-
நம் கர்ணனின் கடலூர் கலக்கல்.
16-3-2012 அன்று தென்னாற்காடு மாவட்டத்தின் தலைநகர் கடலூர் நம் நடிப்புச் சக்கரவர்த்தி அவர்களின் கர்ண கர்ஜனையால் கதி கலங்கியது. கிருஷ்ணாலயா திரையரங்கம் திருவிழாக் கோலம் பூண்டது. மாலைக்காட்சி 6-30 க்கு என்றால் ரசிகர்கள் 3.00 மணிக்கெல்லாம் தியேட்டருக்கு வரத் தொடங்கி விட்டார்கள். நடிகர் திலகம் வாழ்க, சிம்மக் குரலோன் வாழ்க என்ற கோஷங்கள் விண்ணைப் பிளந்தன. முதல் நாள் இரவே கிருஷ்ணாலயா திரையரங்கம் பேனர்களாலும், கொடிகளாலும், வாழை மரங்களினாலும், பூக்களாலும் அலங்கரிக்கப்பட்டு சொர்க்கலோகம் போல மின்னியது. எங்கு திரும்பினாலும் நடிகர் திலகத்தின் பேனர்கள்.
'என் ஆச ராசாவே' (28-8-1998)ரீலீசுக்குப் பிறகு இந்தத் திரையரங்கில் இப்போது கர்ணன். கிட்டத்தட்ட 14 வருடங்கள் இடைவெளி. ரசிகர்களின் உற்சாகத்துக்கு கேட்க வேண்டுமா! கடலூரிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் இருந்து ஒரு ரசிகர் கூட விடாமல் அனைத்து ரசிகர்களும் தியேட்டரில் நான்கு மணிக்கெல்லாம் 'டாண்' என்று ஆஜர். ஒவ்வொரு முகத்திலும் 1000 watts மெட்ரிக் விளக்கின் பிரகாசம். உற்சாகக் கூக்குரல்கள். ஒருவரையொருவர் கட்டித் தழுவி 'தெய்வத்தின் புகழ் வாழ்க' என்று ஆனந்தக் கண்ணீர் விட்டுக் கொண்டது நம் மனதை என்னவோ செய்தது.
எங்கள் ஊர் நெய்வேலியில் இருந்து காரிலும், பேருந்துகளிலும் ரசிகர்கள் வந்து தத்தம் பேனர்களுக்கு மாலை அணிவித்து மகிழ்ந்தனர். கடலூர் லாரன்ஸ் சாலையில் மிகப் பெரிய பேனர் வைக்கப்பட்டு போவோர் வருவோர் அனைவரையும் அண்ணாந்து பார்க்க வைத்தது. அகில இந்திய ரசிகர் மன்ற பொருளாளர் திரு ராஜேந்திரன் அவர்கள் இந்த பேனரை வைத்து பெருமையைத் தட்டிச் சென்றார். கிருஷ்ணாலயா திரையரங்கிலிருந்து வேல்முருகன் திரையரங்கு வரை பேனர்கள் இடம் பிடித்திருந்தன. பேனர்களுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு பட்டாசுகள் கொளுத்தப் பட்டன. கடலூரின் மெயின் இடம் என்பதால் பொது மக்கள் அனைவரும் எல்லா அமர்க்களங்களையும் வியந்து பார்த்தபடியே சென்றனர். திரையரங்கின் நுழைவு வாயிலில் வாழை மரங்கள் கட்டப் பட்டு உள்நுழைவு வாயில் வரை தரை நெடுகிலும் பூக்கள் தூவப் பட்டிருந்தன.
டிக்கெட் கவுண்டர் அருகே சமுக்காளம் விரிக்கப்பட்டு மேளம், மற்றும் நாதஸ்வர இசை இசைக்கப்பட்டது. ரசிகர்கள் அனைவருக்கும் முன்னதாகவே மொத்தமாக டிக்கெட் வாங்கி, மீதமுள்ள டிக்கெட்கள் கவுண்டரில் வழங்கப்பட்டன. சரியாக 6.30 க்கெல்லாம் படம் துவங்கப் பட்டு விட்டது. கைத் தட்டலும், ஆரவாரமும் அடங்கவே இல்லை. திரையரங்கினுள் எல்லோருக்கும் இனிப்பு வழங்கப் பட்டது. கிட்டத்தட்ட full house தான். படம் முழுவதும் நடிகர் திலகத்தின் ஒவ்வொரு அசைவுக்கும் காதைப் பிளக்கும் கரவொலி தான். நடிகர் திலகம் வரும் முக்கியமான காட்சிகளில் திரையரங்கில் சுழல் விளக்கை சுழலவிட்டு ஒளிமயமாகவும், வண்ணமயமாகவும் ஆக்கி திரையரங்க ஊழியர்கள் மேலும் சிறப்பு சேர்த்தது சூப்பர்.
குப்பைகள் பொறுக்கி வயிற்றுப் பிழைப்பு நடத்தும் ஒரு முதியவர் மிக ஆர்வமாக இருபது ரூபாய் டிக்கெட்டில் படம் பார்த்தது அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்தது.
படம் முடிந்து வெளி வரும் போது இரவுக் காட்சிக்கு நல்ல கூட்டம் இருந்தது. நாங்கள் நெய்வேலி வந்து சேர்ந்தவுடன் கடலூர் நண்பர்கள் இரவுக் காட்சியும் அரங்கு நிறைந்து விட்டாதாக தொலைபேசியில் கூறியதும் நடிகர் திலகத்தை அசைக்க எவராலும் இயலாது என்பது மீண்டும் உறுதியாயிற்று.
ரசிகர் மன்ற நற்பணிக்காக திரையரங்கின் உள்ளேயே நடிகர் திலகத்தின் அரிய புகைப்படங்கள் ஸ்டாலினுள் தியேட்டர் நிர்வாகத்தால் விற்பனைக்கு வைக்கப் பட்டிருந்தன. இதற்கான விளம்பர சிலைடும் தியேட்டரில் போடப்பட்டது. பல ரசிகர்கள் தலைவர் புகைப்படங்களை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். சிறப்பாகப் பணி புரிந்ததற்காக மன்ற நிர்வாகிகள் சிலருக்கு தியேட்டர் நிர்வாகம் சார்பில் தலைவரின் புகைப்படங்கள் பரிசாக வழங்கப்பட்டது.
இனி திரையரங்கின் அலங்காரங்கள் உங்கள் பார்வைக்கு புகைப்படங்களாக.
http://i1087.photobucket.com/albums/...5/P1000726.jpg
http://i1087.photobucket.com/albums/...5/P1000727.jpg
http://i1087.photobucket.com/albums/...5/P1000728.jpg
http://i1087.photobucket.com/albums/...5/P1000734.jpg
http://i1087.photobucket.com/albums/...5/P1000729.jpg
http://i1087.photobucket.com/albums/...5/P1000730.jpg
http://i1087.photobucket.com/albums/...5/P1000731.jpg
http://i1087.photobucket.com/albums/...5/P1000733.jpg
http://i1087.photobucket.com/albums/...5/P1000735.jpg
http://i1087.photobucket.com/albums/...5/P1000739.jpg
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.
-
-
-
-
Vasu sir,
Super. கிருஷ்ணாலாய அரங்கதினுள்ளில் கால் வைக்கும் இடத்திலெல்லாம் பூக்குவியலாக காட்சியளித்தது என்று கேள்விப்பட்டோம். அந்தக் காட்சி உங்கள் காமிராவில் சிக்கி இருக்கிறதா?
Regards
-
Vasu avargal Kadalur il Karnan release photos and info. thanthu kalaki vitteergal
Karnan kuraithathu 50 nal yella centrelaum odi, Sadanai padaikka vazthukal
-
-
நன்றி முரளி சார்! பூக்கள் போடத்துவங்கும் போது கேமிராவில் சிக்கியது. விரைவில் வீடியோ அளிக்க முயற்சிக்கிறேன்.
http://i1087.photobucket.com/albums/...5/P1000810.jpg
vasudevan.
-
Dear Sankara sir,
Mikka nandri.
vasudevan.
-