http://padamhosting.me/out.php/i133509_mmalar9.png
மூர்த்தியுடன் நிற்பவர் தசரதன்
ரஜினியின் சிறு கைத்தடியாக வரும் தசரதன் அக்கால நடிகர். சிறுவயது முதற்கொண்டே நடிப்பவர். 'களத்தூர் கண்ணம்மா' படத்தில் 'அம்மாவும் நீயே...அப்பாவும் நீயே' பாடலில் சிறு வயது கமலுடனும், 'மேஜர் சந்திரகாந்த்' படத்தில் டைலர் நாகேஷ் கூட வரும் காஜா எடுக்கும் பையனாகவும் ('கல்யாண சாப்பாடு போடவா' பாட்டில் நாகேஷுடன் ஆடுவார்) 'தெய்வ மகன்' காவியத்தில் ஆசிரமத்தில் இருக்கும் பையன்களில் ஒருவராகவும், ("இன்னா வாசனைடா... அப்பளம் பொரியுதுடா... வாடா நொறுக்கலாம்") நடித்திருப்பார். பாலு மகேந்திராவின் இயக்கத்தில் வெளிவந்த 'ராமன் அப்துல்லா' படத்தில் 'உன் மதமா? என் மதமா? ஆண்டவன் எந்த மதம்?" பாடலுக்கு வயதான தோற்றத்தில் நடமாடுவார். 'சரணம் ஐயப்பா' படத்தைத் தயாரித்து இயக்கியதும் இவரே.
http://i1087.photobucket.com/albums/..._007508594.jpg
தசரதன் பக்கத்தில் கை கட்டி நின்று கொண்டிருப்பவர்தான் திரு எஸ்.ஏ.கண்ணன்.
ரஜினியின் இன்னொரு எடுபிடியாக வருபவர் எஸ்.ஏ.கண்ணன். இவர் சிவாஜி நாடக மன்றத்தின் பல நாடகங்களுக்கு இயக்குனர். நடிகர் திலகத்தின் நீண்ட கால நண்பர். 'பராசக்தி'யில் இறுதிக் காட்சியில் வக்கீலாக வருவார். நடிகர் திலகம் நடித்த 'சத்யம்' படத்தைத் தயாரித்து இயக்கியவர் இவர்தான். சித்தூர் பி.எம்.சண்முகம் என்பவரும் இவருடன் இணை சேர்ந்து இப்படத்தை தயாரித்தார். எஸ்.ஏ.கண்ணன் அவர்களும் காலமாகி விட்டார்.
'முள்ளும் மலரும்' படத்தில் நடித்த ஷோபா, படாபட் ஜெயலஷ்மி, எஸ்.ஏ.கண்ணன், ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திரா இவர்கள் அனைவரும் இன்று நம்மிடயே இல்லை. இத்தனைக்கும் 1978 இல் தான் படமே வந்தது. என்னே காலத்தின் விந்தை!