-
பதுமைகளுக்குச் சோர்வு ஏற்பட்டிருந்தது..
காரணமென்ன எனத்
தலைவி மதிவதன மோஹினி கேட்க..
“யாரோ போஜ ராஜனாம்..
இங்கு வந்து
நம் விக்கிரமாதித்த மன்னன்
சிம்மாசனத்தில்
அமர்வானாம்..
இது என்ன அநியாயம்..”
மதிவதன மோஹினி சொன்னது..
கவலையை விடுங்கள்..
நான் பார்த்துக் கொள்கிறேன்..
படை புடைசூழ போஜராஜன்
படிக்கட்டில் கால் வைத்ததும்
‘வாருங்கள் மன்னா..
தங்கள் வரவு நல்வரவாகுக..
அனைத்திலும் சிறந்தவரான நீங்கள்
இப்புவியை நன்றாக
சிறப்பாக ஆள
வாழ்த்துக்கள்’
மதிவதனி சொல்ல மற்றவை திகைத்தன..
போஜராஜன் சென்றதும் கேட்டன..
புன்முறுவலுடன் சொன்னது மதிவதனி...
“விக்ரமாதித்தன் ஆட்சி என்பது இறந்த காலம்..
இப்போது போஜ மன்னன் ஆட்சி
நிகழ்காலத்துக்குத் தக்கபடி மாறுவதும்
மன்னனைப் போற்றுவதும் தவறில்லை!.”
-
தவறில்லை தவறுகள் என்று
பழைய தலைமுறைகள் பழக்கி
பெரும் பூதமாய் வளர்ந்ததின்று
ஊழலெனும் கொடிய நோய்க்கிருமி
தவறில்லை தவறுகள் என்று
சீர்திருத்தங்கள் பல வந்தனவே
பெண்கள் குழந்தைகள் வாழவே
பகுத்தறிவும் பரிவும் போற்றுவோம்
-
போற்றுவோம் தான்..
நல் மன்னன்
நல் ஆட்சி
நல் மக்கள்...
நல்ல மழை...
இவை கிடைத்தால்...
தற்போது
கண்மூடி கிடைப்பதுபோல்
காணலாம் கனவு..
-
கனவு வரும் இரண்டு வித வேளையிலே
உறக்கத்திலும் விழித்திருக்கும் போதும்
உறக்கத்து கனவு மறையும் நீர்க்கோலம்
கண் விழித்தபடி காணும் கனவு கத்தி
கலாம் விரும்பியபடி தீட்ட வேண்டியது
கதையில் வரும் பால்க்காரி குடம் போலுடைந்து
வீணாய் போகாமல் விழிப்புடன் முனைப்புடன்
அடியெடுத்து வைத்து அடைய வேண்டிய இலக்கு
-
இலக்கு எதிரிகளுக்குச் சிக்கல் ஏற்படுத்துவது தானே அண்ணா..
இல்லை தம்பி
நம்முடன் இருந்து நம்மை விட வளர்ந்து,
நம்மை மிரட்டி பணிய வைத்து,
ஆமாம் போட வைத்து,அவமானப் படுத்தி
இப்போது சிக்கலில் மாட்ட வைத்திருக்கும்
உறவினர்க்கு ஏதாவது செய்யவேண்டும்..
‘அது தான் ஏற்கெனவே
நமது தொலைக்காட்சியில் அந்த
தமிழ்க் கதானாயகனின் ப்டங்களாகப்
போடுகிறோமே அண்ணா..
என்ன செய்வது தம்பி
சமயத்தில் பார்வையாளர்களை
இப்படிக் கொடுமைப் படுத்த்த் தான்
வேண்டியிருக்கிறது..
பிற்காலத்தில் அவரால் நமக்கு
உபயோகம் வரும்..
அண்ணா.. நான் சிறை செல்வேனா...
எனக்கும் கொப்புளங்கள் உடலில் வருமா..
நீங்களும்
கண்ணாடியைக் கழற்றி அழுவீர்களா...
என்ன தம்பி இது
அப்படி எல்லாம் விட்டு விடுவேனா என்ன..
முடிதிருத்திக் கொண்டிருந்தவர் சொன்னார்..
ஐயாக்களே தயவு செய்து அந்தப் பலகையைப் பாருங்கள்..
பலகையில் எழுதியிருந்த து...
தயவு செய்து கீழ்க்கண்டவற்றை
இங்கு பேசாதீர்கள்..
அரசியல் மற்றும் நகைச்சுவை..!
-
நகைச்சுவை உணர்வோடு நெருங்கி
அடுத்தடுத்து வரும் அலையென
அடுக்கடுக்காக கதை சொல்லியே
கடலை போடும் காதல் மன்னர்கள்
வலையில்லாமல் மீன் பிடிக்கையில்
சிக்குவது விதி நழுவுவது மதி காண்
-
காண்கின்ற காட்சியிது கற்பனையா இல்லை..
...கன்னிமனம் காதலினால் கனிந்துவிட்ட உண்மை
ஊண்மறந்தாள் உளம்நினைத்தாள் உடையவனின் தோற்றம்
..உறக்கமதைத் தொலைத்துவிட்டே புரளுகிறாள் அங்கே..
ஆண்டவனை தொழுவதறகு மறந்தேதான் நெஞ்சை
..ஆண்டவனைத் தான்நினைத்தே உருகுகிறாள் பாவை..
மாண்டவரை உயிர்ப்பிக்கும் மருந்தாமோ காதல்..
..மாற்றங்கள் நொடிப்பொழுதில் கொண்டுவரும் அன்றோ...
-
அன்றோ இன்றோ என்றும் மாறா
தள்ளையின் பிள்ளை பாசம்.
-
கிறுக்கன்.
-
பாசம் எனும் வலை
போராட்டமான நிலை
பகிர்தல்தான் வேலை
புரிதலும் ஒரு கலை
பதற்றமேதும் இல்லை
பற்று முடியும் மாலை
-
மாலையிட மண்டபத்தில் நுழைந்திட்ட மங்கை..
...மன்னவர்கள் தோற்றத்தைக் கண்டவுடன் நெஞ்சம்
கோழையெனக் கணநேரம் துணுக்குற்றுக் குமுற
..கூட்ட்த்தில் இருப்பவரை மறுபடியும் பார்க்க
வேலைவிடும் பயிற்சியினால் விரிந்திருக்கும் மார்பு
..விழிகளிலோ சாந்தமென அமர்ந்திருக்கும் ஐவர்
காளைகள்தாம் இருந்தாலும் காதலனின் தோற்றம்
...கொண்டவந்த நால்வரையும் தெரிவதுதான் எப்போ..
கண்மூடி தமயந்தி கடவுளையே வேண்ட
...கணப்பொழுதில் தோன்றியது ஓரெண்ணம் மனதில்..
மண்ணோக்கி இருப்பதுபோல் பார்த்திடவே நான்கு
..மன்னர்களின் கால்களும்தான் தரைதொடாமல் தொங்க
தன்மனதை ஆட்கொண்ட நளன்காலோ கீழே.
...தொட்டபடி தானிருக்க மனம்சிலிர்த்து அங்கே
வண்ணமயில் போல்நடந்த வஞ்சியவள் மாலை
...வல்லவனின் தோளிலிட்டு மனம்மயங்க நின்றாள்..