sivajisenthil sir. super
sarangapani my fav.. enna body language ... adeyappa... sabapathy, my wife and many more ..ellame super
Printable View
sivajisenthil sir. super
sarangapani my fav.. enna body language ... adeyappa... sabapathy, my wife and many more ..ellame super
//இந்தப் பாடல் பட்டியலில் வருமா தெரியாது//
நிச்சயமாக ராகவேந்திரன் சார். பட்டியலில் எப்போதோ உட்கார்ந்து விட்டது.:) விரைவில் விவரங்களுடன் வரும். உங்கள் அபூர்வ தேடல்கள் ஆச்சர்யப்பட வைக்கின்றன.
ஜி!
வணக்கம். நலமா? தங்கள் நல்ல உள்ளத்திற்கு நன்றி. விரைவில் நிலைமை சுமுகமாகும் என்று நம்புகிறேன். நீங்கள் மீண்டும் வந்து கலக்க ஆரம்பித்திருப்பது பெரு மகிழ்ச்சி.
செந்தில் சார்,
'ஏக்கு பரதேசி மேரா தில் லேகயா' தினம் தினம் நான் கேட்டு ரசிக்கும் பாடல். பதித்தமைக்கு நன்றி. நய்யரின் மகுடிக்கு எப்போதோ நான் அடிமை. மதுபாலா என்ன ஒரு அழகு! பரத் பூஷன் குழந்தை முகமும் ரொம்பப் பிடிக்கும். என்ன மாதிரி ஒரு இனிமையான பாடல்! நாள் முச்சூட கேட்டுக் கொண்டே இருக்கலாம். ஆமாம். வில்லன்களின் வில்லங்கப் பாடல்கள் அதுக்குள்ளே முடிஞ்சுடுச்சா?
வாசு சார்
கையைக் கொடுங்கள்.. சூப்பரோ சூப்பர்.. வாணிஸ்ரீயின் பிறந்த நாளைக்கு...அருமையான பாடலைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள்..நெஞ்சைத் தொடும் இனிய பாடல்..
மெல்லிசை மன்னரின் பின்னணி இசையைப் பற்றிப் பக்கம் பக்கமாக எழுதலாம்.
தாங்கள் குறிப்பிட்ட அந்த ஹம்மிங்... எம்.எல்.ஸ்ரீகாந்தின் குரலாகத் தெரிகிறது. ஏனென்றால் அந்த 70களின் கால கட்டத்தில் இது போன்ற ஹம்மிங்கிற்கு அவரைத் தான் மெல்லிசை மன்னர் அழைப்பார். மற்றபடி குரலில் பல்வேறு எஃபெக்டுகளைக் கொண்டு வரவேண்டுமென்றால் சதன் அவர்களும், மேண்டலின் ராஜு அவர்களும் தருவார்கள்.
அதுமட்டுமின்றி எதிர்காலம், உத்தரவின்றி உள்ளே வா படங்கள் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் பாடல் பதிவுகள் செய்யப்பட்டவை என கேள்விப்பட்டிருக்கிறேன்.
பின்னணி இசையில் டி.எம்.எஸ் பல்லவியைப் பாடி முடித்தவுடன் சுசீலா பாடத் துவங்குதற்கு முன் வாணிஸ்ரீயின் நடனத்திற்குப் பின்னணியில் ஒரு அக்கார்டின் ஒலிக்கும். அட்டகாசம். கூடவே புல்லாங்குழல்...
அதுவும் நீங்கள் குறிப்பிட்ட அந்த ஹம்மிங்கின் போது தான் அந்த பாடலின் தாளமே துவங்கும். இவையெல்லாம் மெல்லிசை மன்னரின் மாபெரும் இசை மேதமைக்கு சான்று. வித்தியாசமாக சிந்திப்பார். எப்போது தாளம் துவங்குமென்று தெரியாது. ஆனால் எந்த தாளமென்றாலும் அதற்குள் பாடலின் சந்தங்கள் வந்து அமர்ந்து விடும்.
வாணிஸ்ரீ ஓடி வரும் போது வயலின்கள், பின் அதைத் தொடர்ந்து ட்ரம்பெட், அதைத் தொடர்வது புல்லாங்குழல், வைப்ரஃபோன் என அமர்க்களமாக இருக்கும். ஆனால் எதுவுமே பாடலைக் கெடுக்காமல் தனித்தனியே ஒலித்து இனிமையைக் கூட்டும். ஜெய்யின் வாயிலிருந்து சிகரெட்டை வாணி எடுக்கும் நேரத்தில் ஒரு ட்ரம்பெட் ஆரம்பிக்கும். ஆஹா..
அதற்குப் பிறகு தாளக்கட்டு மாறி, பாடல் வேகமெடுத்து பிறகு மீண்டும் தாளக்கட்டு மாறி தொடக்க நிலைக்கே வரும் லாவகம்...
திரை இசைச் சக்கரவர்த்தி யாயிற்றே...
அருமையான தேர்வு வாசு சார். பாராட்டுக்கள்.
https://www.youtube.com/watch?v=RYTcHTbWl3s
வாணியின் பிறந்த நாளில் அவருடைய முதல் படப்பாடல் நினைவிற்கு வருகிறது.
பாடகர் திலகம் இசையரசியின் குரலில் இப்படி ஓர் இனிமையான பாடலை தொலைக்காட்சிகள் ஏனோ கண்டு கொள்வதில்லை.
கார்த்திக் சொல்வது போல பெரும்பாலான சேனல்கள் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கின்றன.
காமெடியன்களின் ஷாம்பெயின் கலக்கல் மதுர கானங்கள்
பகுதி 7 : 'சோ'
பிரசித்தி பெற்ற பத்திரிகையாளரான சோ ராமசாமி அவர்களின் தமிழ்த்திரை நகைச்சுவைப் பங்களிப்பும் மறக்க முடியாததே ! நடிகர்திலகத்தின் பார் மகளே பார் அறிமுகம்....நாகேஷுக்கு அடுத்த இடம் ..பொம்மலாட்டம் ஜாம்பஜார் ஜக்கு மனோரமா பாடல் காட்சியில் சோவின் முட்டைக் கண் கொனஷ்டைகள் நினைவில் நிற்கும்......
அவரது அரசியல் சட்டையர் முகமது பின் துக்ளக்,
நீலகிரி எக்ஸ்ப்ரெஸ்,தேன்மழை, அடிமைப் பெண், எங்கமாமா...குறிப்பிடத் தகுந்தவை !
https://www.youtube.com/watch?v=oiqJrRG1b7s
https://www.youtube.com/watch?v=vZ8zu_IPGjE
ராகவேந்திரன் சார்
கலக்கி விட்டீர்கள். பாடலில் ஒலிக்கும் அத்தனை வாத்தியக் கருவிகளின் பங்களிப்புகளை மிக அழகாக தொகுத்து வழங்கியதற்கு நன்றிகள்.
நீங்கள் சொன்னது போல இசைக் கருவிகளின் ஒலிகள் பாடலைக் கெடுக்காமல் அருமையாக காதில் வந்து விழுகின்றன. நான் ஒரு ஷெனாய் ரசிகன். எனவே இது போன்ற பாடல்கள் மிக மிகப் பிடிக்கும்.
இது போன்ற ஏனோதானோப் படங்களிலெல்லாம் 'மெல்லிசை மன்னர்' கொஞ்சமும் வித்தியாசம் பாராது உழைத்திருப்பார். அவருடைய பாடல்களால் மட்டுமே இந்த மாதிரிப் படங்களை நாம் இன்னும் நினைவில் கொண்டுள்ளோம். இது மறுக்க முடியாத உண்மை. அது போலத்தான் சங்கர் கணேஷ், குமார் இவர்களும்.
//ஜெய்யின் வாயிலிருந்து சிகரெட்டை வாணி எடுக்கும் நேரத்தில் ஒரு ட்ரம்பெட் ஆரம்பிக்கும்//
அருமையான கவனிப்பு ராகவேந்திரன் சார். நானும் ரொம்ப ரசித்தேன். எங்கள் ரசிக வேந்தரா கொக்கான்னானாம்.
அது போல சுசீலா 'தடுத்தேன்' எனும் போது 'தடுத்தே...(ஏ ஏ ஏ.ஏ).....ன்' என்று ஒரு வைப்ரேட் பண்ணுவார் பாருங்கள். அடி தூள்.