-
கல்கி வார இதழ் -19/01/20
தராசு பதில்கள்*---------------------------
கேள்வி : எம்.ராஜேந்திரன் , லால்குடி, திருச்சி*
எம்.ஜி.ஆர். மறைந்து 32 ஆண்டுகள் ஆகியும், அவரது புகழ் இன்னும் மங்கவில்லையே ?
பதில்: அரசியலில் சாதனை சரித்திரங்களை படைத்த சிலர் சகாப்தம் ஆகிவிடுகிறார்கள் . அதில் எம்.ஜி.ஆரும் ஒருவர் .
-
துக்ளக் வார இதழ் -22/01/20
-------------------------------------------
ஒய்.ஜி.மகேந்திரன் பேட்டி* - எம்.ஜி.ஆர். இமேஜ்*
--------------------------------------------------------------------------
மக்களை கவரும் அம்சங்களை தன்னுடைய படங்களில் தந்தவர் எம்.ஜி.ஆர்.*மக்களை கவரும் வித்தை அவருக்கு நன்றாகவே தெரிந்து இருந்தது .எம்.ஜி.ஆருடன் என் தந்தைக்கு நல்ல நெருக்கம் இருந்தது .* அடிக்கடி போன் செய்து பல மணி நேரம் பேசிக் கொள்வார்கள் . அவர் முதல்வர் ஆனபின்பும் கூட அவருடன் நெருக்கமாக இருந்தார் என் தந்தை .* ஒருமுறை போன் பண்ணியதும் ,எம்.ஜி.ஆர். எடுக்கவில்லை .அவரது பி.ஏ.தான் எடுத்தார் .என் தந்தையை நீங்கள் யார் ? என்ன விஷயமாக பேச வேண்டும் என்றெல்லாம் குடைந்து எடுத்தார் .**என் தந்தை கோபக்காரர் இல்லையா ?* ஒய்.ஜி.பார்த்தசாரதி பேசினேன் என்று சொல்லுங்கள் .அவருக்கு நான் யார் என்று நினைவிருந்தால் பேசட்டும் என்னுடன் என்று போனை வைத்து விட்டார் .அன்று மாலையே எம்.ஜி.ஆரிடம் இருந்து போன் வந்தது .* நீங்கள் இப்படி பேசலாமா? உங்களை நினைவில் இல்லாமல் இருப்பேனா ?நான் இப்போது முதல்வர் .* ஏராளமான பணிகளை செய்ய கடமைப்பட்டிருக்கிறேன் .எனவே முன்பு போல நானே போனை எடுத்து பேசும் சூழ்நிலை இல்லை.* பொறுத்துக்க கொள்ளுங்கள் என்று என் அப்பாவிடம் நட்பு ரீதியில் தன்* நிலையை விளக்கினார் .**
எம்.ஜி.ஆரை பொறுத்தவரை* திரைப்படங்களில் புகை பிடிப்பது, மது அருந்துவது,*பெண்களை தவறாக பார்ப்பது போன்ற எந்த தவறான காட்சிகளிலும் நடித்தது இல்லை .* அவர் திட்டமிட்டு தன்னை தேர்ந்த தலைவராக வளர்த்துக் கொண்டார் .அதே பாணியில்தான் இன்றும் பலர், நல்லவனாக நடித்து தலைவர் ஆகிவிடலாம் என்று நினைக்கிறார்கள் .
-
பொங்கல் திருநாளன்று மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள்*
தமிழகத்தில் வெளியாகும் பட்டியல் விவரம்* (15/01/2020)
----------------------------------------------------------------------------------------------------------------------------
சென்னை - அகஸ்தியா* - டிஜிட்டல் "நம் நாடு " தினசரி 3 காட்சிகள்** * (நண்பகல் /மேட்னி/ மாலை )
மதுரை* *- அரவிந்த்* * * * *- நாடோடி மன்னன் - தினசரி 3 காட்சிகள்*
* * * * * * * * * * திருப்பரங்குன்றம் -லட்சுமி - ஆயிரத்தில் ஒருவன் -டிஜிட்டல்** (11/01/20 முதல் ) தினசரி 2 , சனி , ஞாயிறு 3 காட்சிகள்*
கோவை* - சண்முகா* -* அடிமை பெண்* - தினசரி 4 காட்சிகள்*
பழனி நகரம்* - சாமி அரங்கு* - அடிமை பெண்* - தினசரி* 4 காட்சிகள்*
புளியங்குடி - கண்ணன் (தென்காசி மாவட்டம் )- எங்க வீட்டு பிள்ளை** *தினசரி* 4 காட்சிகள்*
விக்கிரமசிங்கபுரம் -தாய் சினீஸ் (நெல்லை மாவட்டம் ) எங்க வீட்டு பிள்ளை** * தினசரி 2 காட்சிகள் ( மாலை /இரவு )
தூத்துக்குடி* - சினிராஜ்* *-ஆயிரத்தில் ஒருவன் - தினசரி 4 காட்சிகள்*
கோவை* -சுந்தராபுரம் -பழனியப்பா - அடிமை பெண் -தினசரி 4 காட்சிகள்* *(10/01/20 முதல் ) * *
தமிழகம் முழுவதும் பொங்கல் திருநாள் முதல் (15/01/20)* சுமார் 100 அரங்குகளுக்கு மேலான வெள்ளி திரைகளில் புரட்சி தலைவர் /மக்கள் தலைவர்*இரு வேடங்களில் அசத்தலாக நடித்து வசூலில் சாதனை, சரித்திரம், சகாப்தம்*மீண்டும் படைக்க உலகம் சுற்றும் வாலிபன்* டிஜிட்டல்* ட்ரைலர் வெளியீடு நடைபெறுகிறது .
-
ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பில்* மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரியின்,பதிவாளர்கள்* பார்வையாளர்கள்,,ஆதரவாளர்கள், வாட்ஸ் அப் நண்பர்கள்*அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்*
ஆர். லோகநாதன் .
-
15-01-2020 இனிய " தை பொங்கல்" நல்வாழ்த்துக்கள் அனைவருக்கும் உரித்தாகுக... மக்கள் திலகம் கொண்டாடிய மகத்தான பண்டிகையை எல்லோரும் நல்ல முறையில் இன்பதோடு கொண்டாடுவோம்...வாழ்க... வளமுடன்...
-
https://i.postimg.cc/7YmvmvsF/1579016924736.jpg
நமது திரியின்
பதிவாளர்கள்
பார்வையாளர்கள்
அனைவருக்கும்
இனிய
பொங்கல்
நல்வாழ்த்துக்கள்
எஸ் ரவிச்சந்திரன்
-
-
-
-