பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த நண்பர்கள் திருவாளர்கள். வினோத், மாசானம், சைலேஷ் பாசு உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.
Printable View
பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த நண்பர்கள் திருவாளர்கள். வினோத், மாசானம், சைலேஷ் பாசு உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.
dear esvee sir,
The article about brpanthulu switching over other group reasons was notatall correct. cine field also like other fields the producers aiming for big money at all times. BRP produced muradan muthu on a lesser budget and well assisted by nadigarthilagam both on financial and moral grounds to come over some difficulties that time, but brp wanted to release on diwali day as sivaji's 1ooth picure which was not only accepted by NT by others also, as navarathri was well planned for 1oo landmark.here started the difference of opinion.
finally mm was released on diwali day with spl morning shows for counting puposes as 99 and navarathiri as 100 with regular shows.
all other gossipings were false.
எம்.ஜி.ஆர் அவர்களின் வள்ளல் தன்மையினையும், பெருந்தன்மையினையும் நாடே அறியும். தமிழுக்காக ஒர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தை உருவாக்கியதோடு, அப்பல்கலைக் கழகத்திற்கு இடம் ஒதுக்கிய நிகழ்விலும், தான் வள்ளல்தான் என்பதை நிரூபித்தவர் எம்.ஜி.ஆர்.
தமிழ்ப் பல்கலைக் கழகத்தைத் தஞ்சையில் நிறுவுவது என்று முடிவு செய்த அன்றைய தமிழக முதல்வர் மாண்புமிகு எம்.ஜி,ஆர் அவர்கள், அப்பணி தொடர்பாக தமிழறிஞர்களின் கூட்டம் ஒன்றினை கூட்டினார். தமிழ்ப் பல்கலைக் கழகம் அமைப்பதற்கு எவ்வளவு இடம் தேவை? என தமிழறிஞர்களிடம் வினவினார். ஒரு தமிழறிஞர் தயங்கியவாறே 50 ஏக்கர் ஒதுக்கினால் நன்றாக இருக்கும் எனக் கூறினார். மற்றொருவார் 100 ஏக்கர் ஒதுக்கினால் மேலும் சிறப்பாக இருக்கும் என்று கூறினார். எம்.ஜி.ஆர் புன்னகைத்தார். தமிழுக்கு என்று ஒரு பல்கலைக் கழகத்தைத் தனியே அமைக்கவிருக்கின்றோம். இப்பல்கலைக் கழகம் சீரும் சிறப்புமாகச் செயல்பட வேண்டும். எனவே இப் பல்கலைக் கழகத்திற்கு 1000 ஏக்கர் இடத்தினை ஒதுக்குகிறேன் என்று கூறி தமிழறிஞர்களை வியப்பில் ஆழ்த்தினார். கூறியபடியே 1000 ஏக்கர் நிலத்தைனை ஒதுக்கி தமிழ்ப் பல்கலைக் கழகத்தை நிறுவிய பெருந்தகை எம்.ஜி.ஆர்.
தமிழ்ப் பல்கலைக் கழகத்தை எண்ணியவுடன் வேறொரு நினையும், நெஞ்சில் முள்ளாய் தைக்கத் தொடங்கியது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், தொழில் நுட்ப வசதியில்லாத காலத்தில், தஞ்சைப் பெரிய கோவில் என்னும் அதிஅற்புத சாதனையினை நிகழ்த்திக் காட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் சிலைக்கு, எப்படி பெரிய கோவிலின் உள்ளே இடம் கிடைக்கவில்லையோ, அதைப் போலவே, தமிழ்ப் பல்கலைக் கழகத்தை நிறுவிய, எம்.ஜி.ஆர் அவர்களின் புகைப்படத்திற்கு, தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்திற்குள், ஓர் சிறிய இடம் கூட கிடைக்காமற் போனதுதான் கொடுமையிலும் கொடுமை.
தமிழ்ப் பல்கலைக் கழகம் தொடங்கப் பெற்று இருபது ஆண்டுகளுக்கு மேல் கடந்த நிலையில், 2004 ஆம் ஆண்டில், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில், தமிழ்ப் பல்கலைக் கழக ஆட்சிக் குழு உறுப்பினராக இருந்த புலவர் மீனா.இராமதாசு அவர்கள், எம்.ஜி.ஆர் அவர்களின் புகைப்படத்தினை, தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் மாட்ட வேண்டும் என்ற தீர்மானத்தினையே கொண்டு வந்தார். தீர்மானம் நிறைவேறியது. ஆனால் புகைப்படம் மாட்டப்பெற்றதா என்று தெரியவில்லை. எம்.ஜி.ஆர் அவர்களின் படம் மாட்டப்பெற்றிருக்குமானால் மகிழ்வுடன் வாழ்த்தி வரவேற்போம்.
from net
Vinod Sir
Video clippings from Enga Veettu Pillai are nice.
1957ம் வருடத்தில் ''குமுதம் '' வார இதழில் ''யார் சிறந்த நடிகர்'' என்ற விவாதத்தை துவக்கி வைத்தது குறித்து [நடிகர் எம்ஜிஆர் - நடிகர் சிவாஜி ]காரசாரமாக நடிகர் திலகம் குமுதம் ஆசிரியருக்கு கடிதம் எழுதினார் .
''குமுதம் தேவை இல்லாமல் எங்களுக்குள் பிளவை உண்டாக்கி
இந்த மாதிரி தேவையில்லாத விவாதங்கள் தொடர்வதை நான் அடியோடு வெறுக்கிறேன் . எம்ஜியார் அவர்கள் தென்னிந்திய நடிகர்களில் ஒரு சிறந்த நடிகர் .''என்று சிவாஜி குறிப்பிட்டுள்ளார் .
பிறகு
திரு ஆரூர் தாஸ் அவரிடம் ஒரு பேட்டியில் நடிகர் திலகம்
''நான் எல்லா படங்களிலும் உயிர் கொடுத்து முக பாவங்களுடன்
நடிக்கிறேன் . ஆனால் அண்ணன் எம்ஜியார் அவர்கள் பாடல்கள் - நடனம் - சண்டை காட்சிகள் - கொள்கை என்று நடித்து பேர் வாங்குகிறாரே என்று கூறியுள்ளார் .
எம்ஜிஆர் - சிவாஜி இருவரின் திறமைகள் மதிக்கப்படவேண்டும் .ரசனைகள் மாறலாம் .போட்டி இருக்கலாம் .ஒப்பீடு என்ற பெயரில் தாக்குவது வேடிக்கையானது .
அதே போல் வியாபாரம் என்று வந்து விட்டால் நட்பை விட
எதிர்காலம் முக்கியம் என்று அணி மாறிய தயாரிப்பாளர்கள்
வெற்றி - தோல்வி பெறுவது பற்றி பரபரப்பான செய்திகள் -சுயலாபம் இருக்கலாம் .ரசிகனுக்கு என்ன லாபம் ?
http://i39.tinypic.com/334qmti.jpg
புதிய தலைமுறையினர் என்று வந்துள்ள நண்பர் எல்லா கோணத்திலும் படம் பிடித்து பார்க்கிறார் . எல்லா கோணத்திலும் எம்ஜிஆர் வெற்றியின் புள்ளி நன்கு தெரிகிறது .
மேம்போக்காக சரித்திரம் படிப்பதால் அவர் இன்னும் வரலாற்றை முழுமையாக புரிந்து கொள்ள வில்லை .