Originally Posted by
KALAIVENTHAN
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்ற பேரறிஞரின் கருத்தை நிரூபித்து வரும் பண்பாளர் திரு.ஜி.கிருஷ்ணா அவர்களுக்கு, ரகசிய போலீஸ் 115 படத்தில் 6 சூப்பர் ஹிட் பாடல்களையும் எழுதியவர் கவியரசர் கண்ணதாசன் அவர்கள். திரு. வாலி பாடல்கள் எழுதவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், திரு. கண்ணதாசன் மகன் திருமண விழா புகைப்படத்தை வெளியிட்டீருந்தீர்கள். திரு.எஸ்.வி.சார், திரு. திருப்பூர் ரவிச்சந்திரன் ஆகியோர் கூறியது போல அவர் கண்ணதாசன் மகன் காந்தி கண்ணதாசன் அவர்கள். தந்தை கண்ணதாசன் பெயரில் பதிப்பகம் நடத்தி தரமான புத்தகங்களை வெளியிட்டு வருகிறார். தலைவர் மீது அபிமானம் கொண்டவர். கடந்த ஜனவரி 17 தலைவரின் பிறந்த நாளன்று அவரது நான் ஏன் பிறந்தேன்? சுயசரிதையை இரண்டு பாகங்களாக வெளியிட்டுள்ளார். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்