமிழகத்துக் கும் காவிரிப் பிரச்சினை இன்று நேற்றல்ல; காலம் காலமாக இருந்து வரும் ஒன்று.
தமிழகத்தின் நெற்களஞ்சியமாம் தஞ்சையில் குறுவை பயிரிடும்போதுதான் வழக்கமாக காவிரி தண்ணீர் பிரச்சினை தலைதூக்கும். ‘குறுவை’ பெயருக்கேற்றபடி குறுகிய காலப் பயிர். எம்.ஜி.ஆர். முதல்வராக இருக்கும்போதும் தண்ணீர் இல்லாமல் குறுவை கருகும் அபாயம் ஏற்பட்டது. அப்போது, கர்நாடக முதல்வராக இருந்த ராமகிருஷ்ண ஹெக்டே உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தார். அவருடன் எம்.ஜி.ஆர். உடனடியாக பேச முடியாத நிலை.
அந்த நேரத்தில் கர்நாடகாவில் கல்வி அமைச் சராக இருந்தவர் ரகுபதி. எம்.ஜி.ஆருக்கு நெருங் கிய நண்பர். ரகுபதியின் தாயார் எம்.ஜி.ஆர். மீது மிகுந்த அன்பு கொண்டவர். ஒரு நாள் காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் பெங்களூ ருக்கு முதல்வர் எம்.ஜி.ஆர். புறப்பட்டார். அவரு டன் இரண்டு அதிகாரிகள் மட்டுமே சென்றனர். பெங்களூர் சென்ற எம்.ஜி.ஆர்., கர்நாடகா அமைச்சர் ரகுபதியை தொடர்பு கொண்டு விமான நிலையத்துக்கு வரச் சொன்னார்.
எம்.ஜி.ஆரின் திடீர் வருகையும் தன்னை வரச் சொல்வதன் காரணமும் புரியாமல் பரபரப்புடன் பெங்களூர் விமான நிலையத்துக்கு வந்த ரகுபதி, எம்.ஜி.ஆரை வரவேற்றார். தன்னுடன் வந்த தமிழக அதிகாரிகளை அரசு காரில் செல்லச் சொல்லிவிட்டு, எம்.ஜி.ஆர். மட்டும் ரகுபதியின் காரில் ஏறிக் கொண்டார். நேராக ரகுபதியின் வீட்டுக்கே காரை விடச் சொன்னார்.
ரகுபதியுடன் சாதாரணமாக பேசிக் கொண்டு வந்தாரே தவிர, விவரம் எதுவும் சொல்லவில்லை. அது காலை நேரம். தங்கள் வீட்டுக்கு வந்த எம்.ஜி.ஆரைக் கண்ட ரகுபதியின் தாய் அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்று உபசரித்து சிற்றுண்டி பரிமாறினார். எம்.ஜி.ஆர். சாப்பிட்டு முடித்தார். சாப்பாட்டின்போதும் சரி, சாப்பிட்டு முடித்த பிறகும் சரி, அருகே வைக்கப்பட்டிருந்த தண்ணீரை எம்.ஜி.ஆர். குடிக்கவே இல்லை. ‘ஏன் தண்ணீரை குடிக்கவே இல்லை? வேண்டாமா?’ என்று ரகுபதியின் தாய் கேட்டார்.
அதை எம்.ஜி.ஆர். பிடித்துக் கொண்டார். ரகுபதியை பார்த்து சிரித்துக் கொண்டே, ‘‘தண்ணீர் வேண்டும்தான். ஆனால், உங்கள் மகன் கொடுக்க மாட்டேன் என்கிறாரே? அப்புறம் நான் எப்படி தண்ணீர் குடிப்பது?’’ என்று கேட்டார். ரகுபதிக்கு பொறி தட்டியது. எம்.ஜி.ஆர். தனியாக வந்த நோக்கத்தை புரிந்து கொண்டார். தன் கையாலேயே எம்.ஜி.ஆருக்கு தண்ணீர் கொடுத்து உபசரித்ததுடன் காரியத்தில் இறங்கினார்.
முன்னாள் பிரதமர் தேவகவுடாதான் அப்போது, கர்நாடகாவின் பொதுப்பணித்துறை அமைச்சர். அவருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்த ரகுபதி உடனடியாக வரச் சொன்னார். அங்கிருந்து மூவரும் மருத்துவமனையில் இருந்த ராம கிருஷ்ண ஹெக்டேவை பார்க்கச் சென்றனர்.
அங்கே, பிரச்சினையை எப்படி சமாளிப்பது, கர்நாடகாவில் தண்ணீர் இருப்பு, இருக்கும் நீரை இரு மாநிலங்களும் பாதிக்காத வகையில் பகிர்ந்து கொள்வது ஆகியவை குறித்து சிறிது நேரத்தில் விவாதிக்கப்பட்டு தமிழகத்துக்கு விளம்பரம் இல்லாமல் தண்ணீர் விட முடிவு செய்யப்பட்டது.
உடல் நலம் சரியில்லாமல் இருக்கும் ராம கிருஷ்ண ஹெக்டேவை எம்.ஜி.ஆர். பார்த்து நலம் விசாரித்தார் என்று செய்திகள் வெளியானது. ஆனால், இந்த சந்திப்பின் நோக்கமே வேறு. சத்தமே இல்லாமல், தமிழகத்தின் கடைமடைப் பகுதிக்கு காவிரி தண்ணீரை எம்.ஜி.ஆர். கொண்டு வந்து விட்டார்.
படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரர், வியாபாரி, ஊழியர், அதிகாரிகள், விஐபிக்கள் என்று பல தளங்களிலும் எம்.ஜி.ஆருக்கு ரசிகர்கள் உண்டு. இந்த பிரிவினரில் சதவீதம் மாறலாமே தவிர, எல்லாத் தரப்பிலும் ரசிகர்களை எம்.ஜி.ஆர். பெற்றிருந்தார். அந்த விஐபிக்களில் ஒருவர் கர்நாடக முதல்வராக இருந்த குண்டுராவ். தன்னை எம்.ஜி.ஆர். ரசிகர் என்று பகிரங்கமாக அறிவித்தவர் அவர். எம்.ஜி.ஆர். நடித்த ‘இதயக்கனி’ படத்தில் இடம் பெற்ற
‘ஒன்றும் அறியாத பெண்ணோ...’
பாடல் காட்சி கர்நாடக மாநிலம் ‘கூர்க்’கில் உள்ள குண்டுராவுக்கு சொந்தமான விருந்தினர் மாளிகையில்தான் படமாக்கப்பட்டது. குண்டுராவிடமும் ஒருமுறை எம்.ஜி.ஆரே பேசி விளம்பரமே இல்லாமல் காவிரியில் தண்ணீர் விடச் செய்தார் .
எம்.ஜி.ஆர். நடித்த ‘ஊருக்கு உழைப்பவன்’ படத்தில் பல காட்சிகள் கர்நாடகா மாநிலம் பெங்களூர், மைசூர் ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டன. படத்தில்
‘இதுதான் முதல் ராத்திரி... அன்புக் காதலி என்னை ஆதரி...’
என்ற இனிமையான டூயட் இடம்பெறும். எம்.ஜி.ஆரை பார்த்து நாயகி பாடுவார்...
‘அடிமை இந்த சுந்தரி.... என்னை வென்றவன் ராஜதந்திரி...’
http://i65.tinypic.com/2076n85.jpg
கர்நாடக முதல்வராக இருந்த குண்டுராவுடன் எம்.ஜி.ஆர்.
நன்றி - தி இந்து
http://i65.tinypic.com/1zz3ji8.jpg
இன்று (13/09/2016)பிற்பகல் 2 மணிக்கு வசந்த் டிவியில் புரட்சி நடிகர் /மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் நடித்த "ராஜா தேசிங்கு " ஒளிபரப்பாகிறது
இன்று பிற்பகல் 3 மணிக்கு பாலிமர் டிவியில் நடிக பேரரசர் எம்.ஜி.ஆர். நடித்த
"சக்கரவர்த்தி திருமகள் " ஒளிபரப்பாக உள்ளது .
http://i65.tinypic.com/2emeg51.jpg
இனிய பக்ரீத் நல்வாழ்த்துக்கள்
ராணி வார இதழ் -18/09/2016
http://i63.tinypic.com/2iw2720.jpg