அநேகமாக நாளை மிக மிக முக்கியமான பதிவு ஒன்று இடம் பெறலாம் ... அது ... நம் அனைவரின் உள்ளங்களையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும்... குளிர வைக்கும் .... ஒவ்வொரு நண்பரையும் பங்கு கொள்ள வைக்கும் ....
Printable View
அநேகமாக நாளை மிக மிக முக்கியமான பதிவு ஒன்று இடம் பெறலாம் ... அது ... நம் அனைவரின் உள்ளங்களையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும்... குளிர வைக்கும் .... ஒவ்வொரு நண்பரையும் பங்கு கொள்ள வைக்கும் ....
டியர் வாசுதேவன் சார்,
துளிவிஷம் பற்றி அக்குவேறு ஆணிவேராக அலசி அளித்துள்ளீர்கள். கதையில் ஆரம்பித்து, நாயகன், நாயகி மற்ற கலைஞர்கள் என்று மட்டுமில்லாமல் திரைக்குப் பின்னால் எடிட்டரிலிருந்து, சண்டைப் பயற்சியாளர் வரை ஒளிர்ந்தவர்களையும் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். ஒரு முழு திரைப்படத்தையும் பார்த்த உணர்வு ஏற்பட்டது.
துளிவிஷம் - தெலுங்கு பதிப்பில் நடித்திருந்தும் ஏன் நடிகர்திலகத்தின் திரைப்படப் பட்டியலில் அது இடம்பெறவில்லை என்பதை யாரேனும் அறிந்தால் தெரிவித்தால் நன்று.
தாங்கள் அளித்தது துளி விஷம் அல்ல. கோப்பை நிறைய பருகப் பருகத் திகட்டாத அமுது. பாராட்டுக்கள். நன்றி.
Dear Ghee-Fence-who
It was an amazing writeup on "Drop of Poison".
The way the analysis was done shows, the way you have enjoyed every second of the film and your very neutral view on all the performances.
Needless to say and one can now know the reason as to why everybody in the film world uttered one name in common when it comes to terrific performance - "SIVAJI". As rightly stated by Late Actor/Producer Balajee, Nadigar Thilagam deserved for being the "CRAZE OF HIS PERIOD" when it comes to diversified performance and not just a hero.
The best part was Nadigar Thilagam was able to come back once again to the hero mode inspite of performing as SCARY VILLAIN very regularly despite being reigning the superstar status. while am not sure, if someone would have dared to do a SOLO villain after becoming the most wanted hero.
He is no doubt "The Pride of the Cine World"
You are definitely "The pride of our thread"
Excellent and Keep it up Ghee-Fence-Who !
துளிவிஷம் என்ற தலைப்பே நெஞ்சில்
கிலிகொள வைத்தே தவிக்கும் போதில்
சிரித்திடும் அழகைக் கண்களில் காட்டி
விரித்திடும் விஷத்தை நடிப்பினில் கூட்டி
விலக்க முடியாப் பார்வையை நடிகர்
திலகமும் திரையில் காட்டிய பாங்கை
நுரைமிகப் பொங்கிடும் கடலின் அலைபோல்
உரைத்தார் வாசு உணர்வினில் அறிந்தே..
வில்லத் தனமா விஷமத் தனமா
கள்ளத் தனமா களிகொளும் சிரிப்பா
நல்ல மனதாய் நயந்தே கருணை
வல்ல கண்களைக் காட்டிடும் நடிப்பா
நடிப்பா என்றால் இல்லை இல்லை
எடுத்த பாத்திரம் உடல்மொழி பேசும்
துடிப்பாய் இங்கே தூயவர் புகழை
வடித்தே ரசிக்கும் வாசுநீர் வாழி...
டியர் வாசுதேவன் சார்,
துளிவிஷம் படத்திற்கான தங்கள் திறனாய்வு மிக மிக அருமை. திரைக்கதையை அப்படியே எழுத்தில் கொண்டு வந்துள்ளீர்கள். படிக்கும்போதே படம் பார்ப்பது போன்ற அவ்வளவு தெள்ளத்தெளிவான நடை. சற்றே மறந்து போயிருந்த கதையோட்டத்தை காட்சி வாரியாக நினைவுக்குக் கொண்டு வந்தது.
இப்படத்தை முதன்முதல் பார்த்தது 1979-ல் சென்னை ராயபுரம் பிரைட்டன் தியேட்டரில். (இதுவரை பார்த்திருப்பதும் அந்த ஒருமுறை மட்டுமே). நடிகர்திலகத்தின் படங்கள் அனைத்தையும் முடிந்தவரை பார்த்துவிட வேண்டும் என்று வெறித்தனமாக திரிந்த காலம். (இப்போதும் அந்த வேகம் குறைந்து விடவில்லை). வில்லனாக நடித்திருக்கிறார் என்று கேள்விப்பட்டதும் அரைமனதோடுதான் பார்க்கப்போனேன். ஆனால் படம் ஓட ஓடத்தான் எவ்வளவு அருமையான படத்தை மிஸ் பண்ண இருந்தோம் என்பது தெரிந்தது. குறிப்பாக வசனங்கள் மிகச்சிறப்பு. ஒரு வில்லனுக்கு இவ்வளவு கைதட்டல் கிடைத்தது இப்படத்துக்குத்தான் என்று நினைக்கிறேன்.
இருந்தாலும் ஒரே ஒருமுறை மட்டுமே பார்த்ததாலும், பார்த்து பல ஆண்டுகள் ஆகிவிட்டதாலும் கதை முற்றிலும் கோர்வையாக நினைவில்லாமல் இருந்தது. இப்போது தங்கள் விரிவான ஆய்வைப் படித்ததும் படம் அப்படியே நினைவுக்கு வந்துவிட்டது. சுருக்கமாக சொன்னால் படத்தை இன்னொருமுறை பார்த்தது போலுள்ளது.
தங்களின் மிகக்கடின உழைப்பால், (அவ்வளவு வெளிச்சம் பட்டிராத) இப்படத்தை உலகறிய வெளிக்கொணர்ந்து பலருக்கு பார்க்கும் ஆவலைத் தூண்டி விட்டீர்கள்.
அருமை.... அற்புதம்..... நன்றிகள்.......
ராஜநர்த்தகி 'அங்கா' எனும் அங்கயற்கண்ணியை முடிக்கும் காட்சியில் கண்களில் தெரியும் கொலை வெறி. முகத்தில் பிரதிபலிக்கப்படும் பேயாட்டப் பழியுணர்வு.
http://i1087.photobucket.com/albums/..._000594704.jpg