ஆஹா.. லா.டி.ரா பாட்டு, தும்பி வா தும்பக் குடத்தில் ஆரம்பிச்சு நாலு பாட்டு…நான் இசைக்கும் ராகமெல்லாம் அவன் தந்த யோகம்.. கேட்டு முடிச்சேன்.. ஆனா அதுக்கு ம் முன்னாலே கேட்டது – மாம்பழத்தோட்டம் மல்லிகைக் கூட்டம் மணக்க வரும் மாலைப் பொழுதோடு மருவி அணைக்கும் மயக்கம் கொடுக்கும் மன்மதன் வந்தான் தேரோடு.. அங்கே காதலர் உள்ளம் ரெண்டும் படக் படக் பட்பட்.. கேட்டேன்.. ரொம்ப நாளாச்சு கேட்டு..
தாங்க்ஸ் டு மதுண்ணா தும்பியில் ஆரம்பித்து நா.இ.ராகமெல்லாம் பாட்டு வரைக்கும்..கைராசிக்காரன் பாட்டு கேட்கலை..படம் பார்த்திருக்கேன்..கதை மிக அழகான நல்ல கதை.. கதை..ரா.கி ரங்கராஜன் எனப் போட மட்டும் அவரிடமிருந்து வாங்கி உல்டா பண்ணி ஒருவழியேத்தி இருப்பார்கள்.. சிரிசிரி மாமா பார்த்ததில்லை..வெ.ஆ.மூர்த்தியா.. பாட்டுக்கு தாங்க்ஸ்..
தாங்க்ஸ் எஸ்விசார்..மாம்பழத் தோட்டத்திற்கு.. நோ தாங்க்ஸ் ஃபார் செளகார் ஜானகி ஃபோட்டோ..
தாங்க்ஸ் வாசு சார் ஃபார் இ.ஸ்பெஷல் பாட்டுக்கு.. நான் இப்போ தான் கேட்கறேன்..
வாங்க ராஜ் ராஜ் சார்..கரெக்டா காக்காக் கடி பிடிச்சுட்டீங்களே.. தாங்க்ஸ்..
கிருஷ்ணாஜி எனக்குத் தெரிஞ்ச ஒரு கடிப் பாட்டு..வேண்டும் வேண்டும் வா
மீண்டும் மீண்டும் வா.. பால் நிலா ராத்திரி பாவையோர் மாதிரி அழகு ஏராளம் அதிலும் தாராளம் என்று டிம்பிள் தாராளமாய் ஆடும் பாடலில்..
தேக்கு மரத்தில் வார்த்து வைத்த தேஹம் இது தானா…என்ற வரிகள் வரும்போது வாளால் ஆப்பிள் கடிப்பார் கமல்ஹாசன் (கத்தி டைரக்டர் தரலையாம்) என்று நினைவு.. அப்புறம் ஒரு விளம்பரப் படம் பளிச்சிடும் ஈறுகள் மற்றும் பற்களுக்கு கர்ரக் என ஒருஆப்பிள் கடிபட்டு ஒருகரும்பு கடிக்கப் பட்டு வஜ்ரதந்தி வஜ்ர தந்தி வீக்கோ வஜ்ர தந்தி டூத் பவுடர் டூத்பேஸ்ட்… என்ற விளம்பரப் பாடல்… அடிக்க வருமுன் எஸ்கேப்ப் ஆகலாம்னா..இதென்ன
கண்ணே கலைமானே பாட்டை டைப்படிக்கலாம் என்று வேகமாக அடித்ததில் இவ்வளவு தான் மிச்சம்..டைப்படிப்பதை நிறுத்திப் பாட்டைக்கேட்டு விட்டேன்..ஏன் வீடியோ கிடைக்கலையா..
நீர்வீழ்ச்சி தீமூட்டுதே தீக்கூட குளிர் காயுதே
ஆண்பார்வை மின்சாரம் தந்திட பெண் தேகம் சிலிர்க்கின்றதே
செம்மாந்து மழைவந்து பெய்யுது தேன் சிட்டு நனைகின்றது
கண்மீன்கள் தரை வந்து கொஞ்சுது தேன் சொட்டித் திரள்கின்றது
தண்ணீரில் அப்புறம் வேகமாயிடுத்து…:)

