http://youtu.be/hy1_5aHKgOQ
http://youtu.be/XEdKocD47k8
http://youtu.be/ihqNabAaJdY
Printable View
திரைப்படம் வந்தபோது விகடனில் வந்த விமர்சனம். நன்றி, விகடன்!
மூன்று கதாநாயகிகள் இருக்கும்போது இரண்டு கதாநாயகர்களாவது வேண்டாமா? நண்பனும் (சற்று நேரம்) கதாநாயகனுமாக எம்.ஜி.ஆர். தோன்றுவது சற்று வித்தியாசமான உத்தி.
ஆரம்பத்திலிருந்து கடைசி வரை எம்.ஜி.ஆரின் நடிப்பில் துள்ளலும் துடிப்பும் முனைப்பாக உயர்ந்து நிற்கின்றன. காதல் காட்சிகளில் எத்தனை கலகலப்பு! இவற்றுக்கு மேலே நகைச்சுவையையும் அவர் விட்டு வைக்கவில்லை.
மூன்று கதாநாயகிகளில் யாரும் சளைத்தவராக இல்லை. ஆப்பக்கார அன்னம்மா மஞ்சுளா. அசல் ‘பேட்டை’யாகவே மாறியிருக் கிறார்.
ராஜஸ்ரீ பைத்தியமாகிப் படாதபாடு படுத்துவது நல்ல தமாஷ்!
நடிகையாகத் தோன்றும் லதா கவர்ச்சியோடு நிற்காமல், சில கட்டங்களில் உணர்ச்சியைக் கொட்டியிருக்கிறார்.
‘வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ என்பது கதை. நேற்றைய கதைகளின் சாயலும், இன்றைய நடப்புகளும் பின்னிக் கிடக்கின்றன.
கதாநாயகன் குடிக்கவேண்டிய விஷத்தை மற்றவர்கள் குடித்து மடிவது புதியதல்லவே! காதலனை அடையமுடியாத லதா, தற்கொலை செய்துகொள்வதற்குக் குன்றின் உச்சிக்குத்தான் வர வேண்டுமா?
“மெட்ராஸிலேயே ரொம்ப நல்ல சபா ஐ.நா.சபைதாங்க” என்று சுகுமாரி விளாசித் தள்ளுவது அருமை. தேங்காய் சீனிவாசன், திகில் சீனிவாசனாக மாறியிருக்கிறாரே!
“விஷ ஊசி போட்டுக் கொலை செய்யப்போறோம்னு நான் சொல்லமாட்டேனே!” என்று குடி போதையில் உளறிக் கொட்டும்போதும், ஆவேசமாகச் சண்டையிடும்போதும் அசோகன் ‘சபாஷ்’ பெறுகிறார்.
ராஜஸ்ரீக்கு விஷம், லதாவுக்கு கன்னியாஸ்திரீ உடை, மஞ்சுளாவுக்கு மணமாலை என்று முடிவு கொடுத்திருப்பது சாமர்த்தியமான சமாளிப்பு.
கதைக்குக் கதை, நகைச்சுவைக்கு நகைச்சுவை, விறுவிறுப்புக்கு விறு விறுப்பு, கண்கவரும் வண்ணம், காதுக்கினிய கீதங்கள்… ‘நேற்று இன்று நாளை’ நேர்த்தியான பொழுதுபோக்கு.
http://i871.photobucket.com/albums/a...udumba-MGR.gif
http://i40.tinypic.com/23wuvjb.jpg[/QUOTE]
இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் சார்
1962 ல் வந்த மக்கள் திலகத்தின் ''குடும்ப தலைவன் ''
2013லும் 50 ஆண்டுகளாக பவனி வருவது உலக சாதனையே.
மக்கள் திலகத்தின் பழைய படங்கள் தற்போது
சென்னை
மதுரை
கோவை
புதுவை என்று முக்கிய நகரங்களில் ஓடுவது மகிழ்ச்சியான செய்தி .
மக்கள் திலகத்தின் ''நேற்று இன்று நாளை''
http://i1318.photobucket.com/albums/...psfc81a02c.jpg
1974 பிப்ரவரியில் கோவை (மேற்கு) சட்டமன்ற தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலிலும் அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி, புரட்சி நடிகரை புரட்சித் தலைவராக உறுதி செய்தது.
http://i41.tinypic.com/2vi1644.jpg
கட்சிக்கு கிடைத்து வரும் வெற்றிகளின் சந்தோஷத்தை ரசிகர்கள், தொண்டர்களுடன் பகிந்துக் கொள்ளவும் சினிமா ஊடகத்தை பயன்படுத்தினார் எம்ஜிஆர். 1974 ஜூலையில் வெளியான ' நேற்று இன்று நாளை' படத்தில் " தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று..." எனத் தொடங்கும் பாடலில் அதிமுக கொடி சகிதம் ' மாயாத்தேவர் வெற்றி' என்ற போஸ்டரை குளோசப்பில் காண்பித்து தனது தொண்டர்களை குஷிப்படுத்தினார்.
" நல்லவர்க்கு வாழ்வு வரும் நாளை- இது
அறிஞர் அண்ணா எழுதி வைத்த ஓலை. (தம்பி..)
.................................................. ....
.................................................. ...
மக்கள் நலம், மக்கள் நலம் என்றே சொல்லுவார்
தம் மக்கள் நலம் ஒன்றே தான் மனதில் கொள்ளுவார். (தம்பி..)
ஊருக்கெல்லாம் வெளிச்சம் போட கொடுத்த பணத்திலே - தாங்கள்
வெளிச்சம் போட்டு வாழ்ந்து விட்டார் நகரசமையிலே
ஏழைக்கெல்லாம் வீடு என்று திட்டம் தீட்டினார் - தாங்கள்
வாழ்வதற்கு ஊர் பணத்தில் வீடு கட்டினார். (தம்பி..)
ஏய்ப்பவர்க்கே காலமென்று எண்ணி விடாதே
பொய் எத்தனை நாள் கை கொடுக்கும் மறந்து விடாதே;
ஒரு நாள் இந்த நிலைமைக்கெல்லாம் மாறுதலுண்டு
அந்த மாறுதலை செய்வதற்கு தேர்தலுண்டு.."
- என்று எச்சரிக்கை விடுத்தவர், அரசின் அடக்குமுறைகளுக்கு அஞ்ச வேண்டாமென கட்சியினரை ஊக்குவிக்கும் வகையில் அதே பாடலில் சொல்வார்:
" ஒரு சம்பவம் என்பது நேற்று
அதை சரித்திரம் என்பது இன்று
அது சாதனையாவது நாளை
வரும் சோதனை தான் இடைவேளை "
courtesy-net
------------------------
மதுரை - சென்ட்ரல் அரங்கில் இன்று முதல் மக்கள் திலகத்தின்
''குமரிகோட்டம் '' திரையிடப்பட்டுள்ளது .
நன்றி திரு .கருப்பையா -மதுரை .
மக்கள் திலகம் அவர்கள் அளித்த ஒரு பேட்டியில்
எனது சினிமா வாழ்க்கையில் எத்தனையோ திருப்பங்கள் ஏற்பட்டதுண்டு .
எனக்கு திருப்பம் தந்த படங்கள்
1. ராஜகுமாரி
2. மருத நாட்டு இளவரசி
3. மர்மயோகி
4. மலைக்கள்ளன்
http://i43.tinypic.com/141phrk.jpg
5. நாடோடி மன்னன்
6. திருடாதே
7. தாய் சொல்லை தட்டாதே
http://i39.tinypic.com/ri6a06.jpg
8. எங்க வீட்டு பிள்ளை
http://i43.tinypic.com/2r6jhjo.jpg
9. காவல்காரன்
http://i43.tinypic.com/2akl72c.jpg
10.குடியிருந்த கோயில்
http://i40.tinypic.com/5ai52e.jpg
11.ஒளிவிளக்கு
http://i43.tinypic.com/10horpv.jpg
12..அடிமைப்பெண்
13.மாட்டுக்காரவேலன்
14.ரிக்ஷாக்காரன்
http://i44.tinypic.com/2wfmlhk.jpg
.