Thanks to Raghavender Sir, Gopal Sir and all those who have magnanimously posted their acknowledgement and appreciation on my posting !
Printable View
Thanks to Raghavender Sir, Gopal Sir and all those who have magnanimously posted their acknowledgement and appreciation on my posting !
Hi Kiruba,
Nice writeup on Thyagam. Quite enjoyable journey !
Uthamaputhiran sir
nice article - Congrats
கிருபா சார்,
பட்டையை கிளப்புறீங்க , Very hard to write in this slang - remembering Sivaji's sir's slang in Viduthalai- enjoyed it
Attachment 2727
Tamizhagam !
nadigar திலகத்தின் ரசிகர் என்பதால் பெருமை :
இது இன்று நடந்த சம்பவம்
இன்று வேலை விஷயமாக அரசு அலுவலகத்துக்கு சென்றேன் , என் வேலை எல்லாம் முடிந்து அங்கே வெள்ளை செய்யும் ஒரு மனிதர் கூட பேசி கொண்டு இருந்தேன்
பேச்சு சினிமாவை பற்றி செல்ல வில்லை , மாறாக கடவுள் பற்றி பேசி கொண்டு இருந்தோம் . பேச்சு உலகம் அழிவு பற்றி சென்றது
அப்போது அந்த மனிதர் பேசிய பேச்சு :
சார் உலகம் அழியும் பொது சிவன் தான் காப்பாற்றுவார் என்பது ஒரு நம்பிக்கை , உலகம் அழிவை நோக்கி செல்லும் பொது தேவர்களுக்கு முன் கூட்டியே தெரிந்து விடும் , அவர்கள் சிவனிடம் முறை இடுவார்கள் அப்போது , சிவன் உலகத்தை காப்பாற்ற நடனம் அடுவார் , அதை நீங்கள் சினிமாவில் ரசித்து இருபிர்கள்
அந்த நடனத்தை சினிமாவில் ஆடுவதுக்கு 2 பேர் மட்டும் தான் இருக்கார்கள் . ஒன்று கமல்ஹாசன் & பானுப்ரியா
இதில் டாப் மறைந்த நடிகர் திலகம் , உலகம் எப்படி மோசமாக இருக்கிறதே , சில தீய மனிதர்கள் செய்யும் கெடுதல் இந்த உலகத்தின் தன்மையை அழிகிறதே , இதிலிருந்து நாம் மக்களை காப்பற்ற வேண்டும் என்று ஆக்ரோஷமாக ஆடுவார்
அதில் ஒரு ஸ்டெப்ஸ் இருக்காது , கையை தூக்கி இந்த அண்டத்தை குறிக்கும் விதமாக ஆடுவார் , அதில் வானம் அடங்கும் , குதி குதி என்று குதிச்சு ஆடும் பொது , பூமியினால் வரும் சீற்றத்தை கட்டுபடுத்தும் ,
சிவனின் பார்வையில் இருக்கும் தீ பிழம்பு , அரக்கர்களை அழித்து
உலகத்தில் சமநிலையில் கொண்டு வரும்
இதை நடிகர் திலகத்தின் நடனத்தில் பார்க்கலாம் (வேறு நடிகர்கள் நடனத்தில் காண முடியாது ). இது தெரியாமல் சிவாஜி நடனம் அட வேண்டும் என்று சும்மா குதிக்கிறார் புரியாதவர்கள் உளறுகிறாள் என்று அவர் சொன்ன பொது எனக்கு சிலிர்த்து விட்டது
http://www.youtube.com/watch?v=RJhyuTQb0hY
*
பன்னிரண்டாம் இழையைத் துவ்க்கிய பார்த்த சாரதி சாருக்கு நன்றி
*
பன்னிரண்டாம் இழைக்காக நான் பார்க்காத இந்தப் படத்தை யூட்யூபில் சில நாள் முன்பு தான் பார்த்தேன்..எழுதலாம் என்றால் கிருபாசாரும் இந்த இழையில் அறிமுகமான உத்தம புத்திரனும் 20-20 மாட்ச் போல காணொளிகளும் எழுத்துக்களுமாக கலக்கிக் கொண்டிருந்தார்கள்..
*
கிருபா..உங்கள் எழுத்தில் பிழைகளும் ஓவர், குறும்பும் ஓவர்..(தியாகம் பதிவில் அவை குறைந்து இருந்தன) ரசித்தேன்.. தியாகம்பாடல்கள் அனைத்தும் ரொம்பப்பிடிக்கும்..அதுவும் நல்லவர்க்கெல்லாம்.. ரொம்ப்ப
*
மின்னலாய் வந்த உத்தம புத்திரரே..தொடருங்கள் உங்கள் பணி.ம்ம்பாடல் காட்சிகளுடன் கமெண்டும் கொடுத்தால் நன்றாய் இருக்கும் என நான் நினைத்த போது அவ்வண்ண்மே கொடுத்திருந்தீர்கள்.. ந்ன்றி..
*
அது சரி நான் எழுதப் போவது எந்தப் படத்தைப் பற்றி.. அடுத்த போஸ்டில்.:)
சிவாஜி இந்தப் படத்தில் இளமையும், துடிப்பும், அழகும் கொண்டு ஜம்மெறு இருப்பார்..வழக்கம் போல நடிப்பிலும் ஓஹோ.. ஜோடியாய் யார்.. ம்ம் கே.ஆர்.விஜயா, பத்மினி.. (ஹையா முதல் வரிலயே ந.தி பத்தி எழுதிட்டேன்..
*
வழக்கமாய்ச்
சத்தம் போட்டுச் சுற்றுகின்ற
மின்விசிறி
அமைதியாய் இருக்கிறது
சிறு காற்றிலேயே
யாரோ அடித்தாற்போல ஆடும்
தீபம்
கொஞ்சம் அமைதியாய் நிச்சலனமாய்
நிற்கிறது..
ராத்திரி ஆகிவிட்டதே கத்தலாமே
என நினைப்பில் வெளிவந்த சுவர்க்கோழி கூட
டபக்கேன சுவற்றில் மாட்டியிருக்கும்
படத்தின் பின் ஓடி ஒளிந்து கொள்கிறது..
ஏனாம்..
உஷ்.. தூளியில்
குழந்தை உறங்குகிறது..
*
அதாங்க… இந்த சேகரோட அபிலாஷை.. சேகர் (சிவாஜி) யார்.. ஒரு இஞ்சினியர்..அழகாய் கண்ணிறைந்தும் உடலும் நிறைந்த ஒரே ஒரு மனைவி (பத்மினி) அறிவு, பணம், அந்தஸ்து எல்லாம் வந்தாயிற்று சரி..ஆனால்..
*
இந்த ஆனால் என்ற வார்த்தை வந்தாலே அது தான்.. குறை தன்னாலே வந்து விடும்.. (அந்தக் காலத்து க்ளியரஸில் விளம்பரப் படத்தில் வரும் – நல்ல பெண் தான் ஆனால் முகத்துல பரு)
*
எனில் சேகர்-பத்மினி தம்பதியருக்குக் குழந்தை இல்லை- பத்து வருடமாகியும். டாக்டரிடம் சென்றால் பத்மினியிடம் டாக்டர் உனக்குகுழந்தை பாக்கியம் கிடையாது என்று விடுகிறார்..
*
பத்மினிக்கோ துக்கம் தொண்டையை அடைக்க கண்களில் நீர் முட்டுகிறது.. எந்தக் குழந்தையைப் பார்த்தாலும் ஆசையுடன் அள்ளி அணைப்பவாராயிற்றே சேகரான சிவாஜி.. இந்த விஷயத்தைச் சொன்னால் என்னாவார்..
*
டாக்டரிடம் என் கணவரிடம் சொல்ல மாட்டேன் எனச் சொல்லி வீட்டுக்கு வந்தால்..
*
குட்டைப் பாவாடையும் ஒல்லி ஒல்லி உடம்பும் கண்களில் சிரிப்புமாய் ஒரு பெண்..பத்மினியின் ஒன்று விட்ட தங்கை – கே.ஆர்.விஜயா..
*
சிவாஜி சேகர் வேலை முடிந்து வர அத்தானிடம் மைத்துனி விளையாடுகிறார்.. சிவாஜியும் அடச் சுட்டிப் பெண்ணே என பதிலுக்கு விளையாட்டு..
*
பத்மினிக்குக் கொஞ்சம் ஆசுவாசம்..ஊரிலிருந்து தங்கை வந்திருக்கிறாள்.. எல்லா இடத்துக்கும் கூட்டிப் போங்கள் என கணவரிடம் கட்டளை.. பின் பொருட்காட்சிக்கு நானும் வருகிறேன் எனப் புறப்பட்டு பொருட்காட்சி அனைவரும் செல்ல..
*
பொருட்காட்சியில் டாக்டரின் மகன் சிவாஜியிடம் உண்மையைச் சொல்ல..ந.தியின் கண்களில் நதி தளும்புகிறது.. அடக்கப் பட்ட உணர்ச்சிகளால் முகம் எரிமலை ஆகிறது..
*
வீட்டிற்கு வந்து பத்மினியை வார்த்தைகளால் அமைதியாக வறுத்தெடுக்கிறார்..உன் சுக துக்கங்களில் பங்கு கொண்டவன் தானே நான்..என்னிடம் எப்படிச் சொல்லாமல் இருக்கலாம்
*
பத்மினி என்ன சொல்லத்தெரியாமல் தானும் கொஞ்சம் அழ அந்தசந்தர்ப்பத்தில் ரெண்டுங்கெட்டான் தங்கை விஜயா வந்து விட அமைதியாகிறது அந்த இடம்..
*
இருந்தாலும் சிவாஜி சேகருக்கு ஆற்றாமை..குழந்தை பிறக்காதா தனக்கு என்ற ஏக்கம்..உறக்கத்திலிருந்து முழித்து மாடியிலிருந்து இறங்கி வந்தால்.. விஜயா.. என்னத்தான் ஏன் சீரியஸா இருக்கீங்க..
*
இல்லைம்மா ஒரு கனவு கண்டேன்..ஒரு சின்னக் குழந்தை இங்கே அப்படியே என்னோட விளையாடிக்கிட்டே இருந்தது..அப்புறம் அதோட நான் அங்கே போனேனா இங்கே போனேனா.. ரொம்ப அழகா இருந்ததும்மா அது..ஆனா படக்குன்னு மறைஞ்சுடுச்சும்மா (அவர் சொன்ன வசனம் முழுதும் நினைவிலில்லை) என ச் சொல்லி அபாரமாகக் கண்கலங்குகிறார் சேகரான சிவாஜி.. விஜயாவோ விஷயம் எதுவும் தெரியாத இளம் பெண்..ஏதோ அத்தான்கலங்குகிறார் என நினைத்துக் கொஞ்சம் ஆறுதல் சொல்கிறார்..
*
ஆனால் இவை எல்லாவற்றையும் பார்க்கும் பத்மினி ஒரு முடிவுக்கு வருகிறார்..விஜயாவிடம் பேசி கணவரையே திருமணம் செய்து கொள்ளச் சம்மதம் வாங்கி விடுகிறார்..ஆனால்..
*
சிவாஜி மறுக்கிறார்..”இவளே.. குழந்தை இல்லைன்னு எனக்கு ஃபீலிங்க் இருக்கறது உண்மை தான்..அதற்காக இன்னொரு மேரேஜ்லாம் வேண்டாம்.. நீ எனக்கு உயிர்..”
*
காதல் மனைவியின் சிரிப்பை விட கண்ணீருக்கு விலை அதிகமல்லவா.. கடைசியில் சம்மதித்து விஜயாவை மணக்கிறார்..இருவரும் வேறு ஒரு இட்த்துக்குப் போகையில்..என்னாகிறது..?
*
இந்த இறைவன் இருக்கின்றானே எப்போது என்ன செய்வான் எனத் தெரியாது.. ச்சும்மா டென்னிஸ்பாலா மக்களை நினச்சுட்டு அந்தப்பக்கமும் இந்தப்பக்கமும் ஆடவைக்கிறதே வேலை போலும்..
*
ஆம்..பத்மினிக்கு கரு உருவாகியிருக்கிறது..
*
அந்தப் புறம் தேனிலவு போலச் சென்ற சிவாஜிக்கோ விஜயாவின் மீது அவ்வளவு ஒன்றும் ஆர்வமில்லை..பத்மினியின் மேல் உயிரையே வைத்திருந்ததால்.. ஒரு மனைவியாக அவ்வளவாக கவனிக்காமல் இருக்கையில் பத்மினி கர்ப்பம் எனத் தகவல் வர விஜயாவை மறந்து காரை எடுத்து பத்மினியின் இருப்பிடத்துக்கு வந்து பார்க்கிறார்..
*
பின் பத்மினியே கதி என ரொம்ப அக்கறை கொள்ளவும், விஜயாவுக்கும் மெல்லமெல்ல புரிகிறது..அத்தான் அக்காவைத் தான் விரும்புகிறார் என..அவ்ர் ஒரு முடிவெடுக்க..பத்மினி இன்னொரு முடிவெடுக்கிறார்..
*
“டாக்டர்..எனக்கு இந்தக் குழந்தை வேண்டாம்”
“என்னம்மா சொல்றே.. நீ எவ்ளோ ஏங்கின இதுக்காக”
“இல்ல டாக்டர்..எனக்கு வேண்டாம்.. விஜயாவை கவனிக்கறதில்லை என் கணவர்..”
“”பேஷ் பேஷ்” எனக் குரல் கேட்கத் திரும்பினால்..
*
சேகர் சிவாஜி.. கண்களில் கோபம் வெறுப்பு… நடையில் ஒரு அலட்சியம்+தளர்ச்சி.. நல்ல முடிவும்மா நீ எடுத்திருக்கிறது..
இல்லீங்க்.. நான்..
“இதப்பார்..விஜயாவோட கல்யாணம் பண்ணிக்கோன்னு கம்ப்பெல் பண்ணினது நீ.. இப்போ சந்தோஷமா இருன்னு சொல்லு ..இருந்துட்டுப் போறேன்.. அதுக்காக குழ்ந்தை வேண்டாம்னு சொல்றதுல்லாம் ரொம்பத் தப்பு” மென்மையாகவும் அதே சமயம் கண்டிப்பாகவும் சேகர் சொல்லி வீட்டிற்கு அழைத்துச் சென்றால் அங்கே விஜயா இல்லை..
*
பார்த்தால் விஜயா கடற்கரையில் தற்கொலை செய்து கொள்ளப் போக சிவாஜி தடுத்து பேசி வீட்டிற்கு அழைத்து வருகிறார்..பத்மினி விஜயாவிற்கு ஒரு பரிசு தருகிறார்..அது என்னவெனில்..
*
இறுதியில் விஜயா பத்மினி இருவருக்கும் தனித்தனியாக விபத்து ஏற்பட்- அறுபதுகளில் வந்த படம் என்பதால் விதியை மீறாமல் – பத்மினி மரிக்க விஜயா அவரது குழ்ந்தையுடனும் சிவாஜியுடனும் பத்மினியின் படத்தைக் கும்பிட வணக்கம் வருகிறது..
*
சொல்ல மறந்து விட்டேன்..அந்தக் குழந்தைக்கு பத்மினி கொடுத்த் பரிசிலேயே பாலும் ஊட்டுகிறார் விஜ்யா..அந்தப் பரிசும் படத்தின் பெயரும் ஒன்று.. பாலாடை..
*
சிவாஜி வழக்கம் போல் அபார நடிப்பு..பத்மினியும்.. விஜயா மாடர்ன் டிரஸ்ஸில் ஒல்லியும் இளமையுமாகத் தெரிந்தவர் புடவை கட்டியதும் பத்மினியுடன் உடல் எடையில் போட்டி போடுகிறார்.
*
சைட் ட்ராக்காக நாகேஷ், மனோரமா வி.கே ஆர் காமெடி..இசை கேவி மஹாதேவன்.. எங்கே அஹா எங்கே மட்டும் தான் கேள்வி பட்டிருக்கிறேன்..மற்ற எதுவும் மனதில் தங்கவில்லை..
*
ந.தியின் நடிப்புக்காகப்பார்க்கலாம்..
*
டியர் பார்த்தசாரதி சார் - சாரதியாக நீங்கள் இருந்து இந்த திரி உடையாமல் எடுத்துசெல்லவெண்டும் என்பதுதான் என் அவா , ப்ராத்தனை - யாருடிய மனமும் நோகாமல் , சகோதர தன்மையுடன் பதிவுகள் இருந்தால் அதை விட சந்தோஷம் எதுவுமில்லை - நம்முள் கருத்து வேறுபாடுகள் வரலாம் ஆனால் பதிவுகள் தரத்தை குறைக்கும் படியாக இல்லாமல் இருக்கவேண்டும் - ஒவ்வருவரும் பொழுது போகாமல் இந்த திரிக்கு வருபவர்கள் இல்லை - ஒரு ஆத்ம திர்ப்திக்க்காக , NT யை பற்றி பேசும்போது ஏதோ வாழ்வில் தான் இழந்ததை மீண்டும் பெறுகிறோம் இன்ற நினைப்பில் பதிவுகளை இடுகிறார்கள் - ஓவ்வருவரின் பதிப்புக்கும் பின் அயராத உழைப்பும் ,NT யின் மீது பக்தியும் , பாசமும் பன் மடங்கு அடங்கி உள்ளது - எந்த பதிவும் தரத்தில் குறைந்தது அல்ல - வாசு சார் , முரளி சார் , கோபால் சார் , ராகவேந்திரா சார் , KC Shekar சார் மற்றும் பலரும் இந்த திரியை இன்னும் பலபடுத்த தங்கள் ஆரோக்கியத்தை பொருட்படுத்தாமல் , நேரத்தை தண்ணி போல செலவிடுகிறார்கள் - ராகுல்ராம் யை எடுத்துகொள்ளுங்கள் - இந்த சின்ன வயதில் NT யின் மீது என்ன அன்பு and பக்தி - நாம் போடும் சண்டையினால் மற்ற எல்லோருக்கும் சொல்லமுடியாத இன்பம் - ஆனால் நஷ்ட்டம் நமக்குத்தான் - முரளி சாரின் பதிவுகள் கம்மி யாகி விட்டது - வாசு சாரின் 4000th பதிவு இன்னும் வரவில்லை - ராகவேந்திர சார் அமைதியாகி விட்டார் - கோபால் சார் is now very selective in his postings - நஷ்ட்டம் நமக்குதானே சார் !! எல்லோரும் தன் மனதிற்கு படும் கருத்துக்களை மற்றவர் மனம் புண்படாமல் சொன்னால் நம் திரி ஒரு பாரத ரத்னா திரியாக சீக்கிரம் மாறிவிடும் - இதுதான் என் ஆசை / கனவு -
within short span , the speed at which this thread travelling is amazing and Mr Kirupa and Mr Uthamaputhiran are rocking this thread - great beginning by your hands and hearty congrats
Ravi
:):smokesmile:
Dear Parthasarathy Sir,
Many, many thanks for starting the "Part 12" with a Bang!!!!!!
Dear Uthamaputhiran Sir,
Great!!Great!!!Great!!!Great!!!Great!!!!Great!!Gre at!!!Great!!!Great!!!Great!!!!
Anand