- கல்கி 08.08.1954 தேதியிட்ட இதழில் வெளியான துளி விஷம் திரைப்படத்தின் விமர்சனத்திலிருந்து...
Quote:
சூர்ய காந்தனாக வரும் சிவாஜி கணேசனின் பேச்சுத் திறனும் நடிப்புத் திறனும் ஒன்றை ஒன்று மிஞ்சப் பார்க்கின்றன. அவர் பேச்சில் ஒரு சமயம் கனல் பறக்கிறது; இன்னொரு சமயம் காதல் கொஞ்சுகிறது; மற்றொரு சமயம் வெறியுணர்ச்சி மிஞ்சுகிறது; எதுகையும் மோனையும் ஏற்ற இடத்தில் அமைந்து அவர் பேச்சு படம் பார்ப்பவர்களை இருந்த இடத்தை விட்டு எழுந்திருக்க வொட்டாமற் செய்கிறது; அப்படி மீறி எழுந்திருந்தவர்களை வீறு கொண்டு துள்ளி விழச் செய்கிறது.