அபூர்வ கானங்கள்
அல்லி திரைப்படத்திலிருந்து
இசையரசியின் குரலில் இனிமைக்கோர் உதாரணமான பாடல்..
திரை இசைத் திலகத்தின் கைவண்ணத்தில் மலர்ந்த மதுர கானம்..
உன்னையன்றி யாரிடம் என் நிலையைச் சொல்வேன்
https://www.youtube.com/watch?v=5dECa9jgb7A
Printable View
அபூர்வ கானங்கள்
அல்லி திரைப்படத்திலிருந்து
இசையரசியின் குரலில் இனிமைக்கோர் உதாரணமான பாடல்..
திரை இசைத் திலகத்தின் கைவண்ணத்தில் மலர்ந்த மதுர கானம்..
உன்னையன்றி யாரிடம் என் நிலையைச் சொல்வேன்
https://www.youtube.com/watch?v=5dECa9jgb7A
அபூர்வ கானங்கள்
இரண்டு மனம் .. தலைவரின் வசந்த மாளிகை பாடலின் தாக்கத்தில் படத்தின் பெயரே இரண்டு மனம்.. சுரேஷ் சுலக்ஷணா நடித்த திரைப்படத்தில் இடம் பெற்ற இப்பாடல் ஜெயச்சந்திரனுக்கு புகழ் வாங்கித் தந்த பல பாடல்களில் ஒன்று..
கார்கால மேகம் உன் கண்கள் மீது ஊர்கோலம் போவதென்ன..
அந்தப் பெண் கண்ணீர் சிந்துவதை எவ்வளவு அழகாக வர்ணித்திருக்கிறார் கவிஞர்..
பாடல் முழுதுமே இலக்கிய மயம்...
https://www.youtube.com/watch?v=4Iw2iReB5ys
அபூர்வ கானங்கள்
இன்னுமோர் அபூர்வ கானம்.. இதுவும் ஆரம்ப கால எஸ்.பி.பாலா... வாசு சார் கோவிக்கக் கூடாது.. இந்தப் பாடல் பட்டியலில் வருமா தெரியாது..
இருந்தாலும் ஓர் அறிமுகமாக அமையட்டுமே..
இந்தப் பாடல் பலர் கேட்டிருக்க வாய்ப்பில்லை.. இசைத்தட்டும் மிகக் குறைவாகத் தான் வெளியிடப்பட்டது. ராணி யார் குழந்தை படத்தில் டி.வி.ராஜு இசையில் இடம் பெற்ற பாடல்...
டிங்கிரி டிங்கிரி டால்...
https://www.youtube.com/watch?v=0xOUKtBZiO8
மேற்கண்ட அபூர்வ கானங்களுக்கு நன்றி திரு வடவை பாஸ்கி
அபூர்வ கானங்கள்...
அபூர்வமானது மட்டுமல்ல.. நெஞ்சில் பசுமரத்தாணி போல் ஆழ ஊறிவிட்ட பாடல்..
மெல்லிசை மன்னரின் வெறியனாக என்னை மாற்றிய பாடல்.. கோடிக்கணக்கான முறை கேட்டாலும் நெஞ்சைத் தொடும் பாடல்..
என்ன எழுதுவது எப்படி எழுதுவது...
அவரைத் தவிர வேறு யாராலும் கற்பனை செய்ய முடியாத அற்புத கானம்..
ஒரு வாரிசு உருவாகிறது படத்தில் எந்தன் பூவனத்தில் இன்று வசந்தம்..
மலரே மலரே தூங்காதே..
இந்த மலரே மலரே இரண்டு வார்த்தைகளிலேயே பாலா நம்மைக் கட்டிப் போட்டு விடுவார்..
இதற்கு மேலும் நான் சொல்ல வேண்டாம்.. நீங்களே அனுபவியுங்கள்..உணருங்கள்..
https://www.youtube.com/watch?v=IYz4bAT3RYs
நிஜம்மாவே குழந்தைய ரொம்ப வாட்டிட்டாங்க..:) தேடினா கிடைக்கலை..பொறுத்துக்கோஐயாவையும் அபூர்வ கானஙக்ள்ல சேர்த்து ராகவேந்திரர் தான் போடணும்..அல்லது மது..
பர்த்தியா நான் ஒரு பாட் போடறேன்.. இந்தப் பாட்ட சர்ச் பண்ணா ஒரே ஷாக்.. மனதைக்கவரும் மதுர கானங்கள் பாகம் 2 ந்னு வந்துச்சு..வந்துச்சா ஃபுல்லா ஸ்க்ரோல் பண்ணியும் சிக்கலை.. அப்புறம் பொறுமையா மறுபடி படிக்க.. கார்த்திக் தான் ஒரே ஒரு வரி எழுதியிருந்தார் இந்தப் பாட்டில் முத்து ராமனுக்கு சீர்காழி குரல் பொருத்தமாக இருக்கும் என..ஹப்பாடி தப்பிச்சேன்..அது என்ன பாட்டுன்னா...
வெண்பளிங்கு மேடை கட்டி..
தங்கரதம் ஏறி வந்து மங்கை முகம் பார்த்தவரே
பொங்கிவரும் ஆசையிலே பங்குபெறக் கூடாதோ..(ம்ம் மணிமாலாவிடம் என்ன நாசூக்கு..!)
https://youtu.be/4z_dvy2x-XE
போட்டாச் என்றால் பா.சொ.ப.சொ ( பாகம் சொல்லி பக்கம் சொல்க :) )
Dear Rajraj sir
Thanks for uploading the enchanting theme song from Chitti Chitti Bang Bang produced by the James Bond company by Broccoli for a change from the Bond genre of movies. A drastic contradiction towards capturing the hearts of children!
senthil
chitti chitti bang bang .. awesome movie..
ராகவேந்திரன் சார்,
அருமை. மீண்டும் 'அபூர்வ கானங்கள்' தொடரை திரியில் பார்க்க சந்தோஷமாய் இருக்கிறது. ஒவ்வொன்றாகப் பார்க்க வேண்டும். மிக்க நன்றி.
இன்று தாங்கள், சின்னா, மது அண்ணா, குமார் சார் என்று பதிவுகள் அட்டகாசம். வேலை நிமித்தம் வராத நண்பர்கள் திரும்ப வந்தால் திரி இன்னும் களை கட்டும். அனைவரும் நாளை வருவார்கள் என்று நம்புவோம். குறிப்பாக ரவி சார், கல்ஸ், ஆதிராம் சார்.
நானும் இன்று ஒரு அபூர்வ பாடலை வாணிஸ்ரீ பிறந்த நாளுக்காக தேர்ந்தெடுத்து வைத்தேன். அவருக்கு நமது மதுர கானங்கள் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
பாடகர் திலகமும், இசையரசியும் பாடும் அட்டகாசமான பாடல்.
எல்லாப் பாடல்களுமே அருமையாய் அமைந்த 'எதிர்காலம்' படப் பாடல். இசை 'மெல்லிசை மன்னர்'.
ராகவேந்திரன் சார், மது அண்ணா!
இந்தப் பாடலில் ஒரு சிறு சந்தேகம். பாடலின் துவக்கத்தில் வரும் அந்த ஆண்குரல் ஹம்மிங் யாருடையது? (ம்ஹூஹூம் ம்ஹூஹூம்) உன்னிப்பாகக் கேட்டால் பாலா குரல் போல இருக்கிறது. அல்லது பொன்னுசாமியா? அல்லது வேறு யாராவதா? கண்டிப்பாக சௌந்தரராஜன் இல்லை.
பாட்டுப் புத்தகம் இருந்தால் தகவல்கள் தெரியும் என நினைக்கிறேன்.
பாட்டின் நடுவில் வரும் ஷெனாய் ஓசை பித்துப் பிடிக்க வைக்கிறது.
பொண்ணு ஏன் தானே சிரிக்குது
கண்ணு ஏன் நீரில் குளிக்குது
பூவைக் கிள்ளும் நினைப்போ
தன் பேரைச் சொல்லும் சிரிப்போ
பிள்ளை ஏன் தானே சிரிக்குது
கண்ணு ஏன் நீரில் குளிக்குது
பூவைக் கிள்ளும் நினைப்போ
தன் தேவை சொல்லும் சிரிப்போ
பட்டும் படாமல் கட்டிப் பிடித்தேன்
தொட்டும் தொடாமல் முத்து கொடுத்தேன்
முத்து கொடுத்தேன்
கட்டுப் படாமல் கையைத் தடுத்தேன்
வெட்கம் கெடாமல் கொட்டிக் கொடுத்தேன்
கொட்டிக் கொடுத்தேன்
மூங்கில் பந்தல் வெற்றிலைக் கொடி போல்
மார்பில் சாய்ந்தேன் ஆயிரம் தடவை
முன்னும் பின்னும் ஆசை இருந்தும்
முகத்தை ஏனோ மூடுவது புடவை
(சுசீலாவும், சௌந்தரராஜனும் இந்த இடத்தில் 'யய்யாயயயாயா' போடுவார்கள் பாருங்கள். அம்சமோ அம்சம்).
'யய்யாயயயாயா' 'யய்யாயயயாயா'
'யய்யாயயயாயா' 'யய்யாயயயாயா'
(பிள்ளை ஏன்)
ஆப்பிள் பழங்கள் தோப்பில் பறித்தேன் ('ஆப்பிள் பழங்கள்'வார்த்தையை அழகாய் உச்சரிப்பார் சௌந்தரராஜன்)
பார்த்துச் சுவைத்தேன் சேர்த்துக் குடித்தேன்
சேர்த்துக் குடித்தேன்
கண்ணை மறைத்தேன் மண்ணில் கிடந்தேன்
என்ன நினைத்தோ என்னைக் கொடுத்தேன்
என்னைக் கொடுத்தேன்
ஆஹா மஞ்சள் கன்னம் செந்நிறமாக
கொஞ்சம் தந்தேன் கொடுத்தது போக
மழையோ நதியோ வந்தது போலே
மயங்கி இருந்தே மணமகளாக
'யய்யாயயயாயா' 'யய்யாயயயாயா'
'யய்யாயயயாயா' 'யய்யாயயயாயா'
(பொண்ணு ஏன்)
https://youtu.be/8V8WXLQmukY
காமெடியன்களின் ஷாம்பெயின் கலக்கல் மதுர கானங்கள்
பகுதி 6 : சாரங்கபாணி
Quote:
கலைவாணர் காலத்திலும் அதற்குப் பின்னரும் கொடிகட்டிப் பறந்த நகைச்சுவை வித்தகர் திரு சாரங்கபாணி அவர்கள் !
மிஸ்ஸியம்மா அலிபாபாவும் நாற்பது திருடர்களும் குறிப்பிடத்தகுந்த படங்கள் !! தில்லானா மோகனாம்பாளில் எடுத்தவுடன் தவில் வசிக்கும் காட்சி இவருக்குப் பெருமை சேர்த்தது !!
அந்த வயதிலும் பாலையாவுடன் என்னவொரு போட்டி அடி!
https://www.youtube.com/watch?v=cPfu1r_NUjw
காதல் மன்னருடன் மிஸ்ஸியம்மா திரைப்படத்தில் அசத்தலான பாடல் இசை பங்களிப்பு !!
வஞ்சியரின் வார்த்தையிலே அர்த்தமே வேறுதான் ...அகராதியும் வேறுதான்!!
https://www.youtube.com/watch?v=daJdkHGeZ00
https://www.youtube.com/watch?v=T0MO7pNHXiY
அலிபாபாவில் இரண்டு பாடல் காட்சிகள் !!
பானுமதியின் முத்திரைப் பாடல் காட்சியில் சாரங்கபாணியாரின் இசை அசைவுகள்!
https://www.youtube.com/watch?v=nrdxKy2J0Zw
ஏக்கு பரதேசி மேரா தில் லேகயா என்று மகுடி இசை மேலோங்கி நிற்கும் பாஹன் என்னும் ஹிந்தி படத்தின் சாயலில்...மதுபாலாவின் மறக்கமுடியாத நடனப் பாடல்!!
https://www.youtube.com/watch?v=x0nwDVgmI50
சின்னஞ்சிறு சிட்டே எந்தன் சீனா கற்கண்டே ...ராஜம் இணைவில்!
https://www.youtube.com/watch?v=88qY0TghS5I