-
நான் புஷ்பாஞ்சலி ஒன்று செய்ய
நீ பொன்னோவியம் என்று மாற
நா....ன் புஷ்பாஞ்சலி ஒன்று செய்ய
நீ பொன்னோவியம் என்று மாற
அதிலும் அந்த புஷபாஞ்சலி என்ற வார்த்தை பாலா வாயில் படும் பாடு
அதனால் வரும் பாட்டு சூப்பர் பங்காளி
train சத்தத்திற்கு இணையான பாலா ஜானகி ஹம்மிங் குரல்கள்
-
-
-
-
-
-
பூர்ணிமா பாடலுக்கு நன்றி க்ருஷ்ணா ஜி..
வாசு சார்.லாரிடிரைவர் ராஜாக்கண்ணு பார்த்ததில்லை. இந்தப் பாடலையும் கேட்டதில்லை..அல்லது கேட்ட ஞாபகம் இல்லை..பார்க்கிறேன்.. ஆனால் இதே படத்தில் வேறு ஒரு ஃபேமஸ் பாட்டு உண்டில்லையோ..தாங்க்ஸ்..(எப்போ தான் எனக்குத்தெரிந்த பாட்டுப் போடப்போகிறீர்களோ..
பூர்ணிமாஜெயராம்பொறுத்த வரை ஓளங்கள் பாலுமகேந்திரா - அமோல்பலேகர் பூர்ணிமா அம்பிகா என நினைவு. நினைவுக்கு வருகிறது.. நல்ல படம்.. ஒரு நல்ல பாட்டு தும்பீ வா தும்பக் குளத்தில் பின்னர் தமிழ் கன்னடம் என வந்த நினைவு..
சங்கத்தில் காணாத கவிதை அங்கத்தில் யார் தந்தது ராரா ரரர..
சிந்தி தேன் பாய்கின்ற இதழைச் சிந்தித்தேன் பூவானதோ - தமிழ் வெர்ஷன் ஆட்டோ ராஜா என நினைவு விஜயகாந்த் + ஒரு டுபாக்கூர் ஹீரோயின் (நடிக்க வராமல் பார்த்தாலே எரிச்சல் வரத்தூண்டும் முகம்) பாட்டு வெரி நைஸ்..லிரிக்ஸ் புலமைப் பித்தன் என நினைக்கிறேன்..
http://www.youtube.com/watch?feature...&v=eEQa7c4UAx4
-
http://3.bp.blogspot.com/-6fqJ9mk6nK...SN_enlarge.jpg
எஸ்வி சார்
ஜெமினி நினைவுகள்-திருநெல்வேலி
அந்நாள்களில் ஏ.வி.எம் படங்கள் பாப்புலர் டாக்கீஸிலும். மாடர்ன் தியேட்டர்ஸ் , விஜயா-வாஹினி படங்கள் ராயல் டாக்கீஸிலும் ஓடும். 1962ல் பாப்புலர் திரை அரங்கு உரிமையாளர்கள் கட்டிய சென்ட்ரல் தியேட்டரை திரு. ஏ.வி.மெய்யப்ப செட்டியார் அவர்கள் நெல்லைக்கு நேரில் வந்து திறந்துவைத்தார்.இந்நாட்களில் இருப்பது போல் விடியோ conferencing முறை அந்நாளில் கிடையாது.
ஜெமினி நிறுவனம் தங்கள் படங்களை ஜெமினி பிக்சர் சக்யூட் என்ற பெயரில் தாங்களே எல்லா ஊர்களிலும்,தியேட்டர்காரர்களுடன் ஒப்பந்த அடிப்படையில் திரையிட்டார்கள். அப்படி தொடங்கியதுதான் ஜெமினி- பாலஸ்-டி-வேல்ஸ் திரை அரங்கு உறவு.
ஜெமினி படம ரிலீஸ் தேதியில் வேறு எந்த படம் ஓடிக்கொண்டிருந்தாலும் எடுத்துவிட்டு ஜெமினி படம் தான் திரையிட வேண்டும். இது ஒப்பந்த விதி. 1943ல் ஜெமினியின் மங்கம்மா சபதம் ரிலீஸ் ஆனபோது நன்றாக ஓடிக்கொண்டிருந்த தியாகராஜ பாகவதரின் 'சிவகவி', தொடர் ஓட்டமாக ராயல் டாக்கீஸுக்கு மாற்றப்பட்டது
ஜெமினியின் பிரமாண்டமான தயாரிப்பான 'சந்திரலேகா', 1948ல் வரும் வரை இந்த தியேட்டரில் சிங்கிள் ப்ரொஜெக்டர்தான். தயாரிப்பாளர்-டைரக்டர் திரு S.S.வாசன் அவர்கள் திரை அரங்கு முதலாளியிடம் , "படம் மூன்றரை மணி நேரம் ஓடும். அதனால் டபுள் ப்ரொஜெக்டராக மாற்றி விடுங்கள்" என்று சொன்னதால் புதிய RCA Simplex ப்ரொஜெக்டர்களும் RCA சவுண்ட் சிஸ்டத்துடன் வந்தது. ஜெமினி இரட்டையர்களின் குழலோசை ரொம்ப தூரம் கேட்குமாம்.
திரைக்கு வந்து பல மாதங்கள் ஓடிய ஜெமினி படங்கள் பற்றி சொல்ல நினைத்தால் முதலில் சந்திரலேகாதான். 31 வாரங்கள் ஓடியது.
ரஞ்சன் (இயற்பெயர் வெங்கடரமண சர்மா) முறைப்படி FENCING ஃப்ரான்ஸில் கற்றவர. எம்.கே.ராதாவுடன் அவர் போடும் வாள் சண்டை மிகவும் பிரபலம் . FENCING - ஸ்டன்ட் சோமு என்று படத்தின் டைட்டிலில் பார்க்கலாம்
இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ், ,கல்யாணமானதும் பால்கனியிலிருந்து நாட்டு மக்களுக்கு கை அசைப்பதை போல் படத்தின் கடைசிக் காட்சியில் எம்.கே.ராதாவும் டி.ஆர்.ராஜகுமாரியும் உப்பரிகையில் இருந்து மக்களைப் பார்ப்பது ராஜ குடும்ப கல்யாணம் எப்படி நடக்கும் என்று டைரக்டர் வாசனின் அருமையான காட்சியமைப்பு.
http://2.bp.blogspot.com/-l6oviG8z_9.../avvaiyaar.jpg
சக்ரதாரி, அபூர்வ சகோதரர்கள், சம்சாரம், மூன்று பிள்ளைகள், ..எல்லாமே ஜெமினியின் மிக பெரிய வெற்றி பெற்ற படங்கள்
ஜெமினியின் ஹிந்தி படம் 'இன்ஸானியத்,' தேவ் ஆனந்தும் திலீப் குமாரும் இணைந்து நடித்த ஒரே படம், பாலஸில் ரொம்ப நாள் ஓடியது. சிரிப்பு நடிகர் ஆகாவுடன் ஜிப்பி (சிம்பன்ஸி) செய்யும் சேட்டைகள் எல்லோரும் ரசித்த காட்சிகள்.
தியேட்டர் அமைப்பு காரணமாக மேட்னி ஷோ தடை ஆனதால், ஜெமினியின் வஞ்சிக்கோட்டை வாலிபன் பார்வதி டாக்கீஸ் ரிலீஸ் .பிறகு பழைய படங்களாக ஓடும் திரை அரங்கு போல் தினம் இரண்டு காட்சிகள் மட்டும் நடத்தும் போது மேலும் ஈரடுக்கு மேம்பாலம் அமைந்ததால் ரசிகர் கூட்டம் குறைந்தது, குத்தகை காலம் முடிந்ததும் நில உரிமையாளர்களான கோவில் நிர்வாகக்குழு வாடகையை பல மடங்கு உயர்த்தியது போன்ற பல காரணங்களால் தியேட்டரை மூட வேண்டியதாயிற்று.
ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி என்பார்கள். இன்று ஆலும் வேலும்தான் பாலஸுக்கு நிழல். கோவில் நிர்வாகம் அந்த இடத்தில் கல்யாண மண்டபம் கட்ட திட்டமிடுகிறார்களாம்.
ஒவையார் படத்தை எக்ஸ்க்ளூஸிவிலி லேடிஸுக்காகவும் அதாவது பெண்களுக்கு மட்டுமாக ஒரு ஷோ நடத்தினார்கள். படம் முடிந்து போகும் போது பெண்கள் எல்லோருக்கும் ரிப்பன், சீப்பு, கண்மை, சாந்துபொட்டு எல்லாம் நவராத்திரிக்குக் கொடுப்பது போல் காம்பிளிமெண்ட் கொடுத்து சந்தோஷப் படுத்தியதும் பின்னர் இக்னேஷியஸ் கான்வெண்ட்மாணவ மாணவிகள், மதர்ஸ் சிஸ்டர்ஸ் எல்லோருக்குமாகவும் ஒரு ஷோ காண்பித்ததும் வாடாத நினைவுகள்.
நெல்லை நண்பர் பகிர்ந்து கொண்ட மலரும் நினைவுகள்
-
விளையாட்டு பிள்ளை நெல்லை லக்ஷ்மி
ஒளி விளக்கு நெல்லை சென்ட்ரல்
எல்லோரும் நல்லவரே நெல்லை பார்வதி
-
இப்ப பாலஸ் டி வேல்ஸ் தியேட்டர் பண்டாரவிளை நாடார் மாவுகட்டு போடும் இடமாகி விட்டது.காலை ஆறு மணிக்கு கீழே விழுந்த,சுளுக்கிய வலியோடு மனிதர்கள் கூடுகிறார்கள்
https://encrypted-tbn3.gstatic.com/i...lMWlHA7cZO8BfX