-
தின இதழ் நாளிதழில் இடம் பெற்று வரும் புரட்சித் தலைவர் தொடர்பான என்றும் வாழ்கிறார் எம்ஜிஆர் எனும் கட்டுரை தொடர்ந்து இடம் பெற்று வருவது எம்மை போல் புரட்சித் தலைவரின் பக்தர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியே. அதிலும் குறிப்பாக புரட்சித் தலைவர் தொடர்பாக பல்வேறு இதழ்களில் பதிவு செய்யப் பட்ட எமது சில பதிவுகள் அதில் இடம் பெறுவதிலும் எமக்கு மகிழ்ச்சியே. அதேசமயம் அப்படி முழுமையாக பதிவுகள் பயன்படுத்தப் படும் போது சம்பந்தப் பட்டவர்களின் எந்த ஒரு அடிப்படை முகாந்திரமும் இன்றி கட்டுரை பிரசூரமாகும் நிலையை தின இதழ் நாளிதழ் கவனத்தில் கொள்ள வேண்டும். அக்டோபர் 25- 26 தேதிகளில் தின இதழில் இடம்பெற்ற எமது இரு கட்டுரைகளும் அப்படியே முழுமையாக பதிவு செய்யப்பட்டதில் எமக்கு மகிழ்ச்சியே என்றாலும் எந்த ஒரு இடத்திலும் எமது தொடர்பே சற்றும் இல்லாதவாறு அந்த கட்டுரைகள் அப்படியே பிரசூரமாகியுள்ளது என்பது எந்த ஒரு கட்டுரையாளருக்கும் எழுத்தாளருக்கும் இருக்கும் ஞாயமான வருத்தம்தானே. மற்றவர்களின் படைப்புக்களை நாம் மீண்டும் பயன்படுத்துவதில் தவறில்லை என்றாலும் அது தொடர்பான படைப்பாளர்களின் தொடர்பை குறைந்த பட்சம் எங்காவது ஒரு இடத்தில் மிகச்சிறிதாக பதிவு செய்வதில் என்ன நஷ்ட்டம் வந்துவிடப் போகிறது.
கவனிக்குமா தின இதழ்?
ஆர்.கோவிந்தராஜ்.
-
-
இதய தெய்வம் புரட்சித் தலைவரின் ஆர்வலரும், அபிமானியும், ரசிகரும், பக்தருமாக இருப்பவர் மலேசியாவைச் சேர்ந்த திரு ஆர்ஜே. தாமோதரன் அவர்கள். இவர் மலேசியாவில் தைபிங்க் நகரில் தனக்கு சொந்தமான மிகப் பரந்த நிலப்பரப்பில் அய்யனார் கடவுளுக்கு ஆலயம் ஒன்றினை கட்டி அதில் சுமார் 72 அடி உயரத்தில் அய்யனாருக்கு மிக பிரம்மாண்ட சிலையை வடிவமைத்து உலகில் எங்கும் காண இயலாத அளவிற்கு ஒருவித பிரம்மிப்பை ஏற்படுத்தியுள்ளார். தான் கண்ணில் காணாத தனது இஷ்ட தெய்வத்திற்கு ஆலயம் அமைத்த இவர் தனது கண் முன்னே தோன்றி லட்சக்கணக்கான மக்களுக்கு எண்ணற்ற உதவிகள் செய்து அவர்தம் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்திய நமது இஷ்ட தெய்வமான புரட்சித் தலைவருக்கும் இதே பக்தி மணம் கமழும் நிலப் பரப்பில் ஆலயம் ஒன்றினை மிகச் சிறப்புற அமைத்து இன்று உலகளாவிய அளவில் மலேசியாவிற்கு வரும் மக்கள் இங்கு வந்து தமிழ் தாயின் மாசற்ற தவப் புதல்வரும் மனித புனிதருமான புரட்சித் தலைவரை வழிபட்டுச் செல்லும் சிறப்பை ஏற்படுத்தியவர். வீரத்தின் கடவுளான அய்யனாருக்கு அருகிலேயே வீரத்தின் விளைநிலமாக -மதுரை வீரனாக மக்கள் உள்ளங்களில் தெய்வமாக வீற்றிருக்கும் புரட்சித் தலைவருக்கும் இவர் ஆலயம் அமைத்துள்ளதுதான் எத்தனை பொருத்தம். இன்று தைபிங்க் நகரத்தில் அமைந்துள்ள வீரத்தின் விளைநிலதெய்வங்களான அய்யனார் மற்றும் புரட்சித் தலைவர் ஆலயத்தை மலேசிய அரசாங்கம் தனது சுற்றுலா வரை படத்தில் சேர்த்து நமது புரட்சித் தலைவருக்கு மாபெரும் சிறப்பை ஏற்படுத்தியுள்ளது எனில் அதற்கு புரட்சித் தலைவர் கொடுத்துள்ள விலை கொஞ்சமல்ல, இமயம் போன்றது. ஆம் தன்னலமற்ற விளம்பமில்லா தனது செயற்கரிய தலைசிறந்த மக்கள் நல செயல்பாடுகளின் காரணமாகவும் - தமிழகத்தில் எந்த ஒரு நடிகரும் அரசியல் தலைவர்களும் செய்யாத சிறப்புமிகு மனித நேய செயல்பாடுகளின் காரணமாகவும்தான் இயற்கை அவருக்கு இத்தகைய உயர்ந்த நிலையை அளித்துள்ளது. உலகின் ஒவ் ஒரு தமிழரும் பெருமை கொள்ளத் தக்க செய்தி இது. அப்படி புரட்சித் தலைவருக்கு சிறப்பு செய்துள்ள அவரது மலேசிய பக்தர் திரு. ஆர்.ஜே.தாமோதரன் அவர்கள் நேற்றைய தினம் நம்மிடம் புரட்சித் தலைவரின் பெருமை கொள்ளத் தக்க ஒரு நிகழ்வை பகிர்ந்துகொண்டார். அதாவது சிங்கப்பூர் காவல்துறையில் பணிபுரியும் இவரது புதல்வர் கேசவன் அவர்கள் மலேசியா வந்திருந்து {இவரும் தனது தந்தையாரைப் போலவே புரட்சித் தலைவரின் தவிர பக்தராவார் } மீண்டும் தந்தையார் திரு தாமோதரன் அவர்களை அழைத்துக் கொண்டு குடும்பத்தினருடன் மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் பயணித்துள்ளார். வழியில் மலேசியா சிங்கப்பூர் எல்லையில் ஜெவூர்பாரு எனும் பகுதியில் கடற்கரையோரம் திறந்தவெளியில் ரம்மியமான சூழலில் அமைத்துள்ள sea food court எனும் பிரம்மாண்ட உணவு அரங்கிற்கு சென்றுள்ளனர். சுமார் 1000 நபர்கள் குடும்பத்துடன் அமர்ந்து உண்ணக் கூடிய அரங்கமாம் .அங்கு திறந்த வெளியில் அமைத்துள்ள பிரம்மாண்ட திரையில் உணவு உண்ண வரும் வாடிக்கையாளர்களை மகிழ்விக்க அவர்கள் விரும்பும் பாடல்களை ஒளிபரப்புவார்களாம். அப்படி தங்களுக்கு வேண்டிய பாடல்களை வேண்டுவோர் உணவு உண்பதற்கு பெற்றுக் கொள்ளும் கூப்பனை அரங்கில் ஒரு குறிப்பிட்ட கவுண்டரில் காண்பித்து அவர்களது இஷ்டத்திற்குரிய பாடலை பதிவு செய்து கொள்ள வேண்டும். அப்படியாக ஒவ் ஒருவரின் பதிவின்படி வரிசையாக பாடல்கள் திரையில் காண்பிக்கப் படுமாம். இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது உலகின் அத்தனை மொழிப் பாடல்களும் அங்கு உள்ளதாம். திரு.தாமோதரன் அவர்கள் விடுமுறை தினமான கடந்த ஞாயிறு அன்று சென்றதால் உணவு அரங்கில் கூட்டம் நிறைந்துள்ளது. இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது அரங்கில் இருந்தவர்களில் 90 சதவிகிதம் சீனர்கள், ஜப்பானியர்கள் மலாய்மொழி பேசுபவர்கள் குறைந்த அளவில் மட்டும் இந்தியர்களாம். அரங்கில் இருந்த பெரும்பான்மையோர் விருப்பப்படி சீனம்,மலேயா,மற்றும் இந்தி மொழி பாடல்கள் தொடந்து திரையில் காண்பிக்கப் படவே சலிப்புற்ற திரு.தாமோதரன் அவர்கள் தனது புதல்வர் கேசவனிடம் ஒரே போராக உள்ளது எனக் கூறியுள்ளார். அதற்கு அவரது புதல்வர் உங்களுக்கு என்ன பாடல் வேண்டும் சொல்லுங்கள் எனக் கூறியுள்ளார். அதற்கு திரு.தாமோதரன் அவர்கள் எனக்கு தலைவரின் பாடல் வேண்டும் கிடைக்குமா? எனக் கூறியுள்ளார். அவ்வளவுதானே பாடல்களை சொல்லுங்கள் என கேட்க பதிலுக்கு தாமோதரன் அவர்கள் நினைத்ததை முடிப்பவன் படத்திலுள்ள ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து பாடலையும் உலகம் சுற்றும் வாலிபன் படத்திலுள்ள பச்சைக்கிளி முத்துச்சரம் பாடலையும் கூறியுள்ளார். அப் பாடல்களை கேசவன் பாடல்களை ஒளிபரப்பும் இயக்குனரிடம் கூறியபோது உங்கள் பாடல்கள் வரிசையின்படி திரையில் காண்பிக்க இரண்டு சீனப் பாடல்கள், மலேய நடிகர் ரெம்லியின் இரு பாடல்கள் கழித்து ஆராதனா இந்தி பட பாடல் ஒன்றிற்குப் பின்னரே திரையில் காண்பிக்கப் படும் எனக் கூறியுள்ளார். சரியென ஒப்புக் கொண்டு தனது இருக்கைக்கு சென்று விட்டார் கேசவன். தொடர்ந்து பாடல்கள் திரையில் காண்பிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. உணவுகளை சுவைத்தபடி அமைதியாக அரங்கினுள் அமர்ந்து அனைவரும் பாடல்களை ரசித்துக் கொண்டிருந்தனராம். இரு சீன மலேய மொழி பாடல்களை தொடந்து ஆராதனா இந்தி பாடலை தொடர்ந்து புரட்சித் தலைவரின் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து பாடல் காண்பிக்கப் பட்டதுதான் தாமதமாம்- சீனர்களும்,மலேயாகாரர்களும் எழுந்து நின்று ஆரவாரத்துடன் தங்களையும் மறந்து கைகளை கொட்டி மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்தனராம். தொடர்ந்து பச்சைகிளி முத்துச்சரம் காண்பிக்கப் பட்டதும் அதே ஆராவாரம், சொல்லப் போனால் சில சீனர்களும் மலாய்காரர்களும் விசில் அடித்து ஹாய் எம் ஜி- எம் ஜி என உரக்க கத்தினார்களாம். புரட்சித் தலைவரை அவர்கள் எம் ஜி –எம் ஜி என்றே விருப்பமாக அழைப்பார்களாம். திரு.தாமோதரன் அவர்களுக்கு இது ஒரு இன்ப அதிர்ச்சியாம், மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் எண்ணற்ற சீனர்களும் ,மலேயாகாரர்களும் புரட்சித் தலைவரின் திரைப்படங்களுக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள் ஆனால் இந்த அளவிற்கு தலைவரின் பாடல்களை சீனர்களும் மற்ற நாடுகளை சேர்ந்தவர்களும் ஆராவாரத்துடன் ரசிப்பார்கள் என தாம் நினைக்கவேயில்லை,என் உடலெல்லாம் புல்லரித்துப் போனது, என் குடும்பத்தினரின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை, நான் மட்டுமில்லை புரட்சித் தலைவருக்கு ரசிகர்களாக இருக்கும் யாவரும் அவருக்கு ரசிகர்களாக இருப்பதற்கு பெருமை கொள்ள வேண்டும் என தனது மறக்க முடியாத அந்த நிகழ்வை ஒரு குழந்தைபோல பேசிக் கொண்டேயிருந்தார் திரு.தாமோதரன் அவர்கள். ஆம் உண்மை தான். இந்தியாவின் ஒரு மாநிலத்தின் முன்னணி நடிகராக இருந்த ஒருவரை உடலால் அவர் இம் மண்ணை விட்டு மறைந்தும் இத்தனை ஆண்டுகள் கழிந்தும் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த மதம்,இனம், மொழிக்கு அப்பாற்பட்ட மக்களும் ரசிக்கிறார்கள் அவரை கொண்டாடி மகிழ்கிறார்கள் என்றால் அது இந்தியாவிற்கே பெருமை, ,தமிழகத்திற்கே பெருமை. அதற்கு இது போன்ற ஏராளமான நிகழ்வுகளே சான்று. இந்த சிறப்பு புரட்சித் தலைவர் ஒருவருக்கு மட்டுமே உரித்தானது. அவர்தான் மனித புனிதர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர். ஆர்.கோவிந்தராஜ்.
-
-
-
-
-
-
தின இதழ் -30/10/2015
http://i64.tinypic.com/nmba0o.jpg
இன்றைய தின இதழில் -என்றும் வாழ்கிறார் எம்.ஜி.ஆர். தொடரில்
உரிமைக்குரல் ஆசிரியர் திரு. பி.எஸ். ராஜு என்பதற்கு பதிலாக திரு. பி.எஸ். ரவி
என பெயர் அச்சிடப்பட்டுள்ளது. இனி வரும் நாட்களிலாவது இது போன்ற பிழைகளை தின இதழ் நாளேடு தவிர்க்குமா ?
-
Our majestic thread of Makkalthilagam - mr. muthaiyan ammu crossed 8001 postings & mr. Lokanathan passing 9001 postings were both - so super... kindly postings several ways ...