-
முரளி சார்
தங்கள் பாராட்டிற்கு நன்றி.
சென்ற ஆண்டும் மேடையில் அழைத்து கௌரவித்தார்கள். அது மட்டுமின்றி நம்முடைய நடிகர் திலகம் இணையதளத்தையும் நடிகர் திலகத்தின் புகழ் பாடுவதில் அடியேனின் பணி பற்றியும் சிலாகித்து மேடையில் கூறி எல்லோரையும் பலத்த கரவொலி எழுப்புமாறும் பிரபு கூறியது மறக்க முடியாததாகும்.
நேற்றும் நிகழ்ச்சி முடிந்த பின்னும் மீண்டும் என்னை பிரபு மற்றும் சிறப்பு விருந்தினர் திரு சீதாராமன் இருவரும் பாராட்டி கை குலுக்கி மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார்கள்.
எல்லாப்புகழும் மக்கள் தலைவருக்கே.
-
நேற்றைய நிகழ்ச்சியில் குறிப்பிடத்தக்க விஷயம், நம்முடைய மய்யம் இணைய தள நண்பர்களும் எம்.ஜி.ஆர். அவர்களின் ரசிகர்களுமான திரு பெங்களூரு குமார், திரு லோகநாதன், திரு சுந்தர் ஆகியோர் வந்திருந்து நிகழ்ச்சி முடிந்த பின் சற்று நேரம் காத்திருந்து எனக்கு பாராட்டும் வாழ்த்தும் அளித்தனர். அவர்களுக்கு என் நன்றி. நிகழ்ச்சி சரியான நேரத்தில் துவங்கி திட்டமிட்டபடி நடந்து முடிந்ததற்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.
-
-
-
-
-
-
-
NT 87 Birthday celebrations Mr. Prabu's speech,
https://www.youtube.com/watch?v=s_wBdFZwNb0
-