-
கேட்டவைகளில் பிடித்தது -20
பாடல் : "தாயெனும் செல்வங்கள் "
படம் : மூன்று தெய்வங்கள்
Message : Our lives are not determined by what happens to us ! but by how we react to what happens , not by what life brings to us but by the attitude we bring to life!!
A silent hug means a thousands words to an unhappy heart .
தாயினும் செல்வங்கள் தாலாட்டும் தீபம் - வையிரங்கள் போலே ஒளி விடட்டும்
தாயினும் செல்வங்கள் தாலாட்டும் தீபம் - வையிரங்கள் போலே ஒளி விடட்டும்
சந்தோஷம் கொண்டாடும் உள்ளங்களில்
பொன்னான எண்ணங்கள் உருவாகட்டும்
எல்லோரும் வாழும் நிலை வரட்டும்
நல்லோரை வரவேற்கும் இல்லம் உண்டு
நாள்தோறும் பரிமாற அன்னம் உண்டு - எப்போதும் ஒளி வீசும் கண்கள் உண்டு
இல்லை என்று எண்ணாத உள்ளம் உண்டு
(தாயினும் செல்வங்கள் ----)
பாவங்கள் இ(ல்)லை என்று நீராடுங்கள்
பண்பாடும் புகழ் என்று மலர் சூடுங்கள்
சமுதாயம் வாழ் என்று இசை பாடுங்கள்
எதிர்காலம் உண்டு என்று நடமாடுங்கள்
(தாயினும் செல்வங்கள் ----)
எங்கு எங்கு பிறந்தாலும் ஒன்றாகலாம்
இல்லாத சொந்தங்கள் உருவாகலாம்
( இந்த வரிகள் இந்த அருமையான திரியில் உள்ள எல்லா NT fans க்கும் பொருந்தும் - எங்கோ இருந்தோம் - எப்படியோ வளர்ந்தோம் - ஆனால் இந்த திரியின் மூலம் இல்லாத சகோதர உறவுகளை ஏற்படுத்திகொண்டுள்ளோம் - ஒருவரை
ஒருவர் பார்க்காமலே/சந்திக்காமலேயே அந்த சகோதர உணர்வு நம்மிடையே அதி தீவிரமாக வளர்ந்து உள்ளதே - இது ஒரு ஒப்புக்கொள்ள வேண்டிய உண்மை தானே !! )
தாயாக மகனாக உறவாடலாம் - தந்தைகள் , தங்கைகள் குறையாகலாம்
சந்தோஷம் கொண்டாடும் உள்ளங்களில்
பொன்னான எண்ணங்கள் உருவாகட்டும்
எல்லோரும் வாழும் நிலை வரட்டும்
(தாயினும் செல்வங்கள் ----)
http://youtu.be/0lFpu5z0oPU
-
vasantha malaigai
http://www.tamilcinetalk.com/shootin...aaligai-movie/
today saw one videio of vasantha maligai shooting spot
just sharing
regards
gk
-
நல்லோரை வரவேற்கும் இல்லம் உண்டு
நாள்தோறும் பரிமாற அன்னம் உண்டு - எப்போதும் ஒளி வீசும் கண்கள் உண்டு
இல்லை என்று எண்ணாத உள்ளம் உண்டு
"Annai Illam"
gk
-
One more eye opening for me on my ignorance of data on 100 days movies of NT, Thanks again g. Thanga Padumai.... when I was a school boy in Udamalpet, a small town hardly with three theatres, I have witnessed the thundering response to this movie with a beeline of ladies.. during its rerun for nearly 50 solid days in theatre Bravo! Scene by scene NT was the scene stealer with Padminis's performance on par. I hope Pammalar's update may help us.
-
-
கேட்டவைகளில் பிடித்தது -21
பாடல் : கவலைகள் கிடக்கட்டும் மறந்து விடு
படம் : பந்த பாசம்
இன்னுமொரு தன்னபிக்கையை ஊட்டும் பாடல்
Life is a mixture of sunshine and rain ; laughter and pleasure ; teardrops and pain
all days can't be bright - but it's certainly true , there was never a cloud the sun
didn't shine through - just forget your worries and keep going !!
when you smile your day will be brighter and all your burdens would seem so much lighter
அற்புதமான பாடல் - முதலில் சோகமே உருவாக GG - தன்னம்பிக்கையை இழந்து , வெறுப்பின் உச்சியில் இருப்பார் - NT அவருக்கு தெம்பை ஊட்டி உற்சாகபடுத்துவார் - கடைசியில் GG யின் முகத்தில் ஒளி பிறக்கும்
கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு - காரியம் நடக்கட்டும் துணிந்து விடு
எடுத்தவர் யாரோ , மறைத்தவர் யாரோ இருக்குது நீதி - சிரித்துவிடு
கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு - காரியம் நடக்கட்டும் துணிந்து விடு
எடுத்தவர் யாரோ , மறைத்தவர் யாரோ இருக்குது நீதி - சிரித்துவிடு
நீதியும் நெருப்பும் ஒன்றென்பார் , நெருங்கிடும்போதே சுடும் என்பார்
யாரையும் எதுவும் சுடவில்லை -என்னையும்
பழியோ விடவில்லை
சுட்டதும் தங்கத்தின் நிறம் போமோ - தொட்டதின் மலர்களின் மனம் போமோ
கற்றவன் கலங்குதல் அழகாமோ
சட்டமும் கற்பனை கதையாமோ
கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு - காரியம் நடக்கட்டும் துணிந்து விடு
எடுத்தவர் யாரோ , மறைத்தவர் யாரோ இருக்குது நீதி - சிரித்துவிடு
நாவுக்கும் மனதிற்கும் உள்ள வழி -நான்கு விரல் கடை தூரவழி
நாவுக்கும் மனதிற்கும் உள்ள வழி -நான்கு விரல் கடை தூரவழி
சொல்லுக்கும் செயலுக்கும் காத வழி - துக்கமும் சுகமும் வேறு வழி
வந்ததில் எல்லாம் பொருள் உண்டு - வருவதில் வெற்றியும் நமக்குண்டு -நிச்சயம்
இரவுக்கு பகலுண்டு - நீதியின் கண்களில்
ஒளி உண்டு
கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு - காரியம் நடக்கட்டும் துணிந்து விடு
எடுத்தவர் யாரோ , மறைத்தவர் யாரோ இருக்குது நீதி - சிரித்துவிடு
அண்ணனில் ஆயிரம் பேருண்டு -ஆயினும் உன்போல் யாருண்டு ? படிகளில் ஆயிரம் வகை உண்டு - பார்ப்போம் இதற்க்கு ஒரு முடிவுண்டு
வந்ததில் எல்லாம் பொருள் உண்டு - வருவதில் வெற்றியும் நமக்குண்டு -நிச்சயம்
இரவுக்கு பகலுண்டு - நீதியின் கண்களில் ஒளி உண்டு
http://youtu.be/hQjCTpgfaqw
-
பார்த்ததில் பிடித்தது 28
இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கும் படம் 1957 ல் வெளி வந்து வெற்றிகரமாக 100 நாட்கள் ஓடி ஒரு சாதனையும் மற்றும் சென்னை நகர திரையரங்க வரலாற்றில் முதல் முதலாக 80 அடிக்கும் மேல் உயரமாக கட் அவுட் வைக்கப் பட்ட வணங்காமுடி படத்தை பற்றி தான் .
கதை :
ராஜா ராணி கதை தான் . இளவரசி தேவசுந்தரியும்(சாவித்திரி ) அவளது தோழியும் உலாவப் போகும் போது பாடி கொண்டு வருகிறார்கள் , அப்படி பாடும் பொது இளவரசி ஒரு இனிமையான குரலை கேட்க , அந்த குரல்வளத்தில் கவரப்பட்டு அந்த குரல் வந்த திசை நோக்கி செல்லுகிறார் , அந்த குரலுக்கு சொந்தகாரர் ஒரு சிற்பி சித்திரசேனன். மிக அழகாக சிலைகளை செதுக்குவதில் வல்லவர் . பார்த்த மாத்திரத்தில் காதல் வயபடுகிறார் இளவரசி. யார் என்று தெரியாமல் சகஜமாக பழககிறார் சிற்பி (சிவாஜி ). தன் மகள் சிற்பியுடன் அதிக நேரம் செலவிடுவது அறிந்து அவளை கண்டிக்கிறார் ராஜா ,இளவரசி அந்த சிற்பியின் பாடல் திறைமையை பற்றி கூற , சிற்பி , மற்றும் அவர் நண்பர் பரம்ஜோதி (தங்கவேலு ) இருவரையும் இழுத்து வருகிறார்கள் ராஜாவின் ஆட்கள் . பாட சொல்லி பரம்ஜோதியை கூற , அவர் மறுக்க , ராஜசபையில் பரம்ஜோதியை அடித்து விடுகிறார்கள் , கோபம் கொப்ளிக்க , பாடல் பாடுகிறார் (ஓங்காரமாய் விளங்கும் நாதம்) சிற்பி .
சிற்பியை தன் சபையில் வைத்து கொள்ள அசைபடுக்கிறார் ராஜா . சிற்பி தன் தொழில் சிலை செய்வது என்று மறுத்து விடவே , அவர் கைவனத்தில் தமிழ் தாயின் சிலையை செதுக்க சொல்லி கேட்கிறார் ராஜா , அவரும் செய்து தந்து ராஜாவின் நன்மதிப்பை பெறுகிறார் , நாட்டை கைபற்ற நினைக்கும் தளபதி நரேந்திரன் (mn நம்பியார் ) சூழ்ச்சி செய்ய நினைக்கிறார் . சிற்பியின் தந்தை மன்னனின் மெய்க் காப்பாளன்.அந்தஸ்து வித்தியாசம் காரணமாக இளவரசியின் காதலை அங்கீகரிக்க மறுக்கிறான் மன்ன்ன் . சிற்பியும் காதலை ஏற்க மறுக்கிறார் . இளவரசி தன் காதலரின் தாயின் அன்பை பெற முயற்சி செய்து , அதில் வெற்றி பெறுகிறார்.
அரசியை காதலித்தால் தளபதி , மற்றும் ராஜாவின் உத்தரவினால் சிற்பி கைது செய்ய பட , சிற்பியின் தாய் வந்து மன்றாட , மரண தண்டனை குறைக்க பட்டு , நாடு கடத்த படுகிறார் சிற்பி . நாடு கடத்த பட்ட இடத்தில் ஒரு யானை மலை போட, வாரிசு இல்லாத ராஜ்யத்துக்கு மன்னன் மலைரசன் ஆகிறார் சிற்பி . தன் மகனை காணாத தூக்கத்தில் துவண்டு போகிறார் சிற்பியின் தாய் , தன் காதலனை காணாத இளவரசி தன் காதலனை தேடி அலைகிறார் , இளவரசியை தேடி தளபதி நரேந்திரன் மலைரசன் (சிவாஜி ) நாட்டுக்கு வந்து உதவி கோருகிறார் , சில நாட்கள் முன்பு தான் நகர்வலம் வரும் பொது இளவரசி போல் உள்ள ஒரு பெண்ணை பார்த்த ஞாபகம் வர , தளபதி அந்த பெண்ணை (சாவித்திரி போல் உள்ள பெண் ) இளவரசியின் இடத்துக்கு கொண்டு வருகிறார் , ராஜாவை ஏமாற்றி அவருக்கு மருமகன் ஆகிறார் நரேந்திரன் , இளவரசி தோற்றத்தில் இருக்கும் சாவித்திரி , தன்னை மலைரசன் சித்ரவதை படுத்தியதை பொய் சொல்ல , மலைரசன் கைது செய்ய பட , மங்களம் (சிற்பியின் தாய் ) இறந்து போகிறார் பரம்ஜோதியின் முயற்சியால் உண்மையான இளவரசி தேவசுந்தரி அங்கு வர , ராஜாவுக்கு உண்மை புரிய தளபதி விழ்த்த பட , இளவரசிக்கும் , சிற்பிக்கும் திருமணம் நடக்க
சுபம்
-
படத்தை பற்றி ஆய்வு :
வழக்கமான ராஜா ராணி படம் தான் இருந்தாலும் விறு விருப்பு , 1952 ல் நம்மவர் வந்த பிறகு தான் social படங்களுக்கு கிராக்கி வந்தது , அது வரையில் வெறும் ராஜா ராணி படங்களும் , புராண படங்களும் மட்டுமே வந்தது , அப்படி மாற்றத்துக்கு விதிட்ட நடிகர் திலகம் மீண்டும் ஒரு மாறுதலை கொண்டு வந்து , ராஜா ராணி படங்களுக்கு மதிப்பு ஏற்படுத்தி கொடுத்த படம் தான் இந்த படம் . இந்த படத்தின் கட் அவுட் யை பார்த்த பல சின்ன பசங்களில் ஒரு 7 வயது சிறுவனின் மகன் தான் நான் . நடிகர் திலகம் கைகள் கட்டுண்டு இருப்பது போன்ற ஸ்டில் இரவில் ஜொலிக்கும் என்பது , அவருடை இடுப்பு அளவிற்கே நீரில் பிரதிபலிப்பு இருக்குமாம் , திரு ராகவேந்திரன் சாரின் பதிவை படித்து விட்டு என் தந்தையிடம் கேட்ட பொது இதை அவர் விவரித்த விதம் கண்ணுக்குள் இருக்கிறது . பாடல்கள் மீண்டும் கேட்க தூண்டும் தேனில் ஊறிய பலாச்சோலை .
ராஜ யோகமே பாரீர் என்ற அறிமுக பாடலை பற்றி எழுதுவதா
ஓங்காரமாய் விளங்கும் நாதம் என்ற எனக்கு பிடித்த பாடலை பற்றி எழுதுவதா
சாவித்ரி ஆடும் குத்து பாடல் பற்றி எழுதுவதா எதை எழுத , எதை விட
(கேட்டதில் பிடித்தது - எழுதும் ரவி எழுதுவார் என்று நினைக்கிறன் )
ராமநாதன் அவர்களின் இசையும் ,தஞ்சை ராமையா தாஸ் வரிகளும் , பாடல் என்ற மகுடத்தில் ஜொலிக்கும் வைர கல்
-
பாத்திரத்தின் பங்களிப்பு
சிற்பி சித்ரசேனன்/ மலைரசன் :
சிவாஜி சாரின் அழகை பாரட்ட வார்த்தை இல்லை , சில நாட்களுக்கு முன்பு பார்த்த முதல் தேதியில் பார்த்த நபரா இவர் என்று ஒரு நிமிடம் ஆச்சர்ய பட்டு போனேன் , இவருக்கு கூடு விட்டு கூடு பாய தெரியுமோ .
முதலில் அவர் அறிமுகம் ஆகும் மலையே உன் நிலையை நீ பாராய் பாடலில் இருந்து படம் முழுவதும் அவர் ராஜாங்கம் தான் , சாவித்ரியை முதலில் அலட்சியாமாக handle செய்வது , தங்கவேலு ஏன் சிலை வடிக்கிறாய் , வேறு எதாவது செய்வது தானே என்று கேட்கும் பொது , அதற்கு பதில் அளிப்பதில் ஒரு கர்வம் , தான் பழகிய பெண் இளவரசி என்று அறிந்து அவர் மூஞ்சியில் காடும் அதிர்ச்சி , அதை தாங்கி கொள்ள முடியாமல் சாவித்திரி தலை குனியும் காட்சி , தன் நண்பர் அடி வாங்கிய உடன் சினம் கொண்டு ஓங்காரமாய் விளங்கும் நாதம் என்ற பாடலின் மூலம் கோபம் , ஆத்திரம் , புத்திமதி , அனைத்தையும் சொல்லும் பொது , அதற்கு ஏற்ப முகபாவத்தை மாத்துவதும், ராஜா தன்னை ராஜசபையில் வைத்து கொள்ள விரும்பும் பொது , தன் ஒரு சிற்பி என்று மீண்டும் ஒரு முறை கர்வமாக எடுத்து சொல்லி விட்டு வருவதும் , சாவித்திரி தன்னுக்கு பிடித்த பெண் என்பதை அறிந்து கொண்டு அவரிடம் அன்பு செலுத்துவது , தான் சிறைபிடிக்க பட்டு ஊரை விட்டு அனுப்ப பாடும் பொது சிங்கம் போல் பேசுவது (3-4 நிமிடம்) ஓடும் அந்த காட்சி ஒரே டேக் மொழி வீரன் , அந்த மாதிரி வசனத்தை பேசும் பொது ஒரு நடிகருக்கு எந்த அளவுக்கு conviction இருந்தால் இப்படி பேச முடியும் , இந்த காலத்துக்கு ஏற்ப சொல்ல வேண்டும் என்றால் , பில்லாவில் தல அஜித் பேசும் என் வாழ்கையில் என்று பேசும் வசனமும் , கடவுள் தத்துவத்தை தலைவர் ரஜினி பேசும் பொது We feel connected
-
சிற்பி சித்ரசேனன் பேச்சில் வல்லவர் என்றால் , / மலைரசன் பேச்சு கம்மி வீச்சு அதிகம் , வீச்சு என்றால் வால் வீச்சு ,. நடிகர் திலகத்தின் படங்களில் சண்டை காட்சிகள் அதிகம் இல்லை என்றும் , சண்டை போட முடியுமா என்றும் , அதிலும் வாள்வீச்சு வருமா என்று கிண்டல் செய்த நபர்கள் மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு இருந்தது அவர் வால் வீச்சு , முதல் முறையாக தான் ராஜாவாக பதவி எற்றுடன் அவர் வீரத்தின் மீது சந்தேகம் எழுப்பும் நபருடன் அவர் போடும் சண்டை , வாலை இரு கையால் பிடித்து கொண்டு , தன்னுடன் மோதும் நபருக்கு ஏற்ப ஏறி இறங்கி , அதுவும் படியின் மேல் ஏறி இறங்கி , குதித்து ஒரு சின்ன குன்று போல் ஒரு இடத்தில ஒரு கால் வைத்து , இன்னொரு கால் எதிரி பக்கத்தில் வைத்து சண்டை போடும் லாவகம் என்ன வென்று சொல்ல .இப்படத்தின் படப் பிடிப்பின் போது சுமார் 300 அடி உயரத்திலிருந்து விழுந்திருப்பேன், ரசிகர்களின் நல்லாசியால் உயிர் பிழைத்தேன், சிறுகதையாகி இருக்க வேண்டிய நான் தொடர் கதையாகி விட்டேன் என கூறியுள்ளார் நடிகர் திலகம். கடைசி காட்சியில் நம்பியாருடன் அவர் போடும் சண்டை மீண்டும் அவர் வால் வீச்சுயை பறைசாற்றியது . நல்ல வேகம் , நல்ல timing மொத்தத்தில் superb – ஸ்டன்ட் சோமு அவர்களுக்கு சபாஷ்.
மன்னனான உடன் தன் எதிரி நம்பியார் வந்துடன் அவர் தன் முகத்தில் ஒரு அதிர்ச்சி பிரதிபலிக்க , நான் தான் மன்னன் அதற்கு என்ன என்பதை போல் ஒரு பாவனை செய்வார் பாருங்கள் MASTER STROKE . சாவித்திரி உடனான காதல் காட்சியில் தான் என்ன ஒரு கவித்துவம் , அதே சமயம் ஒரு பெண்ணை எப்படி handle செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு இலக்கணம்
என்னக்கு மலைரசன் தான் மிகவும் பிடித்தது , சிற்பியின் நெற்றியில் இருக்கும் போட்டு – டாப்