http://i60.tinypic.com/2rmsav4.jpg
Printable View
வெற்றி-திருப்புகழ்,பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
https://www.youtube.com/watch?v=c2YI...ature=youtu.be
மக்கள் திலகத்தின் ''நான் ஏன் பிறந்தேன் '' இன்று 42 ஆண்டுகள் நிறைவு தினம் .
9.6.1972 அன்று திரைக்கு வந்த படம் .
1972ல் சங்கே முழங்கு - நல்ல நேரம் - ராமன் தேய சீதை என்று மூன்று வித்தியாசமான படங்களை தந்து
ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார் நம் மக்கள் திலகம் .
முதல் முறையாக குடும்ப தலைவராக மக்கள் திலகம் தோன்றி படம் முழுவதும் மாறு பட்ட வேடத்தில் நடித்து
தன்னுடைய ரசிகர்களுக்கு விருந்து படைத்தார் .எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் .
நான் ஏன் பிறந்தேன் ...பாடல் மூலம் குடி , சூதாட்டம் , தாயின் பெருமை , இயற்கையின் வளம் , தேசபற்று
என்று மக்கள் திலகத்தின் அறிவுரைகள் என்று நாட்டு மக்களுக்கு எடுத்து கூறிய அருமையான பாடல் .
தம்பிக்கு ஒரு பாட்டு ....தத்துவ வரிகள் . இளைய சமுதாயத்திற்கு படிப்பினை தந்த பாடல் .
நான் பாடும் பாடல் ..... வாழ்வில் எல்லோருக்கும் நம்பிக்கையினை மன வலிமையை தந்த பாடல் .
சித்திர சோலைகளே .... தொழிலாளர்களின் மேன்மையை எடுத்துரைத்த பாடல் .
உனது விழியில் எனது பார்வை - ஒரு கணவன் - மனைவி பாசப்பிணைப்பினை உணர்த்திய பாடல் .
என்னம்மா சின்ன பொண்ணு - மக்கள் திலகத்தின் இளமை ததும்பிய காதல் பாடல் .
சமுதாயத்திற்கு நல்ல படிப்பினை மக்கள் திலகத்தின் படங்கள் தந்தது என்றால் அது நூற்றுக்கு நூறு உண்மை
என்று உணர்த்திய படம் ''நான் ஏன் பிறந்தேன் ''