We all would be glad to welcome with atmost warmth Mr.ChinnaKannan. Please contribute and thanks for your valuable contributions !
Printable View
Dictionary meaning of Overall theme -An implicit or recurrent idea;
இதன் படி பார்த்தாலும் சிவாஜியின் எல்லா படங்களிலும் திரும்பி திரும்பி ஒரே விஷயம் சொல்ல பட்டதில்லையே? படிக்காத பாமரர்கள் சினிமாவில் திரும்ப திரும்ப சொல்ல பட்டதை நம்பி அது அரசியல் அரங்கில் பிரதிபலித்ததை பூடகமாக சொல்லியுள்ளார். ஒரு ஒப்பீடு செய்யும் கட்டுரையில் இதை விட நாசூக்காக,யார் மனதும் புண் படாமல் கருத்தை சொல்ல முடியாது. அவர் ஒரு வக்கீல் ,அவருடைய சொல் தேர்வு சரியாகவே இருக்கும். நீ சொன்ன மாதிரி வருட விவகாரத்தில் கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும் ,over 35 years என்றும்,46 years என்றும் குறிப்பிட்டதில் பெரிய தவறு ஒன்றும் இல்லையே? ஒரே தவறு கட்டுரையாசிரியர், சிவாஜி படங்கள் சாந்தியில் மட்டுமே திரையிட படுவதாக எஸ்.விஜயன் என்ற நபர் குறிப்பிட்டதை வடி கட்டாமல் வெளியிட்டுள்ளது கண்டனத்துக்குரியது. நம் ரசிகர்கள் நாகரிகமாக பேசியுள்ளனர்.
பம்மலார் அவர்களே,
நன்றி அறிவிப்பு என்ற பெயரில் ஒவ்வொரு பதிவரையும் பற்றி அபிப்ராயங்களை தெரிவித்தாயிற்று. இனியாவது சாணக்கியர் தன் இனத்தையே அழித்து விட எண்ணாமல் ,எதிரிகளை சாதுர்யமாக குறி வைப்பார் என எதிர்பார்க்கலாம்.
ஒரு பதிவாவது தங்கள் பிறந்த நாள் பரிசாக சகோதரர்களுக்கு அளிப்பீர்கள் என எதிர்பார்த்தோம்.
சுப்பு சார்
நடிகர் திலகத்தின் மேல் தங்களுடைய பற்றும் பாசமும் யாருக்கும் மாற்றுக் குறைந்ததில்லை. இதில் எந்த வித ஐயப்பாடும் இல்லை.
தாங்கள் குறிப்பிட்டுள்ள கட்டுரை கர்ணன் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைக் கொண்டாடும் சமயத்தில் வெளியானது. அப்படத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வரவேற்பே, அந் நாளிதழுக்கு இப்படி ஒரு கட்டுரை எழுத உந்து சக்தியாக இருந்தது என்பதே நடிகர் திலகத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய கௌரவம். இதனைத் தொடர்ந்தே அப்படி ஒரு கட்டுரை அந் நாளிதழால் வெளியிடப் பட்டது. அக்கட்டுரைக்காக அந் நாளிதழின் நிருபர்கள் மிகவும் மெனக் கெட்டு பணி புரிந்ததை நாங்கள் பார்த்திருக்கிறோம். அதில் முரளி சாரின் பேட்டியும் இடம் பெற்றதையும் அதில் நம் திரைப்படத் திறனாய்வு அமைப்பைப் பற்றி அவர் கூறியிருப்பதையும் தாங்கள் கவனித்திருக்கலாம்.
கிட்டத்தட்ட ஓராண்டிற்கு மேல் ஆகிவிட்ட அந்தக் கட்டுரையைப் பற்றிய விவாதத்தை தற்போது நாம் தொடர்வதில் ஏதும் பயனிருக்காது என எண்ணுகிறேன். அதுவுமன்றி கோபால் சார் குறிப்பிட்டது போல் overall தீம் என்பது ஒரே மாதிரியான வடிவமைப்பினைக் கூறுவதாகும். இதனை மிகவும் விரிவாக இங்கு எழுதுவதால் இங்கு பயனேதுமில்லை. தாங்கள் இதைப் புரிந்து கொள்வீர்கள் என எண்ணுகிறேன். எனவே இதனை நாம் வளர்க்க வேண்டாம்.
தொடர்ந்து நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றிய நம்முடைய தலைப்புகளிலும் அவற்றைப் பற்றிய கருத்துப் பரிமாற்றங்களைிலும் ஈடுபடுவோம்.
கார்த்திக் சார்,
நேத்து ராத்திரி யம்மா தூக்கம் போச்சுதே யம்மா ....
அடுத்த item காண துடித்து கொண்டுள்ளோம். விஜயஸ்ரீ அல்லது ஆலம். சகுந்தலா என்று போட்டு என் கனவை கலைக்க வேண்டாம்.
சொர்க்கம் படத்தில் அழகு முகம் ,பழகு சுகம் பாட்டில் வரும் துணை நடிகையர் அனைவருமே படு படு அழகு. அந்த நான்கு பேர் யார்? அதில் ஒருவர் உஷா நந்தினியா?தெரிந்தவர்கள் இந்த பாண்டியனின் சந்தேகத்தை தீர்த்தால்,பரிசு பெற்ற புலவரின் படைப்புகளுக்கு ஸ்பெஷல் பாராட்டை பரிசாக தருவோம்.
ராகவேந்தர் சார் சொன்னதில் ஒரே ஒரு பணிவான திருத்தம்.(பிழையிருப்பின் பொறுத்தருள்வீர் பெரியோரே)
எல்லா பதிவுகளும் சிந்தனையை தூண்டி, உப பதிவுகளையோ, உற்சாகமான பங்களிப்பையோ தூண்டி விட இயலாதாகையால், quota system போல mechanical ஆக செய்ய முடியாது. இதில் ஜனநாயக சோசியலிசம் பார்க்க முடியாது. some are more equal than others . எல்லா பதிவுகளும் ஒன்றே என்று சந்தடி சாக்கில் கூற படுவது சிலரின் உழைப்பை பங்களிப்பை கேலி செய்வது போல் உள்ளது. நடிகர்திலகத்தோடு ,நேற்று வந்த சிவகார்த்திகேயனை ஒப்பிட்டு பேசுவது போல கூறுவது hidden agenda இருப்பதாக சிலருக்கு தோன்றலாம். ஆதலால் எல்லா பதிவும் ஒன்றுதான் என நாம் தீர்ப்பளிக்காமல் ,காலத்துக்கும், வாசகர்களுக்கும் விட்டு விட்டு தெய்வத்தின் விஞ்ஞான வழிபாட்டை தொடர்வோம்.எல்லா படங்களும் ஒன்று எல்லா பதிவுகளும் ஒன்று என்று கூறி , வல்லவர்களையும்,உழைப்பவர்களையும்,தரத்தையும்,தர த்திற ்கு வழிவகுக்கும் பதிவுகளை தந்தவர்களையும் ,உண்மை ஆய்வுகளையும் இழிவு படுத்த வேண்டாம்.
தான் தனித்து நிற்க வேண்டும் என்ற ஆசை எல்லா பதிவர்களுக்கும் உண்டு. தூண்டி விட நாமெல்லாம் உண்டு. தரமான பதிவுகளையே (இன்று நேற்றல்ல ,தோன்றிய காலம் முதல்,நாமெல்லாம் புதுமுகங்களே)தந்து வரும் மையத்தின் திலகமான இத்திரி சீரும் சிறப்புமாக நம் ஒத்துழைப்பு ,பங்களிப்புடன் மேலும் மேலும் மெருகேறும்.
கோபால் சார்
தங்களுடைய கருத்தை நான் மறுதலிக்க வில்லை. நான் சொன்னது ஒவ்வொரு நண்பரின் தலைப்பிற்கு பொருந்தும். இவருக்கு ஒரு மாதிரியான வரவேற்பு அவருக்கு ஒரு மாதிரியான வரவேற்பு என்று இல்லாமல், அனைவருக்கும் நாம் ஒரே மாதிரியான வரவேற்பை நல்குவோம் என்பது தான் இதன் பொருள். தரப் பாகுபாடு அதன் உள்ளே நிகழக் கூடிய கருத்துப் பரிமாற்றங்கள், கருத்து வெளியீடு, அதன் ஆய்வுத் தன்மை போன்ற உள்ளடக்கங்களைப் பொறுத்தது. இதில் நிச்சயம் வேறுபாடு இருக்கும், எல்லோருடைய பதிவும் ஒரே போல் இருக்காது, சில மிகவும் உயர்ந்த தரத்தில் இருக்கும். அதற்காக மற்றவை குறைந்தது என்பதல்ல. இருந்தாலும் ஒரு சில ஆய்வுகள் சராசரியை விட மிகவும் உயரத்தில் இருக்கக் கூடியவை. இது மறுக்க முடியாத விஷயம். இதைத் தான் நான் கூறியுள்ளேன்.
The reception extended to a hubber and his topic should be unbiased and equal and the standard and quality of the posts are liable to vary, depending on the content, presentation, language and other such criteria.
Thanks Ragavendhar Sir. I agree with you . Our aim is to improve overall quality of contributions and keep setting new bench marks for creativity forwhich Nadigarthilagam stood for, thru out his career.Like Kamal mentioned,next generation can sit on their shoulders for better vision.
But onething is sure. Name or tag doesn't testify the quality. All the postings are equal and same till they are read .