தமிழ் ' நாட்டை' ஆண்ட அந்த 'கணேச பெம்மான் வித்யாபதி' பற்றிய குறிப்புகளும் உங்கள் புதிய வருட வாழ்த்துகளும் அருமை ரவி சார்
'நாட்டை' பெரும்பாலும் கச்சேரிகளின் ஆரம்பத்தில் பாடப்படும் ஒரு மங்கள ராகம்...விநாயகரோ ஆரம்பத்தில் வணங்கப்படும் கடவுள்..எனவே விநாயகர் மீதான பெரும்பாலான பாடல்கள் நாட்டையில் தான் இருக்கும் சில 'ஹம்சத்வநியிலும்' உண்டு
சல நாட்டையின் குழந்தை ராகம்
பாட்ஷா படத்தில் தேவா கொஞ்சம் இதை தொட்டு இருப்பார் 'தங்க மகன் இங்கு சிங்க நடை போட்டு '
ஹாரிஸ் ஜெயராஜ் அந்நியன் படத்தில் திருவையாறு தியாகராஜா உற்சவ பஞ்ச ரத்ன கீர்த்தனை சதா பாடுவது போல் 'ஜகதானந்த காரக' அதன் நீட்சி 'அய்யங்கார் வீட்டு அழகே' பாடலில் கையாண்ட ராகம்
ஸ்ரீகாந்த தேவா குமரன் சன் ஆப் மகாலட்சுமியில் 'சென்னை செந்தமிழ் ' பாடலில் கையாண்ட ராகம்
ரஹ்மான் இருவர் படத்தில் 'நறுமுகையே நறுமுகையே 'பாடலில் கையாண்டு இருப்பார்
வித்யாசாகர் அள்ளி தந்த வானம் படத்தில் 'தோம் தோம் ' ஹரிஹரன் சித்ரா குரலில் தெளித்து இருப்பார்
எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தார் போல் நினைவெல்லாம் ரவி மன்னிக்கவும் நித்யா 'பனி விழும் மலர் வனம் ' ராஜாவின் கை வண்ணத்தில்,வைரமுத்துவின் வைர வரிகளில் பூத்த குறிஞ்சி பூ பாடல்
http://www.youtube.com/watch?v=0Rm_XUzqjPI
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்
https://encrypted-tbn1.gstatic.com/i...VIwoQ-1CXQoSQw