arcot
http://i59.tinypic.com/358rvv4.jpg
Printable View
மன்னாதி மன்னன் - 5
‘ஒரே மனிதர்..’
புரட்சித் தலைவர் நடித்து பிரம்மாண்ட வெற்றி பெற்ற, கடந்த ஆண்டில் டிஜிட்டலில் வெளியாகி, சென்னையில் 2 தியேட்டர்களில் வெள்ளி விழா கொண்டாடி உலக சாதனை படைத்த ஆயிரத்தில் ஒருவன் படத்தை தயாரித்து, இயக்கிய திரு. பி.ஆர்.பந்துலுவின் மகளான பி.ஆர்.விஜயலட்சுமியின் விவரிப்பு பல உண்மைகளை உணர்த்தியது.
என்றென்றும் மக்களின் நெஞ்சங்களில் முதல்வரான தலைவர், மனித நேயத்திலும் முதல்வர் என்பதை விஜயலட்சுமி விளக்கியபோது உடல் புல்லரித்தது. இறைவன் எம்ஜிஆர் பக்தர்கள் குழு சார்பில் பந்துலுவும் தலைவரும் இணைந்திருக்கும் புகைப்படம் தன்னிடம் கொடுக்கப்பட்டதையும் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார். தலைவரின் மனித நேயம் பற்றி அவர் கூறியதை பார்ப்போம்.
ஆயிரத்தில் ஒருவன் படம் உருவானபோது விஜயலட்சுமி அவர்களுக்கு ஏழு வயது. தனது தந்தை தயாரித்த படம் என்பதால் படம் உருவான சமயத்தில் முதன் முதலில் தலைவரை பார்த்ததாக கூறினார். சண்டைக் காட்சிகளை தலைவரே எடிட் செய்வார் என்பதையும் விஜயலட்சுமி அவர்கள் பதிவு செய்தார். தலைவர் படங்களின் சண்டைக் காட்சிகள் குறிப்பாக ஆயிரத்தில் ஒருவனில் நம்பியாருடன் தலைவர் போடும் வாள் சண்டைக் காட்சிகள் சிறப்பாக அமைந்திருப்பதற்கு காரணம் இப்போது மீண்டும் வெட்டவெளிச்சமாகியிருக்குமே?
அதுவும் கடைசியில் கூர்மையான பாறைகள் உள்ள சீராக இல்லாத மலைப்பகுதியில் நடக்கும் அற்புத சண்டை கண்ணிலேயே நிற்கிறது என்றால் அதற்கு காரணம் தலைவரின் அற்புதமான வாள் வீச்சும், அலுப்பு தட்டாத வகையில் அவரது திறமையான எடிட்டிங்கும் என்பது புலனாகிறது.
மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் 4 ரீல்கள் மட்டுமே படமாகியிருந்த நிலையில், திரு.பந்துலு அவர்கள் திடீரென இறந்து விட்டார். அப்போது, அவர்கள் குடும்பத்துக்கு உதவிய கரம் தலைவரின் கரம். தந்தையின் பிரிவு தந்த அதிர்ச்சியோடு, அப்போது அவர்கள் குடும்பம் கடனில் தத்தளித்ததால் திரு.விஜயலட்சுமி அவர்கள் எப்படி சமாளிக்கப் போகிறோம்? என்று அழுதிருக்கிறார். அவரது குடும்பத்தின் கண்ணீரைத் துடைத்த கரம் நமது வள்ளலின் கரம்.
கடன் என்றால் எந்த அளவுக்கு என்பதை விஜயலட்சுமி அவர்களின் வார்த்தையிலேயே கூறுகிறேன். ‘ஒன்று ஐ.பி.கொடுக்க வேண்டும். அல்லது விஷம் குடித்து தற்கொலை செய்ய வேண்டும்’...அப்படிப்பட்ட மோசமான நிலையில் தலைவர் அவருக்கு ஆறுதல் கூறி உதவியிருக்கிறார்.
தலைவர் கூறிய ஆறுதல் வார்த்தைகளை நினைத்தால் நமக்கு அழுகை வரும். ‘உனக்கு உன் தந்தை கல்வியெல்லாம் கொடுத்திருக்கிறார். நான் 2 வயதில் தந்தையை இழந்தேன். கவலைப்படாதே’ என்று கூறி விஜயலட்சுமியை தலைவர் தேற்றியுள்ளார். குடும்பம் வறுமையில், வயதோ 2. தந்தையை இழந்த தலைவர் குடும்பம் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.
பந்துலு அவர்கள் கடன் பட்டிருந்தவர்களையெல்லாம் தலைவர் வரச் சொல்லி கடனுக்கு பொறுப்பு ஏற்று, அக்கவுண்டன்ட்களுடன் ஆலோசித்து 4 ரீல்களுடன் நின்று போயிருந்த மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் படத்தை நடித்துக் கொடுத்ததோடு படத்தை இலவசமாக இயக்கியும் கொடுத்துள்ளார். படத்தை வெளியிட்டு அதன் மூலம் திரு.பந்துலு அவர்களின் குடும்ப கடன்களையெல்லாம் தலைவர் அடைத்துள்ளார். ‘இன்று நான் இந்த நிலையில் இருக்கிறேன் என்றால் அதற்கு God எம்.ஜி.ஆர்.தான் காரணம்’ என்று சொல்லி உணர்ச்சி வசப்பட்டு அழுது கண்ணீரை தலைவருக்கு நன்றிக் காணிக்கை ஆக்கினார் திரு.விஜயலட்சுமி.
(அப்போது ஆயிரத்தில் ஒருவன் என்றால் ஒரு பேமிலியை காப்பாத்தும் அவர் ஒருவர்தான் என்றார் நிகழ்ச்சியை நடத்திய திரு.கோபிநாத் அவர்கள்)
கடன் சுமையில் சிக்கி வாழ்வா? சாவா? என்று இருந்த தன் குடும்பத்தை தலைவர் காப்பாற்றியது பற்றியும் அவரது உதவும் மனப்பான்மை, மனித நேயம் பற்றியும் முத்தாய்ப்பாக இரண்டே வரிகளில் சொன்னார் விஜயலட்சுமி. அது...
‘‘எனது தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள திரையுலமே திரண்டு வந்தது. அடுத்த நாள் ஒரே ஒருவர்தான் வந்தார். அவர்.......’’
அடுத்த நாள் வந்த ஒரேஒரு மனிதர்.... வேறு யார்?.. தலைவர்தான்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
http://s12.postimg.org/glyaha2rx/WP_20141102_027.jpg
TODAY ONWARDS AT COIMBATORE ROYAL THEATRE
http://s23.postimg.org/o35c0o2ob/alt...Tb_WTJt8_J.jpg
PALLADAM TO UDUMALPET ROAD
http://s15.postimg.org/pt22yivsb/alt...YRwkl_ONS8.jpg
JALLIPATTI, NEAR UDUMALPET
http://s14.postimg.org/usg0gqsxd/alt...c7uia6_H8n.jpg
JALLIPATTI, NEAR UDUMALPET
http://s29.postimg.org/5nd0g9bbr/alt...p4_Z18_QHe.jpg
JALLIPATTI, NEAR UDUMALPET
தமிழ்- இந்து - பிரபல நடிகை ஜமுனா அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றிய சிறு
குறிப்புடன் கீழ்கண்ட புகைப்படம் பிரசுரம் செய்துள்ளது.
ஆனால், படத்தின் பெயர் தவறாக , தாய் மகளுக்கு கட்டிய தாலி என குறிப்பிடப்பட்டுள்ளது . இது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ஜமுனாவுடன் நடித்து
வெளிவராத படம்
http://i58.tinypic.com/28uo360.jpg